
"கோணாமலை எனும் மனிதம் சாய்ந்தது".
தன் ஆயுள் முழுதும் எங்கள் ஊருக்காக உழைத்த "கோணாமலை" ஐயா இறைவனடி சேர்ந்தார்.
பெயருக்கு ஏற்றால் போலவே பார்போரெல்லாம் பாக்குமனவிற்கு ஆறடிக்கு மேல் உயர்ந்து வளர்த்து கட்டுமஸ்தான முறுக்கேறிய அங்காங்கே நரம்புகள் முறுக்கேறி புடைத்த தோற்றம்.
காரத்தை மடிச்சு சந்திக்கட்டு கட்டி வாயில் வெத்திலை சப்பியவாறு, தோவில் துவாயும் சாற மடிப்பில் வெத்தில பாக்கு, கண்ணாம்பு பைய சொரிகியும் காலுக்கு அவருக்கு அளவான செருப்பு தேடியும் கிடைக்காத செருப்பொன்றை கொழுவிக்கொண்டு செய்யும் தொழிலை மிக நேர்த்தியாக செய்து முடிக்கும் மனிதம் எமது கோணாமலை ஐயா
கைய கட்டி கட்டின கைய கிழே விடாமல்,எதுக்கும் முந்தியடிக்காமல் ஏதோ ஒரு ஓரத்தில் திண்டு தனது தேவைகளை பூர்த்திசெய்ய யாரையும் மனநோக செய்யாதவர், தானுண்டு தன்ர வேலையுண்டு என்று சாதுவாக யாருக்கும் தீங்கு எண்ணாத உத்தமர்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இன்றியமையாத அடிப்படை மனித தேவைக்குரிய பணியை கோணாமலைஐயா அவர்கள் எமக்கும் எமது ஊருக்கும் ஆற்றியமைக்கு நாம் என்ன கைம்மாறு செய்தாலும் அதற்கு ஈடாகா. தன் பணி நாளில் எமக்காகவும் எமது ஊருக்காகவும் உழைத்த மனிதம் எமது வாழ்நாள் தெய்வம் எமது கோணாமலை ஐயா என்றால் அது மிகையாகாது.
ஊரில் எம்மவரது துப்பரவு பணிகளாக இருந்தாலும், ஏனைய வேலைகளாக இருந்தாலும், அலலது நெருக்கமான எமது காணி வேலிகளை அடைப்பதாக இருந்தாலும் அவற்றை நேர்த்தியாக செய்து முடிக்க எமக்கெல்லாம் பரிச்சாத்தமான பெயர் கோணாமலை ஐயா
ஊரில் வேறு சிலர் இவ் வேலைகளை செய்த போதிலும் நேரம் பித்தாமல் கொடுக்கும் வேலையை சொன்ன நேரத்துக்கு வந்து செய்துமுடித்து வருவதற்கு அவருக்கு நிகர் எவருமிலர்.
குறிப்பாக கொல்லப்போனால் எனது அனுபவத்தில் பக்கத்து விட்டு காரருக்கு பங்கம் விளைவிக்காத வகையில் ஒரு இஞ்சி அளவு கூட தப்பாத வகையில் நடு வேலிக்கட்டைகளை போடுவதில் மணுசன் நேர்மையாளன். கத்துமதில் அத்திவார கிடங்கு, மலசல கூட குழிக்கிடங்கு, அச்சுப்பிசகாத கிடுகு அடைப்பு கம்பி வேலிக்கு முள்ளுக்கம்பி இழுத்து கொண்டி அடிக்கிற நேர்த்தி இருக்கே அப்பப்பா அவருக்கு நிகர் அவரேதான்,
பஞ்சிப்பட்டு வேலை செய்வது அவரது இயல்பிலில்லை, பார்ப்போரெல்லாம் "இந்த வேலி கோணாமலை அண்ணன் அடைச்சதுதானே " எண்டு கொல்லுமளவுக்கு அவரது நேர்த்தியான வேலை அவருக்கு சான்றுபககும்.
வளஞ்சு,நெழிஞ்சு இருக்கும் வேலிக்கட்டைகள் கூட இவரது கை பட்டதும் நேராக நிமிர்த்து சலியூட் அடிக்கும், தான்வேலிக்கட்டைகள்போடும் போது அயல்வீட்டாரையும் கூப்பிட்டு அவர்கள் முன்னிலையிலே கிடங்கு கிண்டி கட்டை போடுவது இவரது நேர்த்தியான, நேர்மையான வேலைக்கு எப்பவுமே சான்றுகள். இப்படியாக கோணாமலை ஐயா தனது வாழும் நாட்களில் எமக்கும் எமது ஊருக்கும் செய்த பணிகள் ஏராளம்.உங்கள் இறப்பு செய்தி கேட்டதும் ஐயா நீங்கள் எமக்கு செய்தவைகளை எண்ணி உங்கள் இரு கரங்களையும் இறுக பற்றி உங்கள் பாதத்தில் கண்ணீர் பூக்களை காணிக்கையாக அஞ்சலித்து உங்கள் ஆன்மா இறைவன் சந்திதியில் அமைதியில் இளைப்பாற பிராத்திக்கின்றோம்.
ஊருக்கு கொடுத்து உதவி செய்த சலமோன் அவர்கள்.
VAJ உரிமையாளர் அமரர்.சலமோன் அவர்கள்.
பொழுது விடிய காலம சந்தியோகுமையோர் கோவில்ல பூசைக்கு போகப்போறி நேரம் ஒத்த கையில் காவிக்கொத்தும் கிப்ஸ் சாறத்த மற்ற கையால உயத்தி பிடிச்சுக்கொண்டு புள்கை சேட்ட 2 தெறி திறந்துவிட்டு புலிப்பல் சங்கிலி தெரிய முறுக்கு மீசையோட தனது வாடிக்கு ஒவ்வொரு நாளும் தடந்து போகும் ராஜநடை இன்றும் நினைவுக்கு வந்துபோவதுண்டு.
இரண்டு இஸ்கஸ் லொறி, மூன்று கன்டர், வண் ரூ பைவ் மோட்டசைக்கில் என காலடியில் வாகனங்கள்,சொத்துக்கள் மற்றும் ஏராளமான பண புழக்கம் இருந்தும் எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் சாதாரணமாக தனது நண்பர்களுடன் பொழுதை கழித்து மகிழ்ந்த மனிதர்.
மேடைகளில் முதல் இருக்கையை விரும்பாதவர். தான் என்ற கர்வம் இவரிடம் அறவே இல்லை. ஆலய கட்டுமான பணிக்கும்,ஆலயத்தின் ஏனைய தேவைகளுக்கும் ஆன்மீக தேவைகளுக்கும் முதன்முதலில் உதவிசெய்ய நீளும் கை இவருடையதே ஊரின் அடிப்படை தேவைகளாக காணப்பட்ட கல்வி, விளையாட்டு கலை கலாச்சாரம் மற்றும் ஆன்மிகம் ஆகியவற்றில் இவரிடம் இருந்து நாம் பெற்றுக்கொண்டவை அதிகம். அந்தவகையில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் மண் நிரப்ப எமது ஐக்கிய விளையாட்டுகழகத்திற்கு துணை நின்றார்.பாடசாலை விளையாட்டு போட்டி மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்கு உதவியதுடன் பாடசாலை தொண்டர் ஆசிரியர்களுக்கு சம்பளத்தையும் வழங்கியிருந்தார்.எமது ஊரில் மேடையேறும் வரலாற்று நாடகங்கள்,வாசாப்புக்கள் போன்ற கலை நிகழ்வுகளில் சக கலைஞனாக பங்கேற்பதுடன் அதற்காக ஏற்படும் செலவுகளின் ஒரு பகுதியை பல முறை இவர் கையேற்றுமிருக்கிறார்.
விளையாட்டை பொறுத்தமட்டில் எமது ஐக்கிய விளையாட்டு கழகத்திற்கு அளப்பரிய உதவிகளை வழங்கி தீவிர ரசிகனாக வலம் வந்தவர். திரவுகுளம் நிரப்ப,பாடசாலை விளையாட்டு மைதானம் நிரப்ப ஐக்கிய விளையாட்டு கழகத்திற்கு துணை நின்றார்.திதி உதவிகளை வழங்கி வாகன வசதிகளை செய்து தந்த உத்தமர் என்றால் அது மிகையாகாது.ஊரின் ஆன்மிக தேவைகளில் குறிப்பாக மறைபரப்பு நிகழ்வுகளுக்கு நிதியையும் மற்றும் தவக்கால தாக காத்தி குளிர்பானங்களை தனது வாகனத்தில் வைத்து வழங்கும் உயரிய பண்பையும் கொண்டிருந்தார்.
இவரிடம் இருந்த பண பலத்திற்கும் மக்களின் செல்வாக்கிற்கும், ஊரை பிரித்து பல கழகங்களை தோற்றுவித்து,பிரிவுகளை உண்டுபண்ணியிருக்கலாம் ஆனால் சிறிதளவேனும் அந்த அற்ப புத்தி இவருக்கு அறவே இருந்ததில்லை.
மற்றும் சமூக இவருடைய காலத்தில் இப்ப இருக்கும் இன்டர்நெட் வசதி,வட்சாப்,முகநூல் வலைத்தளங்களில் சிலர் செய்வதை போல் தம்மை பிரபல்யம் ஆக்கி பேட்டி குடுத்ததோ அல்லது நான் தான் இத்தனை காலமும் ஊருக்கு இதை செய்தேன், அதை செய்தேன் என்றோ இவ்வளவு பணத்தை செலவழித்தேன் என்றோ பொது இடங்களில் சொல்லி திரியவே இல்லை.
அத்துடன் விடுதலை புலிகள் உங்கள் கடலுணவு வாணிபத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள் என பணித்த நேரம் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் புனித யாகப்பர் வாணிபம் என பெயர் வைக்க இவரை சொல்ல "இந்த பெயரை வைத்து ஊருக்குள் பிளவை ஏற்படுத்தவோ அல்லது ஏனைய ஊரவர்களின் நன்மதிப்பை இழக்க மாட்டேன் என்று அந்த பெயரை நிராகரித்து குழந்தை இயேசு கடலுணவு வாணிபம் என்று பெயரிட்ட சிந்தனையாளர்.
இன்னும் தனது கடற்றொழிலாளர்களின் ஒரு ரூபாயை கூட கணக்கில் வைத்துக் கொடுப்பதில் சிறந்த முதலாளி இவர்.இறுதியாக சாலமோன் என்ற றிசேவ் பேங் ஏரி.ம் மிசினிலிருந்து எமது ஊர் பெற்றுக்கொண்ட பண உதவிக்கும் ஏனைய உதவிகளுக்கும் அளவே இல்லை.
எமது ஊரினதும் எமது ஐக்கிய விளையாட்டு கழகத்தினதும் வாழ் நாள் சாதனையாளன் அமரர். ம. சலமோன் அவர்கள்.
50 வருடங்களை கடந்த கிராமத்தின் அடையாளம் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம்.
விடத்தல்தீவு வரலாற்றில் ஐக்கிய வினையாட்டு கழகத்தை உருவாக்கிய ஸ்தாபகர் முன்னாள் பங்குத்தந்தை அமரர் அருட்பணி ரெஜிஸ் இராயநாயகம் அடிகளார். 1973 ம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்தாபிக்கப்பட்ட விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் நிர்வாகத்தின் முதலாவது தலைவராக யா.ஞானசீலன் அவர்களின் தலமையிலும் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் வெற்றிப்பவனி வந்தது என்றால் அது மிகையாகாது.
மாந்தை பெருநிலப்பரப்பில் அதிகளவு இளைஞர் யுவதிகளை கொண்டு A B C என ஒரே கழகத்தில் அணிகளை கொண்டு, விளையாட்டு நிகழ்வுகளில் குறிப்பாக உதைபந்தாட்டத்திலும் வலைப்பந்தாட்டத்திலும் பல வெற்றிகளை பெற்ற எமது ஐக்கிய விளையாட்டு கழகம். எமது பாரம்பரியங்களை,கிராம கலாச்சாரங்களை கிராம ஒற்றுமையை வலுப்பெற செய்ய முன்வருவோம்.
50 வருடங்கள் கடந்தும்,சல சலப்புகளுக்கு அஞ்சாமல் வெற்றிப்பவனி வரும் கிராமம் சார் ஒரேயொரு கழகம் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் ஏனெனில் அதன் ஆரம்பம், ஆரம்பித்தவர்,அதன் நோக்கம் என்பவையே முக்கிய காரணிகளாக சான்று பகர்கின்றன.
அமரர். செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் நினைவலைகளில்
நாம் வாழும் நாட்களில் எம்மோடு வாழ்ந்து மறைந்துபோனவர்களை, அவர்களுடைய செயற்பாடுகளை, அவர்கள் விட்டுச்சென்ற நினைவுகளை எனிதில் மறந்துவிட முடியாது. அந்தவகையில் தன்னுடைய வாழ்நாட்களில் பலரைதன்பால் ஈர்த்தவரும் பல நினைவலைகளை மீள்கொணரக்கூடியவகையில் வாழ்ந்து இறந்தபோனவர் தான் அமரர் செபஸ்தியாம்பிள்ளை அவர்கள்.
அமரர் செபஸ்சியாம்பிள்ளை அவர்கள் இலங்கை போக்குவரத்துசபையின்முன்னாள் பேரூந்து நடத்துனராக எமது கிராமம் உட்பட பல கிராமங்களில் சேவையாற்றி பலராலும் அறியப்பட்டவர். பேரூந்து நடத்துனராக பணிபுரிந்த நாட்களில் மற்றவர்களை மகிழ்வித்து, தனது பகிடி கதையாலும், தகைச்சுவையான செயலாலும் சிரிக்கவைப்பது இவரது இயல்பாக இருந்தது.
மூன்று ஆண் பிள்ளைகளையும், மூன்று பெண் பிள்ளைகளையும் பெற்று மனைவி பிள்ளைகளுடன் ஊரில் வாழ்ந்த காலத்தில் நாட்டு பிரச்சனை காரணமாக தனது இ.போ.க. நடத்துனர் சேவையை இடைநிறுத்தி தனது விட்டில் ஒரு சிறிய சைக்கில் திருத்தும் கடையையும், பழைய பேக்கரிக்கு பக்கத்தில் ஒரு கடையை சைக்கில் திருத்தும் கடையாகவும் கொண்டிருந்தார்.
செய்யும் தொழிலே தெய்வம் என்பதை போல தான் செய்யும் தொழிலில் நேர்த்தியையும், தொழில் தர்மத்தையும் கொண்டிருந்தார். கத்தியல், குறடு,ஆணி அலவாக்கு, இவை அணைத்தையும் பாடசாலை வேலி அடைக்க உடைஞ்ச கதிர மேச திருத்து, பண்ணிக்குட தோட்டத்துக்கு வேலி அடைக்க என இவர் கடையில் இருந்து நண்பன் ரென்சி கொண்டுவருவது வழமையாக இருந்தது. அந்த காலத்தில்
நான் கண்டு வியந்த சம்பவம் அவருடைய கையெழுத்து, மாட்டுத்தாள் உறை போட்டு மிகவும் அழகான கையெழுத்தில் நண்பன் ரென்சியின் பெயர், பாடத்தின் பெயர், புத்தகத்தின் பெயர், என்பவை மிகவும் நேர்த்தியாக எழுதிக்கொடுத்து பள்ளிக்குடத்துக்கு அனுப்புவார்.
அந்தநேரம் பெச் ஒட்ட கொலுசன் இல்லாத தட்டுப்பாடான காலம் அடிக்கடி நாங்க விளையாடும் பந்து பெச்சாப்போகும், எங்கட பூட்ஸ் பிஞ்சு அடுத்தநாள் கொண்டு போனால் ஒருக்கா அண்ணாந்து பாத்துவிட்டு பத்துக்கு பெச் ஒட்டி தந்து பூட்ஸ் யும் தைச்சுத்தருவார் . IAS முத்தரை பொறிக்கப்பட்டதை போலவேதான் இவர் பாவிக்கும் பொருட்களில் SMF என்று எழுதப்பட்டிருக்கும். சருவ குடத்திலும் SMF, சைக்கிலிலும் SMF, இப்படியாக இவர் வீட்டில் அனைத்திலும் SMF என்று எழுதப்பட்டிருக்கும்.
வெத்தில, பாக்கு, சுண்ணாம்பு பையுடன் காற்சட்டை அணிந்து, சாறத்தை கட்டி, கண்ணில் கண்ணாடியை கொழுவிய வண்ணம் வெறும் மேலுடன் தன்னுடைய தொழிலை செய்யும் தொழில்பக்தி நிறைந்தவராகவே இவரை நான் பார்த்ததுண்டு.
தமது வீடாக இருந்தாலும் சரி,அவரது பிள்ளைகளின் விடாக இருந்தாலும் சரி எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு தன்னந்தனியான செய்து முடித்திடுவார், வேலியடைப்பு, வீட்டு மேச்சல் மேற்பார்வை, கிடங்கு கிண்டுதல், கல்லரிதல்,என அனைத்தையும் நேர்த்தியாக செய்துமுடிக்கும் தன்மைகொண்டவர். இவரிடமிருந்து கற்றுக்கொண்டது பல. கோவிலுக்கு சென்றால் என்ன என்ன அலுவலாக இருந்தாலும், எந்த கொண்டாட்டமாக இருந்தாலும், என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் புருசனும் பொஞ்சாதி சகிதமாக முதிர்ந்த போதும் இருவரும் சேர்ந்தே செல்வது இவரின் படிக்கக்கூட பண்புகளில் பின்பற்றக்கூடியவற்றில் முதன்மையானது, அவ்வளவு ஏன் ஒப்பாரி போவதென்றாலும் இருவரும் சேர்த்தே இணைபிரியாத சோடிகளாக செல்லுவது கண்டு வியந்ததுண்டு.
இயல்பிலேயே கலைநயம் மிக்கவரான இவர் இனிமையான குரல் வளத்தை கொண்டு பாடும் ஆற்றலை கொண்டிருந்தார். ஊரில் அரங்கேறிய பாஸ், நாட்டுக்கூத்துகள், மேடை நாடகங்கள், கச்சேரிகளில் கலைஞனாக முக்கிய வேடங்களில் பங்கேற்றியவர். எமதுகாலத்தில்நாம் கண்டுகளித்த சந்தியோகுமையோர் நாட்டுக்கூத்து, தேவசகாயம்பிள்ளை நாட்டுக்கூத்து என்பன இவர் பங்கேற்று நடித்த நாடகங்களில் சிறப்புமிக்கவை. இயேசுவின் பாடுகள் மரணம் உயிர்ப்பு நாட்களிலிலும், ஆலய திருவிழா நாட்களிலும், இறப்பு வீடுகளில் எம்மவர்களால் பாடப்படும் ஒப்பாரி, தாளிகை கவி போன்றவற்றில் ரசித்து கேட்டு உணரும் குரலில் இவருடைய குரலுக்கு தனிச்சிறப்பு இருந்தது.
பாடப்படும் பாடலை உயர்த்தி பாடுவதிலும், பாட்டில் வரும் வசனங்களும், கருத்துக்களும் அனைவருக்கும் விளங்கும்படியாக அறுத்துறுத்து ,ஏற்றி இறக்கி பாடுவது இவரது மற்றுமொரு சிறப்பம்சம் ஒப்பாரி பாடல்கள் அடங்கிய புத்தகங்களை வைத்து பேணி பாதுகாத்ததும், ஒப்பாரி பாடச்செல்லும் இடங்களில் அனைவருக்கும் பாடல் புத்தகங்களை கொடுத்து தனது முறை வந்ததும் புத்தகத்தை பார்க்காமலே அனைத்து பாடல்களிலும் தனது பாடல் வரிகளை பாடுவதும் இவரின் சிறப்பே.
வாலுலா....என தொடங்கும் தானிசை பாடல் எனக்கு இவர் பாடுவதில் மிகவும் பிடித்த பாடல் சந்தியோகுமையோர் கோவில் திருவிழா காலங்களில் இயேசுவின், பாடுகள் மரணம் உயிர்ப்பு காலங்களில் எங்கட வீட்டுப்படியில் இருந்து பாடலை கேட்டு வந்த அந்த நாட்களை மறக்கமுடியாது. வியாகுல பிரசங்கம் வாசிப்பதில் வல்லவர் இவர், தனக்கெண்டு ஒரு ஸ்ரையிலில் வாசிப்பார், ஏற்றம், இறக்கம், கமா, முற்றுப்புள்ளி பாத்து அழகாக வாசிப்பார். இவர் உட்பட வாழும் நாட்களில் நாம் பின்பற்றத்தவறிய கௌரவிக்க மறந்த,எம்மூர் கலைஞர்கள் ஏராளம்.
உழைப்பால் உயர்ந்து முதன்முதலில் மாடிவீடு கட்டி பஸ் சேவையை செய்த வித்தகர் துரையப்பா அவர்கள். விளக்குகிறார் - திருவாளர் வைத்தியர் கிறிஸ்தோதொம் அவர்கள்.
எங்கள் ஐயா சத்தியசீலனின் தாரக மந்திரம் இதுதான் ” தந்தை மகற்காற்றும் உதவி அவயத்து முந்தி இருக்க செயல்". வார்த்தைக்கு வார்த்தை இதுதான் சொல்வார். ஒவ்வொரு தந்தைக்கும் இதுதான் தாரக மத்திரம். நம் ஊரில் பல சாதனையாளர்கள் தங்கள் கடின உழைப்பாலும்,விடாமுயற்சியாலும் வெற்றிபெற்று நம் ஊருக்கு பெருமை சேர்த்தார்கள்.
அனேகமான இளம் தலைமுறையினருக்கு ஞாபகம் இருக்காது. திருவாளர் துரையப்பா, திருமதி கத்தஜீனா அவர்கள் குடும்பத்தார்தான் அவர்கள். எங்கள் ஊரில் முதன்முதலாக ஒரு பேருந்து கொம்பனி ஆரம்பித்து பெருமை சேர்த்தவர்கள். Rita Bns company அதன் அது. Rita என்பது அவருடைய மகன். அவரின் பெயரால்தான் ஆரம்பித்தார்கள். விடத்தல்தீவு, மன்னார், யாழ்பாண பிராத்தியங்களில் இவர் பேரூந்துகள்தான் ஓடின.
1945 லிருந்து 1938 வரை சேவை தொடர்ந்தது. 1958ம் ஆண்டு பண்டாரநாயக பிரதமரானதும் பேருந்து கொம்பணிகளை தேசிய மயமாக்கி இவரின் பேருந்துகளை அரசவசமாக்கிக்கொண்டார். அப்படித்தான் CTB bus service ஆரம்பமானது. துரையப்பா அப்பாவுக்கு அரசாங்கம் எதுவித நஷ்ட ஈடும் கொடுக்கவில்லை. 190
துரையப்பா அவர்களின் தண்ணீர் லொறிகளில் மூலம்தான் பள்ளமடு கிணறுகளில் இருந்து தண்ணீர் நம் ஊருக்கு வழங்கப்பட்டது. இவர் ஒரு நெல் அரைக்கும் ஆலையையும் வைத்திருந்தார். எங்கள் வீட்டுக்கு அண்மையில் அந்த ஆலை இருந்தது. நம் ஊர் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அது ஒரு வரப்பிரசாதகமாக இருந்தது.
இலுப்பகடவை, கள்ளியடி, கோவில்குளம்,புதுக்குளம்,ஆகிய விவசாயக் கிராமங்களில் இருந்து உளவு இயந்திரங்களில் நெல் மூட்டைகளை கொண்டு வந்து அதை அரிசியாக்கி கொண்டு செல்வார்கள். முதன் முதலாக இரட்டை #மாடி விட்டை எங்கள் கடைத்தெருவில் கட்டியதும் அவர்தான். 1940 இல் கட்டப்பட்ட அந்த வீடு இன்றும் இருக்கிறது . அத்துடன் இன்னொரு பெரிய வீடும் எங்கள் கோவிலுக்கு அண்மையில் கட்டி சிறப்பாக வாழ்ந்தார்கள்.
Rita அவர்கள் அண்மையில் காலமாகி நம் ஊரும் அடக்கம் செய்யப்பட்டார். துரையப்பா அப்பாவின் மகளின் பிள்னைகள், குஞ்சு Baba, சின்ன Baba வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். மிக குறைந்த அடிப்படை வசதிகள் கொண்ட நம் மண்ணில் இருந்து இப்படியான காதணையாளர்கள் இருந்தார்கள் என்பது மறக்கவோ மறுக்கவோ முடியாத ஒரு உண்மை. நாமும் உழைப்போம், உயர்வோம்”
தேசிய கலா விபூஷண விருது வென்றார் திரு அ அந்திரேஸ் அவர்கள்.
'வாழும் போதே வாழ்த்துவோம்' தேசிய ரீதியில் 25 மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கும் கலாச்சாரத்தை மேம்படுத்த உழைத்தவர்களுக்குமான நான்காவது தேசிய கலா விபூஷணம் 'உலகத் தமிழர் விருது வழங்கும் விழா' 25/2/2023 அன்று மன்னார் பிரதேச செயலகப் பிரிவு பேசாலை சங்கவி பட மாளிகையில் இடம் பெற்றது. இதில் 25 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்த உழைத்தவர்கள் 180 கலைத்துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் #சிற்ப #கலை மற்றும் நாடக கலை நிகழ்வுக்கான விருது எமது கிராமத்தின் திரு. அ.அந்திரேஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவு சின்னம் வழங்கப்பட்டமையும்
குறிப்பிடத்தக்கது. இதேவேனை சிறப்பான முறையில் கலையை முன்னெடுத்துச் செல்லும் நபர்களுக்கும் நடிகர்கள் மற்றும் பாடல் கலைஞர்கள் உள்னிட்ட பல்வேறு துறை சார்ந்த கலைஞர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.
சிற்பக்கலையிலும், இயல் இசை நாடக துறையிலும் சிறப்புற்ற அடைக்கலத்தாரின் வாரிசு
எமது விடத்தல்தீவின் கலைத்தாயின் புத்திரர்களாக தந்தை அடைக்கலத்தாரின் வழிவந்த தனயர்கள் வரிசையில் சிற்பக்கலையிலும், இயல், இசை நாடக துறையிலும் சிறப்புற்றிருப்பவர்தான் அந்திரேஸ் அவர்கள்.தந்தை அடைக்கலத்தாரின் வழிவில் தனது சிறுவயதில் இருந்தே சிற்பங்களை உருவாக்குவதிலும், நாடகங்களை எழுதி மேடையேற்றுவதிலும், பாடல்களை எழுதி இயற்றுவதிலும், சித்திரங்களை வரைவதிலும், ஒப்பனை கலைஞனாகவும், நாடகங்களுக்கான காட்சி அமைப்பு வகைகளையும் வரைவதிலும் கைதேர்ந்த பல்திறமை கொண்ட கலைஞன் தான் எமது அந்திரேஷ் அவர்கள்.
அந்திரேஸ் அவர்களது சிற்ப வேலைப்பாடுகளை நோக்குமிடத்து எமது விடத்தல்தீவில் உள்ள குருசுக்கோவிலில் அமைந்துள்ள ஆண்டவர் சிலுவையில் தொங்குவதை பிரதிபலித்த திருச்சுரூபத்தை சீமெந்தில் செய்திருந்ததுடன், தட்சனாமருதமடுவில் மரத்தில் செதுக்கிய சூரன் சிலையையும், எமது விடத்தல்தீவு முன்னான் பங்குத்தந்தையாக பணியாற்ற அருட்பணி செல்வநாதன் பீரிஸ் அவர்களது வேண்டுகைக்கு அமைவாக மாதா திருச்சுருபம் ஒன்றை சீமெத்தில் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈச்சளவக்கையில் அமைந்துள்ளகோயிலில் அம்மன்சிலை ஒன்றை சீமெந்தின்மூலம் உருவாக்கிவிருந்ததுடன் பாலம்பிட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் பழமைவாய்ந்த திரையை வரைந்து கொடுத்ததுடன் முருங்கன், ஆத்திக்குளி, இசைமாலைத்தாழ்வு, மற்றும் மாவிலங்கேணி, ஆகிய பகுதிகளில் உடைந்து சேதமடைந்த சிற்பங்களை அவை முன்னர் இருந்ததை போலவே அச்சு அசலாக செய்துகொடுத்திருந்தார்.
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாக முன்பே அதன் கதை, வசனத்தை கொண்டு *உண்மைகள் உறங்குவதில்லை” என்ற பெயரிடப்பட்ட நாடகத்தை பெரியமடு முஸ்லிம் சகோதரர்கனை கலைஞர்களாக கொண்டு 1976ம் ஆண்டு மேடையேற்றிய பெருமை அந்திரேஸ் அவர்களையே சாரும்.
அந்திரேஸ் அவர்கள் புரட்சி நாடகங்களையும், கிறிஸ்து பிறப்பு பற்றிய நாடகங்களையும், சுரோல்
பாடல்களையும்,புரட்சி பாடல்களையும், சரித்திர நாடகங்களான "குழந்தை இயேசு", "ஏரோது மன்னன்” ,"சூழ்ச்சி",போன்றவற்றை எழுதி இயக்கியதுடன் "சூழ்ச்சியின் வீழ்ச்சி"நாடகத்தில் நாடக கலைஞனாக பாத்திரமேற்று நடித்து பலரதும் பாராட்டை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது ஊரில் மேடையேற்றப்பட்ட நாடகங்கள், நாட்டுக்கூத்துகள் வரிசையில் இயேசுவின் பாடுகள்,மரணம், உயிர்ப்பை பிரதிபலித்த பாஸ், காத்தவராயன் கூத்து, மற்றும் தேவசகாயம்பிள்ளை நாட்டுக்கூத்து போன்றவற்றுக்கு ஒப்பனை கலைஞனாக செயற்பட்டதுடன், நாடகங்களுக்கு தேவையான காட்சி அமைப்புகளை வரைவதுடன், திரைச்சீலை காட்சி அமைப்பு வகைகளையும்,குறிப்பாக பாலம்பிட்டியில் முத்துமாரி அம்மன் சிலை உருவத்தை ஏழு அரை (7 1/2) அடி உயரத்தில் வரைந்ததுடன், மணி உடுப்புகளை உருவாக்கி,பிறிஸ்டல் போட் போன்ற உபகரணங்களை கொண்டு அரச கிரிடங்களையும், நாடகத்திற்கு தேவையான வர்ண பூச்சுகளையும் உருவாக்கியிருந்தார்.
அத்துடன் அந்திரேஸ் அவர்கள் பல்வேறுபட்ட விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அந்த வகையில் உதவி அரசாங்க அதிபர் காரியாலயம் வழங்கிய கலைமதி விருதை 2021ம் ஆண்டு பெற்றுக்கொண்டதுடன், அத்துடன் உதவி அரசாங்க அதிபர் பிரிவு ஊடாக வழங்கப்பட்ட கலைஞர் கவிதம் விருதை 2019 ம் வருடத்திலும் பெற்றுக்கொண்டு கலைத்துறையில் சிறப்பாக பங்காற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அமரர் இம்மனுவேல் அன்னமலர் ஆசிரியர் ( மலர் ரீச்சர்)
அந்தோனி அத்திரேசு அருளப்பு அப்புலோனியா தம்பதிகளின் இரண்டாவது பிள்ளையாக 1951 ஆனி மாதம் 22 ஆம் தான் பிறந்தார்.
தனது பள்ளி படிப்பை மன்/விடத்தல் தீவு றோ.க.த.க பாடசாலையில் 23-04-1956 இல் ஆரம்பித்து 1967-ல் க/பொத சாதாரண தரத்தில் சித்தி அடைந்தார். பின்னர் 1969 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 22 ஆம் தேதி திருவாளர் சுவக்கீன் இம்மனுவேல் ஆசிரியரை திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து தனது 20 ஆவது வயதில் ஆசிரியராக தனது பணியை மன்' சின்னப் பண்டி விரிச்சான் அ.த.க. பாடசாலையில் ஆரம்பித்தார்.
1973 மற்றும் 1974 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதர சான்றிதழ் பத்திரத்தை பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து 1975 ஆம் ஆண்டு தொடக்கம் மன்/ விடத்தல் தீவு றோ.க.த.க.பாடசாலை, மண்/மறத்தி கன்னாட்டி அ.த.க.பாடசாலை மற்றும் மன் சிறுக்கண்டல் அதகபாடசாலைகளில் ஆசிரியராக பணிபுரிந்து, 1983 இல் மீண்டும் மண்/ விடத்தல் தீவு றோ.க.த.க.பாடசாலையில் ஆசிரியராக கடமை ஏற்று 1998 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார்.
இக்காலத்தில் ஆரம்பக் கல்வியின் வகுதித் தலைவராக சிறப்புடன் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 15.06.1998 இல் மாவட்டத்தில் மன்னார் வலயக் கல்வி அலுவலகம் மட்டும் செயற்பட்ட காலப்பகுதியில், மன்னார் மாவட்டத்தின் கல்வி வலயத்தில் ஆரம்ப கல்வி ஆசிரிய ஆலோசகராக நியமனம் பெற்று 30.11.1998 வரை கடமை புரிந்தார்.
தொடர்ந்து மடு வலயக் கல்வி அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் மடு வலயக் கல்வி அலுவலகத்தில் ஆரம்ப கல்வி பாட விசேட உதவிக் கல்விப் பணிப்பாளராக ( பதில் கடமை) 01.12.1998 தொடக்கம் 31.12.2000 வரை சிறப்பாக பணி புரிந்தார். தொடர்ந்து இடப்பெயர்வு காரணமாக மண்/ விடத்தல் தீவு ஜோசவ் வாஸ் ம.வி பேசாலையில் இயங்கிய காலப்பகுதியில் 02.01.2001 இல் மீண்டும் ஆசிரியராக கடமையை பொறுப்பேற்று மண்' விடத்தல் தீவு றோகதகபாடசாலையில் 31.12.2002 வரை பணிபுரிந்தார். தொடர்ந்து பேசாலையிலிருந்து பாடசாலை தோட்ட வெளிக்கு இடம் மாறிய காலப் பகுதியான 01.01.2003 இல் இருந்து 14.02.2012 இல் ஒய்வு பெறும் வரை ஆசிரியராக 41 வருடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சிறப்பாக பணி புரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமரர் இ. அன்னமலர் ஆசிரியை அவர்களது குடும்ப பின்னணி பற்றி நோக்கினால், சகோதரன் அலோசியஸ், அவர்களும் சகோதரி அமரர் அலிஸ்மேரி ஆகியோருடன், பிள்ளைகள் எட்வின் அமல்றாஜ், கோட்வின் விமல் றாஜ் செல்வின் நிமல் றாஜ். அல்வின் கமல் றாஜ். யூட்வின் டிமல் றாஜ் .டிவ்னா பத்மலோஜினி. றொபினா கிறிசாத்தி ஆகிய ஏழு பிள்ளைகளையும் சமூகத்தில் உயர்ந்தவர்கள் ஆக உருவாக்க இவர் அனுபவித்த துன்பங்களுக்கு அளவே இல்லை என்றால் அது மிகையாகாது.
துணை நின்ற தாயாரும், கை கொடுத்த ஆசிரியத் தொழிலும் கூடவே உழைத்த தையல் இயந்திரமும் பிள்ளைகள் கரை சேரத் துணையாகியது. இருப்பினும், நீண்ட கால சுவாச மற்றும் ஈரல் நோய்களால் கடும் சுகவீனமுற்று, பிள்ளைகளினதும் பேரக் குழந்தைகளினதும் வெற்றிக்கனிகளை சுவைக்கும் இப்பருவத்தில் ஆண்டவர் அவரை அழைத்ததன் பேரில் தனது இவ்வுலக பணியில் இருந்து ஓய்வு பெற்று, 09.04.2025 இல் ஜோசப் வாஸ் நகர், தோட்ட வெளியில், அமைதியில் இளைப்பாறினார்”.
பள்ளிக்குட நிர்வாகத்தில் ஆரம்ப பிரிவின் பகுதி தலைவராக இருந்து தனது கடமைகளை சிறப்பாக ஆற்றும் பண்பை அவர் கொண்டிருந்தார். விளையாட்டு போட்டிகளின் போது இல்லங்களுக்கு இவரை பொறுப்பாக போட மாட்டார்கள் விளையாட்டு Cammittee யில் இருந்து அனைத்து வேலைகளையும் குறிப்பாக பதிவுகளை ஒழுங்காக மேற்கொண்டு புள்ளிகள் வழங்குதல்,சான்றிதழ்களை எழுதுதல் போன்றவற்றை சீராக நேர்த்தியாக செய்து முடிப்பார். பாடசாலையில் இடாப்பு பதிவுகளை மேற்கொள்வது இவரது தனிச்சிறப்பாகும். இடாப்பு பதிவுகளை பல வருடங்களாக தொடர்ச்சியாக சரியாக செய்துவந்தது மலர்ரிச்சர் என்றால் அது மிகையாகாது.
மடுவலயத்தில் ஆரம்ப கல்வி உதவி கல்வி பணிப்பாளராக பணியாற்றியிருந்தார். இயல்பிலேயே கதை புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை கொண்டிருந்த அவர் நிறைய கதைப்புத்தகங்களை வீட்டில் வாசித்து வாசிப்பு பழக்கத்தை தனது பிள்ளைகளுக்கு ஊட்டியிருந்தார். ஊரில்குடிதண்ணி பற்றாக்குறையாக பவுசரில் கொண்டு வந்து பைப்படியில் இருந்த வக்கில் நிரப்பி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பது மாதர் சங்க தலைவியாக இருந்த இவரது பணியாக இருந்தது. அதனை சரியான முறையில் செய்துமுடிப்பார். தையல் கலையில் பிரசித்திபெற்ற அவர்க்கு ஒய்வே இருக்காது பள்ளிக்குடம் முடிய மிசினில குந்தினா சாமம் செல்லும் தையல் முடிய. அந்த அளவிற்கு தையல் இழுத்துப்போட்டு செய்து அதிலே சிறப்பு தேர்ச்சி பெற்றிருந்தார்.
வேலைகளை பேசாலை நலன்புரி நிலையத்தில் இருந்து எமது தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயம் பேசாலை வெற்றிநாயகி ஆலய வளவில் இயங்குவதற்கு உழைத்தவர்களுள் அவரும் ஒருவராவார். இடம்பெயர்ந்த நிலையிலும் எமது பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியை சிறப்பாக நடாத்தியதில் அவரின் பங்கு அளப்பெரியதாக இருந்தது.
முகாமில் எமக்கான பாடசாலை அமைத்து பிரதி அதிபராக எமது பாடசாலையை ஏனைய ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக நடாத்திய நிர்வாகத் திறமை அவரையே சோரும். பின்னர் ஜோசப்வாஸ் நகரில் மீளக்குடியேறிய அந்த ஆரம்ப நாட்களில் பாடசாலையை பொறுப்பெடுத்து சிறப்பாக நிர்வகித்திருந்தார்.
மடு வலயத்தில் குறிப்பாக இலுப்பை கடவை, ஆண்டான்குளம், கருங்கண்டல், வட்டக்கண்டல் மற்றும் பண்டிவிரிச்சான் போன்ற இடங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளுக்கும், தமிழ் தின போட்டி மற்றும் ஆங்கில தின போட்டிகளுக்கும் மாணவர்களை ஒழுங்குபடுத்தி ஒவ்வொரு நிகழ்விற்கும் பொறுப்பாசிரியர்களாக எம்மோடு அழைத்து வந்திருந்த அந்த நாட்களை மறக்க முடியாது.
எமது பாடசாலை முன்னாள் அதிபர் திரு.விஸ்வராஜா அவர்கள் வன்னியில் இருந்து ஜோசப்வாஸ் நகருக்கு வந்து போவது சிரமமாக இருந்த நாட்களில் பாடசாலையின் அனைத்து பொறுப்புகளையும் தன்னந்தனியாக சிறப்பாக நிர்வகித்த பெருமை அவரையே சாரும். சில காலமாக மன்னார் கல்வி வலயத்தில் ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகராக பதவிவகித்திருந்தார்.
தேவையில் உதவும் பண்பு அவரிடம் நிறையவே இருந்தது. ஊர் சாந்த பொதுவிடயங்களில் தனது தாரான மனதுடன் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கியிருப்பது மறந்துவிட முடியாது.
அவர் தனது வாழ்நாளில் தனது பிள்னைகளுக்காக அவர்களது சிறப்பான வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்த, தன்னை உருக்கிய மெழுகாக வாழ்ந்து,வெற்றிகளை அடைந்த இரும்பு பெண் என்பதில் ஐயமில்லை.
மனித நேயம் என்பதன் மறுவடிவம் இம்மானுவேல் மாஸ்ரர்
இம்மனுவேல் மாஸ்ரர் என்று எமது ஊரவர்களால் மட்டுமன்றி மன்னார் மாவட்டம் தாண்டி பல்வேறுபட்ட இடங்களில் வாழும் மக்களால் அறியப்படுகிற மக்களின் நன்மதிப்பை வென்ற,விளையாட்டுத்துறையின் முன்னோடியானவர். விடத்தல்தீவு 7ம் வட்டாரத்தில் கவக்கின் செபமாலை (முத்தம்மா) தம்பதியினருக்கு மகனாக 11 சகோதர சகோதரிகளுடன் பிறந்தார்.
அமரர் கூஇம்மனுவேல் அவர்கள் 1/9/1964 ம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றார். தனது முதல் நியமனத்தில் 1/9/1964ம் ஆண்டு தொடக்கம் 31/4/1966ம் ஆண்டுகள் வரையான காலப்பகுதியில் மன்னார் சின்னவலயன் கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராக 2 வருடங்கள் பணியாற்றியிருந்தார். தொடர்ந்து 1/2/1966ம் ஆண்டு தொடக்கம் 25/1/1967ம் ஆண்டு வரையான 1வருட காலத்தில் மன்னார் வெள்ளாங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியராக அங்கே சேவையாற்றியிருந்தார்.அதன் பின்னர் 26/1/1967ம் ஆண்டு தொடக்கம் 31/42/7968ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்சியை நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரிய பயிற்சி காலத்தில் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சி கலாகாலையில் கூஇம்மனுவேல் அவர்கள் விளையாட்டுத்துறையில் பல்வேறுபட்ட சாதனைகளை நிலைநாட்டி முதன்மை விரனாக வெற்றிக்கிண்ணங்களையும், கேடயங்களையும் தனதாக்கிக்கொண்டார்.
தொடர்ந்து1/4/1969ம் ஆண்டு தொடக்கம்31/12/1970ம் ஆண்டுவரையில்மன்னார் பெரியமுறிப்பு அரசினர்தமிழ் கலவன் பாடசாலையிலும் 14/4971ம் ஆண்டு தொடக்கம் 31/8/1971ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மன்னார் விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் பணியாற்றியதுடன்1/9/1971ம் ஆண்டு தொடக்கம் 31/42/4972ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மன்னார் சின்னப்பண்டிவிரிச்சான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதன் பின்னர் மன்னார் மாவட்டத்தின் கன்னாட்டி சிறுக்கண்டல் மற்றும் தேவன்பிட்டி ஆகிய பாடசாலைகளிலும் தனது கடமையை சிறப்பாக ஆற்றி ஆசிரிய பணியில் இருந்து ஒய்வு பெற்றிருந்தார்.
ஆசிரியர் திரு. க. இம்மானுவேல் அவர்கள் விடத்தல்தீவின் உதைபத்தாட்ட வரலாற்றில் முக்கியமான இடத்தினை வகிக்கிறார். அவர் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மெயவல்லுனர் விளையாட்டுக்களில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாது, தனது அபாரத்திறமையின் மூலம் மன்னார், மாந்தை பிரதேசங்களில் விடத்தல்தீவுக்கு பெருமை தேடித்தந்தார். இவர் சிறந்த உதைபந்தாட்ட வீரனாகவும்,பயிற்றுவிப்பாளராகவும், நடுவராகவும் திகழ்ந்தார். ஐக்கிய விளையாட்டுக்கழக உருவாக்கத்தில் இவர் முக்கியமான பங்ககை வகித்திருந்தார். அக்கலங்களில், எமது வீரர்களை உதைபந்தாட்டத்திலும் ஏனைய விளையாட்டுகளிலும் பயிற்றுவித்து, வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று போட்டிகளில் பங்கேற்க வைப்பதிலும், இவர் முக்கிய பங்காற்றியிந்தமை குறிப்பிடத்தக்கது.
"ON YOUR MARK" என விளையாட்டு போட்டிகளில் விடப்படும் கட்டனைவின் கம்பீரமான குரலை கேட்டு கதிகலங்கி பயத்தால் நடுநடுங்கிப்போகும் வண்ணம் இம்மனுவேல் மாஸ்ரரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கும். வாயில் விகிலுடன் மைதான மூலை முடுக்குகளில் கண்ணும் கருத்துமாக இருப்பார். இவருக்கு தெரியாதே விளையாட்டு சட்ட நுணுக்கங்களே இல்லை எல்லா சட்டவிதிகளையும் அறித்துவைத்திருந்தார் கஇம்மனுவேல் மாஸ்ரர் அவர்கள். உள்ளூரில் நடைபெறுகின்ற அனைத்து விளையாட்டுப்போட்டிகளிலும் தலமை நடுவராக தனது பொறுப்பை செவ்வனே செய்துமுடிப்பார். எமது ஊர் தவிர்ந்த வன்னி பெருநிலப்பரப்பெங்கும் குறிப்பாக பாடசாலைகள் அனைத்திலும் இம்மனுவேல் மாஸ்ரின் நாமம் உச்சரிக்கப்படாத இடமே கிடையாது எனலாம் அந்த அளவிற்கு விளையாட்டிற்கு முன்னுதாரனமாக திகழ்ந்திருந்தார்.
ஜோசப்வாஸ் நகரில் இடம்பெயர்ந்த நிலையில் ஜோசப்வாஸ் நகரில் ஒரு கழகத்தை புதிதாக தொடங்கும் எண்ணம் . நிலவியதை அறிந்து விடத்தல்தீவில் இருந்து ஜோசப்வாஸ் நகருக்கு வந்து எமது ஐக்கிய விளையாட்டுக்கழக உறுப்பினர்களுடனும் மக்களுடனுமான கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். விளையாட்டு போட்டிகளுக்காக ஊரில் இருந்து பிற இடங்களுக்கு வீரர்களை கொண்டு சென்று தனது தலமையின் கீழ் பல்வேறுபட்ட போட்டிகளில் பங்குபற்றியதுடன் வெற்றிவாகைகளை கடவும் காரணகர்த்தாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல அறிவுரைகளை சொல்லி ஆசிரியப்பணிபற்றி வழிகாட்டியவர், பற்பலதிறமைகளுக்கு சொந்தக்காரர் அவர். விளையாட்டு,ஒழுக்கம், கல்வி போன்றவற்றுக்கு முன்னோடியானவர். இனமையிலே சிறந்த கல்வியாளனாகவும், விளையாட்டுக்களில் சிறந்த வீரனாகவும் திகழ்ந்ததுடன் உதவும் மனப்பாங்கு நிறைந்தவருமாவார்.
ஒருமுறை மைதானத்தில் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி நடத்துவதற்கான மைதான ஓடு பாதை( track) அடிப்பதற்காக பலமுறை பல தேர்ச்சி பெற்றவர்கள் முயன்றும் அவர்களால் சரியான அளவில்,சரியான முறையில் அதை செய்துமுடிக்க இயலவில்லை. கூப்பிடுங்கடா வாத்தியார என்டு சொல்லவும் வந்து இறங்கினார் மைதானத்தினுள், ஒரு சில வினாடிகளுக்குள் சரியான அளவில் மைதானத்தில் ஓடுபாதையை தயார்செய்து தந்தார் . இவ்வாறான பல நிகழ்வுகள் ஐக்கிய விளையாட்டுக்கழகத்திற்கும்,எமக்கும் பல சேவைகளை உதவிகளை வழங்கியிருந்தார்.
சிறந்த மனிதாபிமானியும் சமூக செயற்பாட்டாளருமாகிய திரு சுவைக்கின் இம்மானுவேல் ஆசிரியரைப் பற்றிய அனுபவப்பகிர்வு - அன்ரன் லாஸ், டென்மார்க்க
எனது பெயர் திரு அன்ரன் லாஸ். நான் விடத்தல்தீவை பிறப்பிடமாகக் கொண்டவன். 1986 ஆம் ஆண்டிலிருந்து நான் டென்மார்க்கில் வசித்து வருகிறேன். நான் விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயின்றவன். அத்தருணத்தில் தான் எனக்கும் இம்மானுவேல் ஆசிரியருக்கும் நெருக்கமான உறவு ஆரம்பித்தது. நான் ஏழாம் ஆண்டு கல்வி கற்கும் போது அவர் எனது கணித ஆசிரியராக இருந்தார்.
ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு வரைவிலக்கணமாகவே அவரை நான் பார்த்தேன். நிமிர்ந்த கம்பீரமான நடை அவரது தலை முடியின் அழகு, அவர் வேட்டியுடன் வெள்ளை சட்டையுடனும் வருகின்றபோது அனைவரின் கண்ணும் அவரையே பார்க்க தூண்டும் அளவிற்கு புன்சிரிப்புடன் தான் ஒவ்வொரு நாளும் பாடசாலையில் அவரை நான் பார்த்திருக்கிறேன். பாடசாலையில் சிறந்த ஆசிரியராக அவர் செயற்படாத தருணங்களே கிடையாது. ஆனால் பாடசாலைக்கு வெளியே அவர் தனது மாணவர்களுடன் மாணவன் என்று பழகுவதை தவிர்த்து தனது பிள்ளைகள் போலவே அவர்களை நடத்துவது என்னால் இன்றும் மறக்க முடியாத விடயம்.
திரு.இம்மானுவேல் ஆசிரியரிடம் நான் பார்த்து வியந்த பல விடயங்களை எனது அனுபவத்தில் இருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் ஆசைப்படுகிறேன். இந்த வரலாற்று நாயகனின் ஆசிரிய, சமூக, விளையாட்டு கலை கலாச்சாரம், மற்றும் ஏனைய சமூக சேவைகள், குறிப்பாக தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்று அதனால் அவர் செய்து வந்த சாணக்கியமான அரசியல் செயற்பாடுகள் சிறுவர்களாக இருந்த எங்களை மிகவும் தூண்டியது.
அவரால் தான் எமக்கு சமூகத்திலும் நல்ல பெயர் கிட்டியது, இதைவிட அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட தன்னம்பிக்கை என் வாழ்க்கையில் இன்றுவரை என்னை வழிநடத்தி செல்கிறது.
பாடசாலைக்கு அவர் ஆற்றிய சேவை.
அவருடைய ஆசிரியர் சேவை காலத்தில் மன்னாரில் பல இடங்களிலும் பணி செய்து. மிகவும் நல்ல ஒரு பெயரைப் பெற்று 1977 வது காலப்பகுதியில் அவர் எமது பாடசாலையான மண்' விடத்தல் தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் ஒரு கணித ஆசிரியராக இருந்தாலும் எமது கிராமத்தின் மாணவர்களின் வளர்ச்சிக்காக தன்னை பல வழிகளில் அர்ப்பணித்தார்.
சிறப்பாக பாடசாலை நேரம் தவிர்ந்த மாலை வேலைகளில் அனைத்து வகுப்புகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை குன்றும் குழியுமாக இருந்த ஒரு சிறு இடத்துக்குள் தட்டு எறிதல், குண்டு எறிதல், ஓட்டப்போட்டி நீளம் பாய்தல், உயரம் பாய்தல் ஆகிய பல விளையாட்டுகளை மாணவர்களாகிய எமக்கு கற்றுக் கொடுத்தார்.
எமது வளர்ச்சியை பார்த்து ஒவ்வொரு நாளும் ரசித்த மனிதர்களில் எனது ஆசிரியரை மிஞ்சஆட்கள் இல்லை என்றே கூறுவேன். ஏனென்றால் அவரின் கைகளால் ஒவ்வொரு முறையும் செதுக்கப்படும் சிலைகளாக எங்களை மாற்றினார். எமது மாணவர்களின் விளையாட்டு துறை சார் வளர்ச்சியை ஊக்குவிக்கும் முகமாக எங்கள் பாடசாலைக்கு அருகில் இருந்த காணிகளில் குடியிருந்த மக்களிடம், பாடசாலையின் எதிர்கால தேவையும் சமூகத்தின் தேவைகளையும் வலியுறுத்தி மிகவும் அன்பான முறையில் பேரம் பேசி, பாடசாலை அருகில்பாடசாலைக்கு என ஒரு விளையாட்டு மைதானத்தை அவரே நின்று மேற்பார்வையிட்டு உருவாக்கிய பெரும் பங்கு எனது இமானுவேல் ஆசிரியரே சாரும்.
விளையாட்டு துறையில் எனது ஆசிரியரை மிஞ்சுமளவுக்கு மன்னார் மாவட்டத்தில் யாரும் இருக்கவில்லை. ஏன் நான் அதை கூறுகிறேன் என்றால் கீழ்மட்டம் தொடக்கம் கல்வி திணைக்களம் வரை அவருக்கு தெரியாத நபர்களே கிடையாது. அவர் மிகச்சிறந்த விளையாட்டு வீரன் என்பதனை ஒவ்வொரு முறையும் அவர்
போட்டிகள் நடைபெற்ற காலத்தில் அவர் எங்களை உழவு இயந்திரங்களில் ஏற்றிக்கொண்டு தானும் அதே உழவியந்திரத்தில் எங்களுடனே பயணித்து வந்ததும் அவர் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பு அவரை சுற்றி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாளும் பல நடுவர்கள் வேறு பாடசாலை ஆசிரியர்கள் ஒன்று கூடி அவரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட விதங்கள் எம்மை இப்போது மெய்சிலிர்க்க வைக்கிறது.
விளையாட்டு துறையில் ஏதாவது வந்துவிட்டால் எனது ஆசிரியர் இம்மானுவேல் சொல்வதை மட்டும் தான் கடைசி முடிவாக ஏற்றுக் கொண்ட காலம் அது. எமது ஆசிரியரின் அளப்பெரிய அர்ப்பணிப்பினால் சென்று
வந்த போட்டிகளில் எல்லாம் குறிப்பாக வலைப்பந்தாட்ட போட்டிகள் தொடக்கம் மற்றைய ஏனைய போட்டிகளில் எமது பாடசாலை பல சாதனைகளை குவித்தது. அவரின் காலம் தான் எமது பாடசாலை விளையாட்டு துறையில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது. வீறு கொண்ட நடையும் நிமிர்ந்த பார்வையும் அழகான தோற்றமும் கொண்ட எனது ஆசிரியன் தான் நான் பல தடவைகள் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டங்களில் முதல் இடங்களை அன்னிக் குவிக்க வித்திட்ட மகான். எனது மனதில் நாங்கள் அடைந்த மாபெரும் வெற்றியை நாங்கள் குவித்த வெற்றி கிண்ணங்களையும் கேடயங்களையும் பாடசாலையில் வைத்து எம்மை கௌரவித்து அழகு பார்த்த எனது ஆசிரியனை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இது இவ்வாறு இருக்க தியூசியான் 400 மீற்றர் ஓட்டத்திலும், கில்லரி 800 மீற்றர் ஓட்டத்திலும் முதலிடங்களை குவித்தும் வந்தார்கள். இந்த வெற்றி கேடயங்களுடனும் கிண்ணங்களுடனும் விடத்தல்தீவை அடையும் வரை பெரும் திருவிழா கோலம் போலவே அக்காலங்கள் காட்சியளித்தன. எனது ஆசிரியரின் வருகைக்குப் பின்பு தான் நாங்கள் பல இடங்களுக்கு சென்று விளையாட்டு துறையில் எங்களை நிரூபித்து காட்ட சரியான சந்தர்ப்பங்களை உருவாக்கி தந்தார். விட்டில் பூச்சியாக இருந்த என்னை விமானம் ஆக்கியவன். நாங்கள் முதல்முறை சென்ற அந்த விளையாட்டுப்போட்டியிலேயே அவர் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் சிறந்த ஆசான் என்பதற்கான மிகச்சிறந்த விருதினை வழங்கி பல ஆசிரியர்கள் புடைசூழ கௌரவித்தனர். அப்போது எல்லாம் மன்னாருக்கு செல்வது ஏதோ வெளிநாட்டுக்கு செல்வதைப் போல ஒரு உணர்வு, நாங்கள் அனுபவித்த அந்த சந்தோஷத்தினை எங்களால் வர்ணிக்க வார்த்தைகன் இல்லை. அவை மிகவும் பசுமையான காலங்களே, விடத்தல் தீவு மண்ணுக்கு அவர் ஆற்றிய சமூகப்பணி.
அக்காலத்தில் விடத்தல் தீவு தமிழ் மக்கள் குறிப்பாக கிறிஸ்தவர்கள் இரண்டு பகுதியாக வாழ்ந்தனர். ஒரு சாரார் புனித யாகப்பர் ஆலய பகுதிகளிலும் ஏனையோர் புனித அடைக்கல மாதா ஆலய பகுதிகளை அண்டி வாழ்ந்து வந்தனர். . தற்போது அந்த நிலை மாறி இருப்பது ஓரளவு சந்தோஷத்தையே கொடுக்கிறது.
ஆனாலும் இவ்விரு சாராரும் ஒன்றாகஒற்றுமையாக சேரவேண்டும் என்பதற்காகபுனிதர்யாகப்பர்பகுதியில் இருந்த எனது ஆசிரியரானஇம்மானுவேல் அவர்களும் அவரால் ஊக்கப்படுத்தப்பட்டமற்றொருவரும் மாதா கோயில் பக்கம் இருப்பவர்களை மாறி மாறி திருமணம் செய்து கொண்டால் இப்பிரச்சனைக்கு தீர்வாகலாம் என்று அதை செய்தவரும் எனது ஆசிரியர்தான் அதற்கு ஊக்குவித்தவரும் எனது ஆசிரியர்தான். இவற்றைத் தாண்டி கிராமத்தில் இரண்டு பிரிவாக விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை ஒரு கழகமாக கட்டி எழுப்பி அவர்கள் பல வெற்றிகளை குவிப்பதற்கு ஆசை கொண்ட அன்றைய பங்கு குருவானவர் அருட்திரு ஹெஜீஸ் ராஜநாயகம் அவர்களின் பரிந்துரையின் கீழும் இம்மானுவேல் ஆசிரியரின் முயற்சியாலும்,மற்றும் சிலரின் முயற்சியாலும் விடத்தல் தீவு ஐக்கிய விளையாட்டு கழகம் என்ற கழகத்தை உருவாக்கி அது பல வெற்றிகளை குவிப்பதற்கு வழிவகுத்தத்துடன் ஒரு வகையில் விடத்த தீவின் ஒற்றுமையையும் உலகுக்கு கூறக்கூடிய ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
இன்றும் அந்த ஐக்கிய விளையாட்டு கழகம் மாவட்ட மட்டங்களிலும் மாகாண மட்டங்களிலும் அதன் திறமைகளை வழிகாட்டி பெறுவது மிகவும் சந்தோஷம் அளிக்கின்றது. அன்று அவர்கள் போட்ட விதை என்ற ஆலமரமாக கிளை பரப்பி நிற்பது எமது மக்களின் ஒற்றுமையை உலகுக்கு பறைசாற்றுகிறது இதன் அச்சாணியாக செயல்பட்ட எனது ஆசிரியரே நான் மிகவும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.
அரசியல் மற்றும் கலாச்சார பணிகள்.
ஆசிரியர் இம்மானுவேல் ஒரு சிறந்த தமிழ் பற்றாளன். ஒரு வகையில் எமது ஊரில் அவர் ஒரு மாற்றத்தை உருவாக்கும் விடிவெள்ளியாக திகழ்ந்தவர். ஏனென்றால், ஒடுக்கப்பட்ட தமிழினத்திற்கு ஒரு பூரண சுதந்திரம் நிச்சயம் வேண்டும் என உணர்ந்ததால் அவர் தமிழரசு கட்சியின் ஒரு உறுப்பினராகவும், மிகவும் அர்ப்பணிப்பு உள்ள ஒரு தொண்டனாகவும் தேர்தல் காலங்களில் அவரை நான் பார்த்திருக்கிறேன். அவரது தமிழ் பற்றினையும் அரசியல் ஈடுபாட்டினையும் கூறுகின்ற போது எனக்கு அவர் பற்றி ஒரு நல்ல ஞாபகம் எழுதுகின்றது. தமிழிலும் எமதுசமூகத்திலும்நடக்கின்ற சமூக அநியாயங்களை அடக்குமுறைகளை தோலுரித்துக் காட்டுவதற்காக அவர் பல நாடகங்களை மாணவர்களாகிய எங்களை உபயோகித்தும் அரங்கேற்றம் செய்து வந்தது இப்போதும் என் கண் முன்னே இருக்கின்றது. அதில் சில நாடகங்களில் நானும்
நடித்துள்ளேன். என்னை பொறுத்தவரையில் ஒரு குயவன் கையில் மட்பாண்டம் போல எனது பாடசாலை பருவத்திலேயே மிகவும் அக்கறை எடுத்து என்னையும் என்னை போன்றோரையும் அழகாக வனைந்து இந்த சமூகத்துக்கு வழங்கிய பெருந்தொண்டினை ஆற்றிய மாமனிதர் அவர். எனது ஆசிரியரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட பல விடயங்களை என்றும் என் வாழ்க்கையில் நான் கடைப்பிடித்து வருகிறேன். குறிப்பாக தன்னம்பிக்கை, திட்டமிடல்., விடாமுயற்சி, மற்றும் மனம் உடைந்து போகாத உறுதியான நிலை என்பவற்றை கூறலாம்.
வர்மக்கலை.
ஆசிரியர் இம்மானுவேல் பல திறமைகளை தன்னகத்தே கொண்ட ஒரு பல்கலைக்கழகம் அவரிடமிருந்து
அசாத்தியமற்ற திறமைகளில் மிக முக்கியமான என்னைக் கவர்ந்த திறமை அவரிடமிருந்த வர்மக்கலை என்பதை கூறினால் ஆச்சரியமில்லை. அவர் அந்த கலைவினை தனது சொந்த தேவைக்காக கற்றிருந்தார் தவிர மற்றவர்களுக்கு தீங்கு செய்வதற்காக அல்ல. ஆனாலும் அவர்களுக்கு எதிரிகள் அன்று யாருமே இருக்கவில்லை.
அவருக்கு அருகில் செல்லவும் பயப்படுவார்கள். நான் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக மன்னாருக்கு சென்றேன். அப்போது தெருவில் சண்டை செய்து கொண்டிருந்த ஒரு ஒரு பையனை அழைத்து அவனது கழுத்து அருகில் கையை வைத்து ஏதோ செய்தார் அவன் கழுத்தை திருப்ப முடியாமல் அழுது கொண்டிருந்தார். அவன் அவரிடம் இனிமேல் நான் யாருடனும் சண்டை செய்ய மாட்டேன் நான் செய்த தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியதன் பின்னர் தான் அவனுடைய கழுத்து பிடிப்பை மீண்டும் அவர் சரி செய்து விட்டார். இது போன்ற பல விடயங்களை அவர் செய்ததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சிறந்த மனித நேயம் கொண்டவர்.
ஆசிரியர்தொழில் செய்தகாலங்களிலும் அதன்பின்னரும் அவர்தனதுசமூகமனிதாபிமானசெயல்பாடுகளை கைவிடவில்லை. இதற்கு அவரால் பலன் அனுபவித்த மக்களும் அவர்களின் உறவினர்களும் தான் சாட்சி. இம்மானுவேல் ஆசிரியர் அவர்கள் தமிழ் சிங்கள ஆங்கிலம் போன்ற மொழி நிறமைகளை தன்னகத்தே கொண்டவர். இவர் ஆசிரியர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அனுராதபுரம், கொழும்பு, கண்டி போன்றவைத்தியசாலைகளுக்கு மொழிபிரச்சனைகாரணமாகவும்,பணபிரச்சனைமற்றும்துணைக்கு யாரும் இல்லை என்ற நிலையிலும் தானே முன்வந்து எமது ஊரைச் சேர்ந்த பலரை அவர் வைத்தியசாலைகளுக்கு கொண்டு சென்று அவர்களுடன் நின்று ஆற்றிய தொண்டு வாராலும் மறக்க முடியாதது.
பல பெரும் பெரும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்து அவர்களுடைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிய ஒரு மாபெரும் மனிதன் எனது ஆசிரியர். இதை பலர் தமது சொந்த வாய்களால் சொல்ல நான் காது கொடுத்து கேட்டிருக்கிறேன். என்றும் அவரின் சேவையை பாராட்டி பலர் நினைவுகளில் அவர் வாழ்ந்து வருகிறார் என்பதுதான் உண்மையான விடயம்.
மன்னார் அமுது - கல்வி, கலைத்துறையில் மிளிரும் அந்தோனிமுத்து அரியம் மாஸ்ர் விடத்தல்தீவு அடைக்கலம், லூர்த்தம்மா ஆகியோரின் மகனாக 1940 ம் ஆண்டு ஆவணி மாதம் 19ம் திகதி பிறந்தார் அந்தோனிமுத்து மாஸ்ரர் அவர்கள்.
தனது ஆரம்ப கல்வியை 1945ம் ஆண்டு காலப்பகுதியில் தொடங்கி விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் SSC வரை கற்றுத்தேர்ந்தார். அரியம் மாஸ்ரர் அவர்கள் தனது ஆசிரியர் முதல் நியமனத்தில் II0/1962 ம் ஆண்டு மன்னார் பெரியமுறிப்பு பாடசாலையில் நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரிய பயிற்சி காலத்தை யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் நிறைவுசெய்து பெரியமுறிப்பு, விடத்தல்தீவு, தட்சனாமருதமடு, கற்கடத்தகுளம், ஆண்டான்குளம், பண்டிவிரிச்சான் மற்றும் தாழ்வுபாடு போன்ற பாடசாலைகளில் ஆசிரியராக சேவையாற்றியிருந்தார். தொடர்ந்து 1975ம் ஆண்டு காலப்பகுதியில் அதிபராக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் விடத்தல்தீவு, பண்டிவிரிச்சான் மற்றும் தாழ்வுபாடு பாடசாலைகளில் பணியாற்றியிருந்தார்.
அதிபர் தரத்தில் Grade 1 தரத்தை பெற்ற அரியம் மாஸ்ரர் அவர்கள்
மரு கல்வி வலய ஆரம்ப பிரிவு ADE ஆக பதவிவகித்திருந்தார். கலைத்துறையில் இயற்கையாகவே அமைந்த ஆளுமையின் நிமித்தம் சிறந்த பன்முக படைப்பாளியாகவும், நாடக நடிகரும், ஏழுத்தாளரும், பேச்சாளரும் மன்னார் கலைச்சுரபியும் கலைமாமணி விருது வென்றவருமானவருமாக 1 வயது தொடக்கம் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கான பாலருக்கான 50 கவிதை அடங்கிய புத்தகம் உட்பட கவிதைகள் கட்டுரைகள், நாடகம், வில்லுப்பாட்டு, நாட்டுக்கூத்து, மற்றும் நாவல்கள் போன்றவற்றை கோட்ட மட்டத்திலும்,மாவட்ட மட்டத்திலும், மாகாண மற்றும் தேசிய மட்டத்திலும் கொண்டு சென்றிருந்து பல பாராட்டுகளையும், நினைவு சின்னங்களையும், பெற்றதுடன் அதியுயர் விருதான கலாபூசண விருதையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கற்கடந்தகளம் பாடசாலையில் கடமையாற்றிய நாட்களில் முருங்கன்பாடசாலைக்கு கல்விகற்க போய்வந்த மாணவன் ஒருவன் பாடசாலைக்கு செல்வதை நிறுத்தியதை அறிந்து அந்த மாணவனை அழைத்து விசாரனை நடத்தியதில் அந்த மாணவன் பரீட்சையில் சித்தியடையாத காரணத்தை தெரிந்து அந்த மாணவனுக்கு பிரத்தியேகமாக பாடங்களை சொல்லிகொடுத்தது மட்டுமல்லாமல் அந்த மாணவனுக்கு ஆசிரியர் ஒருவரின் உதவியை பெற்றுக்கொடுத்து அவரின் கற்பித்தலின் பிற்பட்ட நாட்களில் அந்த மாணவன் பரீட்சையில் சித்தியடைந்தது மட்டுமன்றிகிராம சேவகராக தற்போது பதவிவகித்து உயர்நிலையில் உள்ளதும், கற்கடந்தகுளத்தில் ஆலய வளாகத்தில் அமைந்திருந்த பாடசாலையை வேறொரு இடத்தற்கு மாற்றி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்ததும் மறக்கமுடியாத அனுபவாக இருப்பதாக அரியம் மாஸ்ரர் அவர்கள் எடுத்திரைத்தார்.
மன்னார் மாவட்டத்தில் 28 முதியோர் சங்கங்களை கொண்டு இயங்கும் முதியோர் சங்க சம்மேளனத்தின் தலைவராக அரியம் மாஸ்ரர் அவர்கள் சுமார் 10 வருடங்களாக பதவிவகித்திருந்தார்.மன்னார் துவர் துடைப்பு மறுவாழ்வு சங்க உறுப்பினராகவும்,மன்னார் வாழ்வுதயம் நிறுவனத்தில் அருட்பணியாளர்களான எமில் அடிகளார் மற்றும் யேசுராஜா அடிகளார் அவர்களது காலத்தல் 5 வருடங்கள் செயலாளராக பதவிவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட ரீதிவில் நடைபெறும் தமிழ், இலக்கிய விழாக்களில் நடுவராகவும், தமிழ் மொழிசார்ந்த போட்டிகளில் முக்கிய நடுவராகவும் விருந்தினராகவும் அழைக்கப்பட்டு பங்குபற்றியுள்ளார். மேலும் அந்தகாலத்து சிறுவர்களோடு ஒப்பிடுகையில் இவ் சமகாலத்தில் வாழும் சிறுவர்கள் குழந்தைகள் மிகவும் புத்திசாலியான விவேகம் கூடிய பிள்ளைகளாக காணப்படுகிறார்கள் என்றும் இந்த காலத்து சிறுவர்களுக்கான வசதி வாய்ப்புகள் நிறைந்து காணப்படுகின்ற நிலையில் தொலைபேசி உபயோகம் அதிகரித்து அறிவை தேடி ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவது அவசியம். ஆனால் ஆக்கபூர்வமாக செயற்படுவதை தவிர்த்து தொலைபேசி பாவனையை குழந்தைகள் பயன்படுத்துவதால் பாரிய பாதகமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடுகிறார்.
தமது பணிக்காலத்தில் வசதிவாய்ப்பு இல்லாத கற்க வசதிகள் அற்ற மாணவர்களுக்கான இலவச பிரத்தியேக வகுப்புகளை நடாத்தியதியதுடன் தமிழ் அறிவை போதித்ததில் அரியம் மாஸ்ரர் அவர்களது பங்கு அனப்பெரியது. படிக்க ஆர்வம் இருந்தும் வசதிவாய்புகள் அற்ற அந்த காலத்து மாணவர்கள் பாதையிலே கல்வியை இடைநிறுத்தி கடலுக்கும் வேறு தொழில்களுக்கும் சென்றதைகட்டிக்காட்டிய அரியம் மாஸ்ரர் அவர்கள் இந்த கால மாணவர்கள் அதிகமானோர் ஆசிரியர்களுக்கு பயப்படாமல் நட்பாக நண்பர்களாக பழகிவருவதும்,அதிகரித்துவரும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியால் அறிவை பெருக்கும் விடயங்களில் ஈடுபட்டு தன்னம்பிக்கை மிக்க வருங்கால தலைவர்களாக வாழவேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்திருந்தார்.
சிங்கம் அண்ணண் என நாங்க கூப்பிடும் இரட்ணசிங்கம்.
இரட்ணசிங்கம் அவர்கள் ஞானப்பிரகாசம், லூசியா ஆகியோரின் மகனாக 1/1925 ம் ஆண்டு விடத்தல்தீவில் பிறந்து நீக்கிலாப்பிள்ளை, ஜோசப் மாஸ்ரர், மாக்கிறற், டானியேல் (ஞானம்) மற்றும் பாக்கியம் ஆகிய சகோதர சகோதரிகளுடன் வாழ்த்துவந்தார்.
சிங்கம் அண்ணண் அவர்கள் தமது ஆரம்ப கல்வியை விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் உயர் கல்வியை யாழ்ப்பாணம் இந்து கல்லூரியிலும் கற்றார்.
எமதுவிடத்தல்தீவுகிராமத்தின் முதலாவதுதபால் ஊழியராக சுமார்1950ம் ஆண்டளவில் எமது கிராமத்தில் உள்ள தபாலகத்தில் நியமனம் பெற்று பணியாற்றியிருந்தார். எமது பிரதேசத்தில் உள்ள கிராமங்கள் தோறும் குறிப்பாக இலுப்பைக்கடவை, கள்வியடி, பெரியமடு, கோவிற்குனம், புதுக்குளம், ஆத்திமோட்டை, கன்னியடி போன்ற கிராமங்களுக்கு பேரூந்தில் பயணித்து ( Mail ) தபால் விநியோகத்தில் ஈடுபட்டிருந்ததுடன் மழை காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் போக்குவரத்துகள் தடைப்பட்டு ஸ்தம்பிதமடைந்த காலங்களில் கால் நடையாக சென்று தபால் விநியோக பணிகளை சிறப்பாக ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்நாட்களில் தொழில்நுட்ப வசதிகள் அற்று வெறும் கடித பரிமாற்றம் மட்டும் நடைமுறையில் இருந்த அக்காலகட்டத்தில் சிங்கம் அண்ணண் தனது சேவையை சிறப்பாக ஆற்றிலிருந்ததுடன் எமது கிராம தபாலக அதிபராக எமது,கிராமத்தின் அந்தோனிப்பிள்ளை அவர்கள் கடமையாற்றிவிருந்தார். ஆரம்பகாலத்தில்மழை, வெள்ளம் எனபார்க்காமல்பலநெருக்கடிகளுக்கு மத்தியிலும் வசதி வாய்ப்புகள் அற்ற வேளையிலும் எமது ஊரில் நிறைவான சேவை செய்த சிங்கம் அண்ணண் அவர்கள் 1977ம் ஆண்டு தனது,தபால் ஊழியர் சேவையில் இருந்து ஒய்வுபெற்றார்.
எமது ஊர் அந்நாட்களில் பல்வேறுபட்ட வசதிகள் குறைந்து காணப்பட்ட இடமாகவும் குறிப்பாக குடிநீருக்கு ஒரு கிலோ மீற்றர் தொலைவில் இருந்த பள்ளமடு கிணற்றில் இருந்தே குடிநீர் பெறவேண்டிய நிலைகாணப்பட்டிருந்தது. தபால் ஊழியரான சிங்கம் அண்ணண் அவர்கள் தனது ஓய்வுக்கு பிற்பாடு தனது சீபனோபாயமாக வெள்ளாமை செய்ததுடன் ஊரில் உள்ள குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பன்னமடு கிணற்றில் இருந்து குடிநீரை மக்களுக்கு வழங்கியும், விற்பனை செய்தும் இருந்தார்.
ஊரில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளுக்கு குறிப்பாக, ஊரில் நடைபெறும் திருமண வைபவங்களுக்கும் இறப்பு வீடுகளுக்கும் ஊரவர்களின் தேவைகளுக்கு ஏற்றமாதிரியும் குடிநீரை வழங்கியும் விற்பனை செய்தும் வந்தார்.அதிகாலை 4 மணிக்கு துமிலெழும்பி மரத்தால் ஆன சில்லு பூட்டப்பட்ட ஒத்த மாட்டு வண்டியில் பீப்பா ( றம்) ஏற்றப்பட்டு பெரிய வாளி ஒண்டும் 2 ஆடி நீளம் உடைய Hose pipe ஒண்டும் கொழுவியபடி பள்ளமடு குனத்துக்குள் இருந்த நல்ல தண்ணி கிணற்றில் இருந்து குடிநீரை கொண்டு வத்து எமது மக்களுக்கு அவர்களுடைய தேவையிலும், கடைகளுக்கும் விற்பனை செய்வதை சிங்கம் அண்ணண் வழக்கமாக கொண்டிருந்தார். பள்ளமடுவில் இருந்து ஊருக்கு வரும் வழியில் எமது குளத்தில் முழுகிவிட்டு விடுவரும் சிறுவர்கள், குழந்தைகளை வண்டிலில் ஏற்றிவருவதும், உடுப்பு கூடைகளை தலையில் சுமந்துவரும் தாய்மாரின் சுமைபோக்கி அந்த கூடைகளை தனது வண்டிலில் ஏற்றுக்கொண்டு வந்து கடத்தெருவு சத்தியில் இறக்கிவிட்டு செல்வதும் சிங்கமா அண்ணன் எமக்கு வழங்கிய சேவைகளாகும். சிங்கம் அண்ணன் அவர்களுக்கு மாட்டு வண்டியை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இருந்து எமது கிராமத்தின் நவரெட்ணம் ஐயா அவர்கள் வழங்கியிருந்தார். 1999ம் ஆண்டு இடப்பெயர்வு வரை சிங்கம் அண்ணன் தண்ணீர் வழங்கும் சேவையில் ஈடுபட்டதுடன் 2011ம் ஆண்டு மார்கழி மாதம் 28ம் திகதி இறைபதமடைந்தார். சிங்கம் அண்ணண் அவர்களுடன் இணைந்து அவரது பிள்ளைகளான கான்ஸ் ஜோசப் (றாஜன்) ஜோகராஜன் ஜோசப் (ஜோகன்) இயேசுதாசன் ஜோசப் (றஞ்சன்) ஆகிய மூவரும் சில்லு பூட்டிய வண்டிலில் ஊரில் குடிநீர், விற்கு போன்றவற்றை ரயர் பூட்டப்பட்ட மாட்டு வண்டிலில் வழங்கி விற்பனை செய்துவந்தனர்.
விடத்தல்தீவு எம்.ஏ.அப்துல் மஜீத்
விடத்தல்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.ஏ.அப்துல் மஜீத் விடத்தல்தீவு அலிகார் மகா வித்தியாலயம் மற்றும் வாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரி (கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம்) ஆகியவற்றின் பழைய மாணவர்) அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசியரான எம்.ஏ. அப்துல் மஜீத் பின்னர் அதிபர் தரத்துக்கு 1971 ஆம் ஆண்டு மன்னார் வேளாகுளம் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்திலும் 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரை மன்னார் சொர்ணபுரி அரசினர் வித்தியாலயத்திலும் அதிபராகக் கடமையாற்றினார். தொண்ணூறாம் ஆண்டில் இடம்பெற்ற புலப்பெயர்வுக்குப் பின்னர் இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக புத்தளம் பாத்திமா கல்லூரியில் நடத்தப்பட்ட மாலை நேரப் பாடசாலையின் அதிபராகவும் கடமையாற்றியவர்.விடத்தல்தீவு முஸ்லிம்களின் பண்பாடும் வரலாறும் என்ற நூலையும் எழுதி,எம்.ஏ.அப்துல் மஜீத் தமது அடையாளத்தை வேரூன்றச் செய்தவருமாவார்.இது தவிர மன்னார் மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் ஆசிரியர் மற்றும் முதலாவது முஸ்லிம் தலைமை ஆசிரியரென்ற தனிப் பெருமை பெற்ற முஹம்மது அலி என்பவரின் புத்திரரே இந்த எம்.ஏ. அப்துல் மஜீத் என்பது குறிப்பிடத்தக்கது. அருளப்பு ஜேம்ஸின் சமூகப் பங்களிப்பு
மன்னார் மாவட்டத்தில் எமது விடத்தல்தீவு கிராமம் கல்வி,கலை கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய துறைகளிலும் ,ஊரின் முன்னேற்றம் கருதி வாழ்ந்த மகத்தான மனிதநேயம் கொண்டு வாழ்ந்த மகான்களையும் தன்னகத்தே கொண்ட தனிச்சிறப்பு வாய்ந்த கிராமமாக திகழ்கின்றது .அந்த வகையில் விடத்தல்தீவு கிராமத்தின் அருமை பெருமைகளையும், ஊருக்காக வாழ்ந்து உழைத்தவர்களையும் சொல்லிமீனாது. தமது வாழ்நாளில் ஊருக்காகவும் அதன் அபிவிருத்திக்காகவும், வளர்ச்சிக்காகவும் தனிமனித ஆளுமைமிகுந்து செயல்வடிவம் கொடுத்தவர்களுள் சொந்த நலன் பாராது பொதுநலனுக்காக வாழ்ந்த எமது மண்ணின் அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் முயன்மையானவர் என்றால் அது மிகையாகாது.
அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் ராசையா
கனகம்மா என்று எம்மவர்களால் அறியப்படுகின்ற அருளப்பு மற்றும் மரியப்பிள்ளை ஆகியோருக்கு இரண்டாவது மகனாக 6 சகோதர சகோதரிகளுடன் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் கற்று பின்னர் எருக்கலம்பிட்டி மகாவித்தியாலயத்தில் கல்வியை தொடர்ந்த அவர் SSC சித்தியடைந்தார்.
எமது விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலய விளையாட்டு மைதான காணி அருளப்பு ஜேம்ஸ் அவர்களுடைய முன்னோர் வழிவந்த பரம்பரை காணியாக அவர்களது பெற்றோர் ஆட்டுப்பட்டி வைத்து தமது சீவியத்தை போக்கிவந்த நாட்களில் எமது பாடசாலைக்கு மைதானம் தேவைப்பட்ட காரணத்தினால் அரசாங்கம் அதனை கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஆட்டுப்பட்டி வைத்து தமது சீவனோபாயத்தை போக்கிவந்த அந்த நிலையிலும் அந்த காணியை எமது பாடசாலைக்காக வழங்க தமது பெற்றோரை வலியுறுத்தியதுடன் பாடசாலை விளையாட்டு மைதானம் அமைய அந்த காணியை வழங்க காரணகர்த்தாவாக இருந்தவர் அருளப்பு ஜேம்ஸ் என்றால் அது மிகையாகாது.
"தொட்டதெல்லாம் துலங்கும்" என்று சொல்லும் வார்த்தை மெம்படும் அளவிற்கு திரு.அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் ஊர் சார்பாக எடுக்கும் அனைத்து காரியங்களும் அவருக்கு கைகூடிவந்ததுடன் அவரால் மேற்கொள்ளப்பட்ட ஊர் சார்பான அபிவிருத்திகள் அனைத்தும் அவருக்கு வெற்றியாகவே அமையப்பெற்றது.
ஆளுமை, தற்துணிவு,சாதிக்கும் திறன் அனைத்திற்கும் சொந்தக்காரரான அருளப்பு. ஜேம்ஸ் அவர்கள் எமது விடத்தல்தீவு கிராமத்தின் பல்வேறுபட்ட துறைகளில் அபிவிருத்திகளை ஏற்படுத்தியிருந்தார். ஊரில் படித்து வேலைகளுக்காக காத்திருந்தவர்களுக்கு அந்தந்த துறைகளுக்கான அமைச்சர்களை அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து அவர்களூடாக வேலைவாய்ப்புகளை வழங்கியிருந்தார். அதாவது கிராம சேவகர், பொலிஸ் உத்தியோகம் என பல வேலைவாய்புகளை எம்மவருக்கு பெற்றுக்கொடுத்திருந்தார். விடத்தல்தீவு வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினராக பதவி வகித்த அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் எமது வைத்தியசாலையில் உள்ள ஆனணி பற்றாக்குறை மற்றும் ஏனைய குறைபாடுகளை உடனுக்குடன் மன்னார் மாவட்ட வைத்திய பணிப்பாளருக்கும் அதனோடு தொடர்புபட்ட அமைச்சுக்கும் தெரிவித்து விடத்தல்தீவு வைத்தியசாலையின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்திருந்தார்.
சன்னார் குனத்தில் இருந்து பெரியகுளம் ஊடாக எம்மவர்களது நெற்பயிர்செய்கை வயல் நிலங்களுக்கு தண்ணி நிறந்துவிடப்படுவதில் இருந்த முரன்பாடுகளையும், சிக்கல்களையும் உரியமுறையில் கையாண்டு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கையாண்டும் இருந்தார். மன்னாரில் இருந்து இரவு 10:30 மணிக்கு புறப்படும் இலங்கை போக்குவரத்துசபையின்பேருந்துஎமதுவிடத்தல்தீவுகிராமத்திற்குள்ளேவந்து திரும்பி போவதற்கான நடவடிக்கைகளில் அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாடசாலையில் அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பினராக பதிவி வகித்ததுடன் பாடசாலையின் ஆசிரிய பற்றாக்குறை மற்றும் ஏனைய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரும்பாடுபட்டிருந்தார்.
எமது துறையில் இருந்து வெளி கடலுக்கு படகுகன்,தோணிகள் சோளம், வாடை போன்ற அனைத்து பருவ காலங்களிலும் எவ்வேளையிலும் செல்லத்தக்க வகையில் இருக்கும் என்று சொல்லப்படுகின்ற கல்லோடையை வெட்டி அதனை ஆழப்படுத்த பெரிதும் ஈடுபாட்டுடன் உனைத்தவர்களுள் அருளப்பு ஜேம்ஸ் அவங்களும் ஒருவராக திகழ்ந்தார். இலங்கையில் எந்த பகுதியிலும் இல்லாத தமிழ்-முஸ்லிம் உறவுக்கு சிறப்பான உதாரணமாக திகழும் எமது விடத்தல்தீவு கிராமத்தில் முஸ்லிம், கிறிஸ்தவ மத,இன ஒற்றுமையையும், நல்லுறவையும் கொண்டிருந்ததுடன் முஸ்லிம் மக்களுடன் நெருங்கிய உறவையும் தொடர்பையும் அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் பேணி வந்தார்
எமது ஊரில் அருளப்பு ஜேம்ஸ் அவர்களது தலையீடு எல்லா இடத்திலும் காணப்பட்ட காலம் அது. அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் ஊரின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தேவைப்பட்ட, தீர்வு கொடுக்கக்கூடிய வழிவகைகளை கையாளத்தக்க ஒருவராக ஊரின் அனைவராலும் அடிக்கடி வேண்டப்பட்ட ஒருவராக இருந்திருந்தார். ஊரில் போக்குவரத்து பிரச்சனை, வைத்தியசாலை பிரச்சனை, பாடசாலை பிரச்சனை, மீனவர் எதிர்நோக்கும் பிரச்சனை போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டு அவ்வாறான பிரச்சனைகளை உரிய இடங்களுக்கு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வாறான பிரச்சனைகளை தீர்த்துவைத்ததே அருளப்பு ஜேம்ஸ் அவர்களது சிறப்பியல்பாகும். இவ்வாறு விடத்தல்தீவின் அபிவிருத்தியின் முன்னோடியாக திகழ்ந்திருந்தார்.
கடற்றொழில் அமைச்சரை விடத்தல்தீவுக்கு வரவழைத்து கடற்றொழிலாளரின் பாரிய பிரச்சனை தீர்க்கப்பட்டது.
1981ம்/ 1982 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் கடற்றொழில் அமைச்சராக பெஸ்ரஸ் பெரேரா
அவர்கள் பதிவிவகித்த காலப்பகுதியில் எமது விடத்தல்தீவு கிராமத்தில் அயல் பிரதேசமான மூன்றாம் பிட்டி கிராமத்தில் மாழ்ப்பாண மாவட்ட பாசையூர் மற்றும் குருநகர் போன்ற பகுதிகளில் இருந்து வந்து தங்கியிருந்ததுடன் கடற்றொழிலில் சீசன் தொழில் செய்யவும் அதாவது அவர்களது சொந்த இடத்தில் கடற்றொழில் செய்து அங்கே அதன் சீசன் முடிவடைந்த நிலையில் கடற்றொழிலுக்கான சீரற்ற காலநிலை அங்கே தென்படும்காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து இங்கு வந்து எமது பகுதிகளில் மூன்றாம் பிட்டி, இலுப்பைக்கடவை,மற்றும் கத்தாளம்பிட்டி கிராமங்களை அண்டிய பகுதிகளில் தற்காலிகமாக குடியேறி பல மாதங்களாக தங்கியிருந்து தொழில்செய்யத்தொடங்கினார்கள்.
பெருமளவு மீனவர்கள் சீசனுக்கு வந்து மேற்படி கிராமங்களை அண்டிய பகுதிகளில் தங்கியிருந்து தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டதனால் எமது விடத்தல்தீவு கடற்றொழிலாளர்களின் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் எமது கடல்வளத்தை குறையாடி எடுத்துச்சென்ற நிலையில் எமது விடத்தல்தீவு மீனவர்களும், மூன்றாம்பிட்டி இலுப்பைக்கடவை மற்றும் கத்தாளப்பிட்டி பகுதிகளை சொந்த இடமாக கொண்டு கடற்றொழில் செய்யும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையை அறிந்த அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களது முறைப்பாட்டை அந்த நாட்களில் கடற்றொழில் அமைச்சராக பதவிவகித்த கடற்றொழில் அமெச்சர் கௌரவ பெஸ்ரஸ் பெரேரா அவர்களிடம் மன்னாரில் இருந்து கொழும்பு சென்று அமைச்சரின் காரியாலயத்தில் நேரடியாக அமைச்சரை சந்தித்து எமது ஊரவர்கள் சார்பாக எமது ஊரவர்களின் இக்கட்டான சூழ்நிலையையும்,எமது ஊரவர்கள் அடைந்த பாதிப்புகளையும், பாதிக்கப்பட்ட நிலையையும் எடுத்துச்சொன்னதுடன் அமைச்சர் பெஸ்ரஸ் பெரேரா அவர்கள் எமது நிலையை நேரில் வந்து அறிவதற்கான குறிக்கப்பட்ட அந்த நான் திகதியையும் பெற்றுவந்தார்.
அதன் அடிப்படையில் கடற்றொழில் அமைச்சர் பெஸ்ரஸ் பெரேரா அவர்கள் எமது கிராமம் விடத்தல்தீவுக்கு தமது அமைச்சின் அதிகாரிகளோடு விஜயம் செய்து எமது விடத்தல்தீவில் இருந்து ஒரு படகு மூலமாக அமைச்சர் பெஸ்ரஸ் பெரேரா மற்றும் அவரது அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவும் மூன்றாம்பிட்டி வரை சென்று எமது கடல்பகுதிகளையும், கடல் மற்றும் எமது பகுதியில் காணப்படும் கண்ணா வளங்களையும் பார்வையிட்டு மூன்றாம்பிட்டி கரையை அடைந்தனர். மூன்றாம்பிட்டியில் தங்கியிருந்து தொழில் செய்த பாசையூர் மற்றும் குருநகர் பகுதியை சேர்ந்த மீனவர்களோடு கலந்துரையாடி அவர்களோடு ஒரு பேச்சுவார்த்தையை நடாத்தி குறிக்கப்பட்ட ஒரு கால அவகாசத்தை அவர்களுக்கு வழங்கியதுடன் கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் மூன்றாம்பிட்டி பகுதியில் தொழில் செய்வதை நிறுத்தி சொந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டதுடன், மூன்றாம்பிட்டி கடல் வளம் எமது பகுதி மீனவர்களுக்கான கடல்வளம் என்றும் இந்த கடல் பரப்பையும், கடல் வனத்தையும் நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஒரு தனியாளாக, தனி மனிதனாக செயல்பட்டு எமது கடல்வளத்தையும், எமது ஊர் மக்களின் தொழிலையும் பாதுகாப்பதற்காக பாரிய முயற்சியை திரு-அகுளப்பு ஜேம்ஸ் அவர்கள் எடுத்து அதிலே வெற்றியடைந்தமையும் எமது ஊருக்கும் ஊரவர்களுக்கும் திரு அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் ஆற்றிய மகத்தான சேவையில் முக்கியமானவைகளில் ஒன்றாகும். இவ்வாறான கடற்றொழில் சம்மந்தமான, எமது மீனவர்கள் பிரச்சனை சம்மந்தமான பல பிரச்சனைகளை உரிய இடங்களுக்கு கொண்டு செல்வதுடன் அவற்றுக்கு தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்திருந்தார்.
தனது வாழ்நாளில் சமூகசேவைகளையும், ஊரின் அபிவிருத்திகளையும் சிரமேற் கொண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வாழ்ந்த அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் 1980 கவில் ஊரில் அனேக பதவிகளை வகித்திருந்தார் அந்த வகையில் விடத்தல்தீவு கிராமோதய சபை தலைவராக பதவிவகித்து பாரிய பங்காற்றியதுடன் மாந்தை மேற்கு கடற்றொழில் மீனவ கூட்டுறவு சங்க தலைவராகவும், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதியாகவும், மாந்தை பிரிவு மீனவர் தலைவராகவும், விடத்தல்தீவு சனசமூக நிலைய உறுப்பினராகவும், இயக்குநர் சபை உறுப்பினராகவும், மாந்தை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராகவும் பதவிவகித்திருந்தார். கமக்கார அமைப்பிலும், விவசாய சங்கத்திலும் உபதலைவராக பதவிவகித்திருந்தார்.
பள்ளமடு சந்தியால ஊருக்குள்ள வந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து-
அந்த காலப்பகுதியில் போக்குவரத்து சேவை,வசதிகள் இப்ப மாதிரி அடிக்கடி இல்லாத காலம் சனம் CTB பஸ்ச மட்டும் நம்பி இருந்த காலம் நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகுதான் ஒன்டுரெண்டு பஸ் ஒடுற நேரமது. என்னதான் அவசர வேலையாக இருந்தாலும், வேலைகளுக்கு ஊரிலிருந்து வெளியே போவதாக இருந்தாலும்,வருத்தம் எண்டு ஆஸ்பத்திரிக்கு அவசியம் போவதாக இருந்தாலும், பஸ்சுக்காக காத்திருந்து, அவதிப்பட்ட காலம். ஊருக்குள்ள பஸ் வராமல் சனம் தமது அன்றாட தேவைகளுக்காக பள்ளமடு சந்திக்கு நடந்து 432 றோட்டில் சங்குப்பிட்டி,மன்னார் போய் வாற பஸ்சுக்காக காத்திருந்து சன நெருசலில் முண்டியடித்து அல்லல்பட்டு தமது பயனங்களை தொடர்ந்த காலம். நமக்கென்ன பஸ் ஊருக்குள்ள வந்தா என்ன, வராட்டி என்ன எண்டு தத்தமது வேலையோடு இருந்தவர்கள் பலர். சங்குப்பிட்டி ஊடாக வாழ்ப்பாணம் போய் வாற பஸ்சுகள் பள்ளமடு சந்தியால ஊருக்குள்ள வந்தா எங்கட சனங்களுக்கு போக்குவரத்திற்கு பிரச்சனை இருக்காது என்டதால மன்னார் டிப்போக்கு,கடிதம் எழுதி நேர போய் கடிதம் குடுத்து கதைச்சும் ஊருக்குள்ள பஸ் வந்தபாடில்ல. கச்சேரிக்கு போய் GA,ட்ட முறையிட்டும் பள்ளமடு சந்தியால போற பஸ் ஊருக்குள்ள வராமலே போய்கொண்டிருந்தது. வழமையாக காலம சங்குப்பிட்டிக்கு போக வந்த பஸ்க ஊருக்குள்ள பஸ்க விடுங்க சனம் நிறைய பேர் இருக்கு எண்டு சொல்லவும் "ஏலாது பஸ்ச உள்ள விட ஏலாது சந்தியில இறங்கி நடந்து போங்க என்டாராம் றைவர். *“அண்ண பஸ்ச எடுக்காதேங்க றோட்டுக்கு குறுக்கால ஒரு ஆள் பஸ்ச மறிச்சுக்கிடக்கு" எண்டு கொண்டைக்ற்றர் கத்தவும் அங்க பார்த்தால் அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் நோட்டுக்கு குறுக்கால பஸ்ச மறிச்சு கிடந்திருந்தாராம். எவ்வனவோ சொல்லிப்பாத்தும் எழும்பவேயில்லையாம் ஊருக்குன்ன பஸ்ச திருப்பு, திருப்பினாத்தான் நான் எழும்புவன் இல்லாட்டி பஸ்ச எனக்குமேல ஏத்திற்றுப்போ எண்டாராம் அதன் பின்னர் மன்னார் பேரூந்து சாலை அதிகாரிகள் அந்த இடத்திற்கு வருகைதந்து வழங்கிய வாக்குறுதியை தொடர்ந்து அன்றைய தினம் முதல் 432 சங்குப்பிட்டி மன்னார் றோட்டில போய் வாற இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் ஊருக்குள்ள வந்து போனதாம்.
சிலவேளைகளில் 432 பிரதான வீதியூடாக மன்னாரில் இருந்து சங்கப்பிட்டி நோக்கி பயணம் செய்யும் பேரூத்தில் ஜேம்ஸ் அவர்கள் விடத்தல்தீவுக்கென பயணசீட்டை புத்திசாலித்தனமாக பெற்றுக்கொண்டு பேரூந்துகள் எமது விடத்தல்தீவினுள் செல்லாது பள்ளமடு சந்தியூடாக சங்குப்பிட்டி நோக்கி பயணிப்பதை தடுத்துநிறுத்தி ஊரினுள்ளே இவரால் வந்துபோன சந்தர்ப்பங்களும் உண்டு. ஆளுமை, தற்துணிவு, சாதிக்கும் திறன் அனைத்துக்கும் சொந்தக்காரரான அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் ஊர் பிரச்சனைகள், ஊரின் தேவைகள், ஊரின் அபிவிருத்திகளை மனதில் கொண்டு அதனை தீர்த்துவைக்க மன்னார் மாவட்ட புனர்வாழ்வு புணர்நிர்மான அமைக்கோடும் அதன் அதிகாரிகளோடும் அதிக தொடர்பினை பேணிவந்ததுடன் அடிக்கடி அமைச்சின் காரியாலயத்திற்கு சென்று தேவைகளை, குறைபாடுகளை தெரிவித்து அவற்றை எமது ஊர் பெற்றுக்கொள்ளவும் வழிசெய்தார்.
அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் எமது விடத்தல்தீவு புனித அடைக்கலமாதா ஆலய நிர்வாகத்தில் உறுப்பினராக இருந்த காலத்தில் புனித அடைக்கலமாதா ஆலய திருவிழா திருப்பலியை முதன்முதலாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபன அலைவரிசையில் ஒலிபரப்பு செய்த வரலாற்று நிகழ்விற்கு சொந்தக்காரராவார். அந்நாட்களில் சுயநலவாதிகளாக தானுண்டு தன்னுடைய வேலை, குடும்பம் என்றிருந்தவர்களே அதிகமாக வாழ்ந்துவந்த காலம் ஊருக்காக பொதுநலனுக்காக ஊரின் தேவைகளை தீர்த்துக்கொள்ளுவதற்கான உரிய வழிகளை கையாண்டு அணுகவேண்டியவர்களை அணுகினார் அருளப்பு ஜேம்ஸ். மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்கள் அரச அதிகாரிகள் யாவரும் இவருக்கு அத்துப்படி எங்கு சென்று யாரை அணுகினால் ஊரின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமோ அதனை திறம்பட ஆற்றுவது ஜேம்ஸ் அவர்களது சிறப்பியல்பாக காணப்பட்டது. அரச அதிகாரிகளுடனான தொடர்பும் அமைச்சினதும், அமைச்சர்களினதும் தொடர்பும் ஜேம்ஸ் அவர்களுக்கு கிட்டியிருந்த காலம்.
மாந்தை மேற்கு கூட்டுறவு சங்கத்தின் விடத்தல்தீவு கிளைக்கு தலைவராக ஜேம்ஸ் அவர்கள் பதவி வகித்த காலப்பகுதியில் மதரீதியான பாகுபாடுகள் தழைத்தோங்கி இருந்த காலப்பகுதியில் மதரீதியான செயல்பாடுகளை தனிமனிதனாக தகர்த்தெறிந்து கூட்டுறவு சங்கத்தில் எம்மவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்திருந்தார்.
எமது கடற்றொழிலாளரது நலன்கருதி எமது கடற்கரையில் பிரமாண்டமாக அமையப்பெற்ற வெளிச்சக்கூடு எமது கிராமத்தில் அமைந்ததில் அருளப்பு ஜேம்ஸ் அவர்களது பங்கு அளப்பெரியதாக இருந்தது. மீன்பிடி அமைச்சர் பெஸ்செற் பெரேரா, தபால் தந்தி அமைச்சர் குமாரசூரியர் ஆகியோர் விடத்தல்தீவில் கால்பதித்து எம் மக்களது பிரச்சனைகள் தீர்க்கப்படவும் அருளப்பு ஜேம்ஸ் அவர்களே காரணகர்த்தாவாக இருந்தார். அதன் பின்னர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அக்பர் மற்றும் றக்ம் ஆகியோர் எமது விடத்தல்தீவிற்கு அருளப்பு ஜேம்ஸ் அவர்களது ஏற்பாட்டின் நிமித்தம் வருகைதந்திருந்தனர். அந்நாட்களில் கொழும்பு சென்று உரிய அமைச்சுகளோடும் திணைக்களங்களோடும் தொடர்பை ஏற்படுத்தியிருந்ததுடன் எமது மீனவர்களுக்கான துறை விஸ்தரிப்பை இலுப்பைக்கடவை வரைக்கும் கொண்டு சென்றிருந்தார். குறைந்த விலைக்கு என்ஜின் போட், பெரிய பிளாஸ்ரிக் போட்டுகளை எமது விடத்தல்தீவு சங்கத்திற்கும் ஊரவர்களின் சிலருக்கும் பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விவசாய கடன்களை பெற்றுக்கொடுப்பதற்கான வழிமுறைகளை கையாண்டு உரிய அதிகாரிகளினூடாக எமது ஊரவர்களுக்கு வழங்கியவருந்ததுடன் 1977ம் ஆண்டு காலப்பகுதிகளில் விடத்தல்தீவு ஊருக்குள்ளே பேரூந்துகள் பயணிக்கதக்கதான பல்வேறுபட்ட விடையங்களை கையாண்டு அதில் வெற்றியும் கண்டிருந்தார். எமது பாடசாலையின் ஆசிரிய வனம் மற்றும் ஏனைய பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்ததுடன் ஒரு தொலைபேசி அழைப்பனூடாகவே அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துக்கொள்ளும் ஆற்றலையும் திறமையையும் அருளப்பு.ஜேம்ஸ் அவர்கள் கொண்டிருந்தார். அத்துடன் குறைந்த விலையில் எமது மீனவர்களுக்கான வெளியிணைப்பு இயந்திரத்தை பெற்றுக்கொடுத்ததும் இவரது செயற்பாடாகும். எமதுவிடத்தல்தீவுகல்லோடைபுனரமைப்புதிட்டத்தில் எமதுகிராமசேவையாளர்கவேரியான் அவர்களோடு
இணைந்து செயற்பட்டமையும் அருளப்பு ஜேம்ஸ் அவர்களின் முக்கிய பங்காக காணப்படுகிறது. தனது ஊருக்காக பல்வேறுபட்ட சேவைகளை செய்த அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் 1984/12/8ம் திகதி எம்மைவிட்டு பிரித்தார்.
வடமோடி இராகத்திற்கு பெருமைசேர்த்த விடத்தல்தீவு சங்கீத குழு
மன்னார் மாவட்டத்தில் பல அருமை பெருமைகளை கொண்டு கல்வி, கலை, விளையாட்டு போன்ற துறைகளில் தனிச்சிறப்புப்பெற்ற கிராமங்களில் எமது விடத்தல்தீவு கிராமம் முதன்மை வாய்ந்தது என்றால் அது மிகையாகாது.
இசையால் வசமாகா இதயமேது” அந்த வகையில் இலங்கை கலை வரலாற்றில் வடமோடி இராகத்தில் அமைந்த கலை இலக்கிய வரலாற்றில் நாடகங்கள், நாட்டுக்கூத்துகள், வில்லுப்பாட்டு, தாலையம், பாடல், இசைகருவிகள் மீட்டுதல், மற்றும் இசை துறையில் எமது ஊரும் ஊரவர்களும் கலஞர்களாக எல்லாவற்றிலும் சிறப்புப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எமது ஊரில் பிறப்பிலிருந்தே இயற்கை அன்னையால் வழங்கப்பட்டது என சொல்லத்தக்க வகையில் எமதுமண்ணின் பெருமை சாற்றும் கலைத்துறை சார்ந்த வித்தகர்கள் பலர் அவர்களின் கலைத்திறனில் அவர்கள் வாழ்ந்த காலத்திற்கேற்ப அவ்வவ்போது கலையையும் கலைத்திறனையும் வளர்த்துகொண்ட எமது முன்னோர்கள் கலைவளர்ச்சியில் என்னும் எமது முன்னோடிகளாக நிகழ்கிறார்கள்.
அந்த வகையில் ஆர்மோனிய வித்தகர் சீமான்பிள்ளை அவர்களின் தலமையில் எமது விடத்தல்தீவில் இசையையும், கலையையும் மையப்படுத்திய குழுவாக எமது ஊரின் பல இசைத்துறை ஜாம்பவான்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டதுதான் விடத்தல்தீவு சங்கீத கோஸ்டி ஆகும்.
சுமார் 1960 களில் ஆர்மோனிய இசை கலைஞர் அமரர் சீமான்பிள்ளை அவர்களையும், புல்லாங்குழல் மற்றும் ஆர்மோனிய இசைகலைஞ்ஞரான அமரர் சிலுவைரானா (வெள்ளச்சிலுவை) அவர்களையும், மிருதங்க வித்துவான் அமரர் செபஸ்ரி. அந்தோனிப்பிள்ளை,அவர்களையும், தேனமிர்த குரலோன் அமரர் மாசில்லாமணி அவர்களையும், தாள வித்தகர் பேதுறுப்பிள்ளை அவர்களையும், ஆர்மோனிய இசை சக்கரவர்த்தி அமரர் பொன்னுத்துரை அவர்களையும், மிருதங்க இசைகலைஞன் அமரர் க.தாவீது அவர்களையும், மற்றும் அமரர்அந்தோனிப்பின்ளை(அந்தோணி) அவர்களையும் உள்ளடக்கி விடத்தல்தீவு சங்கீத கோஸ்டி என்ற புகழ்பூத்த இசைக்குழுவாக பட்டிதொட்டியெங்கும் இசைமழை பொழிந்திருந்தமை விடத்தல்தீவு சுலை வராலாற்றில் பொன்னெழுத்துகளால் பதியப்படவேண்டியவை.
இவ் விடத்தல்தீவு சங்தே கோஸ்டி குழுவின் தனிச்சிறப்பு யாதெனில் ஒவ்வொருவருக்குமென தனித்தனியான வாத்திய இசை கருவிகளை மீட்டுவது மட்டுமல்லாது பாடல்களை பாடுவதிலும் இவர்கள் தேர்ச்சிபெற்ற தனிச்சிறப்பு வாய்ந்த கலைஞர்களாக அந்நாட்களில் பட்டயைகிளப்பியிருந்தார்கள் எனலாம். 1960 களுக்கு பிற்பாடு எமது விடத்தல்தீவு பழைய இறைச்சிக்கடை கட்டடத்தில் விடத்தல்தீவு சங்கீத கோஸ்டி குழுவின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன அந்த கட்டடத்தில் ஒரு சிலருக்கு இசை கருவிகளை மீட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எமது மாத்தை மேற்கு மற்றும் அடம்பன் பிரதேசங்களிலும், தட்சனாமருதமடு, பிரதேசங்களிலும் நிகழும் ஆலய திருவிழாக்கள் காலங்களிலும் எமது ஊரில் எமது ஆலய பெருநான் காலங்களிலும்,கலை நிகழ்வுகளிலும், நாடகங்கள், மற்றும் நாட்டுக்கூத்து போன்ற நிகழ்வுகளிலும் இசைமழையை பொழித்து ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியிருந்தனர்.
மக்கள் மனதில் பதிந்த நாடகக் கலைஞர்: அந்திரேஸ்
மிகச் சிறந்த நாடகக் கலைஞர். எங்கள் மண்ணில் பிறந்த கலையின் ஒரு ஒளிவிளக்கே முன்னோடி நாட்களிலும் திருவிழா காலங்களிலும் அவருடைய குரல் எங்கும் ஒலிப்பதை நினைத்துப் பார்க்கும்போது, ஒட்டுமொத்த கிராமமே ஒரு நாடக மேடையாகவே தோன்றும். அவர் மேடையில் நிற்கும்போது, மக்கள் மனங்களில் எழும் உற்சாகம் கொல்லிக் கூறமுடியாதது.
ஒரு நாள் பிள்ளையார் கோவிலில் திருவிழாநடந்தது. எங்களும் சேர்ந்து சிறு நாடகக் குழுவாக அமைந்து பல வீடுகளுக்குச் சென்று இசை, நாடகம், மிஞ்சு ஆகியவற்றைக் காட்சிப்படுத்தினோம். அப்போது அந்திரேஸ் அவர்கள் ஒருவிதமான கலாசார எழுச்சியை தூண்டினார். கலை வழியே ஒரு சமூக ஆழமுள்ள உரையாடலை உருவாக்கினார்.
அந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, நாங்கள் சில நாடக உபகரணங்களை சேகரித்து, ஊருக்குள் ஒரு தெருநாடகத்தை மேடையிறுத்தினோம். அந்த நாடகத்தில்தான், அவரது தலைமையால் ஒரு சாதாரண நிகழ்வு, மக்கள் மனங்களில் நிலைக்கும் கலை நிகழ்வாக மாறியது. அவர் உருவாக்கிய காட்சி, அவரது குரல் ஒலிகள், அவை எல்லாம் கலையின் ஆழத்தையும், சமூகத்தின் உணர்வையும் ஒருங்கிணைத்து ஒலித்தன.
அவர் சிறப்பாக மட்டுமல்ல, பொதுவாகவும், பக்தி வழிப்பாட்டு மக்களிடையே மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்தார். கிராமங்களுக்குள் சென்றபோதெல்லாம், அவர் அனைவரிடமும் கலந்துவிழுந்து அவர்களின் மகிழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆணவம் இன்றி, அனைவருடன் பழகியவர்.
மருதமடு போன்ற பழங்குடி மக்கள் வாழும் இடங்களிலும், மின்சாரம் இல்லாத இருளிலும், கேரசின் விளக்கின் ஒளியில்கூட, அவர்கதைகளைச்சொன்னபோது, மக்கள் அசைந்தார்கள். அந்த இடங்களில் கூட கலை, கல்வி, சமூக விழிப்புணர்வு என்பவை அவரது வாய்மொழி வாயிலாக எடுத்துரைக்கப்பட்டன.
அந்த நேரங்களில், அவர் கலைவழியாகக் கொண்டுவந்த ஒன்று - அது சுத்தமான பொழுதுபோக்கு அல்ல, அது மக்களின் நினைவுகள், வரலாறு, நெஞ்சை உரைக்கும் உண்மைகள் ஆகியவற்றின் ஓர் பிரதிபலிப்பாக இருந்தது.
அது வெறும் நாடகமா? இல்ல, எதிர்ப்பும் அதிர்வும் கலந்த கலை! அந்திரேஸ் ஒரு சாதாரண கலைஞர் அல்லர். அவர்தான் மறக்கப்பட்டவர்களின் வரலாற்றை எடுத்துரைத்த கலைஞர். அவர் நாடகங்கள் சமூக உணர்வையும், அரசியல் உணர்வையும் கொண்டிருந்தன. சாதியமைப்பு, ஏழ்மை, குடியேற்றம், போராட்டங்கள் போன்றவற்றைத் தைரியமாக பேசினார். மரபு, புராணம், புனைவுகள்,
கேலிச்சித்திரம், இலக்கணமற்ற வரிகள் — அனைத்தும் அவரது கதைகளில் ஒன்றிணைந்து ஓர் உணர்ச்சி புனலாகக் காட்சியளித்தன.
அவரது கதாபாத்திரங்கள் தொலைவிலிருந்தவர்களல்ல நாமே. அவர்கள் நம் பேச்சிலும், நம் சிந்தனையிலும், நம் போராட்டத்திலும் வாழ்ந்தவர்கள். அவர் கலைக்காக வாழவில்லை - அவர் கலைவழியாக வாழ்ந்தார்.அரசு தடுக்க நினைத்தபோதும், அவர் ஒதுங்கவில்லை. ஒரு முறை பிச்சைக்கார வேடத்தில் கூட, மேடையை அடைத்தவர். மற்றொரு முறை பைத்தியக்காரனாக நடித்துத் தன்னை மீட்டார். அவரது கலை, ஒரு எதிர்ப்பும், ஒரு இறைபாசமும் ஆனது.
அவர் இறந்தபோது, அதுபோல ஒரு பெரிய முரசுசிதறிய உணர்வு. ஆனாலும், இன்றுவரை தெருநாடகங்கள், சந்தம் உள்ள கலைநிகழ்வுகள், பண்ணியரங்கங்கள் அனைத்திலும் அவர் உயிருடன் இருக்கிறார்.அந்திரேஸ் ஒரு கவி, நாடகாசிரியர், மேடை நடிகர் - ஒரே மனிதனில் மூன்று வடிவங்கள். தமிழ் மக்கள் வாழ்க்கையின் உணர்வுகளைக்கலைமயமாக ஆழ்ந்த முறையில் பதிவு செய்தார். அவர் வரலாறு பாடசாலைப் புத்தகங்களில் இல்லை – அது மக்களின் நெஞ்சிலும், தெருக்களின் அரங்கங்களிலும் வாழ்கிறது. இவர்சிறந்தகலைஞர் இவர் புணைந்த நாட்டுக்கூத்து சூழ்ச்சியின் வீழ்ச்சி இதை காணும்போது இப்படித்தான் நாட்டுக்கூத்து இருக்குமென அறியலாம். பெரிய மேடைவிட்டு அலங்கரித்து அழகான தோரணங்கள் இட்டு கீழ் அருகேயுள்ள தரையில் சாக்கு படங்கால் கம்பளமிட்டு அத்தனை பேரும் அமர்ந்து நாடகத்தைரசிப்பார் பார்வையில் ஆச்சரியமான பல நிகழ்வுகள் ஆர்மோனியமும் மிருதங்கமும் கைத்தாளமும் மட்டுமே இசைக்கருவியாகி அழகு தமிழ் சொல்லெடுத்து அழகான பாடலும் அதற்குப் பிற்பாடு பாடுவதும் பாடகர் குழாமின் பக்கபலமும் ஒலிவாங்கி இல்லாமல் மந்தகாசமாய் தெரியும்.
வடலிப்பிட்டி புதுக்கட்டு தீர் போகும் வாய்க்கால் வழியில் உள்ள பெரும் வெளியில் "சூழ்ச்சியின் வீழ்ச்சி" எனும் நாடகம் புது மெருகோடு பிரமாண்ட மேடையில் பெருத்த பாடகர்களின் கூட்டணியில் அரங்கேறியது. நாடக பாணியில் நடை உடை பளபளக்கும் அங்கியும் அரிதாரம் பூசிய அழகு வதனங்களும் தலை கிரீடங்களும் பொடிநடையும் வீரநடையும் தெறிக்கும் வசனங்களுக்கும் இதற்கு உரியவர்யாரென விளைந்த போதுதான் அந்தோணி அத்தரேஸ் ஆவார். அமைதியும் அழகுமான அந்த மனிதருக்குள் இவ்வளவு பெரிய கலையாற்றலா? ரோமாபுரி அரச சபையே நேரில் காண வைத்த கற்பனை கதை.
அவரோடு கூட பிறந்தவர்கள்: மதலையினான், பால்புறா, லூகாஸ் அத்திரேஸ், லூர்து, சிலுவை, ஆபிரகாம், ராணியம்மா அவர்களும் பங்காளிகள் தான். அந்திரேஸ் எழுதி வசனமாக்கி நாடகப் பாடலாக்கி அதற்குத் தகுந்த இசை ஆக்கி மேடையேற்ற எவ்வளவு கலை ஆற்றல் வேண்டும். அவரை நாம் போற்றுவோம் அவர் வாரிசுகள்: அலோசியஸ், அன்ன மலர், அலிஸ்
மேலைத்தேய நாடுகளில் தமிழர் கூத்து வடிவங்கள் மிக மிக பிரமாதமாக மேடைகளில் அரங்கேறும். அங்கெல்லாம் எமது ஊர் அந்தரேசைய்யா, அடைக்கலத்தார், கரடி அந்தோணியார், அரியம் வாத்தியார் வித்துவான் வித்தோரி செல்லன், போசி என்பவர்களின் கலையுணர்வும் உயர்ந்த குரல் வளமும் நினைவு வரும்.அதில் வரும் ஒரு பாடல்
தெருவிலே தோரணம் தூக்இங்கோ மன்னன் வரும் விதி தனை வடிவாக்குங்கோ சித்திரமாய் பத்தல் ஏற்றுங்கோ, சேனை வீரரை நாமழைப்போமே சேனை வீரரை நாமழைப்போமே, சத்துருக்கள் போற்றும் பிரதாபன்ரோமச்சக்கரவர்த்தியின் அதிதூதன் வித்துக்கள்பத்துக்கு பாகரன், சேனை வீரரை நாமழைப்போமே சேனை வீரரை நாமழைப்போமே.
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை பேணிய மணி மாஸ்ரர்.
எமது விடத்தல்தீவு கல்விமானாக சமூகம் சார்ந்த கல்விசார் நடவடிக்கைகளில் எமது சமூகம் மேலோங்கி சிறப்புற்று வாழ தமது கல்விப்பணியை ஆசிரியராக, அதிபராக,கொத்தனி அதிபராக, வலயத்தின் உதவிகல்வி பணிப்பாளராக கடமையாற்றிய மகான்களில் எமது மணி மாஸ்ரர் அவர்களும் ஒருவர். சூசைப்பிள்ளை எனும் இயற்பெயரை கொண்டு மணி மாஸ்ரர் என பவராலும் அறியப்படுகிற மணிமாஸ்ரர் அவர்கள் எமது விடத்தல்தீவில் சுவக்கீன், செபமாலை (முத்தம்மா) ஆகியோருக்கு மூத்த மகனாக 1935ம் ஆண்டு ஆவணி மாதம் 28ம் திகதி பிறந்தார்.
மணி மாஸ்ரர் அவர்கள் தனது ஆரம்ப கல்வியை விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் தொடர்ந்து மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியிலும் கற்றுத்தேர்ந்தார். கலாசாரப் பசுமை கொழிக்கும் கடற்கரை கிராமமான விடத்தல்தீவில் பிறந்த மணி மாஸ்ரர் அழைக்கப்படும் திரு குசைப்பிள்ளை அவர்கள் கிறிஸ்ரின் சகுந்தலா அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து ஜாக்குலின், கருணாகரன், லோகேஸ்வரன் மற்றும் விமலேஸ்வரன் ஆகிய நான்கு பிள்ளைகளை பெற்று கற்பித்தல் ஒரு தொழில் என்பதை தாண்டி தனது சேவைக்காலத்தில் சிறப்பான சேவையை வழங்கி இலங்கைத் தமிழ் கல்வியின் பொற்காலத்தின் பிரதிநிதியாக விளங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தின் மதிப்புமிக்க ஆசிரியராகப் தனது ஆசிரிய பணியின் முதல் நியமனத்தை பெற்று பணியாற்றத் தொடங்கிய மணி மாஸ்ரர் அவர்களது கல்வித்துறை சார்ந்த அடையானமாக விளங்கிய இலங்கையின் ஒரு பழமையான இலங்கை வித்தியாப் பதிவு அடையான ஆவணத்தில்" பதிவாகியுள்ளது.
திரு க.சூசைப்பிள்ளை மணி மாஸ்ரர் அவர்கள் தனது கல்வி துறை சார் கற்பித்தல் பணியில் முதல் நியமனத்தில் அம்பிட்டிய றோமன் கத்தோலிக்க பாடசாலையில் 1957ம் ஆண்டு தை மாதம் 16ம் திகதி ஆசிரியராக சேவையை ஆரம்பித்திருந்தார்.
தொடர்ந்து தனது பணியை மன்னார் மாவட்டம் முழுவதும் குறிப்பாக மடு மற்றும் மன்னார் வலய பாடசாலைகளில் பணியாற்றியிருந்தார் தனது பணிக்காலத்தில் ஒழுக்கமிக்க கற்றலையும், சமூக முன்னேற்ற மனப்பாங்கான செயல்களையும் கொண்டிருந்ததுடன் கண்டிப்புடன் கூடிய வழிகாட்டியாகவும், வகுப்பறை கற்பித்தல் நடவடிக்கையில் அதிகாரமிக்க அரவணைப்புடன் அர்ப்பணிப்புள்ள சேவையை வழங்கியிருந்தார் மணி மாஸ்ரர் அவர்கள்.
16/1/1957ம் ஆண்டு அம்பிட்டிய றோமன் கத்தோலிக்க பாடசாலையில் ஆரம்ப நியமனத்தை பெற்று 30/6/1958ம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார். தொடர்ந்து மன்னார் முசலி பகுதியில் முத்தரிப்புத்துறை பாடசாலையிலும் சூரியகட்டைக்காடு றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், அதன் பின்னர் எமது விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு மாற்றலாகி வந்து ஆசிரியராக பணியாற்றியிருந்தார்.
அதன் பின்னரான காலப்பகுதியில் மன்னார் பேசாலை மகாவித்தியாலயத்திலும், மன்னார் கோவில்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும், பாலைக்குழி றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும் சிறப்பான சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மன்னார் உயிலங்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், மராத்தி கன்னாட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், மன்னார் தேவன்பிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், அடம்பன் மகாவித்தியாலயத்திலும் ஆசிரியராக கடமையாற்றிவிருந்தார் மணி மாஸ்ரர் அவர்கள்.
அதன் பின்னரான காலப்பகுதியில் பண்டிவிரிச்சான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் மீண்டும் இரண்டாவதுமுறையாக எமது விடத்தல்தீவுறோமன்கத்தோலிக்கதமிழ்கலவன்பாடசாலையிலும்,மன்னார் பரப்புக்கடத்தான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் மூன்றாவது தடவையாக எமது விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் பண்டிவிரிச்சான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் தமது ஆசிரிய பணியை சிறப்பாக ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து எமது விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் மன்னார் பெரிய கட்டைக்காடு பாடசாலையிலும் பணியாற்றியிருந்தார்.
சமூக நலன் சார்ந்த சேவையிலும்,சமூக மேம்பாட்டிற்கும் உழைத்த மணி மாஸ்ரர் ஒரு சாதாரண ஆசிரியரைவிட மேன்மையானவராக மதிக்கப்படுகிறார். எமது கலாச்சார விழுமியங்களை கைக்கொண்டு ,ஒழுக்கத்தை கடமையோடும், கண்ணியத்தோடும் உயிராய் நடத்தும் நற்பண்புடையவர் மணி மாஸ்ரர் - எழுத்து, வாசிப்பு, கணிதம் கற்பிப்பதைத் தவிர, மாணவர்கள் தங்களது அடையாளம் மற்றும் மரபுகளை மதிக்கக் கற்றுக்கொள்ளுவதற்கு மணி மாஸ்ரர் அவர்களே காரணகர்த்தாவாவார்.
விடத்தல்தீவு கிராமத்தில் மணி மாஸ்ரர் தனது ஆசிரிய பணிவாழ்வில் கிராமத்தின் ஓர் அடையாளமாக மாறினார். பல மாணவர்கள் வெறுங்காலில் பாடசாலைக்கு வந்திருந்தும் அவரிடம் கல்வி கற்றுக்கொண்டு அவர் அன்று விதைத்த நம்பிக்கையுடனும் எதிர்கால கனவுகளுடனும் அவர்கள் தத்தமது இல்லம் திரும்பியதும் வரலாறாகும்.
மணி மாஸ்ரர் அவர்கள் எமது மன்னார் மாவட்டத்தில் அனேக பாடசாலைகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றி சிறப்பான சேவை செய்திருந்ததுடன் எமது பகுதியில் கொத்தனி அதியராகவும், வலய கல்வி உதவி பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மணி மாஸ்ரர் தனது கற்பித்தல் மற்றும் கல்வி சார் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றபின்பும் அவர் சமூகத்துடனான உறவைத் தொடர்ந்து பேணி வருகின்றார். மணி மாஸ்ரர் திருக்குறன் மனன போட்டிகளை எமது மாவட்ட ரீதியில் முன்னெடுத்து மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் குறிப்பாக தமிழ் வளர்ச்சியில் பெரிதும் உதவுவதுடன் எமது சமூகம் சார்ந்த கல்விமேம்பாட்டுக்காகபலதரப்பட்டகலந்துரையாடல்களிலும், ஆலோசனைகளிலும், விழாக்களிலும் அவரது பங்களிப்பு இருந்து வருகிறது.
கற்பித்தலில் சிறந்த ஆளுமையை மட்டுமல்ல, மதிப்பிற்குரிய நல்வாழ்வு பாரம்பரியத்தையும் பிரதிபலித்துக்கொண்ட மணி மாஸ்ரர் விடத்தல்தீவு புதிய சமூகம் சார்ந்த இளம் தலைமுறைகள் வளர்ச்சியின் பாதையில் பேசப்படும் தாரக மந்திரமாக, "சூசைப்பிள்ளை" மணிமாஸ்ரர் என்ற பெயர் இன்னும் பாடசாலை நிரல்களில் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருப்பது சிறந்த உதாரணமாக காணப்படுகிறது
மணி மாஸ்ரர் எமது மன்னார் மாவட்டத்திற்கு ஆற்றிய கல்வி துறைசார் சேவைகளை பாராட்டி கல்வி வலயம் மற்றும் கல்விச்சமூகம் மணி மாஸ்ரர் அவர்களை கௌரவித்து பொன்னாடை போர்த்தி பாராட்டிய நிகழ்வுகள் நடந்தேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





























நிரந்தர மறைவாழ்வு பணியாளராக மரிய செல்வன் அவர்கள்.
விடத்தல்தீவு கிராமத்தில் இராயப்பு மரியம்மா ஆகியோருக்கு மகனாக 1947ம் ஆண்டு தை மாதம் 10 ம் திகதி பிறந்தார். கிறிஸ்தம்மா, சந்தானம்மா, சிப்பீரியன், மற்றும் மரிய நாயகி ஆகியோர் இவரது உடன்பிறப்புகளாவார்கள்..
மரிய செல்வன் அவர்கள் 1974-05-15 அன்றைய தினம் சகாயராணி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து டென்சில் நியோமி, பீலிக்ஸ் பேக்ஸ்மன் அருட்பணி பிராஜ் டஃவ் (IvDi) மற்றும் இருதயராஜ் ஆகிய பின்னைகளுடன் வழ்ந்துவருகின்றார்.
மரியசெல்வன் அவர்கள் தமது 30 வது வயதில் இறைவார்த்தைப் பணியை ஆற்ற மறைவாழ்வுப் பணியாளராக, மரியாயின் சேனை ஊழியனாக, வின்னென்றிபோல் சபை அங்கத்தவராகவும், இச்சயைகளின் நிர்வாக உறுப்பினராகவும், ஆலயசபையின் பொருளாளராக 1990 ம் ஆண்டு தொடக்கம் 1993 ம் ஆண்டு வரை தன்னை அந்த பணிகளில் இணைத்து அதிலே பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருட்பணி றெஜீஸ் இராஜ நாயகம் அடிகாளர் எமது பூர்வீக கிராமமாகிய விடந்தல்தீவில் பங்கும் தந்தையாகப் பணியாற்றிய போது அக்காவத்தில் அருட்பணியாளர்களும், குருக்களும் மறைமாவட்டத்தில் பற்றாக்குறையாக இருந்தமையினால் எமது விடத்தல்தீவு பங்கின் துணைப் பங்குகளான பெரியமடு, கள்ளியடி, கத்தாளம்பிட்டி, இலுப்பைக்கடவை,தேவன்பட்டி ஆகிய கிராமங்களுக்கு பாதணிகளின்றி கால்நடையாகவும், துவிச்சக்கரவண்டியிலும் சென்று பூசைத்தியானங்கள், மறைக் கல்வி வகுப்புக்கள், வீட்டுத்தரிசிப்புக்கள், திருவருட்சாதன ஆயத்தங்கள், திருமண ஆயத்த வகப்புங்கள் என்பவற்றை அர்ப்பணத்தோடு நடாத்திவிருந்த பெருமைமரிய செல்வன் அவர்களையே சாரும். .
1977 ம் ஆண்டு எமது விடத்தல்தீவு பங்குத்தந்தை அருட்பணி றெஜீஸ் இராஜ நாயகம் அடிகளாரால் சங்கிஸ்தமாக நியமிக்கப்பட்டு. பூர்வீக கிராமமாகிய விடத்தல்தீவிலும், இடப்பெயர்வின் போது தேவன் பிடியிலும், இடப் பெயர்வுக்குப் பின் பேசாலை நலன்புரி நிலையத்திலும். 2001ல் ஜோசப்வாஸ் நகரில் மீளக்குடியேறிய பின்னரும் ஆலய செயற்பாடுகளிலும், திருச்செபமாலை, வழிபாடுகள் நடாத்துதல் மரிததோர் இல்லங்களில் வழிபாடுகளை நடாத்துதவு, அடக்கச் சடங்குகளை நிறைவேற்றுதல், போன்ற செயற்பாடுகளில் தியாக உள்ளர்துடன் பணியாற்றிவந்தது மரியசெல்வன் அவர்களது பணிவாழ்வின் றெப்பாகும்.
பங்குத் தந்தையர்களின் அனுமதியுடன் வீட்டிற்கு முலைக்கல் வைத்தல், முற்கியவைபவங்களுக்கு கன்னிக்கால் வைத்தல், புதுமனைகளை ஆசீர்வதித்தல், போன்ற சடங்குகளை செவ்வனே செய்தார். எமது பங்கு வேதசாட்சிகளின் ஆலயத்தோடு இணைத்திருந்த காலப் பகுதியான 2007ம் ஆண்டு தொடக்கம் 2008 ம் ஆண்டுகளில் அருட்பணியாளர்காரின் அனுமதியுடன் *திருப்புகழ் மாலையை சிற்றாலயத்தில் செபித்து மக்கள் இறைவனை புகழ வழிசெய்தார்.
1978 ம் ஆண்டு, 1998 ம் ஆண்டுகளில் திருப்பாடுகளின் காட்சியில் புனித பேதுருவாக பாத்திர மேற்றதோடு இன்றும் பல நாடகங்களிலும் பல கதாபாத்திரங்களை பொறுப்பேற்று மேடையேறி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மரியசெல்வன் அவர்கள் 1991ம் ஆண்டு நிரந்தர மறைவாழ்வுப் பணியாளராக அருட்பணி A. பிலிப் அவர்களால் நியமிக்கப்பட்டார். மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி தடுநிலையத்தில் முழுநேரப்பணியாளராக, பல இயக்குநர்களின் கீழ் பணி புரிந்தார் இக்காலப் பகுதியில் மறைமாவட்டத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட அனைத்துப் பணிகளையும் மறைமாவட்ட எல்லைப்புற பங்குகளிலும், தேவையேற்பட்ட அனைத்துப்பங்குகளிலும் பலநாட்கள் தங்கியிருந்து பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
1993 ம் ஆண்டு திருந்தந்தை 2ம் ஜோண்போல் அவர்கள் காலி முகத்திடலில் ஜோசப்ம்வாஸ் அடிகளாருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் வழங்கும் நிகழ்வில் கலத்து கொண்ட போது மறைமாவட்டம் சார்பான காணிக்கையை திருப்பலியின் போது கொடுத்து அவரது மோதிரத்தை முத்தம் செய்து அவர் கைகளாலே திவ்விய நற்கருணை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்வுகளை தமது வாழ்வின் ஆசீர்வாதத்தின் நாட்களாக எண்ணி மகிழ்ந்தார் மரியசெல்வன் அவர்கள். 2006ல் இந்தியாவிலுள்ள "டிவைன் தியான இல்லத்திற்கு விசேட தியானத்திற்காக மறைமாவட்டத்தினால் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பல விசேட பயிற்சிகளையும் பெற்றும் கொண்டார்.
1977 ம் ஆண்டு தொடக்கம் -2023ம் ஆண்டு வரையான 46 வருட நீண்ட காலம் சங்கிருத்தமாகப் பணி புரித்து 2024 ம் ஆண்டிற்குப் பின்னர் சுகயீனம் காரணமாக அனைத்துப் பணிகளிலிருந்தும் ஒய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மரியசெல்வன் அவர்கள் விடத்தல்தீவு கிராமத்தனதும் கிராம மக்களினதும் விசுவாச நமபிக்கை வாழ்வில் மறக்கமுடியாத பல்வேறுபட்ட முன்னோடிகளில் முன்னுதாரணமாகவும் முக்கியமானவராகவும் கருதப்படுவது சிறப்பாகும்.
பாராட்டை பெற்ற எமது கலைஞர் ஜோசப்.
விடத்தல்தீவு என்றவுடன் நினைவுக்கு வருவது எம்மவர்களதுகல்வி, விளையாட்டு மற்றும் கலைத்துறையில் எம்மவர்கள் கொண்ட ஆற்றல்மிகு திறமைகளுடனான மேம்பாடுகளுமே.
அந்த வகையில் கலைத்துறை கார் வித்தகர்களை நோக்குமிடத்து யாகப்பு, திரேசம்மா தம்பதிகளுக்கு மகனாக 1947 ம் ஆண்டு மார்கழி மாதம் 09ம் திகதியில் பிறந்து 3 தம்பிகளுடனும், 2 தங்கைகளுடனும் வாழ்ந்துவருபவர் தான் திரு ஜோசப் அவர்கள்.
ஜோசப் அவர்கள் தனது ஆரம்ப கல்வியை எமது விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 6 வரை கற்றுள்னபோதும் இவர் கலைத்துறையில் செய்யும் நுட்பமான வேலைகளை பார்த்து வியந்து மலைத்துப்போனவர்களே அதிகம் அந்தளவுக்கு நுட்பமான பல கலைத்துறை சம்மந்தமான வேலைகளை ஆற்றிவருகிறார்.
தனது சிறுவயதில் தந்தையாருடன் கோபித்துக்கொண்டு சென் மேரிஸ் லொறியில் ஏறி நீர்கொழும்புக்கு சென்று அங்கே வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையத்தில் 4 மாதங்கள் வேலைசெய்திருந்தார். ஜோசப் அவர்களது துட்பமான வேலையை பார்த்து எரிச்சலடைந்த உரிமையாளர் ஜோசப் அவர்களை வேலையில் இருந்து நீக்கிவிடவே தனது 20 வது வயதில் தனது தாய் மாமனான அமரர் திருஞானம் அவர்களது பரிந்துரையின் நிமித்தம் தன்னாடி சந்திவில் அந்தநாட்களில் அமைத்திருந்த வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தில் ஒரு சிங்கள மொழி பேசும் உரிமையாளரின் வேலைகளை மிக நுட்பமாக செய்துவந்தார். ஆனால் அவரது வேலையிலும் அவரிலும் அதிதிருப்த்தியான அந்த உரிமையாளரிடமிருந்து விலகி மீண்டும் தனது மாமன் திருஞானம் அவர்களிடமிருந்து 5=ரூபா பணத்தையும் ஒரு சிபார்சு கடிதத்தையும்
பெற்றுக்கொண்டவராக யாழ்ப்பாணத்தில் இருந்த தேவராசா அவர்களது வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தில் 4 மாதங்கள் பல நுட்பங்களுடனான வேலையை செய்திருந்தார்.
அங்கு வேலைசெய்த பின்னர் மீண்டும் ஊருக்கு வந்து கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலத்தில் கண் பார்க்க கை செய்யும் என்பதற்கு ஒப்பாக இயற்கையில் தான் கண்ணால் கண்ட யாவற்றையும் மனதில் இருத்தி அவற்றை சித்திரமாக வரைவதிலும், உருவமாக உருவாக்குவதிலும் யாருடைய உதவியுமின்றி வலு துட்பமாக செய்துமுடிக்கும் அசாத்திய திறமையை திரு.ஜோசப் அவர்கள் கொண்டிருப்பது சிறப்பு.
1971ம் ஆண்டு ஆடி மாதம் 16ம் திகதி அந்தோனியாப்பிள்ளை (தங்கப்பொன்) அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து ஜோர்ஜ் டிமன் வேட்ஸ், அன்ரனி பெனிற்றா, அன்ரனி நோகா, ஜோர்ஜ் ஸ்ராலின் வேட்ஸ், யூஜின் வேட்ஸ், மேரி சுபாசினி மற்றும் அன்ரனி அணுசா ஆகிய பிள்ளைகளை பெற்று வாழ்ந்து வரும் ஜோசப் அவர்கள் ஆலய வேலைகளிலும், சோடினை, அலங்கார வேலைகளிலும் ஈடுபட்டு ஒலி ஒளி அமைப்புகளை நேர்த்தியான முறையில் செய்து பல்வேறுபட்ட துட்பங்கள் நிறைந்த காட்சி அமைப்புகளையும் உருவாக்கிவருகிறமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பலதரப்பட்ட சோடினை வேலைகளுக்கும், நுட்பமான வேலைகளுக்கும் அழைக்கப்பட்டு தனது நுட்பமான வேலைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்ததார். எமது ஊரில் நடைபெறும் நாடகங்கள், நாட்டுக்கூத்துகள், பாடசாலை நிகழ்வுகள் என்பவற்றுக்கு ஒளி, ஒலி வசதிகளை அந்தந்த நிகழ்வுகளுக்கு ஏற்றால் போல் வழங்குவதும் எமது ஆலயங்களின் திருவிழா காலங்களில் அதற்கான கோடினைகளை துட்பமாக செய்துமுடிப்பதிலும் திரு. வாகப்பு. ஜோசப் அவர்கள் கைதேர்ந்தவர்.
அந்த வகையில் விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலய திருவிழாவிற்காக இரண்டு பிரமாண்ட மீன்கள் வளைந்திருக்கும் வகையில் அதனை உருவாக்கி மிகவும் அழகான முறையில் உயிருள்ள ஓவியமாக உருவாக்கியதுடன் நற்கருணை எழுத்தேற்றம் முதல்நாள் நற்கருணை திருவிழாவிலும் அடுத்தநாள் பெருநான் புனித யாகப்பரின் திருச்சுருபத்தை இரு மீன்களின் இடையே வைக்கப்பட்டிருந்த அந்த தந்துரூப காட்சி இன்றும் எம்மிடையே பேசப்படுகிறது.
மன்னார் மறைமாவட்ட ஆலயங்களில் வேறெங்கும் இல்லாத பழமைவாய்ந்த எமது ஆலயங்களில் உள்ள இரண்டு கர்த்தர் கரூபங்களில் ஒன்றான யாகப்பர் ஆலய கர்த்தர் கரூபத்தில் காணப்பட்ட திருத்த வேலைகளை மிகவும் தத்துரூபமாக திருத்திமுடித்து அவற்றை கடந்த பெரியவெள்ளி தினத்தில் இயேசுவின் மரண திருக்காட்சியை காட்சிப்படுத்தியதுடன் அடைக்கலமாதா ஆலய கர்த்தர் சுரூபத்தில் அதன் கண் திறந்து மூடுவதை மிகவும் நுட்பமாக செய்துமுடித்துள்ளார் எமது ஜோசப் அவர்கள்.
எமது ஜோசப்வாஸ் நகர் நற்கருணை ஆண்டவர் ஆலயத்தில் கர்த்தர் திருச்சுரூபத்தை மிகவும் நுட்பமான முறையில் பயன்படுத்தி இயேசுவின் மரணத்தை காட்சிப்படுத்தியதும் எமது ஜோசப் அவர்களே. இடம்பெயருவதற்கு முன்னர் எமது 3ம் வட்டாரத்தில் VC,க்கு அருகாமையில் செம்மறி ஆடு சிலுவையை தாங்கிய வகையில் உருவத்தை உருவாக்கியிருந்ததுடன் 1999ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் பின்னரான இடம்பெயர்வின் பின்னர் பேசாலை நலன்புரி நிலையத்தில் வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற மாதா வருகையை முன்னிட்டு அதனை வரவேற்கும் வண்ணம் அழகுற அமையப்பெற்ற பிரமாண்டமான இரு மீன்கள் வளைந்த சிகரத்தை உருவாக்கியதுடன் வானதூதர் மருதமடு மாதாவிற்கு மலர்தூவி வரவேற்பதை மிகவும் நுட்பமாக தயாரித்திருந்தமையும் மறப்பதற்கல்ல.
வாகப்பு ஜோசப் அவர்களது உருவாக்கத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வைகாசி மாதம் 1ம் திகதி கடற்கரையில் Boat இல் பீடமானது தயாரிக்கப்பட்டு அதில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதும் ,எமது மண்ணின் மைந்தன் அருட்பணி ஸ்ரிபன் ராஜா அடிகளாரது குருப்பட்டத்தின் பின்னரான முதல் நன்றி திருப்பலி வரவேற்பின் போது 6 அடி உயரத்தை கொண்ட பெலிக்கான் பறவை தனது இதயத்தை கொத்தி தனது குஞ்சுகளுக்கு உணவளிப்பதை சித்தரிக்கும் வகையிலான பிரமாண்டமான அந்த காட்சியை உருவாக்கயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எமது ஆலயங்களின் பிடத்தின் அலங்கார சோடினைகளை செய்வதில் இருந்து எமது ஆலயங்களில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்விற்கும் ஜோசப் அவர்கள் தனது கைவரிசையை காட்டியிருப்பார் அந்த வகையில் இயேசுவின் உயிர்ப்பு விழா திருப்பலியில் ஒருமுறை கல்லறை வாசல் திறக்க உயிர்த்தாண்டவர் புகை மண்டலத்தினுள் மறைந்த வண்ணமாக மெது மெதுவாக எழுந்தருளி வருவதை சித்தரிக்கும் காட்சி இறைமக்களின் விசுவாசவாழ்விற்கு உந்துதலாக இருந்துள்ளது. அதே போல் ஒருமுறை நற்கருணை வழிபாட்டில் நற்கருணை எழுந்தேற்றத்தின் போது நற்கருணையை சுற்றி பற்றியெரியும் நெருப்புப்போன்ற காட்சியை அமைத்திருந்தமையும் இன்றுவரை எமது மக்களிடையே பேசப்பட்டுவருகிறது.
அதுமட்டுமல்ல எமது ஊரில் நடைபெற்ற நாடகங்கள், நாட்டுக்கூத்துகள், இயேசுவின் பாடுகள், மரணம் உயிர்ப்பை பிரதிபலித்த திருக்காட்சி நாடகத்திலும் ஜோசப் அவர்கள் ஒலி, ஒளி அமைப்புகளை சிறப்பாக வழங்கியிருந்ததுடன், மேடை அலங்கார சோடினை வேலைகளையும், காட்சி அமைப்பு சீனறி வேலைகளையும் மிகவும் நுட்பமாக அமைத்திருந்தார். ஜோசப் அவர்களுடைய நுட்பமான வேலையில் சந்தியோகுமையோர் நாட்டுக்கூத்தில் குதிரையை செய்து அந்தரத்தில் பறக்கவிட்டு குதிரையின் மேல் இருந்து சந்தியோகுமையோர் வாளேந்தி போரிட்டதை பிரதிபலித்த காட்சியமைப்பை மிகச்சிறப்பான முறையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
அலங்காரசோடினைவேலைகளில் ஈடுபட்டிருந்தது மட்டுமல்ல நாடகம், நாட்டுக்கூத்துகளிலும்கலைஞனாக பாத்திரமேற்று நடித்துள்ளார் அந்த வகையில் சந்தியோகுமையோர்,சூழ்ச்சியும் வீழ்ச்சியும், ஏது மாங்கல்யம், தேவசகாயம்பிள்ளை, தூக்கு தூக்கி,வீர பாண்டிய கட்டப்பொம்மன் ஆகிய நாடகங்களில் கலைஞனாக நடித்ததுடன் தங்கையா தாரமா என்ற நாடகத்தை எழுதி இயற்றியிருந்தார். அத்துடன் ஜோசப் அவர்கள் முஸ்லிம் வேடத்தில் பாத்திரமேற்று நடித்தது இன்றும் எமது மக்களிடையே பேசப்பட்ட பாத்திரமாக அமைந்திருந்தது.
வெள்ளறாலும் பொன்ராசாவும்.
மன்னாரில் கடல்வனம் பெருகி செழிப்புற்ற கிராமங்களில் எமது விடத்தல்தீவும் ஒன்று. அதன் வரலாற்றில் கடற்றொழிலை சார்ந்து அதனை சீபனோபாயமாக மேற்கொண்ட எம்மவர்களால் காலத்திற்கு காலம் பல்வேறுபட்ட தொழில்முறைகளையும், தொழில்நுட்பங்களையும் கைக்கொண்டு மேற்கொண்ட கடற்றொழிலில் ஒருசிலர் தாம் புரிந்த கடற்றொழிலில் இன்றுவரை ஊரவர்கள் மத்தியில் பேசப்படும்வகையில் தமது கடின உழைப்பாலும்,நுட்பமான முறைகளை கைக்கொண்டதாலும் ஒப்பீட்டளவில் அதிகளவு கடல்வளங்களான மீன் மற்றும் இறால் போன்ற கடலுணவுகளை பிடித்து வாழ்க்கையில் உயர்வுபெற்று வந்த வரலாறுகளுக்கு சொந்தக்காரர்களாக காணப்படுகிறார்கள்.
அந்த வகையில் வில்லுக்கு விஜயன் என்பதைப்போல வெள்ளறாலுக்கு பொன்ராசா என்று சொல்லும் அளவிற்கு எமது விடத்தல்தீவு வரலாற்றில் எம்மவர்களிடையே வெள்ளறாலுக்கு பிரசித்திபெற்ற தொழிலாளியாக தோணி தோணியாக வெள்ளறால் பிடித்தவர் என்றால் அது மிகையல்ல.
பொன்ராசா அவர்கள் மக்கோப்பிள்ளை, முத்தம்மா அவர்களுக்கு மகனாக 8 சகோதர சகோதரிகளுடன் விடத்தல்தீவில் 1935ம் ஆண்டு சித்திரை மாதம் 11ம் திகதி பிறந்தார். அவரது 13 16 வயதில் தனது தந்தையுடன் கொட்டுவலை,மணல வலை போன்றவற்றுக்கு சென்றுவந்ததுடன் முரலுக்கான வளிச்சல் வலை தொழிலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார். மரியபூரணி அவர்களை திருமணம் செய்து 10 200 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
1963 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இரவு நேரங்களில் மணலை வலை தொழிலை செய்துகொண்டு விடிந்தவுடன் கண்டி வலைத்தொழில் செய்திருந்தார். பொன்ராசா அவர்கள் ஆரம்ப கால கண்டி வலை தொழிலை எமது கடற்பரப்பில் காணப்படும் தாழைகளை கொண்ட பகுதிகளில் பாய்ந்து மீன் வகைகளை பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்நாட்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து எமது ஊரில் தங்கியிருந்த வயோதிபர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கவே அவர் மேல் ஏற்பட்ட கருணையை அடிப்படையாக கொண்டு அவரை தனது விட்டில் கூட்டிவந்து உணவளித்து தன்னோடு தங்க ஏற்பாடுகளை செய்துகொடுத்திருந்தார் .அந்த வயோதிபரோடு அளவளாவிய நேரத்தில் பொன்ராசா அவர்கள் செய்யும் தொழிலை பற்றி கேட்டறிந்த அந்த முதியவர் தானைகளுக்கிடையில் வலைபாய்ந்து மீன் பிடிப்பதற்கு பதிலாக கண்ணா அருகில் பாய்ந்து வெள்ளறால் பிடிக்கலாம் என்றதன் அடிப்படையில் வெண்னறாலுக்காக அந்த வயோதிபர் கூறிய அறிவுரைகளின் படி அவர் சொன்ன நுட்பங்களை பயன்படுத்தி முதன்முதலாக கண்ணாவை அண்டிய பகுதிகளில் பொன்ராசா அவர்கள் வெள்ளறாலுக்கு வலைபாய்ந்த வரலாறுக்குரியவரானார்.
பொன்ராசா அவர்கள் தனக்கு உதவியாக எமது ஊரின்கனிபாகாக்கா அவர்களையும், அத்த வயோதிபரையும் அழைத்துக்கொண்டு முதன் முதலாக எமது நாயாற்றுமுனையில் உள்ள கண்ணா அருகில் வைத்து வெள்ள இறாலுக்காக வலைபாய்ந்து நூற்றுக்கணக்கா கிலோ வெள்ள இறாலை பிடித்திருந்தார் இவ்வாறு அந்த வயோதிபர் வழங்கிய அறிவுரைகளின் படியும், அவர் காட்டிய துட்பங்களையும் கொண்டு அதிகனவு வெள்ள இறால் அந்நாட்களில் பிடிபட்டது இவ்வாறு சுமார் மோத காலமாக அந்த வயோதிபர் பொன்ராசா அவர்களோடு வெள்ள இறால் வலைப்பாச்சலில் உறுதுணையாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். பொன்ராசா அவர்களுக்கு தோணி கணக்கில் இறால் படுவதை கண்ட எமது மீனவர்கள் சிலர் அவர் பாய்ந்த இடத்திற்கு அருகிலும், அவருக்கு உள்ளாலும், மேற்காலையும் வைத்து வலை பாய்ந்திருந்தும் பொன்ராசா அவர்களுக்கு படும் இறால் தொகை குறைந்தபாடு இல்லை அந்தளவுக்கு வெள்ள இறால் பிடிப்பது சம்மந்தமாக அனைத்து நுட்பங்களையும் கொண்டு வலையாய்வது பொன்ராசா அவர்களது தனிச்சிறப்பாகும்.
எமது துறை நேரிலும், கொம்புதீவு ஆறு, பூவரசு ஆறு போன்ற எமது பகுதிகளில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வருடா வருடம் இறால் வலை பாய்வது பொன்ராசா அவர்களது வாடிக்கையாக இருந்தது. அந்தந்த காலப்பகுதியின் காலநிலைக்கு ஏற்றால் போல் அந்தந்த நீர் ஓட்டத்திற்கு தக்கதாக மிகவும் துட்பமான முறையில் வலைபாய்ந்து பார்போர் மலைத்துப்போகுமளவிற்கு வெள்ள இறால் பிடித்திருந்தார் பொன்ராசா அவர்கள்.
பொன்ராசா அவர்கள் இறாலுக்கு வலை பாய்ந்து பெருமளவிலான இறால் பிடிப்பதை கண்டு எமது ஊரவரான தாவீது அவரது பிள்ளைகள் மங்களம் ஆகியோர் வெள்ள இறாலுக்காக வலை பாய்த்திருந்தனர். ஆனால் பொன்ராசா அவர்களுக்கு படும் இறாலுக்கு குறைவே இல்லாத வகையில் தோணி கணக்கில் பொன்ராசா அவர்களுக்கு இறால் பிடிபட்டது.
இறால் வலை பாய்ச்சலில் பல நுட்பங்களை கொண்டு பட்டி வலை முழுமையாகவும் வேலி வலைக்கும் பஞ்சிப்படாமல்மண்தள்ளுவதில் இருந்து ஒவ்வொருபட்டிஇழுவைக்கும் நுட்பமாகவலையின் தன்மையை அவதானிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார். ஆரம்ப காலங்களில் ஒரு கிலோ இறாலை 15/=, 20/= வீதம் விற்று அதன் பின்னரான காலப்பகுதிகளில் 1975/ 1976 ம் ஆண்டு காலத்தில் ஒரு கிலோ இறால் 20/=, 25/= வீதம் விற்பனை செய்து அதன் பின்னரான காலப்பகுதிகளில் 1980ம் ஆண்டுகளில் ஒரு கிலோ இறால் 80/=, 100/=க்கு எமது VAJ உரிமையாளர் சலமோன் அவர்களுக்கு விற்பனை செய்திருந்தார்.
வெறும் மரக்கல் தாங்கல் இருந்த அந்த காலத்தில் சுமார் இரண்டு அல்லது மூன்று வலைகளை ஆற்றில் பாய்ந்து விடியப்புறம் 3 மணிக்கு நாயாத்து முனை வரைக்கும் சென்று இறால் பிடித்த அனுபவசாலி பொன்ராசா அவர்கள் 1983களின் பிற்பாடு வெளியிணைப்பு இயந்திரத்தின் பாவனையில் எமது கடற்பரப்பில் அனைத்து ஆறுகளிலும் வலையாய்ந்து 200 கிலோ, 300 கிலோ,500 கிலோ என தோணி மட்டத்திற்கு இறால் பிடித்த வரலாற்றுக்குரியவர் தான் பொன்ராசா அவர்கள்.
இவ்வாறு பொன்ராசாவாரும் வெள்ளறாலும் என்று சொல்லும் அளவிற்கு கண்ணா அருகிலும், ஆறுகளிலும் வலையாய்ந்து வெள்ளறால் பிடித்த பொன்ராசா அவர்கள் 1991ம் ஆண்டு கார்த்திகை மாதம் 22ம் திகதி இறைபதமடைந்தார்.
அபிலாசைக்க அப்பாற்பட்ட வாழ்க்கை: ஞானசீலன் நீக்கிலாப்பிள்ளை
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
சவிரிப்பிள்ளை என எமது மக்களால் அறியப்படுகிற நீக்கிலாப்பிள்னை. ஞானசீலன் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள விடத்தல்தீவு என்ற எமது கடலோர கிராமத்தில் தை மாதம் 2ம் திகதி 1939ம் ஆண்டு
பிறந்தார். அவர் மீனவர்சமூகத்தைச்சேர்ந்தவராக இருந்தாலும், எதிர்காலப்பாதையாக விவகாயத்துறையால் அவர்.ஆழமாக ஈர்க்கப்பட்டார். ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில் இலங்கையின் விவசாய இதயத்தால் வடிவமைக்கப்பட்டார். தனிப்பட்ட லட்சியத்தை விட சேவை வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து விவசாயத்தில் ஒரு தொழிலைத் தொடர்ந்த அவர், விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் மன்னாரில் உள்ளூர் விவசாயிகளை ஆதரிப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, விவாசயத் திணைக்களத்தின் விவாசய போதனாசிரியராக ஆனார்.
ஞானசீலன் அவர்கள் குண்டகசாலை விவகாயப்பயிற்சிக் கல்லூரியில் விவசாயக்கல்விப் பாடநெறி மற்றும் தொழில்முறைப்பயிற்சியைப் பெற்றார். ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு என்னவென்றால், கிராமத்திற்கு அவர் முதன்முறையாகக் கொண்டு வந்த மஹா ஃபீல்ட் பைக்கைப் பார்த்து முழு கிராமமும் மகிழ்ந்தது.
தனது பதவிக் காலம் முழுவதும், முருங்கன், ஹிங்குராகோடா, பரத்தன், விடத்தல்தீவு, இறுதியாக மன்னார் என பல பகுதிகளில் பணியாற்றினார். அவர் எங்கு சென்றாலும் அர்ப்பணிப்பின் தடயங்களை விட்டுச் சென்றார்.
அவரது குடும்பம் நிதி ரீதியாக சிரமப்பட்டாலும் - ஒரு சாதாரண அரசாங்க சம்பனத்தில் உயிர்வாழும் போதும் - ஞானசீலன் பொருள் சார்ந்த ஆசைகளால் அசைக்கப்படவில்லை. அவர் நல்ல தகுதி வாய்ந்தவராக இருந்தபோதிலும், பதவி உயர்வுகள் அல்லது தனிப்பட்ட ஆதாயங்கள் அவரைத் தூண்டவில்லை. மாறாக, அவர் தனது அழைப்புக்கு உண்மையாக இருந்தார்: விவசாமிகளுக்கு சேவை செய்தல் மற்றும் இடைவிடாமல் சுய கல்வியைத் தொடர்ந்தம். நிலம், மக்களின் சேவகர் அவரது வாழ்க்கை அவர் சேவை செய்த விவசாய சமூகங்களுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்திருந்தது.
விட்டத்தல்தீவில், அவர் வயல்களில் நன்கு அறியப்பட்ட நபராக இருந்தார், அனைத்து பின்னணியிலிருந்தும் விவசாமிகளுக்கு நேரடி ஆதரவை வழங்கினார். கிராமத்தில் முஸ்லிம் விவசாமிகளுடன் அவர் கொண்டிருந்த நெருங்கிய ஒத்துழைப்பு, பகிரப்பட்ட உழைப்பு மற்றும் அறிவு மூலம் ஒற்றுமையை வளர்ப்பதற்கான அவரது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. அவரது விவசாயக் கடமைகளுக்கு அப்பால், ஞானசீலனின் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் சரளமாகப் பேசுவது அவரை உள்ளூர் மக்களுக்கு நம்பகமான மொழிபெயர்ப்பாளராகவும் கடிதம் எழுதுபவராகவும் மாற்றியது.
நிர்வாகத்தடைகளுடன் போராடிய பலகிராமவாசிகள், அறிக்கைகளைவரைவதாக இருந்தாலும் சரி அல்லது அதிகாரப்பூர்வ ஆவணங்களை மொழிபெயர்ப்பதாக இருந்தாலும் சரி, அதிகாரத்துவத்தை வழிநடத்த நம்பகமானவழிகாட்டியை அவரிடம் கண்டறிந்தனர். வாழ்நாள் முழுவதும் கற்றவர்தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய ஞானசீலன் ஒரு உண்மையான பன்மொழிப் புலமை மற்றும் தன்னியக்கக் கல்வியாளர். அவரது நாட்கள் பயிர்களுக்கு மத்தியில் மட்டுமல்ல, புத்தகங்களுக்கிடையேயும் கழிந்தன.
கல்வி என்பது ஒரு கட்டம் அல்ல, ஆனால் ஒரு வாழ்க்கை முறை என்று அவர் நம்பினார் - அமைதியான ஒழுக்கத்துடன் அவர் கடைப்பிடித்த ஒரு நம்பிக்கை, கட்டளை மூலம் அல்ல, முன்மாதிரியாக தனது குழந்தைகளுக்குக் கடத்தினார். அவரது வீடு மீன்தன்மை மற்றும் கற்றல் இரட்டைத் தூண்களாக இருந்த ஒன்றாகும். பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும், அவரும் அவரது மனைவி வேதநாயகம் கொண்சன்ரீனம்மாவும் (வில்லி ) - குடும்பத்தின் வரையறுக்கப்பட்ட நிதியை திறமையாக நிர்வகித்த ஒரு இல்லத்தரசி - தங்கள் குழந்தைகள் அனைவரும் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்தனர். அவர்களின் மரபுப்படி இரண்டு மருத்துவர்கள், ஒரு பொறியாளர் மற்றும் கல்வியாளரான பேராசிரியர் ஜெயசீலன் ஞானசீலன் ஆகியோர் அடங்குவர்.
குடும்பம் மற்றும் மரபு வேதநாயகம் கொண்சன்ரினம்மா (வில்லி) அவர்களை மணந்த ஞானசீலன் (பி. மே 21, 1949, நாவந்துறை,
யாழ்ப்பாணம்), பணிவு, சேவை மற்றும் விடாமுயற்சியை வலியுறுத்தும் ஒரு குடும்பத்தை உருவாக்கினார். அவர்களின் குழந்தைகள் விட்டை விட்டு வெளியே படிக்கும் சவாலான காலங்களில் அவரது மனைவியின் உறுதியான ஆதரவு மிக முக்கியமானது. அவர்கள் ஒன்றாக, கடின உழைப்பு, கல்வி மற்றும் சமூக சேவை ஆகியவற்றின் மதிப்புகளை தொடர்ந்து நிலைநிறுத்தும் ஒரு குடும்பத்தை வளர்த்தனர். ஞானசீலன் நிக்கிலாப்பிள்ளையின் கதை தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, மற்றவர்களுக்கு சேவை செய்வதும் உறுதியான கற்றலும் தலைமுறைகள் முழுவதும் மாற்றத்தின் அலைகளை உருவாக்க முடியும் என்பதற்கான வாழும் சான்றாகும்.
இலட்சியத்தை விட நேர்மையைத் தேர்ந்தெடுத்து தனது சமூகத்தில் ஒரு அழியாத முத்திரையை பதித்த விதத்தல்தீவின் உண்மையான மகன். அவரது மூத்த மகன், பேராசிரியர் ஜெயசீலன் ஞானசீலன், தனது தந்தையின் ஆழ்ந்த செல்வாக்கைப் பற்றிப் பேசுகிறார்: "பெற்றோர் வளர்ப்பில் எங்கள் தந்தையின் அணுகுமுறை திணிப்புக்கு பதிலாக உத்வேகத்தை அளித்தது; அவர் முன்மாதிரியாக இருந்து, கல்வியின் மதிப்பையும் கற்றலில் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் நிரூபித்தார்." பங்குனி மாதம் 13,ம் திகதி 1996 ம் ஆண்டு அன்று, இலங்கையின் உள்நாட்டு மோதலின் கொந்தளிப்புக்கு மத்தியில், ஞானசீலன் மன்னாரில் காலமானார்.
போர்க்கால ஷெல் தாக்குதலின் மன அழுத்தமும், அவரது உயர் இரத்த அழுத்தமும் சேர்ந்து, அவரது அகால மரணத்திற்கு வழிவகுத்தது. அவரது மரணம் அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, அவர் விடாமுயற்சியுடன் பணியாற்றிய சமூகத்திற்கும் ஒரு இழப்பாகும். ஞானசீலன் நிக்கிலாப்பிள்ளையின் வாழ்க்கை அர்ப்பணிப்பு, மீள்தன்மை மற்றும் கல்விவின் மாற்றும் சக்திவின் ஒரு கலங்கரை விளக்கமாக நிற்கிறது. அவரது மரபு அவரது குழந்தைகன் மற்றும் விவசாயத்தில் அவரது பணி மற்றும் சுற்றலுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மூலம் அவர்தாக்கத்தை ஏற்படுத்திய எண்ணற்றதனிநபர்களின் வாழ்க்கையிலும் தொடர்கிறது. அவர் நினைவுகளை விட அதிகமாக விட்டுச் சென்றார்; அமைதியான கண்ணியம், தன்னலமற்ற சேவை மற்றும் அங்கீகாரம் அல்லது வெகுமதியைக்கேட்காமல்மற்றவர்களின் வாழ்க்கையைமேம்படுத்துவதற்கான வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மரயை அவர் விட்டுச் சென்றார்.
இசைத்துறையில் கலாபூசண விருதைவென்ற சந்தியாப்பிள்ளை அருளானந்தம் மாஸ்ரர்
திரு சந்தியாப்பிள்ளை அருளானந்தம் அவர்கள் விடத்தல்தீவில் திரு.திருமதி சந்தியாப்பிள்ளை, திரேசம்மா
ஆகியோருக்கு மகனாக 1945 ம் ஆண்டு வைகாசி மாதம் 25 ம் திகதி திகதி பிறந்தார்.
சிறுவயதில் ஆலய திருப்பலிகள், செபமாலை சொல்லுதல், விளையாட்டுகள் ஆகியவற்றில் பயிற்சி பெற்று SSC சித்தியை விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கற்றுத்தேந்தார். இந்தியா சென்று தமிழ்நாடு பூந்தமல்லியில் மறைக்கல்வியும், வேதாகம பயிற்சியும் பெற்றார்.
ஆனந்தம் மாஸ்ரர் அவர்கள் எமது கிராமத்தின் ஆயூள்வேத வைத்தியரான முடியப்பு அவர்களது மகன் செபமாலைகுமாரி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து 2 ஆண் பிள்ளைகளையும், 2 பெண் பிள்ளைகளையும் பெற்று வாழ்ந்துவருகிறார்.
இசைத்துறையில் கொண்டிருந்த ஆர்வம் மிகுதியால் திருப்பாடல்களையும், சினிமாப்பாடல்களையும், சீங்கீதப்பாடல்களையும் செவிப்புலனாக கிரகித்து தானாகவே பாடல் பயிற்சி பெற்றார். இசைக்கருவிகளை கற்பித்தல் மூலமும்,அவருக்கு கிடைத்த ஞானத்தின் மூலமும் தான் கற்றுக்கொண்டவற்றை தனது மாணவர்களுக்கும் கற்பித்து பல மாணவர்கள் இசைத்துறையில் வளர்ந்து,உருவாக காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.ஆனந்தம் மாஸ்ரரிடம் மாணவர்களாக இசைத்துறையில் கற்ற பலர் வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும், இசை கச்சேரிகளிலும், ஆலய திருப்பலிகளிலும் இதைஜாம்பவான்களாக சிறப்பித்து வருகின்றார்கள். ஆர்மோனியம், வயலின்,மற்றும் ஓர்கன் இசை கருவிகளை மீட்கும் திறமையை கொண்டிருந்து இசைபயணத்தில் தொடர்ந்து பயணிப்பது ஆனந்தம் மாஸ்ரர் அவர்களது சிறப்பம்சமாகும். 1975ம்ஆண்டுகளில் எமது விடத்தல்தீவு முன்னான் பங்குத்தந்தை அருட்பணி றெஜீஸ் ராஜநாயகம் அடிகளார் தலமையில் திருவிவிலிய போதனைகளை நாடகங்களாக மேடையேற்றியிருந்தார். 1976ம் ஆண்டு மன்னார் நானாட்டான் பங்கில் முன்னாள் ஆயர் அதிவந்தனைக்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அவர்கள் குருவாக பணி ஆற்றிய காலங்களில் பல நாடகங்களை படைத்து மேடையேற்றியிருந்தார். ஆண்டான்குளம், நானாட்டான், உயிலங்குளம், விடத்தல்தீவு, வவுனியா போன்ற பங்குகளில் உள்ள ஆலயங்களில் இசை கருவிகளை மீட்டு,நாடகங்களை மேடையேற்றியதுடன் இசை ஆர்வத்தை தூண்டி பல மாணவர்களுக்கு கற்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இசை கருவிகளை மீட்டுவதில் தமிழ் சுரங்கள், ஆங்கில குறியீடுகளுடன் கூடிய குறிப்புகளை கையாளும் விதத்தைபயிற்றுவித்து, இசையை சுருதி,தானம் என்பனவற்றைசரியாக பயன்படுத்திபாடவும்,மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி இசை கலையானது அழிந்துபோகாவண்ணம் எமது சமூதயத்தில் வாழையடி வாழையாக பரவ வேண்டும் என்ற நோக்குடன் எல்லோரிடத்திலும் நட்புடனும், குறிப்பாக எல்லா மதத்தினரையும் மதிக்கும் சிறந்த குணவியல்புகளை கொண்டு "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்றதன் அடிப்படையில் விடத்தல்தீவின் வீணையாய், விசிடும் காற்றில் இசையாய் உதித்து திருவிவிலியத்தை நாடகமாய் உரைத்து இன்றுவரை மாஸ்ரர் என எம்மவர்களால் அழைக்கப்படுகின்றார் அருளானத்தம் மாஸ்ரர் அவர்கள்.ஆனந்தம் மாஸ்ரர் அவர்கள் இசைத்துறையில் பல்வேறுபட்ட விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். அந்த வகையில் மாந்தை மேற்கில் கலைமதி விருதினையும், 2016 ம் ஆண்டு வடமாகாண கௌரவ முதலமைச்சர் அவர்களால் இசைத்துறைக்காக முதலமைச்சர் விருதையும், மன்னாரில் மண்எழில் விருதையும் கொழும்பில் கௌரவ கலாச்சார அமைச்சரால் கலா பூசண விருதையும் பெற்றுள்ளமை சிறப்பாகும்.
ஓய்வு நிலை மறையாசிரியரும், கலா பூசண விருது வென்றவருமான ஆனந்தம் மாஸ்ரர் அவர்கள் தமிழ் இலக்கிய,பண்பாட்டு துறையிலும் மிளிரும் நட்சத்திரமாக கவிதைகளை எழுதி இணையத்தின் மூலமாக அவற்றை வெளியிடுவதுடன்,நடைபெறும்கலைவிழாக்களில் கவிதைகளை புனைந்து வாசித்து வருகின்றார். அவரது கவிதைகளில் கதைகள், பழமொழிகள், இறைவனை பற்றிய அன்பு சார்ந்த மொழிகள், காதல்சுவைகள், என்பன அதிகளவில் உள்ளடக்கப்பட்டதாக காணப்படும்.
எமது கிராமத்தின் நாடக ஒப்பாரி மற்றும் இசை கலைஞர்கள் எமது கிராமத்தின் நாடக ஒப்பாரி மற்றும் இசை கலைஞர்களில் ஒருவரும் அமரத்துவமடைந்தவருமான மாசில்லாமணி மற்றும் அவரது துணைவியார் அக்னஸ் விடத்தல்தீவின் கலாச்சார கட்டமைப்பில் திரு மாசில்லாமணியின்பெயர்.ஆழமாகப்பிணைக்கப்பட்டுள்ளது.நாடகம் மற்றும் இசையில் அவரது கலைத்திறன் மூலம், அவர் நமது மரபுகளின் ஆன்மாவைப் பதித்தது மட்டுமல்லாமல், பாதுகாத்து அனுப்பினார். அவரது மரபு வாழ்கிறது - அவரது நிகழ்ச்சியைப் பார்த்தவர்களின் நினைவுகளில் மட்டுமல்ல, கடந்த காலத்தை எதிர்காலத்துடன் இணைக்கின்றது. விடத்தல்தீவு மீதான அன்பு அவரது சேவை மற்றும்
அர்ப்பணிப்பு உணர்வை உறுதி செய்வதை அவரது சந்ததியினர் காண்பது மிகவும் நெகிழ்ச்சியூட்டுகிறது. அவரும் திருமதி. ஆக்னஸும் அடுத்த தலைமுறையை தொடர்ந்து வடிவமைக்கின்றனர். இது கலாச்சாரம், நினைவகம் மற்றும் நீடித்த கிராமப் பெருமைக்கு ஒரு அஞ்சலி.
கற்பித்தலில் ஓய்வு பெறாதா ஆசான் பறுனாந்து பெனடிக்ற் மாஸ்ரர் அவர்கள்
பெனடிக்ற் மாஸ்ரர் என்று எமது மக்களால் அறியப்படுகிற ஆசிரியர் பெனடிக்ற் அவர்கள் 1933ம் ஆண்டு பங்குனி மாதம் 05ம் திகதி பறுணாந்து மற்றும் மதலேனாள் ஆகியோருக்கு மகனாக யேசுதாசன், எலிசபேத், கிறேஸ் ஆகிய சகோதர சகோதரிகளுடன் விடத்தல்தீவில் பிறந்தார்.
தனது ஆரம்ப கல்வியை விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்கதமிழ் கலவன் பாடசாலையிலும் உயர்கல்வியை மன்னார் நல்லாயன் பாடசாலையிலும் (தற்போதைய புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி) கற்று 1954ம் ஆண்டுகளில் அவரது 21வது வயதில் ஆங்கில ஆசிரியராக மண்/விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைவில் நியமணம் பெற்று பணியாற்றியிருந்தார்.
அதன் பின்னர் கொழும்புத்துறை வாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் தமிழ் மொழி ஆசிரிய பயிற்சியை 1955ம் ஆண்டு தொடக்கம் 1956ம் ஆண்டு வரை பயின்றார். ஆசிரிய கலாசாலை பயிற்சிக்கு பின்னர் மன்னார் முன்ளிக்குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் 5 வருடங்கள் உதவி ஆசிரியராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1961ம் ஆண்டு சித்திரை மாதம் 12ம் திகதி திரேசம்மா அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்த பெனடிக்ற் மாஸ்ரர் அவர்கள் மரிய கொண்சி சான்ஸ் ஜோசப் (ஆசிரியர்),பொனவெஞ்சர் டிலாசால் சபை அருட்சகோதரர், பெனர் (பொறியியலாளர்) ஆகிய பிள்ளைகளை ஈன்றெடுத்தார்.
தொடர்ந்து 1963 ம் ஆண்டு தொடக்கம் 1963ம் ஆண்டுகள் வரையான காலப்பகுதியில் மன்னார் பேகாலை
மகாவித்தியாலயத்தில் உதவி ஆசிரியராகவும், 1966ம் ஆண்டில் இருந்து 1972ம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார் விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் 1973ம் ஆண்டு தொடக்கம் 1974ம் ஆண்டு வரை மன்னார் பாலைக்குளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும்,1975 களில் மன்னார் ஓலைத்தொடுவாய் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் உதவி ஆசிரியராக சிறப்பான பணியாற்றிவிருந்தார் பெனடிக்ற் மாஸ்ரர் அவர்கள்.
அதன் பின்னர் உதவி அதிபராக பதவி உயர்வு பெற்று 1976ம் ஆண்டு தொடக்கம் 1978ம் ஆண்டு வரை மன்னார் விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சேவையாற்றிலிருந்ததுடன் 1979ம் ஆண்டு மன்னார் பரப்புக்கடந்தான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிபராக பதவி உயர்வு பெற்று அங்கே பணியாற்றியிருந்தார். பின்னர் 1980 ம் ஆண்டு மன்னார் பேசாலை மகாவித்தியாலயத்திற்கு மாற்றலாகி அங்கே ஆசிரியராக பணியாற்றியிருந்தார்.
தொடர்ந்து 1981 ம் ஆண்டு தொடக்கம் 1982ம் ஆண்டு வரை மன்னார் பள்ளிமுனை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் அதிபராக நியமனம் பெற்று அங்கே பணியாற்றியிருந்ததுடன், 1983ம் ஆண்டில் இருந்து 1984ம் ஆண்டு வரை மன்னார் துள்ளுளுடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் அதிபராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதன்பின்னரான காலப்பகுதியில் 1985ம் ஆண்டு தொடக்கம் 1987ம் ஆண்டு வரைமன்னார் எழுத்தூர்றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் அதிபராக கடமையாற்றியதுடன் 1988ம் ஆண்டில் 6 மாதங்கள் மன்னார் தாழ்வுபாடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாட்சாலையில் அதிபராக பணியாற்றியிருந்தார். தொடர்ந்து 1988ம் ஆண்டு தொடக்கம் 1993ம் ஆண்டு பங்குனி 05ம் திகதி வரை எமது விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் அதிபராகவும், கொத்தணி அதிபராகவும் பெனடிக்ற் மாஸ்ரர் அவர்கள் கடமையாற்றியிருந்தார்.
1994ம் ஆண்டு தொடக்கம் 1998ம் ஆண்டு புரட்டாதி மாதம் 26ம் திகதி வரை பகுதி நேர ஆங்கில ஆசிரியராக மடுவலயத்தில் அமைந்துள்ள எமது விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றியிருந்தார். தொடர்ந்து 1998ம் ஆண்டு புரட்டாதி மாதம் 26ம் திகதி இறைபதமடைந்தார்.
பெனடிக்ற் மாஸ்ரர் அவர்கள் விடத்தல்தீவு சனசமூக நிலைய தலைவராகவும், எமது பங்கு புனித ஞானப்பிரகாசியார் பிடப்பணியாளர் மன்றத்தின் போசகராகவும் 1977ம் ஆண்டு மற்றும் 1978ம் ஆண்டு காலப்பகுதியில் பதவிவகித்திருந்தார். மற்றும் எமது விடத்தல்தீவு ஆலய அருட்பணிப்பேரவையின் செயலாளராக கடமையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
திரு பெனடிக்ற் : பணிவும் புலமையும் சேவையையும் ஒட்டிய ஒளிவிளக்கே!
குழந்தைப் பருவத்திலிருந்தே மரியாதை, பணிவு, ஒழுக்கம் ஆகியவை அவரின் இயல்பான பண்புகளாகும். இவர் சந்தித்த அனைவரிடமும் ஈர்ப்பும் நம்பிக்கையும் ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டிருந்தார். இவை வளர்ந்தபோது, அவை தலைமைத்துவ திறனாகவும், இரக்க உணர்வாகவும், மனஅமைதியை ஒளிரச் செய்கின்ற மனவலிமையாகவும் பரிணமித்தன.
அவரது கல்விப் பயணம் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற புனித பட்ரிக் கல்லூரியில் தொடங்கியது. இக்கல்லூரியில் அவர் தனது அறிவாற்றலும், ஒழுக்கமும் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விரும்பப்படுகிற மாணவராக விளங்கினார். பின்னர் மன்னார் மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க புனித சேவியர் ஆண்கள் கல்லூரியில் தனது உயர்கல்வியைத் தொடர்ந்தார். இங்கும் அவர்கல்விச்செயல்பாடுகளில் மட்டும் அல்லாது சமூக சேவையிலும் தனித்துவத்தை காட்டினார்.
பின்னர், அவர் சிறுபிள்ளைகளின் கல்விக்கு அர்ப்பணித்துப் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பணியாற்றினார் — விடத்தல்தீவு, எழுத்தூர் அடம்பன், சிலாபம், கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் அவரது சேவைகள் மாணவர் வாழ்வில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தின. குறிப்பாக கிளிநொச்சியில் உள்ள ஜோசப் வாஸ் கல்லூரியில் பணியாற்றியபோது, அவர் பள்ளியின் கல்வி மற்றும் ஒழுக்க ஒழுங்கு நிலைகளை உயர்த்தும் பணியில் அரும்பணி செய்தார்.
"பெனடிக்ட் மாஸ்டர்" என்பது ஒவ்வொரு விடத்தல்தீவு குடும்பத்தின் இதயங்களிலும் அன்பாகப் பதிந்த ஒரு பெயர். அவர் ஒரு ஆசிரியரை விட அதிகம்; அவர் ஒரு லேகான வாய்மொழி நையாண்டி கலைஞர், அவர் தீவிரமான பாடங்களைக் கூறும்போது கூட மக்களை சிரிக்க வைக்கக்கூடிய ஒருவர். அவரது தனித்துவமான பாணி - நகைச்சுவையில் மூடப்பட்ட ஒழுக்கம், புத்திசாலித்தனத்துடன் வழங்கப்பட்ட திருத்தம் - அவரை மறக்க முடியாததாக மாற்றியது. அவரது கண்காணிப்பின் கீழ் வழங்கப்பட்ட கடுமையான தண்டனைகள் கூட கற்றலைப் போற்றத்தக்க நினைவாக மாற்றிய ஒரு வசீகரத்தை எவ்வாறு கொண்டிருந்தன என்பதை அவரது மாணவர்கள் அன்புடன் நினைவு கூர்கிறார்கள்.
கண்டிப்பான ஒழுக்கம், நேர்மையான ஆன்மா மற்றும் அன்பான வழிகாட்டியான பெனடிக்ட்மாஸ்டர்,தனது ஞானத்தால் மட்டுமல்ல, மகிழ்ச்சியையும் நேர்மையையும் கலந்த அவரது ஆளுமையாலும் தலைமுறைகளை வடிவமைத்தார். இன்றும் கூட, யாராவது அவரது பெயரை உச்சரிக்கும்போது, அது அன்பான கதைகள் மற்றும் புன்னகைகளின் வென்னத்தைத் தூண்டுகிறது, இது அவரது மாணவர்கள் மற்றும் பரந்த சமூகத்தின் மீது அவர் ஏற்படுத்திய தாக்கத்திற்கு ஒரு உண்மையான சான்றாகும்.
தமிழும் ஆங்கிலமும் இரு மொழிகளிலும் அழுத்தமான அறிந்தும் ஆர்வத்துடனும் கற்பித்தவர். கல்வி என்பது தொழிலல்ல, அது ஒரு புனிதமான சேவையென நம்பியவர். பணிவு, நேர்மை, ஒழுக்கம், அடக்கம் ஆகியவை அவரது வாழ்வின் நெறிகளாக இருந்தன. பாராட்டுகள் வேண்டாமென நினைத்தவர்; ஆனால், அவர் விட்டுச் சென்ற நிழல்கள் கூட பாராட்டுக்குரியவை.
அவரது மாணவர்களில் நற்சிந்தனையும், சீரான மொழிப்பயிற்சியையும், கலாச்சாரப் பாரம்பரியத்தின் மதிப்பையும் வளர்த்தார். கல்வி என்பது மனித மனதையும் ஆன்மாவையும் உயர்த்தவேண்டிய ஒன்றெனும் கருத்தை அவர் மனப்பாடமாக மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.
ஓய்வு பெற்ற பின்னரிலும், சமூகத்தின் நினைவிலும் மாணவர்களின் நெஞ்சிலும் அவர் ஒரு அழிக்க முடியாத சின்னமாக இருந்தார். அவர் உரைகள் கொடுத்துப் பேசாதவர்— செயல் மூலமாய் பாடமனித்தவர். அமைதியான புரட்சியாளராக, ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையையும் மெல்ல மெல்ல மாற்றியவர். அவர் விட்டுச்சென்ற தாக்கமும், நேர்மையும், சேவையும் இன்றுவரை காற்றிலும், கல்விக்கூடங்களிலும் வாழ்கின்றன. அவரது நினைவு, அவருடன் கற்றோரும் பணியாற்றியோரும் நெஞ்சனவில் கொண்டாடும் ஒரு கலசமாகவே உள்ளன.
அக்காலத்தில் எமது ஊரிலும்,பாடசாலையிலும், ஆசிரியர்கள் குறிப்பாக கணித பாடம் கற்பிக்க ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருந்த காலம், தேவையான ஆசிரிய வனம் வழக்கப்படமையால் ஊரிலும்,ஊருக்கு வெளியிலிருந்தும் ஆசிரியர்கள் தொண்டர் ஆசிரியராக பணிசெய்தனர்.
வெள்ள சேட், வெள்ள வேட்டியும், சில வேளைகளில் புன்கை சேட்டை உள்ள விட்டு ரவுசர் அணிந்து கான்ரிலில் பன் bag கொழுவியபடி சாதாரணமாக சைவிக்கிளில் சரியான நேரத்திற்கு பள்ளிக்குடம் வரும் அதிபர் எமது பெனடிக்ற் மாஸ்ரர்.
அலுப்பு பஞ்சி இல்லாதவர். கடும் சொற்களை அறவே கொண்டிராதவர், பள்ளிக்கூடம் முடிய வீடு வந்தவுடன் தொடக்கும் வகுப்பு சில வேளை விளையாட போக கூட விடாமல் நிறைய கற்பித்தார். பாடசாலையில் 10 ம்,11ம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் வகுப்புக்களுக்கு கூட்டி சென்று ஆங்கில மொழியில் அவர் கற்பித்த அனைத்திலும் கேள்வி கேட்டு சோதிக்க சொல்லி சவால்விட்டு பெருமைப்படுவார். பல காலமாக ஏறத்தாழ 2வருடங்கள் தனியாக ஆங்கில வகுப்பு எடுத்து ஒரு ரூபாய் கூட பெற்றுக்கொள்ளாத உத்தமர் அவர். தனது பிள்ளைகளை போல அரவணைத்து சுற்றுத்தந்த உன்னத ஆசான்.
பாடசாலையில்..........
ஆம் என்றால் ஆம் இல்லை என்றால் இல்லை என்பது அவரிடமிருந்த பண்புகளில் ஒன்று. நேரம் தவறாதவர், கடமையில் கண்ணும் கருத்துமாய் இருந்து, பாடசாலை நிர்வாகத்தை திறம்பட ஆற்றியவர். ஆசிரிய வளங்களையும், பெளதீக வளங்களையும், மிக நேர்த்தியாக கையாண்டவர். இன்னும் சொல்ல போனால் பாடத்திட்டங்களோடு, இணைப்பாடவிதானங்களையும் ஒருங்கே சிறப்பாக கையாண்ட அதிபர் என்பது மிகையல்லபாடவேளையில் நிலத்திலும்,ஆகாயத்திலும் எழுத்துக்களை எழுதிய பின்னரே நாம் கொப்பியில் ஏழுதுவோம். தொடு,வளை, மேல போ, கீழ வா என்டு ABCD எழுத பழக்கப்பட்டோம். பாடசாலை வேலி அடைக்கும் பொழுது கட்டைகளை பள்ளம் தோண்டி நட்டிவிட்டு, முள்ளுக்கம்பிகளை இழுத்து அடிச்சுமட்டைகளை வரியும் போது அங்கே வந்து ஒருக்கா கட்டையை கையால் தள்ளிப்பார்த்தபின் “தம்பி விழுமா?” எனக்கேட்பார் இல்ல சேர் என்போம், உடனே “எப்ப விழும்?" என்று கேட்டு சிரிப்பை வர வைப்பார். பாடசாலை காலை ஒன்றுகூடல் சற்று அதிகமாக இருந்தாலும் சொல்ல வேண்டிய அனைத்தையும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உரியமுறையில் கொண்டுபோய் சேர்த்திடுவார். கொஞ்ச பயந்த சுபாவம் அந்நாட்களில் விமான தாக்குதல்,விமான சத்தங்கள் பிதியை ஏற்படுத்தியதில் ஐயமில்லை.
பாடசாலை மாணவ உதைபந்தாட்ட அணி அதிரடி அணி என்ற பெயரில் வெற்றிகளை பெற்ற வேளை குறிப்பாக எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்தை வென்ற அந்த நாட்களில் அவர்கள் ஒவ்வொருவருடைய புகைப்படத்தையும் பாடசாலை விளம்பர பலகையில் இட்டு காலைக்கூடத்தில் அவர்கள் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்திருந்த நாட்களை மறக்க முடியாது.
அடிக்கடி விடுதலை புலிகளின் நிகழ்வுகளுக்காக பல்வேறு போட்டிகளுக்கும், நினைவு தினங்களுக்கும், ஏனைய நிகழ்வுகளுக்காகவும் சென்றுவருவது வழமை, அந்த காலப்பகுதியில் முழங்காவில் நிகழ்ச்சிக்காக சென்ற மாணவர்களுக்கு காப்பிட்ட சாப்பாடு (பணிஸ்) ஒத்துவராமல் சாப்பிட்ட10ம் ஆண்டு மாணவிகள் ஒருவரை ஒருவரை பெயர் சொல்லி கூப்பிட்டு மயங்கி விழுந்த வேளை பெனடிற்மாஸ்ரர் பதறிப்பட்டு திகைப்புற்று அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் அவர்கள் இயல்பு நிலைக்கு வரும் வரை பட்ட அங்கலாய்ப்பு சொல்லி மீளாது.
பாடசாலைக்கு பெயர்மாற்றி தூய ஜோசப்வாஸ் ம.வி. என பெயரிட்ட பெருமையும், மாணவ முதல்வர்களை உருவாக்கி வெள்ளியிலான மாணவ முதல்வர்களுக்கான சின்னங்களை பெற்று கொடுத்த பெருமையும் பெனடிற் மாஸ்ரரையே சாரும்.
அக்காலத்தில் அச்சடிக்கும் இயந்திரங்கள், போட்டோகொப்பி எடுக்கும் இயந்திரங்கள் இல்லாத நேரம். ஆங்கில பரீட்சைக்காக தினைக்களத்தில் இருந்து வழங்கப்படும் வினாத்தாள்களை வைத்துவிட்டு தான் எமக்கு படிப்பிச்ச பாடத்திற்குள் வினாக்களை முதல்நானே எம் கைப்பட எழுத தந்து அடுத்தநாள் ஆங்கில பரீட்சையை நாடாத்துவதும் நினைவில் உள்ளது. வயிற் சீற் தட்டுப்பாடான காலம் சித்திர சோதனை வேனையில் கீறிய சித்திர பேப்பருக்கு பின்புறம் மற்றுமொரு பேப்பரை வைத்து இணையுங்கள் அதனால் உங்கள் சித்திரம் அழகாகும் என நகர்காக சொல்லுவார்.
எமது வகுப்பில் ஒருதடவை ஆங்கில பாடத்திற்கு வந்த பெனடிற் மாஸ்ரரிடம் றெமியும்,கமில்ரனும் நடந்துகொண்டது சிரிப்பை அடக்கமுடியாததாக இருந்தது. ஆங்கில பாடத்தை கடத்துவதற்காக றெமி" சேர் வயிற் சீற் இருக்கு கொண்டரவா"? என்டு கேட்கவும் "எத்தின பேப்பர்? எண்டு திரும்ப அவர் கேட்க *20 பேப்பர் என்டு றெமி சொல்ல படான்ரா எண்ட அவர் கமில்ரனிடம் "எத்தின பேப்பர்? என கேட்கவும் அவன் “50 சேர் என்டவுடன் இவன்தான்ரா நன்பன் என்டு சொல்லி ரெண்டுபேரையும் வயிற்றே எடுக்க வீட்ட விட்டிருந்த சம்பவமும் நினைவில் உள்ளது.
அந்தந்த பெனடிற் மாஸ்ரருடைய காலத்தில் பாடவேளைக்கு ஆசிரியர்கள் நேரசூசிகைக்கு ஏற்ப பாடங்களுக்கு செல்வதும், ஆசிரியர் இல்லாத வகுப்பை அவர் தனது ஆங்கில பாடமாக கையாள்வதும் சிறப்பே. கரடிப்போக்கு,சிலாவத்துறை போன்ற இடங்களில் இருந்து பாடசாலைக்கு பற்றாக்குறையான தளபாடங்களும், பாடசாலை கட்டட உபகரணங்களும் பல கஸ்டங்களுக்கு மத்தியில் கொண்டுவந்து சேர்த்ததும் நிளைவில் உள்ளது.
ஊரில்,பெனடிற் மாஸ்ரர் ஊரில் பல்வேறு நாடகங்களிலும், குறிப்பாக இயேசுவின் திருப்பாடுகள் நாட்டுக்கூத்தில் முக்கிய வேடத்திலும் கதாபாத்திரம் ஏற்றிருந்தார். சனசமூக நிலைய நிர்வாக சபையில் இருந்தவர். ஆங்கிலத்தில் வரும் கடிதங்கள் வாசிக்கவும், படிவங்கனை நிரப்பவும் ஊரவர்களால் நாடப்படும் ஒருவராக இருந்தார். 6 ம் வட்டாரத்தில் அமரர் குணநாயகம் அவர்களது வீட்டின் ஊடாக ஆரம்பித்து புதுக்கட்டு தபால்கந்தோர் வீதியை அடையும் வீதிக்கு புனித டிலாசால் விதி என்டு பெயரிட்டு அதனை சம்பிரதா பூர்வமாக திறந்து அவ்வேளை டிலாசால் அருள்தா வரம் தா நிதமே என்ட பாடலை நாங்கள் பாடியதும் வரலாற்று நிகழ்வே. இவ்வாறு பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் நினைவுகூரப்பட வேண்டியவர்களில் முதன்மையானவர் எமது பெனடிற் மாஸ்ரர்.





















விடத்தலூர் கலைத்தாய் தந்த சிற்ப கலைஞர் அடைக்கலம் .லூக்காஸ்.
விடத்தல்தீவின் அருமைபெருமைகளையும் அதற்கு காரணமானவர்களையும், கௌரவித்து பத்திரப்படுத்தி ஆவணப்படுத்த தவறியவர்களில் எமது ஊரின் சிற்ப கலைஞனான அடைக்கலம் லூக்காஸ் அவர்களும் அவரது படைப்புகளுமாகும்.
அடைக்கலம் லூக்காஸ் என்ற இயற்பெயருடன் செல்லன் என்று எம்மவர்களால் அறியப்படுகின்ற சிற்ப கலைஞன் மன்னாரின் வளங்கள் பலநிறைந்து செழிப்புற்று விளங்கும் எமது விடத்தல்தீவில் 1947 ம் ஆண்டு ஆவணி மாதம் 23 ம் திகதி திரேசம்மா மற்றும் பிலிப்பு அடைக்கலம் ஆகியோருக்கு இரண்டாவது பிள்ளையாக பிறந்தார்.
தந்தையார் அடைக்கலம் அவர்களிடம் சிறந்து விளங்கிய கலைநயமிக்க திறன்களை கலை ஆர்வத்துடன் ஏனைய உடன்பிறந்த சகோதரர்களை போலவே தானும் கற்று தனது இளம்பராயத்தில் இருந்தே பாடல் எழுதுதல்,பாடல்களை இயற்றுதல், செதுக்கு/கொத்து வேலைகளில் ஈடுபடுதல்,பிரசங்கம் வாசித்தல், ஒப்பாரி பாடுதல், நாடகம் எழுதுதல்,நாடக ஆற்றுகை செய்தல், சிற்ப வேலைப்பாடுகள் செய்தல்,சித்திரம் வரைதல் போன்ற கலைப்பணியை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செல்லன் அவர்கள் 1970ம் ஆண்டு வைகாசி மாதம் 20ம் திகதி எமது கிராமத்தின் அந்தோனியாப்பிள்ளை அவர்களைதிருமணம் செய்து ஜெயாதேவி, அன்ரனி ஜெபநேசன், மேரி அமுதா, மேரி சின்னமலர், அன்புறாஜ், மேரி விஜயா ஆகிய 6 பிள்ளைகளை பெற்று மிகிழ்வுடன் வாழ்ந்து வந்த காலப்பகுதியில் நடைபெற்ற உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் பேசாலை நலன்புரி நிலையத்திலும் அதன்பின்னர் ஜோசப்வாஸ் நகரிலும் வாழ்ந்துவந்திருந்தார். திருதிருமதி லூக்காஸ் அந்தோனியாப்பிள்ளை அவர்களது திருமணமானது எமது அடம்பன் புனித வியாகுலமாதா தேவாலயத்தில் நடைபெற்றமை குறிப்பிட்த்தக்கது. ஆரம்பத்தில் தந்தை அடைக்கலம் மற்றும் சகோதரர்களுடன் கலைப்பயணத்தை ஆரம்பித்த செல்லன் அவர்கள் 1990 களில் குறிப்பாக 1994ம் ஆண்டு தொடக்கம் 1998ம் ஆண்டு வரை தனது தனித்துவமான கலைப்பயணத்தில் வள்ளி திருமணம், மீனாட்சி திருமணம்,திருந்திய உள்ளம், மற்றும் காத்தவராயன் கூத்து போன்ற நாடகங்களை எழுதி,அவற்றை இயக்கத்துடன் எமது மன்னார் மாவட்டத்தின் மாந்தை பிரதேசங்களான சாளம்பன், தேவன்பிட்டி, இலுப்பக்கடவை பெரியமடு,மற்றும் தட்சனாமருதமடு போன்ற ஊர்களில் அவற்றை மேடையேற்றியதுடன் புதிய கலைஞர்களையும் உருவாக்கிய பெருமை செல்லன் எனப்படும் லூக்காஸ் அவர்களையே சாரும்.
தந்தை அடைக்கலத்தார் அவர்களை போலவே சிற்பங்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவரான செல்லன் அவர்கள் எமது தேவன்பிட்டியில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலயத்தில் உள்ள புனித சவேரியார் சிலையினை 1994ம் ஆண்டு காலப்பகுதியில் செதுக்கியிருந்தார். அந்த சவேரியார் சிலையானது செல்லன் அவர்களது கைவண்ணத்தில் மரத்தில் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பு.
எமது விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயத்தில் மேல்கூரை முகப்பில் அமையப்பெற்ற புனித யாகப்பரின் சிலையை செதுக்கிய பெருமையும் எமது சிற்பி செல்லன் அவர்களையே சாரும்.
அத்துடன் மன்னார் நகர சபை வளாகத்தில் அமையப்பெற்றுள்ள திருவள்ளுவர் சிலையை தத்துரூபமாக வடிவமைத்து பலரது பாராட்டுகளையும் செல்லன் அவர்கள் பெற்றிருந்தார்.
அதன் பின்னரான காலப்பகுதியில் எமது மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய பாடசாலைகளில் ஒன்றான மன்/சித்திவிநாயகர் தேசிய பாடசாலையில் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும் விதத்தில் ஆறுமுகநாவலர் சிலையொன்றை வடிவமைத்திருந்தார் செல்லன் அவர்கள்.
இடம்பெயர்ந்த பின்னரான காலப்பகுதியில் எமது ஜோசப்வாஸ் நகரில் மீளக்கடியமர்ந்த நிலையில் மரச்சேதுக்கல் வேலைப்பாடுகளில் ஈடுபட்டதுடன் ஜோசப்வாஸ் நகரில் உள்ள எமது வெ.தயானந்தன் அவர்களது இல்லத்தில் இயேசுவின் இராப்போசனம் நிகழ்வு இயேசுவின் அப்பம் பிட்கும் காட்சிகளை மிகவும் தத்துரூபமான முறையில் வேப்பம் பலகையில் மிகவும் அழகாக செதுக்கி கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தட்சனாமருதமடு கோவிலுக்கு மரத்தில் செதுக்கிய சூரன் சிலை அன்றும் அவ்வூரில் பேசும்பொருளாக இருப்பது செல்லன் அவர்களின் சிற்ப கலைக்கு கிடைத்த வெகுமதியாகும். மேலும் தெய்வமகன் திரைப்பட பாணியில் ஏது மாங்கல்யம் இரு துருவங்கள் மனோகரா கதையை வைத்து செல்லன் அவர்களால் மேடையேற்றப்பட்ட நாடகங்களாகும்.
பாடல்களை எழுதி இயற்றுவதில் புலமைவாய்ந்தவர் அதிலும் புரட்சி பாடல்களை எழுதுவது செல்லன் அவர்களது தனிச்சிறப்பாகும். தேவசகாயம்பிள்ளை நாட்டுக்கூத்தில் கலைஞனாக பாத்திரமேற்று நடித்துள்ளார்.
கன்னாட்டி அடம்பனில் மரத்தால் மாதா திருச்சுரூபத்தையும், பள்ளிமுனையில் ஒரு சுரூபத்தையும், பரப்புக்கடந்தான் கர்த்தர் கோவிலில் ஒரு திருச்சுரூபத்தையும் செய்திருந்ததுடன், பேசாலை நலன்புரி நிலையத்தில் 1999/2000ம் ஆண்டளவில் மடுமாதா வருகையின் போது பேசாலை பங்கு சமூகம்சார்ந்த பிரமாண்ட பரிசுத்த ஆவி வடிவிலான சிகரத்தை அமைத்திருந்தார்.
செல்லன்அவர்களதுகலைத்துறை சேவைகளினைபாராட்டி பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்ட நிகழ்வு இடம்பெற்றிருந்தது. உள்நாட்டு யுத்தம் காரணமாக செல்லன் அவர்களது பல்வேறுபட்ட படைப்புக்கள்,கலைசார் ஆக்கங்கள் யாவும் ஆவணப்படுத்தப்படாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இறுதியாக எமது ஜோசப்வாஸ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் புனித அந்தோனியார் திருச்சுருபத்தை செல்லன் அவர்கள் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது .ஏறத்தாழ வருடங்களாக கலைத்துறையில் சேவையாற்றி சிற்பம்,இயல், இசை நாடகம் ஆகியவற்றில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய கலைஞன் செல்லன் என்று அழைக்கப்படும் லூக்காஸ் அவர்கள் 24/7/2017 ம் ஆண்டு இறைபதமடைந்தார்.
விடத்தலூர் சிற்பக்கலையின் சிகரம் சிற்பி அடைக்கலம்.
சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் எனது சிறுபராயத்தில் எமது விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலய களஞ்சிய அறையில் யன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது சீமெந்தால் செய்யப்பட்டு பாதிவேலை முடிந்த கிறிஸ்து அரசர் திருவுருவச்சிலை ஒன்று கிடத்தியிருந்தது, யார் இதை செய்தது? என்ற கேள்விக்கு,அது அடைக்கலத்தார் செய்தது என்று பதில் வந்தது.
வளங்கள் பல நிறைந்த எமது விடத்தலம் பதியினில் பல்வேறுபட்ட துறைகளில் சிறந்துவிளங்கும் எம்மவர்களில் சிற்ப கலைஞனாக சிகரம் தொடும் வகையில் பல்வேறுபட்ட கலைநயமிக்க சிற்பவேலைப்பாடுகளில் ஈடுபட்டவர்தான் அடைக்கலத்தார் என எம்மவர்களால் அறியப்படுகின்ற சிற்ப கலைஞன் அடைக்கலம் அவர்கள்.
பிலிப்பு, ஆரோக்கியம் அவர்களுக்கு மகனாக பிறந்த அடைக்கலம் அவர்கள் லூர்த்து மேரி அவர்களை திருமணம் செய்து அந்தோனிமுத்து (அரியம் மாஸ்ரர்) மற்றும் செபமாலை (அன்னம்) ஆகிய இரண்டு பிள்ளைகளை பெற்றார். மனைவி லூர்த்துமேரி அவர்களது இறப்பிற்கு பின்னர் திரேசம்மா அவர்களை திருமணம் செய்து புஸ்பராணி (ராணி),லூக்காஸ் ( செல்லன்), கீதபொன்கலன் ( போசி) அந்திரேஸ், ஞானசீலி (மங்கை), யசிந்தா, ஜெயராணி, சகாயநாதன், சகாயநேசன், அருள்சீலன் மற்றும் அருள்சீலி ஆகிய பிள்ளைகளை பெற்றார்.
இயற்கையிலே கலைநயமிக்க கலைத்துறை சார்ந்த வேலைப்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அடைக்கலம் அவர்கள் கர்த்தர் சுரூபம், மாதா சுரூபம், உடக்குப்பாஸ் சிலைகள், இந்து சமய சிலைகள், சிங்க வாகனம் போன்ற சிலைகளை அச்சு அசலாக செய்துள்ளார்.
அடைக்கலத்தார் செய்த சிற்ப வேலைப்பாடுகள் யாழ்ப்பாணம் நவாலி ,பள்ளிமுனை, விடத்தல்தீவு போன்ற இடங்களில் இன்றும் காணப்படுகிறது. உடக்கு பாஸ் சிலைகளை செய்து இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு காட்சிகளை சித்தரிக்கும் வகையிலும் உருவாக்கியிருந்தார். விடத்தல்தீவு அடைக்கலமாதா கோவில் கர்த்தர் சிலை மற்றும் விடத்தல்தீவு சேமற்காலையில் அறையுண்டிருப்பதை சித்தரிக்கும் வகையிலான சுரூபம் போன்ற பலதரப்பட்ட சிலுவையில் இயேசு சிற்பவேலைகளை செய்துள்ளார்.
செதி வேலை என்று சொல்லப்படுகின்ற செதுக்கல் வேலைகளில் தனித்துவமான நுட்பங்களுடனான மரவேலைகளில் குறிப்பாக கதவு,அலுமாரி, போன்றவற்றில் செதுக்கல் வேலைகளை செய்துள்ளார். குறிப்பாக பாலம்பிட்டியில் அம்மன் கோவில் சிங்க வாகனம், சாளம்பன் மாதா கோவிலில் மாதா சுரூபம்,
ஆகியவற்றை மரத்தில் செதுக்கியுள்ளார். அத்துடன் செம்பியன் பற்று தாழையடி பரித்தித்துறையில் அமைந்துள்ள பிலிப்பு நேரியார் திருச்சுரூபத்தை சீமெந்தில் உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன்மன்னார் கற்கடந்தகுளம் புனித சூசையப்பர்சிலை மற்றும் விடத்தல்தீவு உட்பட பல கிராமங்களில் மரியாயின் சேனை Ave Mariya, பரிசுத்த ஆவி, அதனுடன் அமைந்த உலகம் ஆகியவற்றை தாங்கிய மரியாயின் சேனையின் சின்னத்தை ஈயத்தால் செய்திருந்தார். மற்றும் விடத்தல்தீவில் அமைந்துள்ள அடைக்கல மாதா ஆலயத்தின் முன் போட்டிக்கோவில் காணப்படும் தீபம் ஏந்திய கை மற்றும் அடைக்கலமாதா ஆலயத்தின் மணிக்கோபுர உச்சியில் அமைந்துள்ள மீன் என்பன அடைக்கலத்தாரின் கைவண்ணத்தில் அமைந்த சிற்பங்களாகும்.
சிற்பக்கலையில் மட்டுமன்றி அடைக்கலத்தார் நாடகங்கள், நாட்டுக்கூத்துகளை மேடையேற்றுவதில் கைதேர்ந்த கலைஞராக சூழ்சியின் வீழ்ச்சி நாட்டுகூத்து,அடக்கலமாதா, எம்பரதோர், ஞானசௌந்தரி, இம்மானுவேல், மாந்தைச்சரித்திரம், கன்னன்,பொன்னன் தீத்தூயு, சாதியின் கொடுமை சமூகநாடகம் தேவசகாயம் நாட்டுகூத்து,மட்டிமடையர் மற்றும் இசைவாதில் வென்ற கன்னி புராண நாடகம் ஆகியவற்றை இயக்கி மேடையேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவுட் போட் மோட்டரை அறிமுகப்படுத்திய சவிரிமுத்தர்
எமது விடத்தல்தீவின் வரலாற்றில் பல்வேறுபட்ட விதத்தில் தமது அளப்பெரிய சேவைகளினூடாக மனதில் இடம்பிடித்த வித்தகர்களில் சவிரிமுத்தர் என நம்மவர் எல்லோருக்கும் பரீட்சயமானவர் தான் எமது சவிரிமுத்து அவர்கள். இவர் 1930ம் ஆண்டு பங்குனி மாதம் 24ம் திகதி பிறந்தார்.
1964 ம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் எமது ஊரில் சணல் வலை புளக்கத்தில் இருந்து ஊரவர்கள் சணல் வலையை பயன்படுத்திவந்த காலத்தில் வெலிச்சோர் சவிரிமுத்து அவர்கள் நைலோன் வலையை எமது மீனவர்களுக்கு அறிமுகப்படுத்தி நைலோன் வலையின் பயன்பாட்டையும் அதன் உபயோகத்தால் மீன்பிடியில் உள்ள நன்மைகளையும் மக்களுக்கு எடுத்தியம்பியதுடன் மீனவர்கள் நைலோன் வலையை பயன்படுத்த அந்நாட்களில் காரணகர்த்தாவாக இருந்து அதனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும் சவிரிமுத்தர் அவர்கள் தான் எமது மன்னார் மாவட்டத்தில் முதன்முதலாக வெளி இணைப்பு இயந்திரத்தை ( Out Boat Motor ) அறிமுகப்படுத்தி அதனை பயன்படுத்தியதும் வரலாற்றில் மறக்கமுடியாததாகும். அதுமட்டுமல்ல எமது ஊரவர்களிட்யே தற்போதும் பேசப்பட்டுவரும் 1964ம் ஆண்டில் வீசிய கச்சான் காற்றின் வீரியத்தினாலும் புயலினாலும், வெள்ள அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்ட எம்மவர்களை கடல்வழியாக மன்னார் தீவிற்கு ஏற்றியிறக்கி படகுசேவை புரிந்தவரும் எமது சவிரிமுத்து அவர்களே என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சவிரிமுத்தர் அடிப்படையில் ஒரு அந்தோனியார் பத்தர் அந்தவகையிலே தான் தெளிவாற்றிலும், எமது விடத்தல்தீவிலும் புனித அந்தோனியார் சிற்றலயத்தை அமைத்தது மட்டுமல்லாமல் அதனை விளக்குவைத்து பராமரித்ததுடன் இன்றுவரை செவ்வாய்கிழமை தோறும் இவ் சிற்றாலயங்களை நாடி அந்தோனியார் பக்தர்களாக இறைமக்கள் வழிபடுவதற்கு ஆரம்ப காலங்களிலே சவிரிமுத்து அவர்கள் வழிசமைத்ததுடன் 2014ம் ஆண்டு ஆவணி மாதம் 20ம் திகதி இறைபதமடைந்தார்.
அத்துடன் பொன்னாமோட்டை பகுதியில் அவருடைய 10 ஏக்கர் வெள்ளாமை காணியில் வெள்ளாமை செய்வதற்காக குளம் ஒன்றை தனிப்பட்ட ரீதீயாக அமைத்து அதற்கு சவிரிமுத்தர் குளம் என பெயர் பெற்றிருப்பதும் சிறப்பம்சமாகும். தெளிவாற்று பகுதியில் அமைக்கப்பட்ட அந்தோனியார் ஆலயத்தில் கடந்த 2024ம் வருடத்தில் சுமார் 300 பேருக்கு அதிகமான பக்தர்கள் வருகைதந்திருந்த திருவிழாவிற்கான முன்னேற்பாடான போக்குவரத்து வசதிகளுடன் பாதைகள் புனரமைக்கப்பட்டு திருவிழா சிறப்பாக நாடத்தப்பட்டது.
மருத்துவப் பேராசிரியர் எஸ். எப். எல் அக்பர்
மருத்துவப் பேராசிரியர் எஸ். எப். எஸ் அக்பர் அவர்கள், மன்னார் மாவட்டத்தில் இருந்து வந்த முதல் மகப்பேறு நோயியல் விசேட வைத்திய நிபுணரும், முதல் மருத்துவப் பேராசிரியரும் ஆவார். 1990 ஆம் ஆண்டு விசேட வைத்திய நிபுணராக பதவியுயர்த்தப்பட்ட அவர், 2021 ஆம் ஆண்டு மருத்துவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். குழந்தைகள் மற்றும் மகப்பேறு வைத்தியத் துறையில் இலங்கையின் முஸ்லிம் சமூகத்தில் பேராசிரியராக உயர்ந்த முதல் நபராக அவர் சிறப்பிடம் பெற்றுள்ளார்.
விடத்தல்தீவு அலிகார், எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராக இருந்த இவர், பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயின்று, இறுதிப் பரீட்சையில் விசேட சித்தி பெற்றார். (Second Upper Class) எனும் தரத்தில், அகில இலங்கையில் 18ஆவது இடத்தை பெற்றதோடு, தமிழ்மொழியில் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தனது கல்வியை தொடர்ந்ததும் குறிப்பிடத்தக்கது. நாட்டின் முன்னணி வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணராகப் பணியாற்றிய டாக்டர் அக்பர், 100இற்கும் மேற்பட்ட விசேட வைத்திய நிபுணர்களுக்குப் பயிற்சி வழங்கியவர். இலங்கையின் பிரபலமான Castle Street Hospital for Women வைத்தியசாலையில், Chair Consultant ஆக, அதாவது 5 விசேட வைத்திய நிபுணர்களின் தலைமையாளர் பதவியிலும் இருந்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு மலேசியாவின் International Islamic University மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக நியமிக்கப்பட்டு அங்கு பணியாற்றினார். அதன் பின்னர், International Medical University of Malaysia-இலும் கற்பித்துள்ளார். அக்காலப்பகுதியில் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்திலும் பயிற்சியாளராகவும் பரீட்சகராகவும் சேவை புரிந்துள்ளார். மேலும், பல அபிவிருத்தி பெற்ற நாடுகளுக்குக் கூட்டு அமர்வுகளுக்காக அழைக்கப்பட்டு, துறை சார்ந்த சொற்பொழிவுகள் மற்றும் மாநாடுகளில் பங்கேற்ற அனுபவமிக்க நிபுணர் என சிறப்புற சுட்டிக்காட்டப்படுகிறார்.
சிறில் மாஸ்ரர்
சிறில் மாஸ்ரர் என அழைக்கப்படும் அமரர் இராஜநாயகம் சிறில் அவர்கள் 1934ம் ஆண்டு ஆடி மாதம் 23ம் திகதி அந்தோனிப்பிள்ளை மற்றும் லூசியா ஆகியோருக்கு மகனாக விடத்தல்தீவில் பிறந்தார். சிறில் மாஸ்ரருடைய தந்தை அமரர் அந்தோனிப்பிள்ளை அவர்கள் எமது கிராமத்தின் ஆரம்ப கால தபால் அதிபராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறில் மாஸ்ரர் அவர்கள் 1956ம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்று சேவையில் இணைந்தார்.தனது ஆரம்ப கால ஆசிரிய பணியை தலைமன்னார் மற்றும் அடம்பன் பாடசாலைகளில் நிறைவுசெய்து 1958ம் ஆண்டு தொடக்கம் 1960ம் ஆண்டு எமது விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கடமையாற்றியிருந்தார்.
அதன் பின்னர் 1961ம் ஆண்டு காலப்பகுதியில் ஆசிரியர் கலாசாலைக்கு சென்று அங்கே பயின்றதுடன் 1963ம் ஆண்டில் இருந்து 1974ம் ஆண்டு காலப்பகுதி வரை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும், 1975ம் ஆண்டு தொடக்கம் 1978ம் ஆண்டு வரை மன்னார் எருக்கலம் பிட்டி மத்திய மகா வித்தியாலயத்திலும் ஆசிரியப்பணியை சிறப்பாக ஆற்றியிருந்தார்.
தொடர்ந்து அதிபராக பதிவி உயர்வு பெற்று மன்னார் தாழ்வுபாடு பாடசாலையில் 1978ம் ஆண்டு தொடக்கம் 1982ம் ஆண்டு வரை சேவையாற்றிய சிறில் மாஸ்ரர் அவர்கள் மாற்றலாகி மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் உப அதிபராக நியமனம் பெற்று 1983ம் ஆண்டு தொடக்கம் 1985ம் ஆண்டு வரை கடமையாற்றியிருந்தார். அதனை தொடர்ந்து பேசாலை புனித பற்றிமா மகாவித்தியாலயத்திற்கு மாற்றலாகி அங்கே 1985ம் ஆண்டு தொடக்கம் 1991ம் ஆண்டு வரை அதிபராக சிறப்பான பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னரான காலப்பகுதியில் மீண்டும் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரிக்கு அதிபராக நியமனம் பெற்று அங்கே 1992ம் ஆண்டு தொடக்கம் 1993ம் ஆண்டு வரை கடமையாற்றி மன்னார் வலய கல்வி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று 1993ம் ஆண்டில் இருந்து 1994ம் ஆண்டு வரை மன்னார் மாவட்ட கல்வி சமூகத்திற்கு சிறப்பான பணியாற்றிய பெருமை சிறில் மாஸ்ரர் அவர்களையே சாரும்.
சிறில் மாஸ்ரர் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் கல்வி மற்றும் ஏனைய சமூகப்பணிகளை முன்னெடுத்து பல அமைப்புகளிலும், மன்றங்களிலும் பதவிவகித்துள்ளார். அந்த வகையில் மன்னார் மாவட்ட சாரணர் இயக்கத்தின் ஆணையாளராகவும் (District Commissioner of Scouts ) சென் ஜோண்ஸ் அம்புலன்ஸ் மன்னார் மாவட்ட பொறுப்பதிகாரியாகவும், உதைபந்தாட்ட பொறுப்பாசிரியராகவும்,பாடசாலை மாணவர்கள் இராணுவ படையணி பொறுப்பு ஆசிரியராகவும் ( School Army Cadet ) கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியப்பணியின் போது கல்வி பொதுத்தர சாதாரண தர மாணவர்களுக்கு அவர்களது முக்கிய பாடங்களுக்கான கணிதம், தமிழ் ஆகிய பாடங்களை கற்பித்ததுடன், வறிய மாணவர்களுக்கான இலவச வகுப்புகளை நடாத்தி மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைய வழிவகுத்திருந்தார். அத்துடன் பகுதிநேர உதவி காவல்துறை அதிகாரியாக பதவிவகித்து மடு மற்றும் மன்னார் பிரதேசங்களில் கடமையாற்றியதுடன் உள்நாட்டு போர் காலங்களில் மன்னார் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் பொறுப்பாளராக கடமையாற்றி மன்னார் நகருக்கும் பெருநிலப்பரப்பிற்குமான இணைப்பாளராக சிறந்த சேவையாற்றியிருந்தார் சிறில் மாஸ்ரர் அவர்கள்.
தனது ஆசிரிய பணியில் பின்னரான ஒய்வு காலத்தில் 1997ம் ஆண்டு தொடக்கம் அவரது இறப்பு வரைக்கும் எமது மன்னார் மகவட்டத்தில் வறுமைகோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையில் இலவசமாக மேலதிக வகுப்புகளை நடாத்திய பெருமைக்குரியவராக அமரர் சிறில் மாஸ்ரர் அவர்கள் காணப்பட்டார்.
அருட்சகோதரர் பறுநாந்து பெனடிக்ற் பொனவெஞ்சர் Fsc
மன்னார் மறைமாவட்டத்தில் இறை விசுவாசத்ததிலும்,நம்பிக்கையிலும் சிறந்து விளங்கும் கிராமமான விடத்தல்தீவு கிராமத்தில் 1966/12/07 ம் திகதி முன்னாள் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாறாறிய அமரர் பறுநாந்து பெனடிக்ற் மற்றும் நீக்கிலாப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளினின் இரண்டாவது பிள்ளையாக பிறந்தார்.
அருட்சகோதரர் அவர்களுக்கு மூத்த சகோதரி கொன்சி மற்றும் ஒரு இளைய சகோதரர் பெனற் என சகோதர சகோதரிகளுடன் குடும்பத்தில் மகிழ்வுடன் வாழ்ந்தார்.
அருட்சகோதரர் அவர்கள் தமது ஆரம்ப கல்வியை மண்'புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும், இடைநிலை கல்வியை மன்/விடத்தல்தீவு ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை மீண்டும் மன்'புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் பயின்றார். க.பொ.த சாதாரண தர பரீட்சையை 1983ம் வருடத்திலும்,கபொத உயர்தர பரீட்சையை 1986ம் வருடத்திலும் தோற்றி சித்தியடைந்தார்.
அருட்சகோதரர் பொனவெஞ்சர் அவர்களது இறை அழைத்தலுக்கான உருவாக்க மற்றும் துறவற வாழ்விற்கான உருவாக்கத்திற்கு அருட்சகோதரர் ஜோசப் மைக்கல் அவர்கள் ஊக்கத்தை, வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1987 - 1988 வரை மன்னார் புனித டிலாசால் இல்லத்தில் உருவாக்கத்திற்காக ஒரு வருடத்தையும், முன் உருவாக்கத்திற்காக 1988 - 1989 வரை ஒரு வருடத்தை மோதரை டிலாசால் இல்லத்திலும், 1989 - 1990 வரை டிலாசால் இல்லம் முகத்துவாரம் கொழம்பிலும் தொடர்ச்சியாக நவசன்னியாசியாக ( நொவிஷியேட் ஹல்கஷேன,ஹன்வெல்லா டிலாசால் இல்லத்திலும், 18/1/1990 - 12/5/1991 வரை பயின்றுகொண்டார். அதனைதொடர்ந்து தமது முதலாவது வாக்குத்தத்தை 1991/5/12 ம் திகதியிலும், இறுதிவாக்குத்தத்தை 1998/5/15 ம் திகதியிலும் நிறைவுசெய்த அருட்சகோதரர் அமரர் பொனவெஞ்சர் அவர்கள் தமது வெள்ளிவிழாவை 2016/5/15 ம் திகதி கொண்டாடியிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.
1987 ஆனி மாதம் தொடக்கம் ஐப்பசி மாதங்களில் LCES,இல் அருட்சகோதரர் இம்மானுவேல் நிக்கோலஸ் அவர்களின் கீழ் சமூக அனுபவத்தை பெற்றிருந்தார்.
அதன் பின்னர் ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் கொட்டாஞ்சேனையில் உள்ள புனித .பெனடிக்ற் கல்லூரியில் அருட்சகோதரர் பெஞ்சாமின் குணதிலக மற்றும் அருட்சகோதரர் சான்ஸ் ஆகியோரின் வழிநடத்துதலில் விடுதி உதவியாளராகவும், மற்றும் ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராகவும் பணியாற்றியிருந்தார்.
1987ம் வருடம் யாழ்ப்பாணத்தில் தனது கல்வியியல் பாடநெறியை நிறைவுசெய்தார். தொடர்ந்து 2009ம் வருடத்தில் இந்தியாவில் டொண் பொஸ்கோ புதுப்பித்தல் மையத்தில் கல்வி, பயிற்சி மற்றும் ஆலோசனையியல் உயர்கல்வியை நிறைவுசெய்திருந்தார். தொடர்ந்து சில சமயங்களில் கார்த்திகை, மார்கழி மாதம் டியாகல Boys' town, றாகம விற்கு அருட்சகோதரர் கிளமன்ற பெர்னாண்டோ, அருட்சகோதரர் சுசாந் நானயக்கார மற்றும் அருட்சகோதரர் ஜெஹால்ட் பாலரத்தினம், ஆகியோருடன் 1994ம் வருடத்தில் புனித பெனடிக்ற் கல்லூரியில் உதவி ஆசிரியராக சேவையை ஆரம்பித்தமை குறுப்பிடத்தக்கது.
1999- 2000 வரை புகுமடம், முகத்துவாரம் கொழும்பிலும், 2000 - 2001 வரை டிலாசால் இல்லம்,முகத்துவாரம் கொழும்பிலும் 2001 - 2002 வரை புனித ஜோசப் கல்லூரி கிராண்பாஸ் ஆசிரியராகவும்,2003 முதல் 2018 வரை புனித பெனடிக்ற் கல்லூரி கொட்டாஞ்சேனை ஆரம்ப பாடசாலை அதிபராகவும், 2019 இல் இருந்து 2024/5/24 ம் திகதிவரை கந்தானை டி மசனட் கல்லூரியின் ஆசிரியராகவும் எமது அருட்சகோதரர் பொனவெஞ்சர் அவர்கள் கடமையாற்றியிருந்தார். இறைபணிக்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து, இறைபணியையும், ஆசிரிய பணியையையும் செவ்வனே ஆற்றி இனிமை நிறைந்த பசுமையானதும்,அழகானதுமான வாழ்நாளில் நினைவில் கொள்ளத்தக்க அர்தத்தோடு வாழ்ந்து இறைவனடி சேர்ந்த எமது மண்ணின் மைந்தன் அருட்சகோதரர் பொனவெஞ்சர் அவர்களது ஆன்மா இறை சந்நிதியில் அமைதியின் இளைப்பாற்றி அடைவதாக.
மு. அப்துல் வாஹித் அவர்கள்
விடத்தல்தீவில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த மு. அப்துல் வாஹித் அவர்கள், தனது ஆரம்பக் கல்வியை விடத்தல்தீவு அலிகார் மகா வித்தியாலயத்தில் பெற்றார். 8 ஆம் வகுப்புப் புலமைப்பரிசில் தேர்வில் வெற்றி பெற்றதையடுத்து, நெல்லியடி மத்தியக் கல்லூரியில் க.பொ.த (உயர்தரம்) வரை கல்வியைத் தொடர்ந்தார்.
அவர் 6ஆம் வகுப்பில் பயின்றபோது தந்தையை இழந்ததால், உயர்தரப் பரீட்சையை முடித்ததும் உடனடியாக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆசிரியர் அல்லாதவர்களை ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் சேர்க்கும் போட்டித் தேர்வை எழுதினார். அந்தத் தேர்வில் பெற்ற சிறந்த செயல்திறன் அடிப்படையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சி கல்லூரியில் சேர்வதற்கு முன் குறைந்தது மூன்று "மாதங்கள் ஆசிரியராக பணியாற்ற வேண்டிய முன்னிபந்தனையின் காரணமாக, அலிகார் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார்.
மூன்று மாதங்கள் பணியாற்றியபின், அவர் பலாலி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் கணிதப் பாடத்தில் இரு வருடப் பயிற்சிக்காக சேர்ந்தார். பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், மீண்டும் அலிகார் மகா வித்தியாலயத்திற்கு பணியமர்த்தப்பட்டார். அங்கு பணியாற்றும் காலத்தில் கணிதம் கற்பித்ததோடு விளையாட்டு நடவடிக்கைகளிலும் ஆர்வமுடன் ஈடுபட்டார். ஏழு வருடங்கள் ஆசிரியராக பணியாற்றியதன் பின்னர், அவருடைய திறமையை அடிப்படையாகக் கொண்டு கல்வி அமைச்சினால் கணிதப் பாடத்துக்கான சேவை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவர் மன்னார் கல்வித் துறைக்கு இணைக்கப்பட்டு, அங்கு ஏழு ஆண்டுகள் பணியாற்றினார்.
அந்த காலப்பகுதியில் கல்வி அமைச்சின் பாடத்திட்ட மேம்பாட்டு மையத்துக்குத் தேவையானவர் என கருதப்பட்டதால், அவர் அங்கு கணிதத் துறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் பாடத்திட்டங்களை உருவாக்குதல், பாடப்புத்தகங்களை எழுதுதல், மற்றும் கணித சேவை ஆலோசகர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட முக்கிய பணிகளை செய்தார்.
அலிகார் வித்தியாலயத்தில் பணியாற்றிய காலத்தில், க.பொ.த (சா/த) பரீட்சைக்கான வினாத்தாள் மதிப்பீட்டில் உதவி மதிப்பீட்டாளராகவும், பாடத்திட்ட மேம்பாட்டு மையத்தில் பணியாற்றிய காலத்தில், தலைமை மதிப்பெண் தேர்வாளராகவும், பின்னர் கட்டுப்பாட்டு தலைமை தேர்வாளராகவும் (தமிழ் ஊடகம்) நியமிக்கப்பட்டார். மன்னார் கல்வித் துறையின் வேண்டுகோளின் பேரில் பாடத்திட்ட மேம்பாட்டு மையத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பின், அலிகார் மகா வித்தியாலயத்தில் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். அப்போது, தேசிய கல்வி நிறுவனத்தில் பணியாளர் ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வை எழுதினார். தேர்வில் வெற்றி பெற்றதனால் பதினொன்று மாதங்களுக்குப் பின்னர் அலிகாரில் இருந்து விலக வேண்டியது ஏற்பட்டது. தேசிய கல்வி நிறுவனத்தில் உதவி திட்ட அலுவலராகச் சேர்ந்த அவர், தொலைதூரக் கல்வித் துறைக்கு நியமிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கான பயிற்சிக்கான தொகுதிகளைத் தயாரித்தலும், பிராந்திய மையங்களை நிர்வகித்தலும் செய்தார். பின்னர், திட்ட அலுவலராக பதவி உயர்வு பெற்றவர் கணிதத் துறைக்கு மாற்றப்பட்டார். அதன்பின், தலைமை திட்ட அதிகாரியாகவும், அதன் பிறகு இயக்குநராகவும், திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டு துறைக்கு நியமிக்கப்பட்டார்.
தேசிய கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் போது, அவர் தமது B.Ed மற்றும் M.Ed பட்டங்களைப் பெற்றார். 55 வயதில் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர், JICA குழுவில் தேசிய ஆலோசகராக இணைந்து, கல்வி அமைச்சில் ஐந்து ஆண்டுகள் சேவை புரிந்தார். JICA திட்டம் நிறைவடைந்த பின்னர், மெர்சி கல்வி நிறுவனத்தில் கல்வி ஆலோசகராக இணைந்து தனது சேவைகளைத் தொடர்ந்துள்ளார்.
83 வயது வரை சைக்கிள் திருத்திய கணபதி அப்புவும் சைக்கிள் கடையும்.
நெற்றியில் திருநீறும் குங்கும பொட்டும் இரு காதுகளிலும் பூவை வைத்து சாறத்தை மடிச்சு கட்டி மெலிந்த வெறும் தேகத்துடன் தனது நாளாந்த வருமானத்திற்காக வழி மீது விழிவைத்தவராக வாடிக்கையாளரை எதிர்பார்த்தவாறு தனது கடையில் மூலையில் இருக்கும் வாங்குப்பலகையில் தினந்தோறும் அமர்ந்திருந்து தனது வேலைகளை செய்யும் எமது கணபதி அப்புவின் ஞாபகங்கள் பல இன்றும் மனதைவிட்டு நீங்காத நினைவுகளாக தொடர்கிறது.
காற்று அடிக்க 25சதம், 50சதம், 1ரூபாய் என எழுதப்பட்ட வாசகங்களுடன், அலுமினிய சட்டி, பாதியாக வெட்டப்பட்ட பழைய தண்ணி கேன் இவற்றுள் தண்ணீர் நிரம்பிய நிலையில்பழைய செருப்பை அடியில் வைத்து கட்டிய நிலையில் ரியூப்பால் சுமத்தப்பட்ட காத்தடிக்கும் பம் தொங்கவிடப்பட்ட நிலையிலும் சிறிய சொலுசன் ரின், ஒரு பெட்டியில் அஞ்சாறு சாவிகள், ஒரு கத்தரிக்கோல், பக்கத்தில் சைக்கிள் நிம்மில் கம்பிகளை பொருத்தி அவற்றை சாவியால் சரியான அளவில் பூட்டுவதற்காக அடியில் ஒரு கட்டையில் பொருத்தப்பட்ட நிலையில் இருக்கும் சைக்கிள் முன் போக் என காட்சியளித்த சைக்கிள் கடைதான் கணபதி அப்புவின் சைக்கிள் கடையாகும்.
1990 களில் எமது நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக பொருளாதார தடை விதிக்கப்பட்டு அன்றாட அத்தியாவசிய பொருட்களுக்கு எமது தாயகப்பகுதியில் தடாடுப்பாடுகள் நிலவிவந்த காலங்கள் இப்போது வீட்டுக்கொரு மோட்டர் சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் இருப்பதை போல் அத்தியாவசிய வாகனமாக துவிச்சக்கர வண்டி எனப்படும் சைக்கிள் ஒவ்வொரு வீட்டிலும் காணப்பட்ட காலம்.
சைக்கிள் வைத்திருப்பவர்கள் சமூகத்தில் டிமான்டுடன் பேசப்பட்ட காலம். அது. சைக்கின் உதிரிப்பாகங்கள் குறிப்பாக ரயர், ரியூப்,போன்ஸ், சொலுசன் போன்றவைகளை பெறுவது மிகவும் அரிதாக காணப்பட்ட காலத்தில் தான் தனது சைக்கிள் கடையை நடாத்தி அதிலே வரும் சிறிய வருமானத்தால் தனது சீவனோபாயத்தை போக்கிவந்தார் எமது கணபதி அப்பு அவர்கள்.
கணபதிப்பிள்ளை அவர்கள் 1917 ஆம் ஆண்டு எமது விடத்தல்தீவில் திரு.திருமதி கந்தையா அவர்களுக்கு மகனாக பிறந்தார்.
தனது ஆரம்ப கல்வியினை விடத்தல் தீவில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று தங்கம்மா அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்த கணபதி அப்பு, விடத்தல் தீவில் வசித்து வந்த அந்த காலப்பகுதியில் 1955 ஆம் ஆண்டு விடத்தல் தீவில் தனது வாழ்வாதாரமாக சைக்கிள் திருத்தகத்தினை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதியினருக்கு தங்கராஜா (ஓய்வு பெற்ற வைத்தியசாலை சிற்றூழியர்) நவரட்ணராஜா( ஒய்வு பெற்ற பல்நோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர்). துரைராஜா (ஓய்வு பெற்ற முதன்மை முகாமைத்துவ ஊழியர் தற்போது சமாதான நீதிவான்) விஜயலட்சுமி, சிறிஸ்கந்தராஜா, மற்றும் தவராஜா (ஓய்வுபெற்ற உப தபால் விநியோகஸ்தர்) ஆகிய பிள்ளைகள் உண்டு.
விவசாயத்துறையில் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக கணபதி அப்பு விவசாயத்தையும் செய்திருந்தார் அத்துடன் சைக்கிள் திருத்தகத்தை நடத்திவந்த கணபதி அப்புவின் சைக்கிள் திருத்தகத்திற்கு தமது சைக்கிள்களை திருத்துவதற்காக எமது விடத்தல்தீவு மக்கள் மட்டும் அல்லாமல் மாந்தை பெருநிலப்பரப்பில் உள்ள அயல் கிராமங்களில் இருந்த மக்களும் கணபதி அப்புவின் சைக்கிள் திருத்தகத்திற்கு அடிக்கடி வந்து செல்வார்கள். கணபதி அப்புவின் சைக்கிள் திருத்தகத்தை அவருடைய மருமகன் இன்று வரையும் அடம்பன் கிராமத்தில் நடத்திவருகிறமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார தடை நிலவி அத்தியாவசிய பொருட்களுக்கும் உதிரிப்பாகங்களுக்கும் தட்டுப்பாடுகள் காணப்பட்ட அந்நாட்களில் சைக்கிள் திருத்தகத்திற்கு தேவையான பொருட்களை மன்னார், யாழ்ப்பாண நகரங்களில் இருந்து அதிக விலைக்கு பெற்று தனது சைக்கிள் திருத்தகத்திற்கு வருபவர்களுக்கான தேவையை நிறைவுசெய்து கொடுத்திருந்தார்.
மாறி மாறி நடைபெற்ற இடப்பெயர்வுகள், விமான தாக்குதல்கள் என வாழ்ந்த காலம் சைக்கிள் மட்டுமே போக்குவரத்து சாதனமாக மக்களிடையே புழக்கத்தில் இருந்த அந்த காலகட்டத்தில் பொருட்கள் மீதான தடை இருந்த அந்த தடையான காலத்தில் இருக்கும் வளங்களை பயன்படுத்தி சைக்கிள் திருத்தம், சைக்கிள் பெச் ஒட்டுதல், மேட்டார் சைக்கிள் பெச் ஒட்டுதல், உழவு இயந்திரம் பெச் ஒட்டுதல்போன்ற வேலைகளை செய்துகொடுத்திருந்தார் அத்துடன் புதிதாக ரயர், ரியூப் பெறுவது மிகவும் கஷ்டமாக இருந்த காலத்தில் கிளிந்த ரயர்களை தைத்து இருக்கம் சொலுயேசனை பயன்படுத்தி தன்னை நாடி வருபவர்களுக்கு தன்னால் இயலுமான வகையில் உதவியவர் எமது கணப னபதி அப்பு அவர்கள்.
தொழில்நுட்ப வசதிகளும்,தொழில்நுட்ப சாதனங்களும் இல்லாத அந்த நாட்களிலும் தன்னிடம் இருந்த வளங்களை பயன்படுத்தி எமது பிரதேச மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து சாதனங்களை திருத்தி தேவைகளை தீர்த்துவைத்த எமது கணபதி அப்பு அவர்கள் தனது 83 வயதில் இறக்கும் வரை தனது சைக்கிள் திருத்தும் பணியை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆர்மோனிய சக்கரவர்த்தி சீமான்பிள்ளை
விடத்தல்தீவு இசைத்துறையில் முன்னோடியான ஆர்மோனிய சக்கரவர்த்தி சீமான்பிள்ளை அவர்கள் தனது பேரன் அமரர் சிற்ரியுஸ் அவர்களுக்கு சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் ஆர்மோனிய இசையை கற்றுக்கொடுத்த அரிய புகைப்படம்.
பமிக்க நன்றிகள் புகைப்பட உதவி. அந்தோனிப்பிள்ளை மேரி அன்னா.
ஆர்மோனிய இசை சக்கரவர்த்தி பொன்னுத்துரை
விடத்தல்தீவு பல்வேறுபட்ட இசை கருவிகளை மீட்டும் ஜாம்பவான்களின் வரிசையில் ஆர்மோனிய இசை கருவிகளை மீட்டும் ஒருவராக ஆர்மோனிய இசை சக்கரவர்த்தி என்ற பெயரெடுத்தவரே இளையதம்பி பொன்னுத்துரை ஆவார்.
பொன்னுத்துரை அவர்கள் 3 சகோதரர்கள் மற்றும் 3 சகோதரிகளோடு 1925ம் ஆண்டு வைகாசி மாதம் 12ம் திகதி பிறந்தார். அன்னம்மா அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து 6 ஆண் மற்றும் 3 பெண் பிள்ளைகளை பொன்னுத்துரை அன்னம்மா தம்பதியினர் பெற்றிருந்தனர்.
தனதுஇளம் வயதில் யாழ்ப்பாணம் நாவாந்துறையில் ஆர்மோனியம் இசைக்கருவியை மீட்ட கற்றுக்கொண்ட பொன்னுத்துரை அவர்கள் நாடகங்கள், நாட்டுக்கூத்துகள், மற்றும் ஊரில் நடைபெற்ற கலைநிகழ்வுகளுக்கு ஆர்மோனிய இசையை வழங்கியிருந்தார்.
குறிப்பாக அண்ணாவி அடைக்கலத்தார் நெறிப்படுத்த நாடகங்கள் சூழ்ச்சியின் வீழ்ச்சியும் என்ற நாடகம், சந்தியோகுமையோர் நாட்டுக்கூத்து, தேவசகாயம்பிள்ளை நாட்டுக்கூத்து,ஏதுமாங்கல்யம், இரு துருவங்கள், தர்மம்பிரகாசம், திருமாங்கல்யம் ஆகிய நாடகங்கள் மற்றும் நாட்டுக்கூத்துகளுக்கு தமது ஆர்மோனிய இசையை வழங்கியிருந்தார்.
சுமார் 40 வருடங்களுக்கு முன்னர்மன்னார்பாராளுமன்ற உறுப்பினர்சூசைதாசன்அவர்களால் விடத்தல்தீவில் நடைபெற நாடகத்தில் இசை வழங்கியதற்காக இசை சக்கரவர்த்தி என்ற பட்டம் பொன்னுத்துரை அவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொன்னுத்துரை அவர்கள் விடத்தல்தீவில் மட்டுமல்லாது பல்வேறுபட்ட பிரதேசங்களில் நடைபெற்ற நாடகங்களுக்கு ,நாட்டுக்கூத்துகளுக்கு ஆர்மோனிய இசையை வழங்கியிருந்தார். பாலம்பிட்டியில் நடைபெற்ற நல்லதங்காள், காத்தவராயன் கூத்து, இரணைதீவில் நடைபெற்ற ஞானசௌந்தரி, இலுப்பக்கடவையில் அந்தோனியார் நாடகம், வலைப்பாட்டில் நடைபெற்ற நாட்டுக்கூத்துகள், நாச்சிக்குடா,தட்சனாமருதமடு, மற்றும் கோவில்குளத்தில் நடைபெற்ற நாடகங்கள், ஞானஒளி, அருளாளர், செபஸ்தியார், பொன்னும் செபமாலை போன்ற நாடகங்களுக்கும் ஆர்மோனிய இசையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு விடத்தல்தீவிலும் பல்வேறுபட்ட பகுதிகளிலும் ஆர்மோனிய இ சை வழங்கிய பொன்னுத்துரை அவர்கள் 27/7/2007ம் ஆண்டில் இறைபதமடைந்த நாளில் கலையார்வம் கொண்டதினால் பலகலைகள் நீர் பயின்றீர் ஆர்மோனியம் இசைக்க உமையசைக்க யாருமில்லை! நிலையாக நீர் நின்று பலமேடை ஏறியுடன் பாங்குடனே பக்க வாத்தியத்தை இசைக்கையிலே சிலையாக மக்கள் மெய்மறந்து பார்த்திருக்கும் தெய்வீக இசையினையே இனி எப்போ நாம் காண்போம் என பொன்னுத்துரை அவர்களது இறப்பில் இரங்கல் தெரிவித்து எமது மண்ணின் முன்னாள் ஆசிரியர் மன்னார் அமுது அரியம் மாஸ்ரர் என அறியப்படும் அந்தோனிமுத்து அவர்கள் கவி வடித்தது குறிப்பிடத்தக்கது.
கலை நுட்பத்தோடு கறந்த பால் போல வெண்ணிறமான வெள்ளச்சிலுவையர். கலைப்பொக்கிஷமாக கலைநயங்கள் அத்தனையும் தன்னகத்தே கொண்டு விடத்தல்தீவின் கலைசார் வித்தகராக காணப்பட்டவர் தான் எம்மவர்களால் வெள்ளச்சிலுவையர் என அறியப்படுகிற விக்ரோரியான் சிலுவைராசா அவர்கள். சிலுவைராசா பிறந்த ஆண்டு மாதம் திகதி - 1924/ 11/20
சிலுவைராசா அவர்கள் விடத்தல்தீவில் திரு.திருமதி விக்ரோரியான் தம்பதிகளுக்கு மகனாக 1924ம் ஆண்டு மாதம் பிறந்தார். லூர்த்தம்மா அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து 3 ஆண் பிள்ளைகள், 5 பெண் பிள்ளைகள் என எட்டு பிள்ளைகளுடன் சிறப்பான வாழ்வை வாழ்ந்திருந்தார்.
சிலுவைராசா பல்திறமை கொண்டகலைப்பொக்கிஷமாக விளங்கியவர், பல்வேறுபட்ட கலைநயங்களை கொண்டு அவற்றிலே சிறப்புத்தேர்ச்சியும் பெற்றிருந்தார். அந்த வகையில் இசைத்துறையை பொறுத்தமட்டில் புல்லாங்குழல் இசைத்தல், ஆர்மோனியம் வீணை இசையை வழங்குதல், மற்றும் மிருதங்கம் வாசித்தல் போன்ற பலதரப்பட்ட கலை அம்சங்களை ஒழுங்கமைத்த பெட்டகமாக விளங்கியருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்யும் வேலைகளை கலைநுட்பத்துடன் செய்வதில் கைதேர்ந்ததவராக சிலை,சிற்பம் மற்றும் உருவங்களை அச்சு அசலாக வடிவமைப்பதில் வல்லவராக திகழந்ததுடன்,சித்திரங்களையும்,ஓவியங்க ளையும் மிகவும் தத்துரூபமாக, துல்லியமாக அதிலும் உயிரோவியங்களாக வரைந்துள்ளமை சிலுவைராசா அவர்களது கலைநுட்பத்திற்கு எடுத்துக்காட்டானவைகளாகும்.
கட்டடங்களை கட்டுவதில் இருந்து தோணி வேலை செய்வது வரை வெள்ளச்சிலுவையருக்கு அத்துப்படி சிற்பத்துறையை எடுத்துக்கொண்டால் பல்வேறுபட்ட சிற்பங்களை, உருவங்களை வடிவமைத்துள்ளார் நாடகங்கள், நாட்டுக்கூத்துக்களுக்கான ஒப்பனைகளை, உருவங்களை உருவாக்கியதுடன் எமது ஊரில் சந்தியோகுமையோர் திருவுருவ சிலையை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்த பெருமைக்குரியவர்.
ஊரில் மேடையேறும் நாடகங்கள், ஆலய திருவிழாகாலங்களில்,நாட்டுக்கூத்து மற்றும் கலைவிழா நிகழ்வுகளுக்காக ஆர்மோனிய இசையை சகபாடி பொன்னுத்துரை அவர்களுடன் இணைந்து வழங்குவதுடன் விடத்தல்தீவு சங்கீத கோஸ்டி என்ற பெயரில் சீமான்பிள்ளை அவர்களது தலமையில் பேதுறுப்பிள்ளை மற்றும் அந்தோனிப்பிள்ளை ஆகிய பக்கவாத்திய கலைஞர்களுடன் மாந்தை பிரதேசமெங்கும் பட்டயகிளப்பியிருந்தார்கள். சிலுவைராசா அவர்கள் எமது ஊரில் துணியில் வரைந்த சந்தியோகுமையோர் வெண்குதிரையில் வெற்றிக்கொடியோடு வலம்வருவதை பிரதிபலித்த ஓவியமானது இன்றுவரை பேசும்பொருளாக பேசப்பட்டு வருகிறது. நுட்பத்தை தனது ஒவ்வொரு உருவாக்கத்திலும் கையாளும் வெள்ளச்சிலுவையர் கொக்குப்பட்டம், வாலில்லா பட்டம்,போன்ற பல பட்டங்களை செய்துள்ளார். அத்தோடு எமது ஊரில் நாடகங்கள், நாடாடுக்கூத்துகளை பழக்கியதில் அதிலும் புனித சந்தியோகுமையோர் நாட்டுக்கூத்தை பழக்கி மேடையேற்றிய அண்ணாவியாக வெள்ளச்சிலுவை அவர்கள் எமது விடத்தலூர் வித்தகராக திகழ்ந்தார்.
காந்தகுரலோன் மாசிலாமணி
விடத்தல் மண்ணுக்கே உரித்தான கலை பண்பாட்டில் வியத்தகு முறையில் வைரமாய் ஜொலித்தவர் தான் எமது மாசில்லாமணி அவர்கள்.
1929 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 5ம் திகதியில் திரு.திருமதி பிறேஞ்சி ஆகியோருக்கு மகனாக சவேரியான், பவுலின், சிலுவை, தங்கராசம் மற்றும் திரேசம்மா ஆகியோரின் உடன்பிறப்பாக கொண்ட மாசில்லாமணி அவர்கள் அக்னஸ் அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இனிதாக தமது பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், சகிதம் மகிழ்வாக வாழ்ந்துவந்தார். மாசில்லாமணி அவர்களிடம் காணப்பட்ட கலைநயங்கம் பலவாகும் அந்த வகையில் நாடகக் கலைஞராகவும், நாட்டுப்புறக் கலைஞராகவும், பேச்சாளரகவும், பிரசங்கக் கலைஞராகவும், கவி, மற்றும் ஒப்பாரி பாடகராகவும், மேடைப்பேச்சாளராகவும் மாசில்லாமணி அவர்கள் சிறந்துவிளங்கியமை குறிப்பிடத்தக்கது. எமது ஊரில் நடந்தேறிய நாடகங்கள், நாட்டுக்கூத்துகள் மற்றும் கலைநிகழ்வுகள் மாசில்லாமணி அவர்கள் தனிச்சிறப்புவாய்ந்த பல கலைநயங்களுக்கு உரித்தானவராக இருந்தார். குறிப்பாக நலலதங்காள் நாடகம், சூழ்ச்சியும் வீழ்ச்சியும், இயேசுவின் பாடுகள், மரணம் உயிர்ப்பின் திருக்காட்சி போன்ற நாட்டுக்கூத்து கலைஞனாக தனது நடிப்புத்திறமையையும் தனது காந்தக்குரலால் பாடல் பாடுவதும் மாசில்லாமணி அவர்களது சிறப்பம்சமாகும்.
கவி, தாளிகை ஒப்பாரி போன்ற மண்வாசனை நிறைந்த கலைஞனாக வைரமாக ஜொலித்தவர்மாசில்லாமணி என்பது மறக்கமுடியாததாகும்.
உயிர்காக்கும் உன்னத பணிசெய்து நோயாளர் அவசர காவு வண்டியின் சாரதிகள்
மன்னார் மாவட்ட சுகாதார திணைக்களத்தில் அரச சுகாதார சாரதிகளாக உள்ளீர்க்கப்பட்டு,மன்னார் மாவட்டத்தின் பல்வேறுபட்ட பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் எமது கிராமத்தின் மைந்தர்கள் சிறப்பான சேவை புரிந்துள்ளார்கள்.
அந்த வகையில் திரு. அ றெஜீஸ் ராஜநாயகம், திரு.அ. றெனி சுரேந்திரன், திரு றெ.கலிஸ்ரஸ், திரு.றூ. றொணில்டன், திரு.அ.அருள் ஜெயக்குமார், மற்றும் ஜனாப் அப்துல் சாமட் பௌசுல் றஹ்மான் ஆகிய எமது மண்ணின் மைந்தர்கள் நோயாளர்அவசர காவு வண்டி சாரதிகளாக மாவட்ட வைத்தியசாலை மற்றும் பிரதேச வைத்தியசாலைகளில் குறிப்பாக எமது விடத்தல்தீவு பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் அவசரகாவு வண்டியின் சாரதிகளாக தமது பணிகளை சிறப்பாக ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உதைபந்தை உயிராய் நேசித்து ஐம்பது வயதிலும் அசராத வசந்தன் அவர்கள்
தயானந்தன் என இயற்பெயரை கொண்ட வசந்தன் 1975ம் ஆண்டு சித்திரை மாதம் 14ம் திகதி திரு.திருமதி பொன்ராசா, மரியபூரணி அவர்களுக்கு மகனாக 4 சகோதரர்களுடனும் 5 சகோதரிகளுடனும் பிறந்து அவர்களை 7/7/2005 இல் திருமணம் செய்து பிள்ளைகள் ஐவருடன் தான் புரியும் தொழிலை மையாமாக கொண்டு மன்னார் மூன்றாம்பிட்டியில் சிறப்பாக வாழ்ந்துவருகிறார்.
வசந்தன் அவர்கள்தனதுகல்வியை விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் கல்வி பொதுத்தர சாதாரண தரம் வரை கற்றார். பாடசாலையில் கல்வி கற்கும் நாட்களில் பாடசாலை உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்து முன்ணனி வீரனாக பாடசாலை ரீதியான உதைபந்தாட்ட போட்டிகளில் எமது பிரதேசத்தில் வெற்றியீட்டியதுடன் 100m, 200m, நீளம்பாய்தல் மற்றும் உயரம்பாய்தல் போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி பாடசாலை ரீதியாகவும், கொத்தனி ரீதியாகவும் பிரதேச மட்டத்திலும்,மாவட்ட மட்டத்திலும் முதலிடத்தை பெற்றிருந்தார்.
பின்னர் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்தில் இணைந்து எமது பிரதேசத்தில் குறிப்பாக பண்டிவிரிச்சான் ,பாலம்பிட்டி, தட்சனாமருதமடு, காத்தான்குளம், வட்டக்கண்டல், முருங்கன், முழங்காவில், நாச்சிக்குடா, வலைப்பாடு, அடம்பன், பெரியமடு, ஆண்டான்குளம் மற்றும் எமது விடத்தல்தீவிலும் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் சார்பாக உதைபந்தாட்ட அணியில் இடம்பித்து பல வெற்றிக்கோப்பைகளை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.
விக்ரர் நினைவு கிண்ணம், கீப்பிங்ஸ்ரார் நினைவு கிண்ணம், முத்துக்கள் மூன்று வெற்றிக்கிண்ணம், கரும்புலிகள் நினைவு கிண்ணம், வேணு நினைவு கிண்ணம், குமரன் ஞாபகார்த்த கிண்ணம், வீர பிரசவ கிண்ணம்,மண்ணின் மைந்தர்கள் நினைவு கிண்ணம் போன்ற கிண்ணங்களை எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகம் வெற்றியீட்ட வசந்தனின் பங்கு அளப்பெரியதாக காணப்பட்டது.
எமது மடுமாந்தை பிரதேசத்தில் ஓட்ட நிகழ்ச்சிகளில் முதலிடம் பெற்றதுடன், மடு மாந்தை பிரதேச உதைபந்தாட்ட அணியில் தெரிவு செய்யப்பட்டு தனது அயராத கடும் பயிற்சியால் மன்னார் மாவட்ட அணியில் உள்வாங்கப்பட்டான்.மன்னார் மாவட்ட அணி சார்பாக பல்வேறுபட்ட போட்டிகளில் பங்குபற்றியதுடன் தேசிய ரீதியாக நடைபெற்ற போட்டிகளுக்கு மன்னார் மாவட்ட அணி சார்பாக விளையாடியிருந்தான் வசந்தன். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் சிறிது காலத்தில் மன்னார் நகரப்பகுதியில் அல்பதா விளையாட்டு கழகம் மற்றும் கிறீன் பீல்ட் கழகத்துடன் இணைந்து விளையாடியிருந்தான். பயிற்சியாளர்கள், பயிற்சிகள், விளையாட்டு உபகரணங்கள், பந்துகள், காலணிகள் என்பன அற்றுக்காணப்பட்ட எமது பிரதேசத்தில் தனது கடுமையான தொடர் பயிற்சியால் தமிழீழ உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்த பெருமை வசந்தனையே சாரும்.
வசந்தன் தற்போதைய காலப்பகுதியில் Over 40 உதைபந்தாட்ட அணியில் கிறின் பீல்ட் கழகம் சார்பாக விளையாடிவருகின்றான். மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்பு போன்ற பிரதேசத்தில் 40 வயது உதைபந்தாட்ட மன்னார் மாவட்ட அணி சார்பாக தொடர்ந்தும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. பாரிச வாத நோயால் பாதிக்கப்பட்டும், கடலில் தொழில் செய்யும் நேரம் முதலை கடித்தும் பாரிய தாக்கத்துக்குள்ளான வசந்தன் தனது உயிரினும் மேலான உதைபந்தாட்டத்தை தனது முயற்சியாலும் அயராத பயிற்சியாலும் தொடர்ந்து ஆடி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
பந்துகள் தட்டுப்பாடான காலம், மிக்காசா, கோல்ட் கப் பந்துகள் ஒன்டிரன்டே காணக்கிடைக்கும், அதுவும் பள்ளிக்குட கிரவுண்டில அடிக்கடி பெச்சா போய் உட முள்ள வைச்சு காத்துப்பம்மையும் இரவல் வாங்கி இடைக்கிட காத்து அடிச்சு அடிச்சு விளையாடின காலம். புது பந்து வாங்க காசு இருந்தும் பந்து இல்லாத அந்த நாட்கள் பின்னேர பொழுது போக்கு விளையாட்டை மட்டுமே நம்பி நகர்ந்த அந்த நாட்களை எளிதில் மறக்கமுடியாது. பந்து வாங்க ஜெயபுரம், கிளிநொச்சி,போற ஆக்களிடம் கொடுத்துவிட்டு காத்திருந்த எங்கட அந்த காலத்தில் விளையாட்டுக்காக கிரவுண்டிலேயே அதிக நேரத்த செலவு செய்தவன்.
ஆரம்பத்தில் பின்கள தடுப்பு வீரனாக களம்மிறங்கினாலும் உதைபந்தாட்டத்தின் மேல் அவனுக்கிருந்த ஆர்வமிகுதியால் தன்னைத்தானே நாளுக்கு நாள் தயார்படுத்தி பயிற்சிகளை மேற்கொண்டு எமது ஐக்கிய விளையாட்டுக்கழக முன்கள வீரனாக திகழ்ந்தவன். எத்தனையோ உட முள் வைத்தும் காத்து நிக்காத ஒரு பந்தை பின்னேரம் 3 மணிக்கு கிரவுண்டில கொண்டுவந்து தட்டத்தனியாக உதைபந்தாட்ட பயிற்சிகளை செய்து தன்னைத்தானே நாள்தோறும் வளர்த்துக்கொண்டவன் என்றால் அது மிகையாகாது .மைதான சுவட்டு நிகழ்ச்சி குறுந்தூர ஓட்டங்களில் காத்தாங்குள றமேஸ்க்கும் இவனுக்கும் அடிக்கடி முதலாம் இடத்தை பெறுவதில் போட்டி.
பாலம்பிட்டி, தட்சனாமருதமடு, பண்டிவிரிச்சான், முழங்காவில், வட்டக்கண்டல், காத்தாங்குளம், வலப்பாடு, விடத்தல்தீவு,மைதானங்கள் இவன் பெருமை சொல்லும். வேகமான ஓட்டமும், பந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறனும் இவனிடம் அதிகமாக இருந்ததால் எமது கழகம் பல வெற்றிகளை பெற காரணமாக அமைந்தது. முன்னாள் மன்னார் மாவட்ட தளபதி ஜாண் அவர்களது ஏற்பாட்டில் வீரப்பிரசவம் ஐக்கிய விளையாட்டுக்கழகம் வட்டக்கண்டலில் நடாத்திய லீக் முறையிலான போட்டி, மற்றும் முத்துக்கள் மூன்று வெற்றிக் கிண்ணம், கீப்பிங் ஸ்ரார் வெற்றிக்கிண்ணம் போன்ற போட்டிகளில் இவனது பங்கு அளப்பெரியது.
அவ்வளவு ஏன் VA.J ராண்ஸ்போர்ட் றைவராக இவன் மன்னார், முழங்காவில் வரை சென்று வருவதுண்டு ,அந்நாட்களில் இவன் றைவிங் சீற்றுக்கு பின்னால பூட்சும், பந்தும் கிடக்கும் வரும் வழியில் ஊருக்குள்ள வந்து ஐசோட லொறிய சந்தியோகுமையோர் கோவில் பைப்படிக்கு கிட்ட நிப்பாட்டி கிரவுண்டில விளையாடிமுடிச்சுத்தான் முழங்காவில் போவான். அந்தளவு விளையாட்டில் அவனுக்கு அவா. ஆம் இலக்கம் 10 சீருடையை அணிந்து பயிற்றுவிப்பாளர்,பயிற்சிகள் இல்லாது தனது அயராத கடுமையான சுய பயிற்சியால் எதிரணியை கலங்கடித்த எமது ஐக்கிய விளையாட்டுக்கழக முன்னாள் முன்கள வீரானான வசந்தன் என்றால் அது மிகையாகாது.
அந்தோனிப்பிள்ளை கீர்த்தி சீலன்
இவர் 1948.09.02 பிறந்தார். விடத்தில் மண்ணின் கலை கலாச்சார உறுதிப்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் வித்திட்ட திரு கீர்த்தி சீலன் அவர்கள் தந்தையார் செபஸ்ரி அந்தோனிப்பிள்ளை விடத்தில் மண்ணின் இசைக்குழு ஒன்றிலிருந்து மிருதங்கம் வாசித்ததனை தொடர்ந்து தந்தையிடமிருந்து மிருதங்க கலையை கற்று மிருதங்கம் தபிலா பொங்கஸ் ஆகியவற்றை திறம்பட வாசிக்க ஆரம்பித்தார். விடத்தில் தீவின் கோயில் திருவிழாக்கள் கரோல் நாட்டுக்கூத்து நாடகங்கள் என பல்வேறு கலை நிகழ்வுகளுக்கும் மிருதங்க வித்துவானாக இவரது சேவை அளப்பரியதே. விடத்தல் தீவில் திரு அந்தோனிமுத்து ஆசிரியரின் தலைமையின் கீழ் இயங்கிய முத்தமிழ் கலா மன்றத்தில் மன்றத்தின் செயலாளராக இருந்து செயல்பட்ட காலப்பகுதியிலே “தூக்கு தூக்கி " எனப்பட்ட சமூக நாடகத்தை மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். தூக்கிலிடப்பட்ட கதாபாத்திரமாக தன்னையே அர்ப்பணித்து ஒரு சிறந்த நாடக கலைஞர் தன்மையை வெளிப்படுத்தி இருந்தார்.
தொடர்ந்து புனித செபஸ்தியார் நாடக அரங்கேற்றத்தில் பிரதான கதாபாத்திரம் ஆகிய செபஸ்ரியாராக நடித்து பெருமை சேர்த்தார்.மேலும் தொடர்ந்து அரங்கறிய ஞான சௌந்தரி நாடகத்திலே பெண்ணுக்குரிய கதாபாத்திரம் ஏற்று பிரதான கதாபாத்திரமாகிய ஞான சௌந்தரியாக நடித்துக் காட்டியமை குறிப்பிடத்தக்கது. தேவசகாயம் பிள்ளை நாட்டுக்கூத்தில் இறுதியில்துன்பப்படுகின்ற தேவ சகாயம் பிள்ளை கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் தத்ரூபமாக நடித்துக் காட்டி இருந்தார். அக்காலத்திலே எம் பகுதிகளில் மிகவும் பிரபலமாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்த நாட்டுக் கூத்துக்களின் வரிசையில் ஆண்டாங்குளத்தில் நடைபெற்ற காத்தவராயன் நாட்டுக்கூத்திற்கு சிறப்பாக மிருதங்கம் வாசித்து எம் விடத்தல் மண்ணிற்கு பெருமை சேர்த்தார்.
அருட்பணி றெஜிஸ் ராஜநாயகம் அடிகளார் அவர்கள் விடத்தில் தீவில் பங்கு தந்தையாக பணியாற்றிய காலப் பகுதியிலே நாவந்துறை திரு பாலச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில் எம் பங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற திருப்பாடுகளின் காட்சியில் சிலுவை சுமந்து பாடுபட்டு மரணிக்கின்ற இயேசு கிறிஸ்துவின் கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் சிறப்பாக நடித்துக் காட்டி மக்களின் மனதை வென்ற நிலையில் 25 வருடங்களுக்குப் பிறகும் அருட்பணி வின்சன் பற்றிக் அடிகளார் விடத்தில் தீவில் பணியாற்றிய காலப் பகுதியிலே அருட்பணி மைக்கேல் சௌந்தரநாயகம் அவர்களின் நெறியாழ்கையில் மீண்டும் இடம்பெற்ற திருப்பாடுகளின் காட்சியிலே அதே சிலுவை சுமந்து பாடுபட்டு மரணித்த ஆண்டவர் கதாபாத்திரத்தை மீண்டும் ஏற்று எம் விடத்தல் மண்ணின் அட்டை தீவு என்கிற இடத்திற்கு அருட்பணியாளருடன் நாள் தோறும் சென்று மிகவும் கடின பயிற்சிகளை மேற்கொண்டு யேசு நாதருடைய கதாபாத்திரத்தை மிகவும் தத்ரூபமாக காண்போர் வியக்கும் வகையில் நடித்து முடித்தார்.
விடத்தல் மண்ணின் இரண்டு ஆலயங்களில் எல்லா நிகழ்வுகளுக்கும் மிருதங்கம் வாசித்து உதவியதுடன் அயல் பங்குகள் ஆகிய கோவில்குளம் பெரிய மடு ஆகிய இடங்களிலும் இவரது சேவை நிறைந்திருந்தது திருவிழா காலங்களில் கவி பாடுதல் தவக்காலங்களில் தாழிசை ஒப்பாரி பாடுதல் இறப்பு வீடுகளில் ஒப்பாரி பாடுதல் பெரிய வெள்ளி ஆசந்திக்குப் பின்னர் திருப்பாடுகளின் பிரார்த்தனை வாசித்தல் என பல்வேறு ஆற்றல்கள் திறமைகளை தன்னகத்தே கொண்டு எம் விடத்தில் மண்ணின் கலையை சுகவீன மடையும் வரையிலும் மணம் பரவச் செய்த திரு கீர்த்திசீலன் அவர்கள்.அவர் 2018.10.06 இறந்தார்.
விடத்தல்தீவு சரித்திரத்தில் கலைவளர்த்த சவிரியப்பு
விடத்தலம்பதியில் கலை,கலாசார பண்பாடுகளை வளர்த்து சரித்திரத்தில் இடம்பிடித்த எமது மண்ணின் வித்தகர்களுள்சவிரியப்பு அவர்களும் நினைவில் நீங்கா இடத்தைப்பெற்றுள்ளார் என்றால் அது மிகையல்ல. எமது ஊரின் பிலிப்பு மற்றும் ஆரோக்கியம் தம்பதிகளுக்கு மகனாக 1925ம் ஆண்டு வைகாசி மாதம் 21ம் திகதி விடத்தல்தீவில் பிறந்தார்.சவிரியப்பு அவர்கள் தமது ஆரம்ப கல்வியை விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கற்றுக்கொண்டார்.
இளம்பராயத்தில் இருந்தே கலையிலும் கலைத்துறை சார்ந்த நடிப்பிலும் அதீத ஆர்வம் கொண்டிருந்த சவிரியப்பு அவர்கள் ஊரில் நடைபெற்ற திருவிழாக்காலங்களிலும் ,நாடக,நாட்டுக்கூத்து கலைஞனாகவும் நடித்ததுடன் பல நாடகங்களை இயக்கி மேடையேற்றிய அண்ணாவியாகவும் சவிரியப்பு அவர்கள் எமது ஊரில் கலையை வளர்த்த பெருமைக்குரியவராக திகழ்ந்தார்.
சவிரியப்பு அவர்கள் தனது நடிப்பாற்றலின் வெளிப்பாடாக சூழ்ச்சியின் வீழ்ச்சி என்ற நாடகத்தில் நடித்து கலைத்துறையில் தனது பெயரை பதிவுசெய்திருந்தார். அதன் பின்னர் “அருள்சீலன்” என்ற நாட்டுக்கூத்திலும் தேவசகாயம்பிள்ளை என்ற நாட்டுக்கூத்திலும் கலைஞனாக பாத்திரமேற்று நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுவரையில் நாடகங்களிலும்,நாட்டுக்கூத்துகளிலும் பல வேடங்கள் ஏற்று தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்த சவிரியப்பு அவர்கள் முதன்முதலாக ஞானசௌந்தரி நாடகத்தை எழுதி இயக்கி மேடையேற்றியிருந்தார். தொடர்ந்து திராட்சை தோட்டத்து உவமை, திருமண விருந்து போன்ற நாடகங்களை எழுதி அவற்றை மேடையேற்றியமை குறிப்பிடத்தக்கது.
சவிரியப்பு அவர்கள் எமது ஊரில் நடைபெறும் தவக்கால வழிபாடுகள், திருப்பலிகள், ஆலய திருவிழாக்கள் மற்றும் இறப்பு வீடுகளிலும், கவி பாடுதல், ஒப்பாரி பாடுதல் மற்றும் வியாகுல பிரசங்கங்களை வாசித்துவந்திருந்தார். இவ்வாறு எமது மண்ணில் கலையை வளர்த்த சவிரியப்பு அவர்கள் 2011 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 05ம் திகதி இறைபதமடைந்தார்.
அருட்பணி அமரர் எட்வின் அடிகளார் ( OMI) அவர்களது நினைவுகளை சுமந்து...
அருட்பணி எட்வின் அடிகளார் அவர்கள் எமது விடத்தல்தீவு கிராமத்தின் திரு திருமதி. தேவதாசன், தவமணி தம்பதிகளின் மகனாக 8 சகோதர சகோதரிகளோடு 17/8/1974 ம் ஆண்டு பிறந்தார்.
அமரர் எட்வின் அடிகளார் தனது ஆரம்ப கல்வியை எமது விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் கற்று அதன் பின்னர் தமது உயர் கல்வியை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கற்றுத்தேர்ந்தார்.
அதன் பின்னர் தனது குருத்துவ உருவாக்கத்தை அம்பிட்டிய கன்டி தேசிய குருமடத்தில் நிறைவு செய்திருந்தார்.
எமது முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி வின்சன் பற்றிக் அடிகளாரின் ஊக்கத்தாலும்,தூண்டுதலாலும் இறைபணிக்காக அமல மரி தியாகிகள் சபையில் தம்மை அர்ப்பணித்த அமரர் எட்வின் அடிகளார் தமது குருத்துவ உருவாக்கத்தின் முதலாவது வாக்குத்தத்தை கடந்த 8/9/2000 ம் வருடத்தில் நிறைவு செய்தார்.
தொடர்ந்து தமது குருத்துவ பணியின் இறுதி வாக்குத்தத்தை 07/05/2007 ம் ஆண்டில் நிறைவு செய்ததுடன், 19/5/2007 ம் ஆண்டு திருத்தொண்டராக அருட்பொழிவு செய்யப்பட்டு அமலமரி தியாகிகள் சபையின் அருட்பணியாளாராக மன்னார் மறைமாவட்ட ஆயர் அமரர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களால் கடந்த 12/11/2007 ம் ஆண்டு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் அருட்பொழிவு செய்யப்பட்டார்.
தமது முதல் நன்றி திருப்பலியை அமரர் எட்வின் அடிகளார் எமது கிராமத்தின் நற்கருணை ஆண்டவர் சிற்றாலயத்தில் கடந்த 13/11/2007 ம் ஆண்டு ஒப்புக்கொடுத்ததுடன் எமது கிராமத்தின் அருட்பணியாளர்கள் வரிசையில் அருட்பணி எட்வின் அடிகளார் அவர்கள் அமலமரிதியாகிகள் சபையின் முதலாவது அருட்பணியாளராவார். அருட்பணி அமரர் எட்வின் அடிகளார் அவர்கள் தமது இறைபணி வாழ்விலும், சமூக பணியிலும் தன் வாழ்நாளில் பல்வேறுபட்ட பணிகளை ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமது 7 வருட பணிவாழ்வில் அமரர் எட்வின் அடிகளார் எண்ணிலடங்காத பணிகளை பல்வேறுபட்ட சமூகங்களில் ஆற்றியுள்ளார் குறிப்பாக அமலமரி தியாகிகளின் அன்பகத்தின் இயக்குநராக கடந்த 2007 ம் வருடத்தில் பணியாற்றியதுடன், அஞ்சலியகத்தின் இயக்குநராக 2008 ம் வருடத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.அதனைத்தொடர்ந்து அமர் அருட்பணி எட்வின் அடிகளார் அவர்கள் இயேசு சபையின் அகதிகள் பணி (JRS ) இயக்குநராக கடந்த 2008 ம் வருடத்தில் இருந்து 2013 ம் வருடம் வரை சிறப்பாக பணியாற்றியிருந்தார். பின்னர் 2013 ம் ஆண்டில் இருதயபுரம் உதவி பங்குத்தந்தையாக பணியாற்றி அதே வருடத்தில் சாம்பல் தீவு பங்குத்தந்தையாக பொறுப்பேற்று பல்வேறுபட்ட சமூக பணிகளையும், இறை பணியையும் ஒருங்கே சிறப்பாக ஆற்றியிருந்தார்.
அருட்பணி அமரர் எட்வின் அடிகளார் “எளியோருக்கு நற்செய்தி நவில" என்ற தமது விருதுவாக்கியத்தை தமது செயலில் பல்வேறுபட்ட சமூக பணிகளில் வெளிப்படுத்திய சந்தர்ப்பங்கள் ஏராளம் தமது அன்பால் அனைவரையும் தன்பக்கம் ஈர்த்தவராக எல்லோரிடத்திலும் இரக்கம் உடையவராக எப்போதுமே சிரித்த முகத்துடன் வலம்வந்தவர். எமது மக்களுக்கு எதிராக அரச பேரினவாதாத்தால் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரால் மேற்கொள்ளப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டங்களில் மக்களோடு மக்களாக பாதிக்கப்பட்ட பல்வேறுபட்ட சமூக மக்களின் நீதியை நிலைநாட்ட தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார். பணிவாழ்வில் பல்வேறுபட்ட அரும்பணிகளை ஏளை எளியோருக்கும், நீதியின் பால் துன்புறுவோருக்கும் ஆற்றிய எமது அருட்பணி அமரர் எட்வின் அடிகளார் உடல் நலக்குறைவால் கடந்த 18/8/2014 ம் ஆண்டு இறைபதம் அடைந்தார்.
போர் சூழலில் தமது இன்னுயிரை ஈந்த ஆசிரிய பெருந்தகைகள்
அமரர் கி.றாஜக்கோண்
முன்னாள் அதிபர் தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயம் விடத்தல்தீவு
கோட்ட கல்வி அதிகாரி மடு வலயம்.
அமரர் சி. அமல நேசன். முன்னாள் ஆசிரியர்
தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயம் விடத்தல்தீவு.
அமரர் மரிய டெய்சி முன்னாள் பிரதி அதிபர்
தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயம். விடத்தல்தீவு.
அமரர் ம. மேரிக்கில்டா முன்னாள் ஆசிரியர்
தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயம் விடத்தல்தீவு.































சட்ட முதுமாணி ஏ. எம். பாயிஸ்
சிறந்த சட்டத்தரணியான ஏ. எம். பாயிஸ் அவர்கள், விடத்தல்தீவு அலிகார் மகா வித்தியாலயம், எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி, மற்றும் கண்டி திரினிடி கல்லூரி (Trinity College) ஆகிய கல்வி நிறுவனங்களில் தனது ஆரம்பக் கல்வியை பெற்றார். அதன் பின், கொழும்பு சட்டக் கல்லூரியில் கல்வி கற்று, சட்டத்தரணியாக தகுதிபெற்றார். தொடர்ந்து கொழும்புப் பல்கலைக்கழகத்தில், சட்ட முதுமாணி(LL.M) பட்டம் பெற்றுள்ளார்.
சிவில் செயற்பாட்டாளராகத் திகழும் பாயிஸ் அவர்கள், அரசியலமைப்புப் பேரவையின் சிபாரிசின் அடிப்படையில், தற்போதும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
மன்னாரில் நீண்ட காலமாக இயங்கி வரும் கிராம அபிவிருத்தி நிறுவனம் (RDF) என்பதின் ஆரம்பக் கால உறுப்பினராக உள்ளார். தற்போது அதன் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்.
சிவில் அமைப்புகள் வழியாக முன்னெடுக்கப்படும் மீள் இணக்க நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான களப் பணிகளில் முன்னோடியாக செயற்படுபவர். பாரம்பரியம் வாய்ந்த ஒரு அரசியல் கட்சியின் வெளிவிவகார பணிப்பாளராகவும் பணியாற்றிய பின், அவர் அரசியலிலிருந்து விலகி, தற்போது நடுநிலை அணுகுமுறையில் செயற்படுகிறார்.
2012 முதல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில், இலங்கை தொடர்பான அமர்வுகளில் தொடர்ந்து பங்கேற்று, மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து துணிச்சலாகவும், வெளிப்படையாகவும் குரல் எழுப்பி வருகிறார்.
அத்துடன், ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை மாநாடுகளிலும், ஐரோப்பிய ஆணைக்குழுவிலும், இலங்கை தொடர்பான அமர்வுகளில் ஆலோசகராக பங்கேற்றுள்ளவர். சட்டத்துறையில், சிவில் வழக்குகள், மேல்நீதிமன்ற வழக்குகள், உச்சநீதிமன்ற வழக்குகள் என பல தளங்களில் திறமையை வெளிப்படுத்தும் தொழில்முறை அனுபவம் வாய்ந்தவராவார்.
கடலலை இசைக்குழுவின் இயக்குணர் சவேரிதாஸ்.
சவேரி எமது ஊரில் எமது அயலவர் லூத்தம்மா அக்கா மற்றும் செல்வம் அண்ணணுடைய மகன். சிறுவயதில் இருந்தே எனக்கு நன்கு அறிமுகமான எமது அயலில் வசித்தவர். எமது சிறுபராயத்தில் எமது வீட்டின் அருகில் இருந்த பத்திமாமாவின் காணியில் நாங்கள் Football விளையாடுவதையும், சில விளையாட்டு போட்டிகளையும் நடத்தியிருந்ததும் இன்னும் பசுமையான நினைவுகள்.
சவேரி தனது சிறுபராயத்தில் Football திறமையாக விளையாடும் தன்மையை கொண்டிருந்தார், ஒவ்வொரு நாளும் மாலை ஆனதும் அயலில் உள்ள எல்லா சிறுவர்களும் அந்த காணியில் Football விளையாடுவதை வழக்கமாக' கொண்டிருந்தோம்.
#இடம்பெயர்ந்த பின்னர் பேசாலை முகாமில் எமது பாடசாலையில் பகுதிநேர ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் சவேரி உயர்தரம் கல்விகற்றுக்கொண்டிருந்தார். மாணவ மன்றங்கள், ஒளி விழா நிகழ்வுகள் ஆசிரிய தினம் மற்றும் தமிழ்த்தின போட்டி நிகழ்வுகளில் சவேரியின் பாடல் இன்றியமையாத ஒரு அங்கமாக இருந்துள்ளது மிகவும் இனிமையான குரல் வழத்துடன் பாடியிருந்தார்.
2017 ம் வருடம் எமது மகள் சுஜொக்ஸின் ஜகார்த்தாவில் நடைபெற்ற உலக அகதிகள் தினத்தில் பாடிய "கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே" என தொடங்கும் பாடலுக்கான கரோக்கே லிங்கை தந்து உதவியிருந்தார்.
எமது ஊருக்கே உரித்தான கலையுணர்வு சவேரியிடம் கொஞ்சம் அதிகமாகவே காணப்பட்டது. இயல்பிலேயே பாடும் திறமையை கொண்டிருக்கும் சவேரி இசைத்துறையில் தனது அயராத முயற்சியால் எமது கிராம இசை கலைஞர்களையும், பாடகர்களையும், ஒருங்கிணைத்து கடலலை இசை குழுஎன்ற பெயருடன் ஊரிலும் பல்வேறுபட்ட வெளி இடங்களிலும் இசை நிகழ்வுகளை நடாத்தி எமது ஊரின் கலை வளர்வதில் பெரிதும் பங்காற்றிவருகிறார் என்றால் அது மிகையாகாது.
பல கரோக்கே பாடல்களை பாடியிருக்கும் சவேரி தனது சொந்த இசையிலும் பல பாடல்களை பாடியிருப்பதும், எமது பல இசை ஆர்வம் உள்ள கலைஞர்களுக்கு அவர்களது இசை பயணத்தில் அவர்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்கியதுடன் அவர்களின் ஆரம்ப அடித்தள மேடைகளை உருவாக்கிய பெருமை சவேரியையே சாரும்.
தனது சொந்த செலவில் இருந்தும்,தனது உறவினரிடமிருந்தும் ஒரு சில இசை உபகரணங்களை மட்டும் கொண்ட கடலலை இசை கலையகத்தை தனது வீட்டில் வைத்துப்பேணிவரும் சவேரியவர்களுக்கு இசை துறையில் வளர இன்னும் பல முக்கியமான இசை தொடர்பான இசைச்சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் தேவைப்படுகின்ற ஒன்றாகவே இன்னும் இருந்துவருகிறது. #கடந்த மாதத்தில் அமரர்துவம் அடைந்த அருட்சகோதரர் பெனவெஞ்சர் அவர்களுக்கான நினைவு பாடல், மற்றும் நாம் இடம்பெயர்ந்த 25 வது வருட நிறைவின் நினைவு பாடல் போன்ற பாடல்கள் மிகவும் சிறப்பான பாடல்களாக வெளிவருவதில் சவேரியின் பங்கு அளப்பெரிய மூலகாரணமாக இருக்கிறது.
தனது சொந்த வேலைப்பழுக்களின் மத்தியில் இரவு பகல் பாராது முகம்கோணாது,ஒன்றல்ல,இரண்டல்ல பல தடவைகள் நுட்பமாக ஒவ்வொன்றையும் சரி பிழை பார்த்து சிறப்பான இசைக்கோர்வையை வழங்கியதுடன் நான் நினைத்தவாறு பாடல் அமையவேண்டும் என்ற எனது எண்ணக்கருவிற்கு ஏற்றால் போலவே பாடலை சிறப்பாக வழங்கியிருந்தார்.
அதிலும் அருட்பணி றஜனிகாந் அடிகளார் புலம்பெயர்ந்த தேசத்தில் இருந்து வாட்ஸ் அப் அலைவரிசை மூலம் அழகாக பாடி அனுப்பிய பாடலை மிகவும் நேர்த்தியாகவும், தாளம் தப்பாமலும் இசையை கோர்த்து அழகான, இனிமையான பாடலாக வெளிவர உதவியுள்ளமை மறக்கமுடியாத சாதனையாகும்.
விடத்தல்தீவு சல்லியை சல்லிடை போட்டு துளாவிய கடலோடி மரியதாஸ்.
மோட்டர் மரியதாஸ் என எமது மக்களால் அறியப்படுகிற நீக்கிலாஸ் என்ற இயற்பெயரை கொண்ட மரியதாஸ் அவர்கள் 1956ம் ஆண்டு மாசி மாதம், 13ம் திகதி ரெத்தினம் மற்றும் திரேசம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்து குடும்பத்தில் 3 வது பிள்ளையாக மரியதாஸ் அவர்களுக்கு 6 சகோதரர்களும், 5 சகோதரிகளுமாக 11 சகோதர,சகோதரிகள் உண்டு.
தனது கல்வியை விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 4 வரை கற்ற மரியதாஸ் அவர்கள் அமரர் சூசைப்பிள்ளை (செல்லராசா சம்மாட்டி ) அவர்களுடன் களம்கட்டி தொழிலையும், அமரர் செல்வநாயகம் அவர்களுடன் முரல்வலை தொழிலையும் செய்துவந்தார். பின்னர் பட்டிவலை விடுவலை அட்டைகுளித்தல், தோணி தாங்கல் என்பவற்றை தொழிலாக பழகி அவற்றை செய்துவந்தார்.
தனது 20வது வயதில் எமது ஊரின் சிற்ப கலைஞன் அடைக்கலம் அவர்களது மகள் யசிந்தா அவர்களுடன் 1976ம் ஆண்டு திருமணபந்தத்தில் இணைந்து 5 ஆண் பிள்ளைகளையும், 3 பெண் பிள்ளைகளையும் பெற்றார். எமது ஊரின் அமரர் செபதேயு(றைவர்சின்னமணி) அவர்கள் வழங்கிய 6 முளம் உடைய பட்டிவலையின் உதவியுடன் கடற்றொழில் தனியாக ஈடுபட ஆரம்பித்தார்.
பின்னர் 1979 ம் 1980ம் ஆண்டுகளில் மரியதாஸ் அவர்கள் கள்ளியடி மணி அவர்களுடைய அறிமுகம் பெற்றவராக அவருடன் சேர்ந்து மன்னார் சௌத் பார் பகுதியில் உள்ள தென்கடலில் சுமார் 60 அடி ஆளப்பகுதியில் சிங்கி தொழிலுக்காக சென்று தலைமன்னார் கடல் எல்லை வரைக்கும் சென்று சிங்கி பிடிப்பதில் கடும் தீவிரமாக உழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 1982ரம் ஆண்டுகளில் எமது விடத்தல்தீவு சல்லியில் 10 முளம் வலையையும்,களத்தில் 8, 1/2 முளம் வலையையும் பாய்ந்து சீரான முறையில் கடற்றொழில் ஈடுபட்டு வந்த நேரத்தில் மரியதாஸ் அவர்களுடைய வீடு எரிந்து நாசமானது. வீடு முற்றாக எரிந்ததை அறிந்து எமது கிராமத்தின் கிராம சேவையாளர்களான திருமதி மேரி பிரான்சிஸ் அவர்களும், திரு. றொபேட் அவர்களும் ஜனசக்தி உதவி திட்டத்தின் ஊடாக வீடு கட்டுவதற்கான உதவிகளை வழங்கியிருந்தார்கள்.
உள்நாட்டு யுத்தத்தால் கள்ளியடி பகுதிக்கு இடம்பெயர்ந்த மரியதாஸ் அவர்களது வீடு 1985ம் ஆண்டு காலப்பகுதியில் மீண்டும் எரிக்கப்பட்டது .இதன் காரணமாக மரியதாஸ் அவர்கள் தனது கடினமான உழைப்பையும், கடற்றொழில் வெறி கொண்டவராக அன்னம் தண்ணியை பொருட்படுத்தாமலும் ,சாப்பாட்டை ஒரு பொருட்டாக எண்ணாதவருமாக கடலில் முழுமையான நேரத்தை செலவிட்டவராக சங்கு தொழிலையும், அட்டை தொழிலையும் செய்து தனது கடின உழைப்பின் காரணமாக கல் வீடு ஒன்றைகட்டி அதற்கு ஓடு போட்டு தனது முயற்சியை தொடர்ந்திருந்தார்.
மரியதாஸ் அவர்களுடைய கல் வீட்டை அவரது மாமனாரும் சிற்ப கலைஞனுமான அடைக்கலம் அவர்கள் கட்டி கொடுத்திருந்தார். அந்நாட்களில் டேவிற் மாஸ்ரர் சுமார் 50 லோட் மண்ணை அரைவாசி காசு வாங்கி வழங்கியதுடன், சுசீலன் அவர்களும் உதவியிருந்தார்கள்.
கள்ளாறு, முனங்கு,கொம்புதீவு போன்ற எமது கடல்பகுதிகளிலும் எமது விடத்தல்தீவு சல்லி கடல் பகுதிகளிலும் வலைபாய்ந்ததுடன், அட்டை, சங்கு தொழிலில் இந்தகாலத்தில் இருப்பது போன்ற வசதிகள் அற்று எந்தவிதமான பாதுகாப்பு வசதிகள் இல்லாத காலகட்டங்களில் சல்லியை சல்லிடை போட்டு நிமிசக்கணக்கில் கடலில் நீருக்கடியில் கடல் வித்தைகளை கைக்கொண்டிருந்தவர் மரியதாஸ் அவர்கள் என்றால் அது மிகையல்ல மரியதாஸ் கடற்றொழிலில் மட்டுமல்லாமல் விளையாட்டுத்துறையிலும் சிறந்தவராக காணப்பட்டார். தனது 7 வயதில் இருந்தே பாடசாலை அணியில் சிலுவை எலியாஸ் சக, கில்லறி, பயஸ் ஆகிய தோழர்களோடு இணைந்தும் 1973 களில் எமது ஊரில் றூபன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட Blue Diamond அணியிலும் சேர்ந்து விளையாடியிருந்தார்.அதன் பின்னர் சென் ஜேம்ஸ் அணியில் இணைந்த மரியதாஸ் அவர்கள் ஜோசப், அருள், அருமைதாஸ்,யேசுதாசன் ஆகியோருடன் இணைந்து உதைபந்து விளையாடிவந்தார்.
அதன் பின்னர் ஆசிரியர் இம்மனுவேல் அவர்களது கண்ணில் பட்ட மரியதாஸ் அவர்கள் இம்மனுவேல் மாஸ்ரர் அவர்களது பயிற்சியில் இணைந்து 100m ஓட்டத்தில் பிரகாசிக்க தொடங்கினார். அந்நாட்களில் தக்காப்பிட்டியில் நடைபெற்ற போட்டியொன்றில் மகேந்திரா, எலியாஸ், ஆகியோரை பின்தள்ளி முதலாவது இடத்தை மரியதாஸ் அவர்கள் பெற்றிருந்தார். முகமின், மைக்கின், பயஸ், எலியாஸ் என வீரர்கள் ஓட்டத்தில் முன்னிலை வகித்தகாலத்தில் அவர்களுடன் மரியதாஸ் அவர்களும் அடம்பன் பிரதேச மட்ட 100m ஓட்ட போட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அஞ்சல் ஓட்ட போட்டிகளில் ஆரம்ப வீரர் எலியாஸ் அவர்களும் முடித்துவைப்பதில் மரியதாஸ் அவர்களும் அதிகளவு வெற்றிகளை சுவீகரித்திருந்தார்கள். ஊரில் நடைபெறும் தோணி தாங்கல் போட்டிகளிலும், மன்னாரில் நடைபெற்ற தோணி தாங்கல் போட்டியிலும், நீச்சல் போட்டிகளிலும் மரியதாஸ் அவர்கள் முதலாவது இடத்தை பலமுறை பெற்றிருந்ததுடன் கயிறு இழுக்கும் போட்டிகளில் முதலிடத்தையும், பாரம் தூக்கும் போட்டிகளில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி றெஜீஸ் ராஜநாயகம் அடிகளினால் ஆரம்பிக்கப்பட்ட எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்தில் ஆரம்ப வீரர்களான ஞானசீலன், எலியாஸ், பயஸ், ஆகியோருடன் இணைந்து விளையாடிவந்தார். எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்தை பதிவு செய்வதற்காக எலியாஸ் அண்ணணுடன்அடம்பனுக்கு சென்று கழகத்தை பதிவுசெய்தார் மரியதாஸ் அவர்கள்.
1977ம் ஆண்டுகளில் அமரர் சலமோன் அவர்கள் தங்களது விளையாட்டு போட்டிகளுக்கு அதிக அளவிலான உதவிகளை செய்ததாகவும்,எமது கழகத்திற்காக தாங்கள் தொழிலை விட்டு நிதி திரட்டியதாகவும் ,சன்னார் பகுதியில் இருந்து மண் இழுத்து எமது மைதானங்களை நிரப்பி பாடசாலை மாணவர்கள் விளையாடுவதற்கான வசதிவாய்ப்பை எலியாஸ், பயஸ், இசைக்கேயல், மற்றும் ஞானசீலன் ஆகிய நிர்வாக உறுப்பினர்களோடு இணைந்து ஐக்கிய விளையாட்டுக்கழக வீரர்கள் ஏற்படுத்தியதாகவும் மரியதாஸ் அவர்கள் தெரிவித்திருந்தார்.
இம்மனுவேல் மாஸ்ரர் வழங்கிய பயிற்சிகள் காரணமாக உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம்,கயிறு இழுத்தல், பாரம் தூக்குதல், நீளம் பாயுதல்,தோணி தாங்கல் போட்டி,,100m, 200m, ஓட்ட நிகழ்ச்சிகளில் அடம்பன் பிரதேசத்தில் முதலிடத்தையும், மன்னார் மாவட்ட போட்டிகளிலும் முதலிடத்தை பெற்று மாகாண ரீதியாக நடைபெற்ற போட்டிகளுக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உதைபந்தாட்டத்தில் பின்கள வீரரான மரியதாஸ் அவர்கள் எமது பகுதியில் நடைபெறும் கம்பு இழுத்தல் போட்டியில் முதலிடத்தையும், குண்டு போடுதல் நிகழ்ச்சியில் முதலிடத்தையும் பெற்று அடம்பன், நாச்சிக்குடா, யாழ்ப்பாணம், முருங்கள், வலைப்பாடு, மன்னார், நெடுங்கண்டல், தேவன்பிட்டி காத்தாங்குளம், பெரியமடு, மாந்தை, ஆகிய பகுதிகளில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம்.A B அணிகளாக வெற்றியீட்டியதில் மரியதாஸ் அவர்களுடைய பங்கும் அதிகமாகும்.
1988/1989ம் ஆண்டுகளில் பேசாலைக்கு இடம்பெயர்ந்த மரியதாஸ் அவர்கள் 1990ம் ஆண்டு ஐப்பசி மாதம் தமிழ்நாடு இந்தியாவிற்கு புலம்பெயர்ந்திருந்தார்.
இந்தியா தமிழ்நாட்டில் மண்டப முகாமில் அகதிகளாக வாழ்ந்துவந்த காலப்பகுதியில் மரியதாஸ் அவர்களது திறமைகளின் அடிப்படையிலும், எல்லோரிடத்தில் அவர் கொண்டிருந்த மரியாதையின் நமித்தமும் அந்த முகாமில் உள்ள மக்களது விளையாட்டுக்கு பொறுப்பான தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். சுமார் 80 உறுப்பினர்களை கொண்ட அந்த குழுவில் எமது ஊரவர்களான பிறிமன், ஜோர்ச் ஆகியோர் உட்பட்ட வங்காலை மற்றும் பள்ளிமுனை வீரர்களை கொண்ட அணி அதன் தலைவர் மரியதாஸ் அவர்களின் தலமையில் பல விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டியிருந்தது.
தனிமனித ஆளுமையும் விளையாட்டு திறனும் கொண்ட மரியதாஸ் அவர்கள் தமிழ்நாட்டின் பல கிராமங்களில் பல உள்ளூர் கழகங்களுக்கு பயிற்சிகளை வழங்கியிருந்தார். அத்துடன் வேதாளா மற்றும் கீழக்கரை பகுதிகளில் அட்டை மற்றும் சங்கு தொழிலில் ஈடுபட்ட மரியதாஸ் அவர்கள் 8,9 பாகம் ஆளமுடைய கடலில் அட்டை குளித்து முதன் முதலாக 300 அட்டை எடுத்து சக தொழிலாளர்களிடையே பேசப்படும் வகையில் தொழிலை சிறப்பான முறையில் செய்திருந்தார். கப்பல் ஓடும் கடல்பாதையின் அருகில் பழுதடைந்து நீரில் மூழ்கிய படகுகளை மீட்கும் பணிக்கு மரியதாஸ் அவர்கள் வேண்டப்பட்ட ஒருவராக இருந்து வருவதுடன் கடற்படை படகுகள், நங்கூரம் போன்றவற்றை,சுத்தம் செய்து அவற்றை பழுது பார்க்கவென மரியதாஸ் அவர்கள் கடலுக்கு அடியில் சுமார் 4 நிமிசம் தன்னம்தனியாளாக போய் திருத்தும் பணிகளை செய்திருந்தார்.
ஆழ்கடலோடிமுள்ளுச்சங்கு, சங்கு,அட்டை போன்றவற்றை மனத்தைரியத்துடன் கடலுக்கு அடியில் சென்று எடுத்துவருவதை தனது தொழிலாக கொண்ட மரியதாஸ் அவர்கள் தமது பிள்ளைகளை பல்வேறுபட்ட நெருக்கடிகள் மத்தியிலும், அசாதாரண சூழ்நிலைகளுக்குள்ளும், பலதரப்பட்ட பொருளாதார கஸ்டங்களுக்கு மத்தியிலும் கல்வியறிவை வளர்த்துக்கொள்ள சந்தர்ப்பங்களை அமைத்துக்கொடுத்து அவர்களை படிக்க வைத்து மகள் ஒருவரை தமிழ்நாட்டில் தங்கம் வெல்ல காரணகர்த்தாவாக இருந்து சாதித்துள்ளார்.
மன்னார் மாவட்ட வனவிலங்கு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளராக எமது மண்ணின் மைந்தன் திரு.அ.லோறன்ஸ் அவர்கள்.
வனவிலங்கு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் திரு.அருளானந்தம். லோறன்ஸ் திருலோறன்ஸ் அவர்கள் கடந்த 2012ம் வருடத்தில் இருந்து மன்னார் மாவட்ட வனவிலங்கு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் உறுப்பினராக செயல்படுவதுடன், மேற்படி சங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற பறவைகள் சமாந்தமாக மன்னார் மாவட்டம் தழுவி மேற்கொள்ளப்படுகின்ற கள ஆய்வுகளுக்கும்,பறவைகள் வாழும் இடங்களை அறிதல் மற்றும் பறவைகளை இனம்கண்டு கொள்ளுவதில் உதவியாளராக செயல்பட்டுவருதுடன் தொடர்ச்சியாக சங்கத்தில் இணைந்திருந்து அதன் செயலாளராக பதவி வகித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் திரு லோறன்ஸ் அவர்கள் பறவைகள் தொடர்பான அதிகளவு புத்தகங்கள் மற்றும் தகவல்களை அதற்கான புகைப்படங்களுடன் சேகரித்து பேணி பாதுகாத்தும் வருகிறார்.
ஞாலத்தில் ஞாபகமான திரு. யா. ஞானசீலனின் சாதனை வரலாறு.
விடத்தல்தீவு6ம் வட்டாரத்தில் யாகப்பு,அன்னம்மாதம்பதிகளின்மகனாக 2/1/1948 ம் ஆண்டு பிறந்தார். தமது குடும்பத்தில் 3 சகோதரிகளையும் , 2 சகோதரர்களையும் கொண்டிருந்த இவர் 30 /09/1976 இல் அலிஸ் மேரிமலர் அவர்களை திருமணம் செய்து 4 பிள்ளைகளுடன் சிறப்பாக வாழ்ந்துவருகிறார். ஞானசீலன் அவர்களின் வரலாற்றில் அவரது இளமை காலம், கல்வி பராயம் என்பன வரலாறு சொல்லத்தக்க பல சாதனைகள் நிகழ்த்தப்பட்ட வரலாறுகளாகவே காணப்படுகிறது.
அந்தவகையில் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் 1968 ம் வருடத்தில் தரம் 10 இல் நடைபெற்ற கொண்ட க. பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்தார். புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் 1965ம் ஆண்டு தொடக்கம் 1968ம் ஆண்டுவரை கல்விகற்று, கல்வியிலும், விளையாட்டிலும் பற்பல சாதனைகளை நிலைநாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் 1967 ம் ஆண்டில் தரம் 9 இல் கல்விகற்கும் போதே உதைபந்தாட்ட அணியின் மாவட்ட கோல் காப்பாளராக இருந்துள்ளார். புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிக்கு பொறுப்பான மாணவ முதல்வராகவும், உதைபந்தாட்ட அணியின் தலைவராகவும், கோல் காப்பாளராகவும்,
தடகள, விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளின் தலைவராகவும் 1967ம் ஆண்டு தொடக்கம் 1969ம் ஆண்டுவரை தலமைதாங்கி இருந்துள்ளமையும் மறக்கமுடியாததாகும். பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகளுக்கு தலமை தாங்கிய இவர் கோல் ஊன்றி பாய்தல், 100m ஓட்டம், 200m ஓட்டம் ,நீளம் பாய்தல், முப்பாச்சல், 100, 200m, 400m அஞ்சல் ஓட்டநிகழ்ச்சி மற்றும் மரதன் ஓட்டநிகழ்ச்சிகளில் முதலிடத்தை பெற்று புனித சவேரியார் கல்லூரியில் சாதனைபடைத்திருப்பது இவரின் மற்றுமொரு வரலாறாகும்.
புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி கற்றநாட்களில் அப்போதைய பிரதமமந்திரி கௌரவ டட்லி சேனநாயக்க அவர்களை வரவேற்று கொழும்பில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான அணிநடைக்கு1967ம் வருடம் தலமைதாங்கியிருந்தார். புனித சவேரியார்கல்லூரியில்தரம்9 இல் கல்விகற்கும் போதே மாவட்ட உதைபந்தாட்ட அணிக்கான கோல் காப்பாளராக திகழ்ந்துள்ளார். மேலும் கல்லூரியின் பீற்றர் இல்ல தலைவராகவும் தலமைதாங்கியதுடன் பீற்றர் இல்லத்திற்கான தடகள தலைவராகவும் தலமைதாங்கியதுடன் மன்னார் மாவட்டத்தில் கோல் ஊன்றி பாய்தல் நிகழ்ச்சியில் அறிமுகவீரனாக அதனை அறிமுகப்படுத்தியுள்ள பெருமையும் இவரையே சாரும்.
மன்னார் மாவட்டத்தில் 1966 தொடக்கம் 1968 வரையான காலப்பகுதியில் கோல் ஊன்றி பாய்தல், நீளம் பாய்தல் 100m ஓட்டம் ஆகிய போட்டிகளில் மாவட்ட சம்பியனாக வலம்வந்தவர், கழகங்களுக்கிடையிலான போட்டியில் புனித சவேரியார் கல்லூரி சம்பியனானதும்,புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் உதைபந்தாட்ட அணிக்கான தலைவராகவும், மாவட்ட அணிக்கான தலைவராக தலமைதாங்கியதும் இவரது வரலாற்று சாதனைகளாகும். கல்வி பயிலும் கல்லூரி நாட்களில் பற்பல சாதனைகளை நிலைநாட்டிய ஞானசீலன் அவர்கள் சமூகத்தில் தொடர்ந்து பல்வேறுபட்ட வரலாறுகளை படைத்திருக்கிறார் என்பதும் மறப்பதற்கல்ல. 1975ம் வருடத்தில் இலங்கை பொலிஸ் சேவையில் தம்மை இணைத்துக்கொண்ட இவர் தமது ஆரம்ப பயிற்சியை அம்பாறை பொலிஸ் பயிற்சி பாசறையில் பெற்றுள்ளார். பின்னர் கன்டியில் நியமனம் பெற்று மன்னார் பொலிஸ் திணைக்களத்தில் 1977ம் வருடம் வரை பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றியதும்,மன்னார் பொலிஸ் உதைபந்தாட்ட அணியின் கோல்காப்பாளராக இருந்ததும் இவரது மற்றுமொரு வரலாற்று நிகழ்ச்சியாகும். மாந்தை மேற்கு மற்றும் முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான உதைபந்தாட்டபோட்டி, கரப்பந்தாட்ட போட்டிமற்றும் மெய்வல்லுனர் போட்டிநிகழ்ச்சிகளுக்கு 1978/1979ம் ஆண்டுகளில் நடுவராக கடமையாற்றியிருந்தார். 1978, 1979,மற்றும் 1980ம் வருடத்தில் கிளிநொச்சி மாவட்ட நடுவர் சங்கத்தில் பயிற்சி பெற்ற இவர் மாந்தை மேற்கு, முசலி, கிளிநொச்சி, முழங்காவில் வலைப்பாடு, போன்ற இடங்களில் நடைபெற்ற கரப்பந்தாட்ட மற்றும் உதைபந்தாட்ட போட்டிகளின் நடுவராக சிறப்பாக கடமையாற்றியதும் மறக்கமுடியாததாகும்.
தலைவராக தமிழீழ நடுவர் சங்கத்தில் அதன் ஆரம்ப நடுவர்களில் ஒருவராக வன்னிப்பெருநிலப்பரப்பு பகுதியில் கடமையாற்றியும் இருந்தார். எமது கிராமத்தின் ஐக்கிய விளையாட்டுக்கழகம் அருட்பணி ரெஜீஸ்ராயநாயகம் அடிகளாரினால்ஸ்தாபிக்கப்பட்டஅக்காலப்பகுதியில் ஊரில்6ம்,7ம் வட்டாரங்களில் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்த கழகமான பயநியர் கழகத்தில் இருந்து ஐக்கிய விளையாட்டுக்கழகத்திற்கு தலமைதாங்கிய பெருமையும் இவரையே சாரும். ஜெர்மனிய உதைபந்தாட்ட பயிற்சியாளர்களினால் பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட இவர் 1980 தொடக்கம் 1982 வரையிலான காலப்பகுதியில் பயிற்சி அளித்துள்ள வரலாறும் மறந்துவிட முடியாததாகும். 1970 களின் பின்னர் ஞானசீலன் அவர்கள் எமது கிராமத்தின் எலியாஸ், செபமாலை, வரப்பிரகாசம்,பேரம்பலம், நாதன், மரியதாஸ், யேசுதாசன் ஆகிய எமது ஐக்கிய விளையாட்டுக்கழக ஆரம்ப கால A அணி வீரர்களுடன் மாந்தை மேற்கு பிரதேச சம்பியனாக வலம் வந்ததும் வரலாற்றில் இடம்பிடித்த நிகழ்வாக காணப்படுகிறது.
விளையாட்டில்மாவட்டரீதியில் சாதித்து பல்வேறுபட்ட போட்டிகளுக்கு நடுவராகசிறப்பாககடமையாற்றிய ஞானசீலன் அவர்கள் இணக்க சபை உறுப்பினராகவும்,புனித யாகப்பர் ஆலய செயலாளராகவும் 1986/1987ம் ஆண்டுகளில் இருந்துள்ளார். எமது விடத்தல்தீவு மேற்கு மீனவ கூட்டுறவு சங்க தலைவராகவும், சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினராகவும் இருந்துள்ள இவரது நிர்வாக காலப்பகுதியில் எமது விடத்தல்தீவு வாசிக சாலையின் 25வது ஆண்டு நிறைவு மலர் வெளியீடு 1986 இல் வெளியிடப்பட்டது. இடம்பெயர முன்னரும்,இடம்பெயர்ந்த பிற்பாடும் எமது உள்ளூர் போட்டிகள், உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு சிறப்பாக உதைபந்தாட்ட, கரப்பந்தாட்ட, போட்டிகளுக்கு நடுவராக செயற்பட்டவர் எமது ஞானசீலன் அவர்கள், இன்றும் உள்ளூரில் பல போட்டிகளுக்கு நடுவராகவும், பல அமைப்புகளுக்கு ஆலோசகராகவும் ஞானசீலன் அவர்கள் திகழ்கிறார் என்றால் அதுமிகையாகாது.
பயஸ் ! பயஸ் ! என பலராலும் பரிட்சையமான புறுணோ பயஸ் அவர்கள்
பயஸ் என்று பலராலும் அறியப்படுகின்றபுறுணோபயஸ் அவர்கள் ஜோண்சன், மரிகிரிதாள் தம்பதிகளுக்கு மகனாக 1962/09/30 ம் திகதி விடத்தல்தீவில் பிறந்தார். இவருக்கு 3 சகோதரர்களும்,5 சகோதரிகளும் உள்ளனர். 1990/02/24ம் திகதி சிறீமதி அவர்களை திருமணம் செய்து 5 பிள்ளைகளுடன் 1999 இல் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் மன்னாரில் வசித்து வருகிறார்.
ரெஜீஸ் 1978 களில் எமது முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி ராஜநாயகம் அடிகளார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்தில் இணைந்து புறுணோ பயஸ் அவர்கள் 1984 ம் ஆண்டளவில் தமது 14 வது,15 வது வயதில் எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக அணிக்காக முதல் முதலாக விளையாடியுள்ளார்."
தமது பாடசாலை நாட்களில் உதைபந்தாட்டம் தவிர்ந்த,100m, 200m, 400m, மற்றும் நீளம் பாய்தல் போன்ற போட்டிகளில்முதலிடங்களைபெற்றிருந்தார். 1982ம் ஆண்டுகாலப்பகுதியில் மாந்தை மேற்கு பிரதேசரீதியாக நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் புறுணோ பயஸ் அவர்கள் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் சார்பாக நீளம் பாய்தல் போட்டி நிகழ்ச்சியில் 19.9m தூரம் நீளம் பாய்ந்து பிரதேச மட்டத்தில் முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மன்னார் மாவட்ட ரீதியாக நடைபெற்ற போட்டியிலும் 19.9m தூரம் நீளம் பாய்ந்து முதலிடத்தை பெற்றதுடன் தேசிய ரீதியில் மாத்தளையில் நடைபெற்ற போட்டியில் 4ம் இடத்தை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. எமது கிராமத்தில் நடைபெற்ற மெடோன் கீதா உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இவரது முதலாவது போட்டியாக அமைந்தது அப்போட்டியில் எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகம் 2ம் இடத்தை பெற்றுக்கொண்டது. எமது ஐக்கிய விளையாட்டுக்கழக ஆரம்ப காலத்தில் எமது அணியில் சக வீரர்களான எலியாஸ், ஞானசீலன், இம்மனுவேல், வரப்பிரகாசம், பேரின்பலம், நாதன் ஆகிய வீரர்களுடன் தமது ஆரம்ப கால உதைபந்தாட்ட போட்டிகளில் பங்கேற்றியிருந்தார்.
1986 இல் இருந்து 1992 வரைக்கும் மாந்தை மேற்கு பிரதேசத்தில் பல்வேறுபட்ட போட்டிகளில் விளையாடி பலதடவைகள் சம்பியன் கிண்ணத்தை பெற்ற எமது ஐக்கிய விளையாட்டுக்கழக வரலாற்றில் இவரது பங்கு அளப்பரியது. அடம்பன், ஆண்டான்குளம், பண்டிவிரிச்சான், உயிலங்குளம், மாந்தை, வட்டக்கண்டல், பாலம்பிட்டி, முழங்காவில், உயிர்த்தராசன் குளம், நாவற்குளம், தட்சனாமருதமடு, வலைப்பாடு, இத்திக்கண்டல் போன்ற இடங்களில் விளையாடி சம்பியனாக தெரிவான எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணியில் அதிக கோல்களை பெற்றுக்கொடுத்துள்ளார். மன்னாரில் தமிழீழ விடுதலை இயக்கம் ( TELO ) நடாத்திய முன்னாள்தலைவர் அமரர் சிறீசபாரத்தினம் நினைவுகிண்ண உதைபந்தாட்ட போட்டியில்மாவட்ட ரீதியில் 3வது இடத்தை பெற்ற எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணியில் சிறந்த விளையாட்டு வீரன் என்ற விருதை பயஸ் அவர்கள் வென்றிருந்தார். மேலும் பல தடவைகள் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக A,Bஅணிகள் இறுதிப்போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்த நாட்களில் குறிப்பாக முழங்காவில் மைதானத்தில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவு கிண்ண உதைபந்தாட்ட போட்டி,வலைப்பாட்டில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டிகள் என்பன இவரது காலத்தில் மறக்கமுடியாத போட்டிகளாக இருந்தாக குறிப்பிடுகிறார். சொர்ணபுரி மைதானத்தில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி முடிவுறும் தருவாயில் இவர் வழங்கிய பந்தை வெற்றி கோலாக மாற்றி எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணி இறுதி நிமிடத்தில் சம்பியனாக வெற்றிபெற்றது இவரது மறக்கமுடியாத அனுபவமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் பாலப்பெருமாள்கட்டு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் 11 கோல்களை எமது அணி சார்பாக எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகம் பெற்றிருந்தது . அந்த போட்டியில் புறுணோ பயஸ் அவர்கள் எமது அணி சார்பாக 4 கோல்களை எமது அணிக்காக பெற்றிருந்தார். 1992ம் ஆண்டு இத்திக்கண்டல் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இவர் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணிக்காக விளையாடிய கடைசி போட்டியாக அமைந்தது. சம்பியனாக தெரிவு செய்யப்பட்டிருந்த அன்றை போட்டியில் முழங்கால் உபாதை ஏற்பட்டு புறுணோ பயஸ் அவர்களது கடைசி போட்டியாக இத்திக்கண்டல் உதைபந்தாட்ட போட்டி அமைந்தது. பல்வேறுபட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் எமது அணித் தலைவராகவும் செயற்பட்டு பல வெற்றிக்கிண்ணங்களை சுவீகரித்த ஐக்கிய விளையாட்டுக்கழக அணியில் எலியாஸ், எட்வேட்ராஜா, சகாயராசா, கியோமர், இசுதோர், மரியதாஸ், போன்ற எமது முன்னாள் வீரர்கள் அதிகளவு போட்டிகளில், பல ஆண்டுகளாக தம்முடன் சக வீரர்களாக விளையாடி எமது ஊருக்கு பெருமை சேர்த்ததாக குறிப்பிடுகிறார். புறுணோ பயஸ் அவர்கள் 1993ம் வருடத்தில் இருந்து 1999ம் ஆண்டு வரையுமான காலப்பகுதியில் தமிழீழ நடுவர் சங்க நடுவராக எமது வன்னி பெருநிலப்பரப்பு எங்கும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு எமது ஐக்கிய விளையாட்டுக்கழக வரலாற்றில் கழக தலைவராக கடமையாற்றியதுடன் பல்வேறுபட்ட சாதனைகளை நிலைநாட்டிய எமது பயஸ் அவர்கள் இன்றும் எமது கிராம விளையாட்டு போட்டிகளுக்கு நடுவராகவும், எமது விளையாட்டுக்கழக ஆலோசகர்களில் ஒருவராகவும் மைதானத்தில் காணப்படுவது சிறப்பம்சமாகும். தமது ஐக்கிய விளையாட்டுக்கழக வரலாற்றில் தாம் ஊருக்காக, ஊர் வெற்றிக்காக ஒன்றிணைந்து பல வெற்றிக்கனிகளை சுவைத்தாகவும்,எமது இளம் சமூதயம் ஒற்றுமையாகவும், கீழ்ப்படிவுள்ளவர்களாகவும் வளர்ந்து விளையாட்டு உட்பட ஏனைய துறைகளில் மென்மேலும் வளர வேண்டும் என்பதே தமது விருப்பமும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தலையால் பந்தை இடித்து கோலாக மாற்றுவதில் சிறந்த கியோமர் பயஸ். விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக முன்னாள் உதைபந்தாட்ட வீரன் திரு. ஜோண்சன். கியோமர் பயஸ் அவர்கள் 1965/12/18ம் திகதி திரு.திருமதி ஜோண்சன், மரிகிரிதாள் தம்பதிகளின் மகனாக விடத்தல்தீவில் பிறந்தார். 3 சகோதரர்கள் மற்றும் 5 சகோதரிகளுடன் குடும்பத்தில் 3வது ஆண் பிள்ளையான இவர் தனது கல்வியை தரம் 1 தொடக்கம் தரம் 11 வரை விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் கற்றுத்தேர்ந்தார்.
தனது பாடசாலை காலத்தில் இருந்தே உதைபந்தாட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட திரு ஜோண்சன். கியோமர் பயஸ் அவர்கள் கிரிக்கட், கரப்பந்தாட்டம், உயரம்பாய்தல், நீளம் பாய்தல், 200m ஓட்ட நிகழ்ச்சிகளில் பங்குபற்றி மாந்தை வட்டார போட்டிகளில் சாதனை படைத்து மன்னார் மாவட்ட போட்டிகளில் பங்கேற்று உயரம்பாய்தலில் 3ம் இடத்தையும், நீளம் பாய்தலில் 2ம் இடத்தையும் ஓட்ட நிகழ்ச்சியில் 1ம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1983ம் ஆண்டு தனது க.பொத சாதாரண தரத்தில் தேர்ச்சிபெற்று தனது உயர்கல்வியை தொடர மன்னார் புனித சவேரியார் ஆண்கள்கல்லூரிக்கு சென்றதுடன் 1983ம் ஆண்டில் இருந்து 1985ம் ஆண்டு வரை புனித சவேரியார் ஆண்கள்கல்லூரியில் உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்து தனது திறமையை வெளிக்கொணர்ந்திருந்தார்.
புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் 1984ம் ஆண்டு 1985 ம் ஆண்டுகளில் நீளம் பாய்தல், உயரம் பாய்தல் மற்றும் 200m ஓட்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட மட்டத்தில் 2வது இடங்களை பெற்றிருந்ததுடன்,புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் உதைபந்தாட்ட அணியில் Center half ஆக விளையாடி தனது திறமையால் அனைவரினதும் பாராட்டுகளை பெற்றிருந்தார். தனது உதைபந்தாட்ட வரலாற்றில் கல்லூரி நாட்களில் அருட்சகோதரர் மணி, அதிபர் கலாதரன் மற்றும் ஜோண் டிலாசால் போன்ற சக வீரர்களோடு உதைபந்தாட்ட போட்டிகளில் கல்லூரிக்காக பாடசாலை மற்றும் மாவட்ட ரீதியிலான போட்டிகளில் விளையாடியதை நினைவுபடுத்தியிருந்தார். மேலம் திரு கியோமர் பயஸ் அவர்கள் தனது கல்லூரி காலத்தில் S,X,C மியூசிக் குழுவிலும், பாடகர் குழாமிலும், கல்லூரியன் சாரணர் அணியிலும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது கல்லூரி காலத்தில் இருந்தே எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட அணியில் சகோதரன் பயஸ் அவர்களோடு இணைந்து 1984ம் ஆண்டில் இருந்து 1996ம் ஆண்டு வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். எமது ஐக்கிய விளையாட்டுக்கழக வரலாற்றில் தனது தலையால் இடித்து பந்தை கோலாக மாற்றுவதில் வல்லவரான திரு. ஜோண்சன் கியோமர் பயஸ் அவர்கள் எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகத்திற்கான தனது முதலாவது உதைபந்தாட்ட போட்டியை மன்னார் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் சக வீரர்களான திரு. எலியாஸ், திரு.பயஸ், திருஞானசீலன், திரு.மரியதாஸ், திரு. ஜெயராஜ் (ஏசண்டு) திரு.இசுதோர், திரு. ஜீவானந்தன், திரு நித்தியானந்தன் மற்றும் அமரர் அருள்வாசகம் ஆகிய வீரர்களோடு களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது மாந்தை மேற்கு பிரதேசங்களான பெரியமடு, பண்டிவிரிச்சான், மாந்தை,அடம்பன், ஆண்டான்குளம், இலுப்பக்கடவை,தட்சனாமருதமடு, பாலம்பிட்டி, உட்பட முருங்கன், முழங்காவில், நாச்சிக்குடா, வலைப்பாடு, போன்ற இடங்களில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டிகளுக்கு எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகம் சார்பாக இடது பக்க முன்கள வீரனாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.மேலும் திரு.ஜோண்சன். கியோமர் பயஸ் அவர்கள் உதைபந்தாட்ட அணியில் Center half, Center forward ஆகிய நிலைகளில் சிறப்பாக விளையாடும் ஒரு சிறந்த வீரனாக வலம்வந்த அந்த நாட்களை எளிதில் மறந்துவிட முடியாது. வட்டக்கண்டலில் நடைபெற்ற அணிக்கு 7பேர் கொண்ட ஒரு போட்டியில் 7 கோல்களை எமது அணிக்காக அடித்திருந்த நிலையில் எனி கோல் அடிப்பதில்லை என்று தலமை சொல்லிய சந்தர்ப்பத்தில் சாதாரணமாக அடித்த பந்து கோலாக மாறியதும். 1987ம் ஆண்டு முருங்கனில் நடைபெற்ற வங்காலைக்கு எதிரான உதைபந்தாட்ட போட்டி ஒன்றில் தலையால் இடித்து 1 கோலை பெற்று 1:0 என்ற கோல் அடிப்படையில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணி முன்னிலை பெற்றிருந்த வேளையில் ஆட்ட நேரம் முடிந்தும் நடுவர் போட்டியை நிறுத்தாமல் எதிரணிக்கு 3 நிமிடங்கள் கூடுதலாக சந்தர்ப்பத்தை வழங்கி ஆட்டம் சமநிலையில் முடிவுற்று போட்டி கைவிடப்பட்டிருந்ததும்
அடம்பன் மைதானத்தில் அமரர் சகாயராசா அவர்கள் அடித்த மூலை உதையை தலையால் இடித்து வெற்றிக்கோலாக மாற்றியதும் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டி ஒன்றில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக முன்னாள் கோல் காப்பாளர் திரு இசுதோர் அவர்கள் அடிக்கப்பட்ட பந்தை பிடித்த நிலையில் மயங்கியிருந்த வேளையில் கையில் பந்தை நழவ விடாமல் பிடித்தவாறே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிகழ்வும். மன்னார் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டி ஒன்றில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் சார்பாக ஏசண்டு அவர்கள் அடித்த பந்து கோல் போஸ்ற்றில் கட்டியிருந்த புது நெற்றை மின்னல் வேகத்தில் கிழித்துக்கொண்டு கோலாக மாறியிருந்தமையும் தனது மறக்கமுடியாத அனுபவங்களாக திரு. ஜோண்சன். கியோமர் பயஸ் அவர்கள் பகிர்ந்துகொண்டார்.
மன்னார் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவர் அமரர் சிறி சபாரத்தினம் அவர்களது ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டியில் 1 கோலை எமது ஐக்கிய விளையாட்டுக்கழக உதைப்பந்தாட்ட அணிக்காக பெற்றுக்கடுத்ததுடன் சிறந்த ஆட்ட நாயகனுக்கான கிண்ணத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது மேலதிக கற்கை நெறிக்காக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த நாட்களில் 1990ம் ஆண்டு தொடக்கம் 1992 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பாசையூர் மக்கள் படை உள்ளூர் உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததுடன் ஆசிரிய கலாசாலை காலங்களில் 1999ம் ஆண்டில் இருந்து 2000ம் ஆண்டு உதைப்பந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றியுமிருந்துள்ளார். தாங்கள் விளையாடிய காலப்பகுதியில் தம்மோடு சேர்ந்து ஊருக்காக உயிரை கொடுத்து விளையாடிய பலரை நினைவுபடுத்திய திரு. கியோமர் பயஸ் அவர்கள்,A,B,C,D,E என கழகத்தில் அணிகள் பிரிக்கப்பட்ட நிலையில் ஊருக்கு ஒரு கழகம், ஊர் முழுவதும் ஒரு கழகத்திற்காகவே இருந்தது என்றும் தலமை சொல்லுவதை கேட்டு அதன்படியே வாழ்ந்த வீரர்களையும் தாம் விளையாட சென்ற இடங்களில் எல்லாம் வெற்றிபெற்று வந்ததையும் நினைவுபடுத்தியிருந்தார்.
எமது ஐக்கிய விளையாட்டுக்கழக உதைப்பந்தாட்ட அணிக்காக முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி ஜெயசேகரம் அடிகளார் புலம்பெயர்ந்த தேசத்தில் இருந்து 15 பாதணிகளை முதல் முறையாக வழங்கியிருந்ததாகவும் Patrick வகையான அந்த பாதணியை 500/= கழகத்திற்கு செலுத்தி பெற்று 1996ம் ஆண்டு வரை விளையாடியதாகவும், தங்களது காலத்தில் அமரர் ய.சலமோன் அவர்கள் உதைபந்தாட்ட போட்டிகளுக்கான வாகன வசதிகளையும், சாப்பாடு போன்ற வசதிகளையும் செய்திருந்தமையையும் மறக்கமுடியாதாக குறிப்பிட்டிருந்தார். திரு.ஜோண்சன். கியோமர் பயஸ் அவர்கள் விடத்தல்தவு ஐக்கிய விளையாட்டுக்கழக உதைப்பந்தாட்ட வீரனாக இருந்த காலத்தில் கழக பொருளாளராகவும், விளையாட்டு குழு உறுப்பினராகவும், நிர்வாக சபை உறுப்பினராகவும் கடமையாற்றியிருந்தார். 1996ம் ஆண்டு வலைப்பாடு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக B அணி இறுதி போட்டிக்கு தெரிவாகியிருந்த நிலையில் அரையிறுதி போட்டியில் ஜெயபுரம் அணிக்கெதிராக தலையால் இடித்து கோலை பெற்ற அந்த தருணத்தில் எதிரணி வீரரின் தாக்குதலால் முழங்கால் உபாதைக்கு உள்ளாகியதுடன் தனது உதைபந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றிருந்தார். திரு.ஜோண்சன் கியோமர் பயஸ் அவர்கள் கடந்த 2021 ம் ஆண்டு மாசி மாதம் 21ம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட40 வயது உதைபந்தாட்ட விடத்தல்தீவு FC அணிக்கான தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
விடத்தல்தீவின் மிருதங்க வித்துவானாக மாஜவித்த அந்தோனிப்பிள்ளை
அந்தகோயிலுக்குரியவர், இந்த கோயிலுக்குரியவர் என்றிருந்த நிலைமாற்றி நான் இரண்டு ஆலயங்களுக்கும் டோலக் வாசித்த பெருமைக்கு காரணமானவர் எமது அப்பு அந்தோனிப்பிள்ளை அவர்கள். நாங்கள் அப்பு என்று கூப்பிட்ட எங்கள் அம்மாவின் தந்தை அந்தோனிப்பிள்ளை அவர்கள் 1921ம் ஆண்டு மாசி மாதம் 1ம் திகதி திருதிருமதி செபஸ்ரிக்கு மகனாக பிறந்த எங்கள் அப்பு அந்தோனிப்பிள்ளை அவர்களுக்கு, அந்தோனியாப்பிள்ளை என்ற ஒரேயொரு சகோதரி மட்டுமே இருந்தார். 12 பிள்ளைகளை பெற்று பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், மருமக்கள் என தனது மனையாள் சிசிலியாவுடன் வாழ்ந்து வந்தார் எமது அப்பு.
அப்பு ஒரு மிருதங்க வித்துவான் விருதங்கம் வாசிப்பதை சரியாக முறையாக தமதுசிறியதந்தையான அந்தோனி அவர்களிடம் நாவாந்துறையில் முறையாக கற்றுவர், தபேலா, டோக்கி, மிருதங்கம், டோலக் என ஏகப்பட்ட வாத்திய கருவிகள் அப்புவிடம் இருந்தன அவற்றுக்கு தனித்தனியாக உறை தைச்சு நேர்த்தியான முறையில் பேணிவந்தார்.
விடத்தல்தீவு சங்கீத கோஸ்டியின் மிருதங்க வித்துவானாக கூட்டாளிகளான வெள்ளசிலுவையர், சீமான்பிள்ளையர், மாசில்லாமணியர், பேதுறுப்பிள்ளையர் போன்ற இசை ஜாம்பவான்களோடு ஒன்றினைந்து விடத்தல்தீவு சங்கீத கோஸ்டியாக ஊரில் வலம்வந்தவர்கள்.
ஊரில் நடைபெறும் கலை நிகழ்வுகள், ஆலய விழாக்கள், நாட்டுக்கூத்துகள், நாடகங்கள், போன்றவற்றுக்கு அப்பு மிருதங்கம் வாசிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார். அப்புவை போல முறையாக மிருதங்கம் வாசிக்க கற்காவிட்டாலும் அவரது பிள்ளைகளான அன்னதாஸ் மாமா, கீர்த்திமாமா இருவரும் கேள்விஞானத்தோடு மிருதங்கம் வாசிப்பார்கள்.
அப்புக்கு என்னை அதிகம் பிடித்திருந்தது அப்பு அடிக்கடி எமது வீட்டுக்கு வந்துபோவதுண்டு. அஞ்சாறு வெள்ள வேட்டி,வெள்ள சேட்டு, துவாய், சாறம் அடங்கலாக ஒரு சொப்பின் பேக்கிலதான் அப்பு தன்ர உடுப்ப எங்கட வீட்ட வைத்திருப்பார். மிருதங்கம், தபேலா, டோலக், டோக்கி எல்லாம் எங்கட வீட்டதான் இருக்கும், ஒரு நாள் அப்பு வந்து தன்ர வெள்ள வேட்டிய எடுத்து எனக்கு கட்டிவிட்டு மிருதங்கம் எனக்கு பழக்க ரெடியானார், “ஐயா நேய் அவன சும்மா விடுன படிக்கிறவன குழப்பி விட்டிராதேன, இப்ப இதல்லாம் தேவையில்ல சும்மா விட்டிற்று கிடவுன” என்று அம்மா சொன்னதான் தாமதம் அம்மாவ ஒரு முறையலுடன் அப்புமேளத்தகட்டிதூக்கிவைச்சிற்று, எனக்கு உடுத்தின வேட்டியையும் அவுட்டு எறிஞ்சிற்று கோவத்துடன் இப்ப உனக்கு தெரியாது இதுட அரும என்று அம்மாவுக்கு சொல்லி நடையக்கட்டுவார்.
ஞாயிற்றுக்கிழம பூசைக்கு மேளம் அடிக்கும் போது அவர் அருகில் போய் இருந்து அவர் மேளம் அடிப்பதை பார்த்துக்கொண்டிருப்பதே எனது வழமையாகும். அவ்வாறே நானும் முறையாக மிருதங்கம் கற்காமல் கேள்விஞானத்தோடு மாந்தை மேற்கு பிரதேசமெங்கிலும், மன்னாரில் படிக்க வந்தும் மேளமடிப்பதை கலையாக கொண்டிருந்தேன். பள்ளிக்குட ஒளிவிழா, மாணமர் மன்றம், ஞாயிற்றுக்கிழம பூத, கரோல், இயக்க நிகழ்ச்சிகள், இப்படியாக பல நிகழ்வுகளுக்கு ஊரில் நான் மேளம் அடிப்பதற்கும், மன்னாரில் படிக்கும் போது கொஸ்ரலில் நடக்கும் பூசைகளுக்கும், செபஸ்ரியார் கோவிலில்நடக்கும் கொலிச் சார்பான ஞாயிற்றுக்கிழம பூசைக்கும் நான் மேளம் அடிப்பதற்கும் அப்புவே காரணகர்த்தாவாக இருந்தார். 1980 களில் முதல் முதலாக ஊரில பள்ளிக்கூட ஒளிவிலாவுக்கு மேளம் அடிச்சு விருந்தினராக வந்திருந்த பள்ளமடு டொக்ரர் எனக்கு பரிசாக தந்த 50 ரூபாய்தான் நான் பெற்ற முதல் பரிசு ஊரில் இரு ஆலயங்களுக்கும் அவ்வவ் ஆலயம் சார்ந்தவர்களே மேளம் அடிப்பதை பாரம்பரியமாக கொண்டிருந்த அந்த காலத்தில் பாடகர் குழாமில் இருந்ததனால் அந்த வழமையை போக்கி இரண்டு ஆலயங்களுக்கும் நானே மேளம் அடிக்க காரணம் எமது அப்பு தந்த கலையே. புரட்டாதி 8 அடைக்ல மாத கோவில் திருவிழா அதே நாள் சாளம்பனிலும் திருவிழா நானும் அப்புவோடு சாளம்பனுக்கு சென்று வருகை பாட்டிற்கும், மாதா பாட்டிற்கும் மேளம் அடித்த ஞாபகங்கள். ஊரில் அடைக்கல மாதா கோவில் நோவின காலத்தில் பாடப்படும் பிரியத தமகிமை.....என்று தொடங்கும் பாடலுக்கு முதலில் கஸ்டப்பட்டாலும் அப்பு சொல்லி, சொல்லி தந்து அந்த பாட்டிற்கு முழுமையாக மேளம் அடிக்க பழகிக்கொண்டதுடன் ஒரு முறை தைப்பொங்கல் பூசை சந்தியோகுமையோர் கோயில்ல நடந்த நேரம் அப்பு தபேலா வாசிக்க நான் டோக்கி வாசித்த தரணங்கள் மறக்க முடியாயதவைகளாகும்.
பாடகர் குழாம் பாட்டு பிழையாக படித்தாலோ, தாளம் மாறினாலோ பூச நடக்கும் போதே அங்க வந்து பாடகர் குழாம ஒரு பார்வ பார்ப்பார் அப்பு. ஒருமுறை வீட்ட எனக்கு தத்தீம், தத்தீம் தீம் தத்தீம் தத்தீம், தத்தீம் என்று மேளம் வாசிக்க பழக்கி கொடுத்துக்கொண்டிருந்தார் அந்நேரம் பிள்ளையார் கோவில் றோட்டால போன வெள்ள சிலுவை அப்பு சைக்கில கொண்டு வந்து நிப்பாட்டி தொடங்கினார் பாட்டு மேளம் வாசிச்சு கை நொந்தே விட்டது பிள்ளையார் கோவிலுக்கு போற்றுவந்த பத்மா அக்காவும் அங்க வந்து சேர்ந்தார் பின்ன என்ன சொல்லவா வேணும் அனல் பறந்ததது சங்கீத பாட்டு. நான் முறையாக மிருதங்கம் கற்காவிட்டாலும் தாளம் தப்பாமல் சுமாராக எல்லோராலும் விரும்பப்படும் அளவிற்கு கேள்விஞானத்தோடு மேளம் அடித்தேன் என்றால் காரணம் எமது அப்பு அந்தோனிப்பிள்ளை அவர்கள் மட்டுமேயாகும். அப்பு அந்தோனிப்பிள்ளை அவர்கள் ஊரில் ஆரம்பத்தில் சூழ்ச்சியின் வீழ்ச்சி,தேவசகாயம்பிள்ளை, உட்பட பல்வேறுபட்ட நாடகங்களுக்கும், நாட்டுக்கூத்துகளுக்கும் மிருதங்கம் வாசித்திருந்தார். பேசாலை,வங்காலை சாளம்பன், கன்னாட்டி, முருங்கன், யாழ்ப்பாணம், இரணைதீவு, பாப்பாமோட்டை, அடம்பன், மாநாயங்குளம், பரப்புக்கடந்தான், தட்சனாமருதமடு, பாலம்பிட்டி போன்ற பிரதேசங்களில் நிகழ்ந்த நாடகங்கள், நாட்டுக்கூத்துகளுக்கு அப்பு அந்தோனிப்பிள்ளை அவர்கள் மிருதங்கம் வாசித்திருந்தார்.
இவ்வாறு மிருதங்க வித்துவானாக பல மேடைகளில் அரங்கம் அதிர வாசித்த வித்தகனாக காணப்பட்ட எமது அப்பு அந்தோனிப்பிள்ளை அவர்கள் 1999 ம்ஆண்டு இடம்பெயர்ந்த நிலையில் பேசாலை நலன்புரி நிலையத்தில் வாழ்ந்தபோது 10ம் திகதி கார்த்திகை மாதம் 1999ல் இறைபதமடைந்தார்.
சிறந்த கலைஞர்களை உருவாக்கும் சிந்துயன்
நம் வளர்ந்து வரும் ஓவிய கலைஞராக ஸ்டீபன் ரெட்ணராசா,மரியக்கோன் செப்டா தம்பதியரின் புதல்வனான சிந்துயன் எனும் நவீன் காணப்படுகிறார். இவர் 1999 ஆம் ஆண்டு ஒன்பதாம் மாதம் 17 ஆம் தேதி விடத்தல் தீவில் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை மன் தோட்ட வெளி அ.த.க பாடசாலையிலும்,உயர் கல்வியை எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலத்திலும் பயின்றார் சிறு வயது முதல் ஓவியம் மற்றும்,கைவினைத் துறையில்,உருவங்களை உருவாக்குதல் போன்றவற்றில் ஆர்வம் உடையவராக காணப்பட்டார்.
2016 லீ பரீட்சையின் பின் இடம்பெற்ற அகில இலங்கை ரீதியான ஓவியப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற போதே அவரின் திறமையானது பிறருக்கு புரிந்ததுதொடர்ச்சியாக படங்கள் ஆக்கங்கள் வர்ணங்கள் களிமண் சிலைகள் காகிதங்கள் என பல தேடல்களை கடந்து இப்போது சுவர் ஓவியங்கள் ,சுவர் சிற்பங்கள், சிற்பங்கள் போன்றவற்றை உருவாக்குவதில் தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்
இவர் தன்னைப் பற்றி குறிப்பிடும் போது “இந்த தேடல் எல்லை இல்லாதது அளவுகளால் சொல்ல முடியாது அதாவது ஒரு இசையமைப்பாளர் கவிஞன் சிற்பி ஓவியன் இவர்களைப் போல இந்த தேடல் வரையறை செய்ய முடியாத ஒன்று நான் இருப்பினும் நான் ஒரு ஓவியன் . படைப்பாளிகளின் பின்னணி என்னவாக இருக்கும் அவர்களைத் தேட வைத்தது எது எதை தேடி ஒரு படைப்பு உருவாகும் இப்படி பல கேள்விகள் எல்லோருக்கும் இருக்கலாம் எனக்கு இந்த பயணத்தில் எப்பவும் துணையாக இருந்தது அப்பா,என்னை உருவாக்கியது இந்த சமூகம் குடும்பம் நண்பர்கள் உறவுகள் சூழல், சந்தர்ப்பங்கள் இவற்றோடு சேர்த்து நல்ல சில மனிதர்கள் அவர்களின் வழிகாட்டல். உலகம் வண்ணங்களால் ஆனது ஒளியே அதன் வரையறைகளை தீர்மானித்தது வெள்ளையாய் இருக்கும் பக்கங்கள் சபிக்கப்பட்டவை அவை நிறம் தீட்டப்பட்டே ஆக வேண்டும்.நான் ஒரு ஓவியன்.” என்று குறிப்பிட்டு இருந்தார்
சிற்பம்கள்
மரிய மார்க்கிரெட்ரா சிற்பம்
இரண்டு பறவைகள் - முப்பரிமாண ஓவியம்
Lady of Colours – வண்ணங்களின் அன்னை
பறவைகள் (அந்த 3 குருவிகள்)
ஆழ்கடல் (Meaning of Undersea) - யாழ்ப்பாணத்தில் அமைந்த ஓவியம் வானதூதர்கள் (Mickel Veedda இடத்தின் முன்பக்கம்)
ஓவியத்துறையில் புதிய நுட்பங்களை உள் நுழைத்து தனது ஆக்கங்களை உருவாக்குகின்ற திறனைபெற்றிருக்கின்ற இவர் ஈரச்சுதைமுறையில் சுவரொவியங்களை உருவாக்குகின்றார். காலத்திற்கு ஏற்றது போல காலநிலை காரணிகளால் பாதிப்படையாத Enaml paint மற்றும் சீமேந்து கலவை என்பவற்றை பாவித்து தனது சுவர ஓவியங்களை உருவாக்குகின்றார். முதலில் ஓவியங்களுக்கான அடிப்படை வடிவமைப்புகள் கம்பிகளாலும் இரும்பு நெட் ஆலும் உருவாக்கப்படுகிறது பின்புஅவை சீமைத்துக் கொண்டு உருவங்களாக மாற்றப்படுகிறது பின் அதன் சிறிய நுட்பமான வடிவமைப்புகள் செய்யப்பட்டு அதன் பின்னரே ஓவியம் தீட்டுதல் இடம் பெறுகிறது வரையப்படும் ஓவியங்கள் முப்பரிமான தன்மையிலும் காணப்படுகிறது
பல இடங்களில் தனது ஓவியங்களை வரைந்திருக்கிறார். அவற்றுள் மன்னாரில் அமைந்துள்ள நீயோ, மடுத்திருத்தலம், மன்னா செபஸ்தியார் ஆலயம்.
தோட்ட வெளி அருட் சகோதரிகள் இல்லம் யாழ்ப்பாண பிரதான வர்த்தக நிலையம், எனக் கூறிக் கொண்டே செல்லலாம்.
வன்னியின் அர்ப்பணிப்பான கல்வியாளர் திரு. பீற்றர் ராயப்பு
முழுப் பெயர்: திரு பீற்றர் ராயப்பு, தந்தை: திரு. பீற்றர், தாய்: திருமதி செபமாலை, பிறந்த நாள்: 02 மார்ச் 1928, இறந்த நாள்: 06 ஆகஸ்ட் 2012
வட இலங்கையின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எளிமையும் பக்தியும் கொண்ட கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார் திரு. பீற்றர் ராயப்பு. ஆழமான கலாசார மரபுகளும், சமூக நலத்திற்கான உறுதியான நம்பிக்கையும் கொண்ட இப்பிராந்தியத்தின் வளர்ச்சியில், அவர் தனது வாழ்நாளைப் பணியமர்ந்து அர்ப்பணித்தார். சிறுவயதிலிருந்தே கூர்மையான அறிவுத் திறனும், உறுதியான ஒழுக்கநெறியும் கொண்டவர் என அவரை ஊரினரும் மாணவர்களும் நினைவுகூருகின்றனர்.
அவர் தனது கல்வி பயணத்தை விடத்தல்தீவு கத்தோலிக்க மிசனரி பாடசாலையில் ஆரம்பித்தார். இப்பள்ளி அவர் கல்விக்கு வித்திட்டதுடன், அவரது மதநம்பிக்கையும் ஒழுக்கத்தையும் ஆழமாக பதித்ததொரு நிலையாக அமைந்தது. தொடர்ந்து, கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் தனது தொழில்முறை பயிற்சியைப் பெற்றார். இக்கல்லூரி, காலந்தோறும் சிறந்த ஆசிரியர்களை உருவாக்கிய மரியாதைக்குரிய நிறுவனம் எனப் புகழ் பெற்றது. பயிற்சிக்குப் பின், திரு. ராயப்பு வட மாகாணத்தின் பல பின்தங்கிய மற்றும் தொலைதூரப் பகுதிகளில், பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வியளிக்கும் பணியில் ஈடுபட்டார். ஆசிரியராக அவர் பணியாற்றிய பாடசாலைகள் பின்வருமாறு:
துள்ளுக்குடியிருப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலப்பு பாடசாலை கட்டையடம்பன் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலப்பு பாடசாலை மாவிலங்கேணி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலப்பு பாடசாலை அரிப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலப்பு பாடசாலை பாப்பாமோட்டை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலப்பு பாடசாலை தேவன்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலப்பு பாடசாலை கருங்கண்டல் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலப்பு பாடசாலை விடத்தல்தீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலப்பு பாடசாலை சேத்துக்குளம் அரசு தமிழ் கலப்பு பாடசாலை விடத்தல்தீவு அரசு தமிழ் கலப்பு பாடசாலை இப்பள்ளிகளில் அவரது பணிக்காலம் கல்விக்கான மட்டுப்பட்ட வரம்புகளை மீறி, சமூக முழுவதற்கும் அர்ப்பணித்த சேவையாக இருந்தது. அவர் பல பாடசாலைகளில் கல்வியளித்ததோடு, சமூகத்தின் கலாசார தூணாகவும், மாணவர்களின் மனப்பாங்கை வடிவமைக்கும் ஒழுக்கப் பாசறையாகவும் இருந்தார். அவரது மென்மையான பேச்சும் நேர்த்தியான நடையும், நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பண்பும், தமிழ் மொழி, இலக்கியம், மற்றும் கத்தோலிக்க மதமும்கூட அவருடைய மனதார அன்புக்குரியவையாக இருந்தன. அதே நேரத்தில், மாணவர்களை ஆளுமைமிக்க, இரக்கமிக்க நபர்களாக வளர்த்தெடுத்ததில் அவர் காணாத சாதனை இல்லை.
அவரின் மாணவர்கள் பலரும் பின்னாளில் ஆசிரியர்கள், மதகுருக்கள், நிர்வாகிகள் மற்றும் சமூகத் தலைவர்களாகத் திகழ்ந்தனர். அவரது கற்றல்முறைகளும் மாணவர்கள் மீது வைத்த நம்பிக்கையும், அவரைப் பள்ளி அறைக்குள்ளேயே அல்லாது, வாழ்வுக்கூட உரியவொரு வழிகாட்டியாக நிலைப்படுத்தியது. ஓய்வுக்குப் பிறகும், திரு. ராயப்பு தனது கிராமத் திருச்சபையும் சமூக வளர்ச்சிச் செயல்பாடுகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு, தனது அறிவையும் அனுபவங்களையும் இனி வரும் தலைமுறைகளுடன் பகிர்ந்தார். 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி திரு. பீற்றர் ராயப்பு இறைவனடி சேர்ந்தார். விடத்தல்தீவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கல்வி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்காக அவர் விட்டுச் சென்ற பாரம்பரியம் இன்று வரை பெருமையுடன் பேசப்படுகிறது. ஒரு பள்ளிக்கூட குருவாகவும், கல்வியின் வலிமையில் நம்பிக்கை கொண்ட ஒரு கிராமிய அறிஞராகவும், அவர் தலைமுறைகளை நெகிழச் செய்த ஓர் தலைவராகவும் மரியாதையுடன் நினைவுகூரப்படுகிறார்."உறுதியான கற்பித்தலும், பணிவுடன் வழிநடத்தலும் - அதுவே திரு ராயப்புவின் வாழ்வின் மொழியாக இருந்தது.''
மரிய கிறிஸ்ரின் என்ற முதலாவது அருட்சகோதரி மேரி கொஸ்கா
கதாதோலிக்க இறைவிசுவாசத்தில் தழைத்தோங்கிய பலநூறாண்டு பழமைவாய்ந்த எமது விடத்தலம் பதியில் இறை அழைத்தலுக்கு தன்னை முழுவதுமாக அர்பனித்து எமது மண்ணில் இருந்து முதலாவது துறவியாக தேர்ந்துகொள்ளப்பட்டவர் தான் மரிய கிறிஸ்ரின் என்ற இயற்பெயரை கொண்ட மேரி கொஸ்கா அவர்கள். மேரி கொஸ்கா அவர்கள் 1937ம் ஆண்டு புரட்டாதி மாதம் 10ம் திகதி திரு.திருமதி சுவக்கீன் செபமாலை ( முத்தம்மா ) ஆகியுருக்கு மகளாக பிறந்து சூசைப்பிள்ளை, பத்திநாதன், இம்மனுவேல், பிரான்சிஸ், வரப்பிரகாசம், அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லொஸ், இமல்டா, மரியலில்லி, மரியகொறற்றி, மரியடேய்சி ஆகிய சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்துவந்தார்.
அருட்சகோதரி மேரி கொஸ்கா அவர்கள் தமது ஆரம்ப கல்வியை எமது விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கற்றார் பின்னர் யாழ்ப்பாணம், இளவாலையில் கல்வி கற்று பொதுத்தர சாதாரண தர பரீட்சையில் முதலாவது தரத்திலேயே சித்தியடைந்தார். யாழ்ப்பாண மறைமாவட்ட முன்னாள் ஆயர் அதிவந்தனைக்குரிய எமிலியானுஸ்பிள்ளை அவர்களினது அறிவுரையாலும் யாழ்/இளவாலை கன்னியர் மடத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்களது இறை அழைத்தல் பற்றிய உந்துதலாலும் கன்னியர் மடத்தில் 1954ம் ஆண்டு தொடக்கம் 1956ம் ஆண்டு வரை யாழ்ப்பாண பண்டத்தரிப்பு மடத்தில் இணைந்து வாழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண ஆசிரிய கலாசாலையில் தனது ஆசிரிய பயிற்சியை நிறைவு செய்தபின்னர் 1960ம் ஆண்டு யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் தனது ஆசிரியபபணியை ஆரம்பித்தார். இளவாலை, பாஷையூர், யாழ்ப்பாணம், பறப்பாங்கண்டல், மன்னார் ஆகிய கன்னியர் மடங்களில் அருட்சகோதரி மேரி கொஸ்கா அவர்கள் பணியாற்றியிருந்தார். 1961ம் ஆண்டு ஆனி மாதம் 18ம் திகதியில் தனது இறை அழைத்தல் அர்பண வாழ்வில் நித்தியவாக்குத்தத்தத்தை யாழ்ப்பாணம் இளவாலையில் Mother விசிற்றேசன் அவர்களது முன்னிலையில் நிறைவு செய்தார்.
அருட்சகோதரி மேரி கொஸ்கா அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல இடங்களிலும், பறப்பாங்கண்டல், வங்காலை, மற்றும், மன்னார் ஆகிய பல்வேறுபட்ட பகுதிகளிலும பணியாற்றியுள்ளார். யாழ்ப்பாணத்தில் 1960ம் ஆண்டு தொடக்கம் 1964ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலும், பறப்பாங்கண்டல் பகுதியில் 1964ம் ஆண்டில் இருந்து1968ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலும், வங்காலையில் 1968ம் ஆண்டிலும், மன்னாரில் 1969ம் ஆண்டிலும், மீண்டும் யாழ்ப்பாணத்தில் 1970ம் ஆண்டில் இருந்து 1973ம் ஆண்டு வரைக்கும் சிறப்பான பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தொடர்ந்து 1973ம் ஆண்டு முதலாம் தர அதிபராக நியமனம் பெற்ற அருட்சகோதரி மேரி கொஸ்கா அவர்கள் 1995ம் ஆண்டுவரை அதிபராக பல்வேறுபட்ட பாடசாலைகளில் கடமையாற்றியிருந்தார் குறிப்பாக1973ம் ஆண்டில் இருந்து,1977ம் ஆண்டு,வரை பலாலியிலும், 1978ம் ஆண்டு தொடக்கம் 1984. ம் ஆண்டு வரை இரணைதீவு பாடசாலையிலும், 1985ம் ஆண்டில் இருந்து 1990ம் ஆண்டு வரை கிளிநொச்சி உருத்திர புர பாடசாலையிலும், 1990ம் ஆண்டில் இருந்து 1995ம் ஆண்டு வரை பாஷையூரிலும் அதிபராக சிறப்பான பணியாற்றியிருந்தார்.ஆசிரிய பணியின் பிற்பட்ட காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கல பகுதியிலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஜெயந்திபுர கிராமத்திலும், யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலும், மன்னார் மற்றும் இரணைமாதாநகர் போன்ற பல்வேறுபட்ட பங்குகளில் தமது பணியினை செவ்வனே ஆற்றிவந்திருந்தார். தனது 87 வது வயதை கடந்த அருட்சகோதரி மேரி கொஸ்கா அவர்கள் நானாட்டான் மடத்தில் வாழ்ந்துவரும் நிலையில் பங்கு பணிகள் பலவற்றை தொடர்கின்றார். குறிப்பாக மறைக்கல்வி கற்பித்தல், குடும்ப சந்திப்புகளை மேற்கொள்ளுதல், அருட்சாதன ஆய்த்தங்களில்ஈடுபடுதல், நோயாளருக்கு நற்கருணை வழங்குதல், பங்குகளில் இயங்கும் பக்தி சபைகளை ஊக்குவித்தல் மற்றும் வழிபாடுகளுக்கு உதவுதல் போன்ற ஆன்மீக பணிகளை ஆற்றிவருகின்றார்.
டினோசா Mangrove Nursary கண்டல் தாவரவளர்ப்பில் யோகேஸ்வரன்
விடத்தல்தீவு கிராமத்தின் சுற்றுச்சூழலை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு குறிப்பாக இயற்கை அனர்த்தங்களானகடல் நீர் உட்புகுதல் மழை வெள்ளம், புயல், சூறாவளி போன்றவற்றால் எமது விடத்தல்தீவு கிராமம் உட்பட பல்வேறுபட்ட கடல்சார் கரையோர கிராமங்களின் பாதுகாப்பு அரணாக காணப்படுவதும் இயற்கையாக கிடைத்ததுமான கண்டல் தாவரங்கள், மற்றும் கண்ணா காடுகள் என்பதில் ஐயமுமில்லை, கண்ணா மற்றும் கண்டல் தாவரங்கள் மீன் இனங்களின் இனப்பெருக்கத்திற்கும்,அவற்றின் வளர்ச்சிக்கும் பாரிய பங்கை ஆற்றுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
எந்தவித எமது மண்ணின் மைந்தன் அயோகேஸ்வரன் அவர்கள் கண்டல் தாவரங்களை பாதுகாத்தல் மற்றும் இயற்கை தாவரங்கள் மட்டில் அவர் கொண்டிருந்த பற்று,ஆசையின் காரணமாக கண்டல் தாவர உற்பத்தியில் ஈடுபட்டுவருகிறார்.
யோகேஸ்வரன் அவர்கள் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் தென்பகுதியில் இருந்து வந்து எமது பள்ளமடு சந்திக்கு அருகாமையில் மின்னியெறிஞ்சான் பாலத்தின் அருகில் ஒரு கட்டடத்தை அமைத்து அந்த பகுதியில் கண்டல் தாவரங்களை வளர்த்து,மீண்டும் அதனை நடுகை செய்த நிறுவனமான சுதீசா எனப்பட்ட நிறுவனத்தில் பணியாளனாக வேலைசெய்துவந்தார்.
2015ம் ஆண்டு தொடக்கப்பட்ட அந்த நிறுவனம் அதன் திட்டங்கள் 2017ம் ஆண்டளவில் முடிவுக்கு வந்திருந்தது. அதன் பிற்பாடு அயோகேஸ்வரன் அவர்கள் 2017/2018 ம் ஆண்டு காலப்பகுதியில் தனது வீட்டு வளவில் ஆரம்ப தோட்ட செய்கையாக சிறிய அளவில் சுமாராக 300-400 வரையிலான கண்டல் தாவரங்களை வளர்த்து அதனை விற்பனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அயோகேஸ்வரன் தனது Nursary க்கு தனது மனைவி டினோசா அவர்களது நாமம் சூட்டி Dinosha Nur- sary என்ற பெயருடன் உரிமையாளராக அயோகேஸ்வரன் தனது கண்டல் தாவர வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். 2019ம் ஆண்டு VOVCOD நிறுவனம் முதன் முதலாக யோகேஸ்வரனுடன் இணைந்து 20000 கண்டல் தாவரங்களை வடமாகாணத்தில் வேறெந்த பகுதிகளிலும் இல்லாத கண்டல் தாவர வளர்ப்பின் பிரகாரம் விடத்தல்தீவில் யோகேஸ்வரன் அவர்களின் Nursary இல் வளர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .இந்த கண்டல் தாவர வளர்ப்பு பற்றிய ஆலோசனை வளங்கும் வகையில் எமது கிராமத்தின் மேரிநாதன் எடிசன் அவர்கள் யோகேஸ்வரன் அவர்களுக்கு தொடர்பாளனாக 2019/2020 ம் ஆண்டுகளில் Dinosha Nursary யில் இணைந்தார்.
2016ம் ஆண்டு பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்தபின் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் வனவிலங்கு திணைக்களத்தில் பணியாற்றிய எடிசன் அவர்கள் 2019/2020ம் ஆண்டுகளில் கண்டல் தாவரங்களை யோகேஸ்வரன் அவர்கள் வளர்த்த கண்டல் தாவரங்களை எவ்வாறாக விற்பனை செய்யலாம், யாருக்கெல்லாம் விற்பனை செய்யலாம் என்பது பற்றிய போதிய விபரங்களை இணைப்பாளராக செயற்பட்டு VOCOD நிறுவனத்திற்கு 20000 கண்டல் தாவரங்களை விற்பனை செய்து அதனால் கிடைக்கப்பெற்ற இலாபத்தினையும், வருமானத்தையும்,யோகேஸ்வரன் அவர்களுக்கு அறியப்படுத்தியதுடன் சூழலுக்கு தாவர வளர்ப்பினால் கிடைக்கும் நன்மைகள் பற்றிய தெளிவையும் எடிசன் அவர்கள் இந்த கண்டல் தாவர வளர்ப்பில் இணைந்து தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2021,2022,2023,2024,மற்றும் 2025 ம் ஆண்டு வரை VOVCOD நிறுவனம் உட்பட வெறெந்த நிறுவனங்களோடும் நேரடி தொடர்புகளை பேணாதவர்களாக தாங்களாகவே Mangrove Nursary யினர் கண்டல் தாவரங்களை வளர்த்து அவற்றை விற்பனை செய்வது சம்மந்தமாகவும், நிறுவனங்களோடு தொடர்பை ஏற்படுத்தி அதிகளவு விற்பனை கோரிக்கைகளை பெறுவதற்காகவும்,யோகேஸ்வரன் அவர்கள் தனது கண்டல் தாவர வளர்ப்பிற்கு ஒரு ஆலோசகராக எடிசன் அவர்களை நியமித்திருந்தார். அதன் அடிப்படையில் 2021ம் ஆண்டு 5000 கண்டல் தாவரங்களையும், 2022ம் ஆண்டு சுமார் 7000/8000 தாவரங்களையும், 2025ம் ஆண்டு சமகாலத்தில் 15000 தொடக்கம் 18000 கண்டல் தாவரங்களை வளர்த்து அவற்றுக்கான விற்பனை கோரல்களை பெற்று அவற்றை விற்பனை செய்து இலாபத்தை ஈட்டி வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் கண்டல் தாவர வளர்ப்பு மற்றும் விற்பனையில் அசூர வளர்ச்சியை அடைந்துள்ளார்கள்.
2017 ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்டல் வளர்ப்பு Nursary யில் வேறு ஒரு நிறுவனத்தின் மூலம் 2019 ம் ஆண்டில் பெற்றுக்கொண்ட அதிகளவான தாவர விற்பனை கோரல் மூலமாக பெற்ற பின்னரான காலப்பகுதியில் படிப்படியாக வளர்ந்து 2025 இவ் சமகாலத்தில் Dinosha Nursary தாமாகவே கண்டல் தாவர வளர்ப்பில் அதிகளவு ஈடுபாடுடன் உழைத்து அவற்றை விற்பனை செய்தும் அதனால் வருவாயை பெற்றுக்கொள்ளும் வகையில் வளர்ந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
யோகேஸ்வரன் அவர்களது சொந்த நிறுவனமான இந்த கண்டல் தாவர Mangrove Nursary தமது கண்டல் தாவர விற்பனையால் தமக்கு கிடைக்கும் இலாபத்தில் பல்வேறுபட்ட சமூக பணிகளை மேற்கொள்கின்றது, அந்த வகையில் வருமானத்தில் 10% இலாபத்தை சமூக சேவைகளுக்கு பயன்படுத்தி குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கான உதவி அதிலும் பாப்பாமோட்டை பாடசாலையில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியும், நோயாளர்களுக்கு சிறிய அளவிலான நிதியுதவிகளை வழங்கியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கண்டல் தாவர வளர்ப்பு மற்றும் விற்பனையானது வருமானத்தை ஈட்டுவது மட்டுமல்லாமல் எமது சுற்றுப்புற சூழல் மட்டில் யோகேஸ்வரன் அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையையும்,அர்ப்பணிப்புள்ள செயற்பாட்டையும் எடுத்தியம்பியுள்ளது.
எடிசன் அவர்கள் யோகேஸ்வரனுக்கு ஆலோசகராகவும், அறிவுறுத்தல்களை வழங்குபவராகவும் அவ்வேலைகளுக்கான சம்பளத்தை பெறும் உத்தியோகஸ்தராக காணப்படுகிறார். வேலைவாய்ப்பு ஆண்களுக்கு அதிகளவில் காணப்படுகிறது. பாப்பாமோட்டை, சன்னார், விடத்தல்தீவு போன்ற கிராமங்களில் சமகாலங்களில் இவ் Nursary, மூலமாக வேலைவாய்பு சுமார் 15 பேருக்கு வழங்கப்படும் நிலை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
2023ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டுகளில் அரசதிணைக்களங்கள் உதாரணமாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் சுமாராக 5000 கண்டல் தாவரங்களையும்,MARR, WEEKEND, HDO,HELLO, எனப்படும் Trust Mines நிறுவனம், மற்றும் அரச அரசசார்பற்ற திணைக்களங்கள் என்பன வடமாகாணத்தில் கண்டல் தாவரங்கள் தமக்கு தேவைப்படுமிடத்து யோகேஸ்வரன் அவர்களது Dinosha Nursary யில் மட்டுமே
கொள்வனவு செய்யவேண்டிய நிலை தற்போதைய நிலையில் காணப்படுகிறது. கண்டல் தாவர வளர்ப்பில் ஊர்மக்களால் எவ்விதமான தடைகளோ, தடங்கல்களோ ஏற்படுவதில்லை என்பதுடன் மனித செயற்பாட்டால் எவ்விதமான இடையூறுகளும் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக இயற்கையாலும், இயற்கை அனர்த்தத்தாலுமே பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மழை காலத்தில் கிழக்கில் இருந்தும் மின்னியெறிஞ்சான் ஆற்றில் இருந்தம் எமது ஊருக்குள் உட்புகும் மழை வெள்ளம், கடல்நீர் மூலமாக கண்டல் தாவர வளர்ப்பில் பாதிப்பு ஏற்படுத்தப்படுகிறது. மழை காலத்தில் கால்நடைகளின் தாக்கம் அதிகரித்து தாவர வளர்ப்பு நாசப்படுத்தப்பட்ட நிலையும் காணப்பட்டது.
எமது கண்டல் தாவர வளர்ப்பில் அதிகளவானவை எம்மிடம் இருந்து பெறப்பட்ட எம்மால் விற்பனை செய்யப்பட்ட கண்டல் தாவரங்களாக எமது மன்னார் பிரதான பாலத்தடியில் நடப்பட்டவையாக காணப்படுகிறது. சுமார் 7000/ 8000 கண்டல் தாவரங்கள் இவ் 2025ம் ஆண்டு சமகாலத்தில் எமது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு நடப்பட்டவையாகும். கள்ளியடி, இலுப்பைக்கடவை, பூநகரி வாடியடி பகுதி, கிளாளி, கௌதாரிமுனை,போன்ற பகுதிகளில் தாவரங்கள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தவிர வேறு நிறுவனங்களும் கண்டல் தாவரங்களை தாமாகவே Dinesha Nursary, யில் இருந்து கொள்வனவு செய்து அவற்றை நட்டியிருந்தார்கள். அத்துடன் இவ்வருடத்தில் திருகோணமலை ரோக்கியோ சீமெந் நிறுவனம் 5000 கண்டல் தாவரங்களை நடுவதற்கான பணத்தை நேரடியாக Dinosha Nur- sary க்கு வழங்கி அதனை Dinesha Nursary நிறுவனம் நட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த காலங்களில் நிறூவனங்கள் தாவரங்களை நிறுவனங்கள் அல்லது கம்பனிகள் கொள்வனவு செய்யும் சுமாராக 1000, தாவரங்கள், 2500,தாவரங்கள், 5000 தாவரங்கள் இவ்வாறு பாரியளவில் கொள்வனவு நடைபெற்றது. கண்டல் தாவர வளர்ப்பில் ஈடுபடும் யோகேஸ்வரன் மற்றும் அவரது குடும்பம் இயல்கையை நேசித்து பராமரித்து வளர்க்கும் எண்ணத்தில் விலைமதிக்கமுடியாதவர்களே


















இலங்கை காவல்துறையில் பணியாற்றிய சிலுவைராசா பொனிப்பாஸ்
சென்ஜேம்ஸ் றோட் விடத்தல்தீவை முகவரியாக கொண்ட சிலுவைராசா பொனிப்பாஸ் அவர்கள் 1956 ம் ஆண்டு ஐப்பசி மாதம் 05 ம் திகதி விடத்தல்தீவில் பிறந்து 1982ம் ஆண்டு வரை வசித்து தற்போது -496/4 சன்சிட்டி கார்டன், ஹாலிவாலா, காலி என்ற இடத்தில் வாழ்ந்துவருகிறார்.
பொனிப்பாஸ் அவர்கள் தனது ஆரம்ப கல்வியை விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கற்று 1973 ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்தார். தனது உயர்கல்வியை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கற்று பாடசாலை உதைபந்தாட்டம் மற்றும் தடகள அணியின் உறுப்பினராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
1982 ஆம் ஆண்டு இலங்கை காவல் துறையில் இணைந்த பொனிப்பாஸ் அவர்கள் 20.04.1982 அன்று காவல் துறையின் உறுப்பினராகப் நியமனம் பெற்றவராக காவல்துறையில் பணியாற்றி. 05.10.2016 அன்று காவல் சார்ஜென்டாகப் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். தனது சிறவயதில் இருந்தே உதைபந்தாட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்த பொனிப்பாஸ் அவர்கள் விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக உறுப்பினராகவும் விளையாட்டு வீரனாகவும் 1980 ம் ஆண்டு வரை இருந்துள்ளார்.
காவல்துறையில் பணியாற்றிய காலப்பகுதிகளில் பொனிப்பாஸ் அவர்கள் காவல்துறை தலைமையகத்தின் மற்றும் டிவிஷனல் கால்பந்து அணியின் உறுப்பினராகவும், விளையாட்டு வீரராகவும், பயிற்றுவிப்பாளராகவும் மற்றும் முகாமையாளராகவும் 2016ம் ஆண்டு வரை பதவிவகித்திருந்தார்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில் (FFSL) உதைபந்தாட்ட நடுவராக 1994 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பொனிப்பாஸ் அவர்கள் 2020 ம் ஆண்டு வரை நடுவராகப் பணியாற்றியதுடன்.1998 ம் வருடத்தில் FIFA கோகோ கோலா நடுவர்கள் மேம்பாட்டுப் பாடநெறியை வெற்றிகரமாக செய்துமுடித்திருந்தார். அத்துடன் நடுவர்களது பயிற்றுவிப்பாளர் பாடநெறியை 2007 ம் ஆண்டிலும் 2010 ம் ஆண்டிலும் வெற்றிகரமாக செய்சு முடித்திருந்தார் பொனிப்பாஸ் அவர்கள்.
அதன் பின்னர் AFC “C” உரிமப் பாடநெறியை 2000 ம் ஆண்டில் வெற்றிகரமாக நிறைவுசெய்ததுடன், தென் மாகாணப் பாடசாலையில் றகர் விளையாட்டு இளங்கலை பயிற்றுவிப்பாளராக 1993 ம் ஆண்டு தொடக்கம் 1997 ம் ஆண்டு வரை நியமிக்கப்பட்ட பொனிப்பாஸ் அவர்கள். 1993 ம் ஆண்டு தொடக்கம் 1995 ம் ஆண்டு வரை பிரதேச ரக்கர் அணிக்காக விளையாடியமை குறிப்பிடத்தக்கது.
பாக்கிற இடமெல்லாம் கண்ணில் புலப்படும் அரியத்தா..
அரியத்தா என்று நாமும் எமது ஊரவர்களும் அழைக்கும் பிரகாசி என்ற இயற்பெயரை கொண்டு திரு திருமதி கபிரியேல், சலோமை ஆகியோருக்கு மகளாக 1917ம் ஆண்டு பங்குனி மாதம் 5ம் திகதி விடத்தல்தீவில் பிறந்தார் அரியத்தா.
மருத்துவமும், மருந்தும் பெருமளவில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னரான எமது ஊரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீட்டிலேயே தாய்மார்கள் சுகப்பிரசமாக பிரசவிக்க மகப்பேற்றுப்பணியை திறம்பட ஆற்றியபெருமைக்குரியவர் எமது அரியத்தா என்றால் அது மிகையல்ல. எமது விடத்தல்தீவின் முதலாவது தாதியாகவும், மருத்துவிச்சியாகவும் அரச நியமனம் பெற்று தனது நியமனத்தின் முதலாவது பணியை K K S எனப்படும் யாழ்ப்பாண காங்கேசந்துறை வைத்தியசாலையில் சிறப்பாக ஆற்றியுள்ளார். தொடர்ந்து நெடுந்தீவிலும், மண்டைதீவிலும், தலைமன்னாரிலும், பேசாலையிலும் அதன் பின்னரான காலப்பகுதியில் எமது விடத்தல்தீவு ஆஸ்பத்திரியிலும் மருத்துவிச்சியாக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரியத்தா அவர்கள் மகப்பேற்று பணியுடன் ஊரில் சில நற்பணிகளையும் உதவிகளையும், நன்கொடைகளையும் வழங்கியுள்ளார். குறிப்பாக எமது விடத்தல்தீவு புனித அடைக்கலமாத ஆலய மணிக்கூட்டு கோபுர கட்டுமான பணிக்காக நன்கொடைகளை வழங்கி ஆலயத்தின் மணியையும் பெற்றுக்கொடுத்திருந்தார்.
1935ம் ஆண்டு அந்தோனிப்பிள்ளை அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்த அரியத்தா அவர்களுக்கு சூசை,தாவீது,அந்தோனிப்பிள்ளை என 3 சகோதரர்கள் இருப்பதுடன் உத்தமசீலி, யெயசீலி, தியாகு, சிலுவைராசா,மற்றும் பொமிக்கா என 5 பிள்ளைகளை அரியத்தா பெற்றிருந்தார். விடத்தல்தீவில் தமது வேலை காலங்களில் இறப்பு வீடுகளுக்கு உதவி செய்வதைவழக்கமாக கொண்டிருந்ததுடன் எமது அயல் கிராம ங்களான கட்டாடிவயல், கள்ளியடி, கூராய், பெரிய மடு ஆகிய இடங்களுக்கு சென்று அங்கே இரவு ,பகல் பாராமல் தனது சேவைகளை ஆற்றிவந்தார்.
இவ்வாறு எமது ஊரில் தாய், சேய் நலனில் அக்கறையுடன் அநேக சுகப்பிரசவ மகப்பேற்று சேவைகளையும், தொண்டுப்பணிகளையும் ஆற்றிய அரியத்தா எனப்படும் பிரகாசி அவர்கள் 21/8/2007ம் ஆண்டு இறைபதமடைந்தார்.
காவல்துறையில் சட்டம் ஒழுங்குகளை பேணிய எமது பாலு அவர்கள்
பாலு என்று எம்மவர்களாலும் சிறில் Sir என எட்டுத்திக்கெங்கும் அறியப்படட்டவரான டொண் மிகேல் சிறில் என்ற இயற்பெயருடன் 1963ம் ஆண்டு ஆவணி மாதம் 27ம் திகதி ராஜநாயகம் சிறில் ( சிறில் மாஸ்ரர்) லூசியா ஆகியோரின் மகனாக பிறந்து 2 சகோதரர்கள்,மற்றும் 2 சகோதரிகளுடன் வாழ்ந்தார்.
பாலு அவர்கள் தனது ஆரம்ப கல்வியை நல்லாயன் ஆரம்ப பாடசாலையிலும், உயர் கல்வியை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கற்றதுடன் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் சாரணர் இயக்கத்தலும், பாடசாலை இராணுவ அணியிலும், பாடசாலையின் Advanture club என்ற பொருள்பட ஒரு அமைப்பிலும், அங்கம் வகித்து 800m,400m மற்றும் முப்பாச்சல் போட்டி நிகழ்ச்சிகளில் பாடசாலை மற்றும் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் 1979/1980 களில் சங்கீத இசைக்குழுவில் இணைந்து பாடசாலையில் இசை கச்சேரியை நடாத்தியிருந்தார். இசைத்துறையில் ஈடுபாடுடைய பாலு அவர்கள்,பாடசாலை Band இசை குழுவிலும் இணைந்திருந்ததுடன் புல்லாங்குழல் வாசித்தல்,கிற்றார் வாசித்தல் ஆகியவற்றில் சிறந்துவிளங்கியதோடு,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடாத்தப்பட்ட தேசிய ரீதியிலான புல்லாங்குழல் வாசித்தல் போட்டியில் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் உதைபந்தாட்ட அணியில் பின்கள வீரராக பிரகாசித்த பாலு அவர்கள் 1982ம் ஆண்டு தொடக்கம் 1985ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சிங்கப்பூர் கப்பல் கம்பனியில் பணிபுரிந்தார். அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் 1985ம் ஆண்டில் இருந்து 1987 ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார் பாலு அவர்கள்.
விடத்தல்தீவிலும், மன்னாரிலும் பாடகர் குழாமில் இணைந்திருந்த பாலு அவர்கள் திருப்பலி மற்றும் ஏனைய நிகழ்வுகளில் கிற்றார் இசைக்கருவியை இசைத்திருந்தமை மறப்பதற்கல்ல அதன் பிற்பாடு 1988ம் ஆண்டு வைகாசி மாதம் 5ம் திகதி இலங்கை பொலிஸ் சேவையில் உதவி பொலிஸ் பரிசோதகராக நியமனம் பெற்று ஹட்டனில் பணியாற்றினார். தொடர்ந்து வெள்ளவத்த ஹட்டான, மாலியகொட, அம்பாறை, காலி, மன்னார், நீர்கொழும்பு, ஆகிய பகுதிகளில் பணியாற்றிய பாலு அவர்கள் பேசாலை பொறுப்பதிகாரியாக பதவி உயர்வு பெற்று பேசாலையில் பணியாற்றியதுடன் பொல்கலாவ, தலைமன்னார், ஆகிய பகுதிகளில் பொறுப்பதிகாரியாக சிறப்பான பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
1988ம் ஆண்டு தொடக்கம் 1996ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு ஹட்டான பொலிஸ் பயிற்சி கல்லூரியில் சட்டம், ஒழுங்கு மற்றும் அணிவகுப்பு போன்றவற்றின் பயிற்சிகளை வழங்கும் பயிற்றுவிப்பாளராக ஒரு தமிழனாக பாலு அவர்கள் தனது திறமையை நிலைநாட்டியிருந்ததுடன், 1989ம் ஆண்டில் மிகச்சிறந்த பயிற்றுவிப்பாளர் என்ற விருதையும் பெற்றுக்கொண்டு பொலிஸ் திணைக்கள விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியிருந்தார் எமது பாலு அவர்கள்.பாலு அவர்கள் 1987ம் ஆண்டு தை மாதம் 19ம் திகதி பவளமலர் அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இரு பிள்ளைகளுடன் வாழ்ந்துவருகிறார். மும்மொழிகளிலும் புலமை பெற்று விளங்கும் பாலு அவர்கள் நாட்டில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதலால் பொல்கால பிரதேசத்தில் ஏற்பட்ட முஸ்லிம், சிங்கள முறுகல் நிலையை முடிவுக்கு கொண்டுவர அரும்பாடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போதைவஸ்து தடுப்பு பிரிவில் கூடுதலான அக்கறையுடன் தீவிரமாக செயற்பட்ட பாலு அவர்கள் போதைவஸ்து சம்மந்தமாக பொலிஸ் பொதுமக்கள் தொடர்பை பேணி சுற்றுச்சூழல் விழிப்புணர்ச்சிகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தார். நாட்டில் அதிகரித்துவரும் கஞ்சா, ஹரோயின், மற்றும் ஐஸ் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய பாலு அவர்கள் பொலிஸ்மா அதிபரால் கௌரவிக்கப்பட்டு பாராட்டையும் பெற்றுள்ளார்.
நீர்கொழும்பு பகுதியில் பொலிஸ் திணைக்கள பணியாற்றிய காலப்பகுதிகளில் சுற்றிலா பயணிகளுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களை தீர்த்ததுடன் அவர்களுக்கெதிராக நடைபெறும் பெருமளவான குற்றச்செயல்களை தடுத்துநிறுத்தியுள்ளார்.இவ்வாறு காவல்துறையில் சிறப்பான பணியாற்றிய பாலு அவர்கள் ஆடு, கோழி வளர்ப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
அருட்பணி றெஜீஸ் ராஜநாயகம் அடிகளார், அருட்பணி வின்சன் பற்றிக் அடிகளார்.
மன்னார் திருச்சபையின் முக்கிய கத்தோலிக்க திருமறையில் தழைத்தோங்கி இறைவிசுவாசத்தில் ஆழமான பற்றுக்கொண்ட கிராமங்களில் எமது விடத்தல்தீவு கிராமமும் அதன் மக்களும் உள்ளடக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.
அதன் அடிப்படையில் எமது கிராமத்தினதும் மக்களினதும் கத்தோலிக்க விசுவாசத்தை தழைத்தோங்க செய்து, ஆன்மீக பணிகளையும், பொதுப்பணிகளையும் உரியமுறையில் செவ்வனே செய்து கத்தோலிக்கரான எமது மக்களை நேரிய வழியில் நல்வழிப்படுத்தியவர்கள், எமக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து எமது கிராமத்தில் பணி செய்த கத்தோலிக்க அருட்பணியாளர்களான
பங்குத்தந்தையர்கள் என்றால் அது மிகையாகாது.
அந்த வகையில் எமது விடத்தல்தீவு கிராமத்தில் பல்வேறுபட்ட சமூதாய மற்றும் ஆன்மீக பணிகளை மேற்கொண்டு ஒரே சமூகமான எம்மத்தியில் இருந்த பிளவுபட்ட சிந்தனைகளை தகர்த்தெறிந்து ,விரோதங்களையும், மனக்கசப்புகளையும், பிரிவினைவாத செயல்பாடுகளையும் அகற்றி மனதளவிலும், உடலளவிலும் பிரிந்திருந்த எம்மவர்களை ஒற்றுமைப்படுத்தி ஐக்கிய ப்படுத்தி வாழவைத்த பங்குத்தந்தையர்களாக அருட்பணி றெஜீஸ் ராஜநாயகம் அடிகளார் அவர்களும், அருட்பணி வின்சன் பற்றிக் அடிகளார் அவர்களும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளமை சிறப்பானதாகும்.
அருட்பணி றெஜீஸ் ராஜநாயகம் அடிகளார்.
1973ம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் உதவி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்பணி றெஜீஸ் ராஜநாயகம் அடிகளார் எமது விடத்தல்தீவு பங்கிற்கு பங்குத்தந்தையாக பணியாற்ற நியமனம் செய்யப்பட்டு எமது சமூகத்தில் நிலவிவந்த பிரிவினைவாத மனோநிலையை இளைஞர் யுவதிகளிடையே நீக்க அரும்பாடுபட்டு எம்மை ஐக்கியப்படுத்திய ஐக்கியத்தின் தந்தையாக காணப்பட்டார். ஒரே சமூகமாக இருந்தாலும் எமது ஊரில் அந்நாட்களில் வட்டாரங்களை மையப்படுத்தி எமக்குள்ளே காணப்பட்ட பிரிவினைவாதங்களால் தழைத்தோங்கிய விளையாட்டுக்கழகங்கள் இளைஞர் யுவதிகளிடையே காணப்பட்ட நிலையில் அவைகளை களைந்து ஒன்றுபட்ட ஊராக மக்களையும் இளைஞர், யுவதிகளையும் ஒண்றிணைத்து விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகம் என்ற நாமத்தை சூட்டி இரு கைகள் கைலாகு கொடுப்பதை கழகத்தின் சின்னமாக ஏற்படுத்திய பெருமை முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி றெஜீஸ் ராஜநாயகம் அடிகளார் அவர்களையே சாரும்.
அவ் ஆரம்ப நாட்களில் இளைஞர் யுவதிகளை ஒண்றிணைத்து விளையாட்டின் மூலம் பரஸ்பரத்தையும், அன்பையும், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நேசிக்கும் பண்பையும் வளர்த்துக்கொள்ளும் நோக்குடன் மே தின விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தி அந்நாட்களில் இளைஞராக இருந்த திரு.கி.கில்லறி அவர்களையும், திருமதி மேரிராணி அவர்களையும் ஒலிம்பிக் Tourch ஏந்தியவாறு ஊரை வலம்வலர வைத்து எம்மை ஒண்றிணைத்தது இன்றும் எமது சமூகத்தினிடையே பேசும்பொருளாக காணப்படுகிறது.
அருட்பணி வின்சன் பற்றிக் அடிகளார்.
எமது விடத்தல்தீவு பங்குத்தந்தையர்களாக இருந்து பணியாற்றிய ஆன்மீக அருட்பணியாளர்களுள் அருட்பணி வின்சன் பற்றிக் அமதி அடிகளார் விடத்தல்தீவு வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய வரலாற்று நாயகனாக மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் என்றால் அது மிகையாகாது. தனது ஆரம்ப பணியாக குருக்களை குருத்துவ உருவாக்கத்திற்கு தயார்படுத்தல் பணியையும், விரிவுரையாளராக பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிவந்த எமது ஊரில் VP என அறியப்படுகிற அருட்பணி வின்சன் பற்றிக் அடிகளார் 1994ம் ஆண்டு ம காலப்பகுதியில் முதன்முதலாக ஒரு பங்கிற்கு அதாவது எமது விடத்தல்தீவு பங்குத்தந்தையாக பணி பொறுப்பேற்றார். அருட்பணி வின்சன் பற்றிக் அடிகளார் சிறந்த மனோதத்துவ நிபுணரும் கூட அதன் காரணமாக எமது ஊரில் ஆண்டாண்டு காலமாக, பரம்பரை பரம்பரையாக, வாழையடி வாழையாக புரையோடிப்போய் இருந்த எமது இரு ஆலயங்களை மையமாக வைத்து பிரிந்துநின்ற எம்மவர்களை இணைத்து எம்மையும் எமது ஆலயங்களின் நிர்வாகத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்த வரலாற்று நாயகன்.
அந்நாட்களில் வடகிழக்கு மாகாணத்தில் முதன் முதலாக எமது விடத்தல்தீவு பங்கில் அன்பியத்தை ஆரம்பித்து கத்தோலிக்க கோட்பாடுகளுக்கு ஏற்றால் போல் மக்களை திரு அவையில் பங்குபெற தூண்டியதுடன் மனமாற்றம் பெற்ற மக்களாக ஒருவருக்கொருவர் அன்பும் சினேகமும் உடையவர்களாக வாழ வழிசெய்து இறை விசுவாச பக்தியை அதிகரிக்கவும் வழிசெய்தார். அத்துடன் விடத்தல்தீவு புனித அடைக்கலமாத ஆலயத்திற்கு அருகாமையில் அருளூற்று அருள்மாரி மண்டபங்களை அமைத்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை இரவு பகல் பாராது மின்சார வசதிகள் இல்லாத அந்நாட்களில் பெற்றோல் மக்ஸ் வெளிச்சத்தில் ஆசிரியர்களின் உதவியுடன் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தார். நாம் அனைவரும் ஒரே சமூகமக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற சிந்தனையை மனதில் ஏற்ப்படுத்தி அன்னிய நடமடிக்கைகளின் மூலம் எமது வட்டாரங்களில் உள்ள குடும்பங்களை அடிப்படையாக கொண்ட சிறு சிறு குழுக்களை உருவாக்கியிருந்தார்.குழுக்களுக்கிடையே தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கி ஆதிக்கிறிஸ்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைகளை பின்பற்றி வாழவைத்து அன்பு ,பரிவு இரக்கம் போன்றவற்றை உணர வைத்து 2வருடங்களாக நிர்வாகத்தை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் புனித யாகப்பர் ஆலய நிர்வாக சபையையும் மக்களையும் ஒன்றுகூட்டி எமது ஊரில் நாம் ஒன்றுபடவேண்டிய தேவையையும் முன்னிலைப்படுத்தி விளக்கவுரையை வழங்கியவேளை இளைஞர்கள் சிலரினதும்,பெரியவர்கள் சிலரினதும் கருத்துகள் முறுகல் நிலையை தோற்றுவித்தாலும் பெரும்பாலான மக்கள் நிர்வாகமும் ஊரும் ஒன்றாக அமையவேண்டும் என்று ஒருமித்து வலியுறுத்தியிருந்ததுடன் அவர்களது சம்மதத்தையும் பெற்று யாகப்பர் ஆலய நிர்வாகத்தை நீக்கியிருந்தார்.
மறை உண்மை தன்மை கொண்ட விடத்தல்தீவில் வாழும் போது மக்கள் ஒன்றாக வாழவேண்டும் என்ற சிந்தனையில் ஒற்றுமை மனப்பான்மையை வளர்த்து இரண்டு ஆலய நிர்வாகங்களையும் ஒன்றாக்கி விடத்தல்தீவு மேய்ப்பு பணி சபையை நிறுவினார். அந்நாட்களில் அடைக்கல மாதா ஆலயத்தை மக்களின் ஒத்துழைப்புடன் போர் கால சூழ்நிலையிலும் ஒரே சமூக மக்களாக இணைந்து கட்டிமுடித்து தனித்தனியாக சேகரிக்கப்பட்ட ஆலய ஸ்தாபரிப்பு நிதியை ஒன்றாக்கி ஆலய திறப்புவிழாவையும் திருவிழாவையும் சிறப்பாக நடாத்தியிருந்தார். தனி அன்பியத்தை ஆரம்பித்து மனங்களில் அன்புறவை நாளுக்கு நாள் வளர்த்த அந்நாட்களில் இரு நிர்வாகங்களாக பிரிந்து நின்ற எமது சமூதாய மக்களை ஒண்றிணைக்க முதலில் எமது அடைக்கல மாதா நிர்வாகத்தினரையும் ஆலயம் சார்ந்த மக்களையும் ஆலய மணி எழுப்பி புனித அடைக்கலமாதா ஆலயத்தில் வைத்து ஒன்றுசேர்ப்பதற்கான ஆரம்ப விளக்கவுரையை நிகழ்த்தி அவர்களிடமிருந்து சம்மதத்தையும் பெற்றுக்கொண்டு அடைக்கலமாதா ஆலய நிர்வாகத்தை நீக்கியிருந்தார். ஒளி இரவு,ஒளி விழா காலங்களில் இளைஞர், சிறுவர்கள், பெரியவர்களிடத்திலே ஒற்றுமையையும், அன்பிய வாழ்வியலையும் தொடர்ந்து பேணும் வகையில் விளையாட்டு நிகழ்ச்சிகளையும், பாசறைகளையும் ஒழுங்குசெய்திருந்தார். ஒளி இரவு நிகழ்ச்சியில் அருட்பணி வின்சன் பற்றிக் அடிகளார் அறிமுகப்படுத்திய “ரொம்போலா” நிகழ்ச்சி இன்றும் எம்மவர்களிடையே பேசும் பொருளாக கொள்ளத்தக்க வகையில் காணப்படுகிறது. மக்களின் ஆதரவுடனும்,ஒத்துழைப்புடனும் போர் காலத்தில் எமது ஊரின் ஊடாக நடைபெற்ற படகு சேவையின் நிமித்தம் பயணம் மேற்கொள்ள அங்கலாய்த்து வரும் மக்களுக்கான உணவுகள் பரிமாறப்பட்டமை இவரது காலத்திலேயாகும். இவ்வாறு ஒரே சமூகமாக எம்மையும் எமது மக்களையும் ஒண்றிணைக்க அரும்பாடுபட்டு அதிலே வெற்றியும் கண்ட எமது இரு முன்னாள் பங்குத்தந்தையர்களும் போற்றுதலுக்குரியவர்களே.
54 வருடங்களாக ஒப்பாரி பாடிவரும் கலைஞர். - செபஸ்தியாம்பிள்ளை ஐயா!
நான் 54 வருசமா பல பேரோட சாவில ஒப்பாரி பாடியிருக்கேன். இத்தன வருஷத்தில யாரும் என்னையும், இந்த கலையையும் பற்றி எழுதப்போறேன் என்டு வந்ததே இல்ல....” என்ற அவரது குரலில் பல்லாயிரம் துயரங்களும், எதிர்பார்ப்புக்களும் புதைந்திருந்தன.
மன்னார் மாவட்டத்தில், விடத்தல்தீவு எனும் கிராமத்தில் வஸ்தியாம்பிள்ளை, அடைக்கலம் தம்பதியினருக்கு மகனாக 1949ம் ஆண்டு, பங்குனி மாதம் 12ம் திகதி செபஸ்தியாம்பிள்ளை பிறந்தார். தற்போது 75 வயதாகின்ற இவர் இளமைப் பராயம் முதலே கத்தோலிக்க மரபு முறைப்படி ஒப்பாரிப்பாடல்களைப் பாடுவதிலும், கூத்துக்கள், நாடகங்களில் பாடுவதிலும் ஊரார் அனைவராலும் குறிப்பிட்டு பெயர் சொல்லக்கூடிய கலைஞர்களுள் முதன்மையானவர்.
தங்கள் குடும்ப பின்னணி பற்றி சுருக்கமாக கூறமுடியுமா?
நடுத்தர குடும்பத்தில் பிறந்த நான், பிறப்பு முதலே விடத்தல்தீவு கிராமத்தில் தான் வாழ்ந்து வருகிறேன். எனது மனைவி பெயர் மேரி றெஜுனா திரேசா. எங்களுக்கு ஆறு பிள்ளைகள். அனைவரும் திருமணம் செய்துவிட்டனர். இப்போதுநானும் எனதுமனைவியும்மாத்திரமே இங்கு வசிக்கிறோம். நான் இன்றுவரையில் என் பிள்ளைகளையோ, உறவினரையோ உதவிக்கு எதிர்பார்த்ததில்லை. சைக்கிள் திருத்துதல், ஏனைய கூலி வேலைகளை செய்வதன் மூலம் வருமானத்தினை பெற்று நானும் எனது மனைவியும் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறோம்.
ஒப்பாரிப்பாடல்களை பாட வேண்டும் எனும் ஆர்வம் தங்களுக்கு எவ்வாறு; ஏற்பட்டது? நான் இளமைப் பராயத்தில் இருந்த போது மரண வீடுகளில் ஒப்பாரி கலைஞர்கள் ஒப்பாரி பாடுவதைக் கேட்டு நானும் பாடவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இது தொடர்பாக எனது தந்தைக்கு தெரிவித்த போது அவர் என்னை கல்வி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்படி கூறிவிட்டார். எனினும் என்னுள் ஏற்பட்டிருந்த அதீத ஆர்வம் காரணமாக எங்காவது மரண வீடுகளில் ஒப்பாரி பாடப்படும் போது வேலி மட்டைகளுக்கு அருகில் அமர்ந்திருந்து அவற்றை கவனமாக கேட்பதே எனது வேலையாகிப்போனது. இரவுகளில் கூட பெற்றோல்மெக்ஸ் விளக்குகளிற்கு அருகில் அமர்ந்து அவர்கள் பாடுவதையே கேட்டுக்கொண்டிருப்பேன். இவ்வாறே மூன்று நான்கு வருடங்களைக் கழித்திருப்பேன். தாங்கள் முதல் முதலாக ஒப்பாரி கலைஞராக ஒப்பாரி பாடலை பாடிய நாள் தங்களிற்கு நினைவிருக்கிறதா? அதை எப்படி என்னால் மறக்க முடியும்?. மூன்று நான்கு வருட காத்திருப்பிற்கு பின்னர் 1969ம் ஆண்டு எனது மாமனார் ஒருவர் எனது இந்த ஆர்வத்தைக் கண்டு, பிரசவத்தின் போது இறந்து போன பெண்ணொருவரின் மரண வீட்டில் பல மூத்த கலைஞர்களோடு இணைந்து ஒப்பாரி பாட அழைத்துச் சென்றார். அதுமுதல் ஒப்பாரிப் பாடல்களை படிப்படியாக கற்றுக்கொண்டு தொடர்ந்து பாட ஆரம்பித்தேன்.
நீங்கள் எவ்வகையான ஒப்பாரிப் பாடல்களைப் பாடுகிறீர்கள்?
எமது கிராமத்தைப் பொறுத்தவரையில் அதிகமானோர் கத்தோலிக்க சமயத்தினைப் பின்பற்றுகின்றனர். கத்தோலிக்க மதமானது எப்போதும் மரணத்தின் பின்னர் ஒரு வாழ்வு உள்ளது, இவ்வுலகில் செய்யும் பாவங்களிற்கு மறுவுலகில் தண்டனை கிடைக்கும் என்பதனை உறுதியாக நம்புகிறது. எனவே ஒருவர் இறந்துபோனால் அவரது வீட்டில் அவரது உடல் வைக்கப்ட்டது முதல், அடக்கம் செய்யப்படும் வரையில் யேசுவின் பாடுகளையும் மரணத்தினையும், யேசுவின் தாய் அவரோடு பயணித்த நாட்களையும் பாடலாக பாடி இறந்தவரின் ஆன்ம சாந்திக்காக வேண்டிக்கொள்வோம். இறுதியில் அவர் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்படும் போது இறந்தவர் மண்ணுலகில் வாழ்ந்த நாட்களை நினைவுபடுத்தி பாடுவோம்.
ஒப்பாரிப்பாடல்களை பாடுவதற்கென்று தங்களை எவரேனும் வந்து அழைப்பார்களா?, அவ்வாறு பாடல்களைப் பாடுவதற்கு சம்பளம் வழங்குகின்றார்களா?
சம்பளமா??? (சிரித்தபடியே). ஒப்பாரிப்பாடல்களை பாடுவதென்பது எமது உயிரோடு ஊறிப்போன கலை வடிவமாகும். இந்த உலகை விட்டு பிரிந்து போனவர்களது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பாடுகின்றோமே தவிர எந்தவித பணத்தினையும் எதிர்பார்த்துப் பாடுவதில்லை. கிராமத்தில் ஒரு இறப்பு நேர்ந்ததாக ஆலயத்தில் அறிவித்தல் மணி ஒலிக்கப்பட்டதுமே நாம் ஒப்பாரி பாடுவதற்கு செல்ல தயாராகிவிடுவோம். சில சமயங்களில் இறந்தவரது உறவினரோ, நண்பர்களோ வந்து ஒப்பாரி பாடுவதற்காக எம்மை அழைக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு
ஒப்பாரிப்பாடல்களை பாடும் போது தங்களது உடல், உள உணர்வுகள் எப்படியிருக்கும்?
இறந்தவர் ஆணா. பெண்ணா, குழந்தையா, எமக்கு நன்கு தெரிந்தவரா இல்லையா என்பதற்கு அப்பால் குறித்த வீட்டில் ஒரு இழப்பு நேர்ந்திருக்கிறது. அவர்களது துயரத்தில் நாமும் முழுமையாக பங்கெடுப்போம். எமது பாடல்களை கேட்கும் போது அங்குள்ளவர்களும் மனதினுள் அடக்கிவைத்திருக்கும் துயரங்களை கண்ணீராக வெளிப்படுத்துவர்.
ஒப்பாரிப்பாடல்களை விடிய விடிய வெவ்வேறு இராகங்களில் பாடிக்கொண்டேயிருப்போம். இரவில் 9 மணிக்கு ஆரம்பித்து 12 மணியளவில் நிறுத்;தி மீண்டும் 1 மணிக்கு பாட ஆரம்பிப்போம். அப்படியே விடியும் வரை பாடுவோம். பெருங்குடலும் சிறுகுடலும் சிக்கிக்கொள்வதைப் போன்ற உணர்வு ஏற்படும். வயிறு சுருங்கிப்போகும். நா வறண்டு போகும் ஒப்பாரிப்பாடல்களை பாடுவதில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு காணப்படுகிறது? எமது கிராமத்தினை பொறுத்தவரையில் பெண்கள் ஒப்பாரிப்பாடல்களை பாடும் விகிதம் முற்றிலுமாக குறைவடைந்துள்ளது என்றே கூற வேண்டும். எமது அயற்கிராமங்களில் இன்னமும் பெண்கள் சிலர் ஒப்பாரிப்பாடல்களை பாடிவருகின்றனர். எனது இளமைக்காலத்தில் ஆண்களோடு இணைந்து பெண்களும் கண்விழித்து ஒப்பாரி பாடிய நாட்கள் இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் தற்கால பெண்கள் ஒப்பாரி பாடுவதற்கு, ஏன்! அழுவதற்கே வெட்கப்படுகின்றனர்.
தாங்கள் ஒப்பாரிப் பாடல்களை பாட ஆரம்பித்த காலத்திற்கும் தற்காலத்திற்கும் எவ்வாறான வேறுபாடுகள் இருப்பதாக உணர்கிறீர்கள்? ஆரம்பகாலத்தில் ஒப்பாரி பாடல்களைப் பாட ஆரம்பித்தால் கூடியுள்ள அனைவரும் தங்கள் வேதனையை வெளிப்படுத்த ஒலமிட்டு அழுவார்கள்;. குறிப்பாக பெண்கள் மரண வீட்டிற்கு வரும் உறவுகளை அணைத்து அழுது புலம்பி தமது துயரை பகிர்ந்துகொள்வர். ஆனால் தற்காலத்தில் அவ்வாறில்லை. பெரும்பாலான மரண வீடுகளில் அழுகுரலே கேட்பதில்லை பல நாட்களின் பின் அனைவரும் சந்தித்துக்கொள்ளக்கூடிய இடமாகவே மரணச்சடங்கினை கருதுகின்றனர். நாம் ஒரு புறம் ஒப்பாரியைப் பாட அவர்கள் அனைவரும் மறுபுறம் கூடியிருந்து வெட்டிக்கதை பேசும் காலமாகிப்போய்விட்டது. ஒரு சிலர் எங்கே இருக்கிறோம் என்பதையே மறந்து கைகொட்டி சிரித்து கதைபேசும் சந்தர்பங்களையும் சந்தித்திருக்கிறேன். இவற்றிற்கு அப்பால் இளைஞர்கள், கைகளில் தொலைபேசியுடன் ஒவ்வொரு மூலையிலும் நிற்கிறார்களே தவிர துயரத்தில் பங்கெடுக்கும் மரபே மாறிப்போய்விட்டது. இவற்றை நினைக்கையில் ஆத்திரமும், அளவற்ற துயரும் ஏற்படுகிறது.
சமூகத்தில் தங்களைப்போன்ற ஒப்பாரி கலைஞர்களுடைய நிலை எவ்வாறு இருக்கிறது? இறப்பு வீடுகளில் தேடப்படுபவர்களாகவும், ஏனைய சந்தர்ப்பங்களில் வேண்டாதவர்களாகவுமே என்னையொத்த கலைஞர்களின் நிலை காணப்படுகிறது. முன்னைய காலங்களில் கலைஞர்களை சுப காரியங்களிற்கும்,மதம் சார்வைபவங்களிற்கும் விருந்தாளியாக அழைப்பதை பெருமையாககருதினர். ஆனால் தற்போது, நாங்கள்வராவிட்டால் விழாநடக்காமலாபோய் விடும் என்ற அளவிற்கு ஆகிவிட்டது. 54 வருடமாக ஒப்பாரிப்பாடல்களை நேசித்து பாடும் என்னை அடையாளங்கண்டு கொள்ளவே உங்களைப்போன்ற இளைய தலைமுறையினருக்கு இத்தனை காலமாகியிருக்கிறதென்றால், இன்றும் அறியப்படாதவர்களாய் எத்தனை கலைஞர்கள் எங்கெங்கெல்லாம் இருப்பார்கள். அவர்களையெல்லாம் அடையாளங்கண்டு உரிய அங்கீகாரம் வழங்காவிட்டாலும் அவர்களிடமுள்ள தனித்துவமான கலைத்திறன்களை அழியவிடாது ஆவணப்படுத்தினாலே என்னையொத்த கலைஞர்கள் வெற்றியடைந்ததற்கு சமமாகும்.
இளைய சமுதாயத்தினர் இவ்வகையான ஒப்பாரிப்பாடல்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்களா?, அவர்களிற்கு தாங்கள் கூற விரும்புவது என்ன? தற்காலமானது எமது காலம் போல அல்ல. அப்போது வசதிகளும் வளங்களும் மிகக் குறைவாகவே இருந்தன. இருப்பினும் எம்மிடம் ஆர்வம் மிக அதிகமாக இருந்தது. ஆனால் இப்போதைய இளைய சமுதாயத்தினரிடம் இப்பாடல்களை கற்றுக கொள்வதற்கான ஆர்வம் துளியளவும் இல்லையென்றே சொல்ல வேண்டும். எமது கிராமத்தில்கூட பல பேரை கவனித்திருக்கின்றேன். அவர்களிடம் அதீத குரல்வளம் காணப்படுகிறது. ஆனால் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒப்பாரி பாடல்கள் என்றாலே பாடுவதற்கும் பழகுவதற்கும் வெட்கப்படும் இவர்கள் பெரிய வெள்ளிக்கிழமை என்றால் ஆலயத்தில் பாடுவதற்கு ஒரே நாளில் பாடல்களை கற்றுத்தருமாறும் கேட்பதுண்டு.
ஒப்பாரி பாடல்களை பாட ஆரம்பித்த நாள் முதலாக அது சார்ந்த புத்தகங்களை தேடி சேமித்து இன்றுவரை பாதுகாத்து வருகின்றேன். இதே ஆர்வத்தோடு கற்றுக்கொள்வதற்கு யாரேனும் தலைப்படுவார்களாயின் நிச்சயமாக அவர்களுக்கு கற்றுக்கொடுப்பேன். எமது காலம் முடிந்து போனாலும் இந்த பாடல்களும் அதன் நயமும், சுவையும் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது ஆசையாகும்.
நேர்காணல் : கிறிஜா அருள்பிரகாசம்
நன்மைத்தனங்களும், உதவிகளும் - நே. லக்ஸ்மன், அமரர் சகாயராசா,அமரர் சகாயன்
காலமாக வருடங்கள் கடந்தாலும், காலங்கள் மாறினாலும் ஒருவர் செய்த நன்மைத்தனங்களும், உதவிகளும் ஆண்டாண்டு நினைவில் கொள்ளப்படுபவைகளாகவே இருக்கும். அந்தவகையில் 1999ம் ஆண்டு நடைபெற்ற இடப்பெயர்வுக்கு பிற்பாடு விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் நிர்வாக ரீதியான அனைத்து செயற்பாடுகளிலும் ,விளையாட்டு நிகழ்வுகளின் வெற்றியிலும்,கழக வீரர்களுடைய ஏனைய அனைத்து தேவைகளிலும் பெரிதும் உதவியாக இருந்தவர்களுள் முன்னாள் தலைவர் ஸ்ரனி/மதி (நிலா கடலுணவு வாணிபம்) முன்னாள் தலைவர்,அமரர் சகாயராசா மற்றும் முன்னாள் ஐக்கிய விளையாட்டுக்கழக கோல் காப்பாளர் நே லக்ஸ்மன் (LNKG) ஆகியோர் முக்கியமானவர்கள் என்றால் அது மிகையல்லடோ.
ஸ்ரனி/மதி ( நிலா கடலுணவு வாணிம்) அவர்கள் விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக தலைவராக 1999ம் ஆண்டு இடம்பெயர்விற்கு பின்னர் பல முறை நிர்வாகத்தையும்,கழகத்தையும் நிர்வகித்து எமது கழகம் பல வெற்றிகளை பெற்றதில் இவருக்கும் நிறையபங்கு உண்டு
போர்க்கால சூழல் காலங்களில் ஊருக்கு வெளியே குறிப்பாக பல்கலைக்கழகங்களில் இருந்தும், மன்னாரில் இருந்தும் கடலால் விளையாட வந்த ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் மதி அவர்கள் பலதரப்பட்ட உதவிகளை செய்திருப்பது இன்றும் மறந்துவிட முடியாததாகும்.
அன்றைய நாட்களில் போக்குவரத்து என்பது சாதாரண நிலையில் அல்லாமல் பல இடர்களையும், அசௌகரியங்களையும் கொண்டிருந்தது, கடல் வழியாக வங்காலை பாடு,பள்ளிமுனை மற்றும் மன்னார் பாலத்தடி சோதனை சாவடிகள் மூலமாக வன்னியில் நடக்கும் போட்டிகளுக்கு நாங்கள் வந்துசென்றோம்.
எமது துறையில் கொடுவாப்பள்ளத்தில் எம்மை கண்டவுடனே "நேர வாங்க பதிய தேவையில்ல சாப்பிட்டிற்று பதியலாம் எல்லாம் சொல்லியாற்று” என்ற சத்தம் மதி அண்ணணிடமிருந்து வரும். ஏனென்றால்துறையூடாக வரும் யாவரும் விடுதலை புலிகளின் புலனாய்வு துறையின் சந்திப்பிற்கு பின்னரே ஊருக்குள்ளே வர அனுமதிக்கப்படுவது வழமையாக இருந்தது.
மதி அண்ணணின் வாடி துறையில் தவநேசன் அண்ணணின் சாப்பாட்டு கடைக்கு அருகிலே இருந்தது கரையில் இறங்கியவுடன் எம்மை முதல் போய் சாப்பிடுங்கள் என்று வயிறார சாப்பிடவைத்து தனது மோட்டர் சைக்கிளையும் தந்து பள்ளமடு குளத்துக்கு முழுக போகசொல்லுவது வழமையாக இருந்தது.
முழுக்கு முடிந்த கையோடு அஞ்சாறு கறியோட தனது வீட்ட மத்தியான சாப்பாட்டை தந்து எம்மை உபசரித்த அந்த நாட்கள் இன்றும் பசுமையான நினைவாகவே இருந்து வருகிறது. அது மட்டுமல்ல மன்னாரில இருந்தும்,பல்கலைக்கழகத்தில இருந்தும் check பொயின்ரால வாற பொடிகள ஏத்தி இறக்க தன்ர மோட்டர் சைக்கிள அனுப்புவதிலும் மதி அண்ணண் பின்நிற்பதில்லை. அத்துடன் அந்த நேரத்தில் விளையாட வந்த எமக்கான பாஸ் கட்டணங்களை வழங்கியிருந்தார்.
ஒவ்வொரு போட்டியும் முடிய கடைக்கு கூட்டிச்செல்லுவதும் இறுதிப்போட்டியில் வெற்றியின் பின்னர் மைதானத்தை சுற்றி வெற்றிக்களிப்பில் வலம்வருவதும் ரசிகர்கள் வியந்து பார்க்கும் வண்ணம் குளிர்பானங்களை வழங்கி எம்மை உற்சாகமூட்டி மகிழ்விப்பதும், ஊரில் அருள்மாரி மண்டபத்தில் வெற்றி சமயலுக்கு நிதியை கொடுப்பதும் மதி அண்ணனின் இயல்பாக இருந்தது.
இவ்வாறு எமது ஐக்கிய விளையாட்டுக்கழக நிர்வாகத்தில் இருந்து பல்வேறுபட்ட வகையில் பல்வேறுபட்ட வீரர்களுக்கு பற்பல உதவிகளை செய்த முன்னாள் தலைவர் மதி அண்ணண் அவர்களை நன்றியுடன் நினைக்கின்றோம் அத்துடன் தமது பிள்ளைகள் நால்வரும் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்தில் உதைபந்தாட்ட அணிக்காக விளையாடவும் அவர்களை ஊக்குவித்திருப்பது பெருமையே.
அமரர் ஜோண் சகாயராசா........
அமரர் ஜோண் சகாயாராஜா விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக முன்னாள் தலைவராகவும், உபதலைவராகவும், நிர்வாகத்தில் பங்குபற்றியதுடன் விளையாட்டு வீரனாகவும் இருந்தவர். மன்னாரில் இருந்து விளையாட வந்த எமக்கு இவரால் செய்யப்பட்ட உதவிகள் கொஞ்சநஞ்சமில்ல தமது வீட்டிற்கு வரவழைத்து மத்தியான மற்றும் இரவு சாப்பாடுகளை வழங்கிய பசுமையான நினைவுகள் மறக்கமுடியாதவைகளாகும். “keeping star” வெற்றிக்கிண்ண போட்டிக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் எம்மோடு சேர்ந்து செய்திருந்தார்.தமது மோட்டர் சைக்கிளை வழங்கி விளையாட வரும் எம்மவர்களை check பொயின்ரில் இருந்து விளையாட்டு நடைபெறும் இடங்களுக்கு ஏற்றிச்செல்வதும், அவர்களை மீண்டும் கொண்டு வந்து இறக்கிவிடுவதும் இவரது வழமையான செயல்பாடாகவே இருந்தது. முத்துக்கள் மூன்று உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அமரர் சகாயன் அவர்களுடன் ஒரு போட்டியில் இணைந்து விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இரவு படுக்கைக்கு மடுக்கோவிலுக்கு சென்றுவருவதிலும், ஐக்கிய விளையாட்டுக்கழக நிர்வாக உறுப்பினராக இருந்த காலத்தில் ஆலயங்களுக்குள் வந்து போவதிலும் சகாயன் அண்ணன் பின்நிற்பதில்லை.
அமரர் சகாயன் அவர்களை பற்றிய சுவாரஸ்யமான நினைவு யாதெனில் நாம் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்திற்காக விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் மைதானத்திற்கு வந்து எம்மை உற்சாகப்படுத்துவார் அதிலும் குறிப்பாக எமது பிரதேசம் வெயில் வெட்கை அதிகமாக உள்ள பிரதேசமாகவும் காணப்படுவதால் விளையாட்டின் முதல் பாதி நிறைவுற்றதும் எம்மை வரிசையாக இருத்தி ஒவ்வொருவருடைய தலையிலும் தண்ணீரி ஊற்றி முகத்தை தனது கையால் கழுவி விடுவதை தனது வழக்கமாக கொண்டிருந்தார்.
விளையாட்டு அனல் பறக்கும் பிரதமநடுவரிடம் போய் உதவி நடுவர் முறையிடுவார் அந்த நேரத்தில் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்தல் வரும் "தயவு செய்து ஐக்கிய விளையாட்டுக்கழக ஆதரவாளர் நடுவரை தொந்தரவு செய்யவேண்டாம் " விசயம் என்னவென்றால் “Sir அவன் off க்கு போயிற்றான் Off Str அவன் என்று உதவிநடுவருக்கு சகாயன் அண்ணன் கொடுக்கும் Alert அதாவது off பிடிக்க சொல்லி நடுவரை-Alert பண்ணிக்கொண்டே இருப்பாராம், இதனால் கடுப்பாகும் பக்க நடுவர் பிரதம நடுவரை விளையாட்டை நிறுத்தச்சொல்லி சொல்லும் அறிவித்தலே அதுவாக இருந்தது. சாகயன் அண்ணன் கொடுக்கும் இந்த Alert மைதானத்தில் அடிக்கடி நிகழும் இவற்றை நேரில் பார்த்தவன் நான்.
அமரர் சகாயன் அவர்கள் விடத்தல் தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் வளர்ச்சியிலும், அதன் வெற்றியிலும் பங்குதாரர் ஆக இருந்தவர் என்றால் அது மிகையாகாது. நே.லக்ஸ்மன் (LNKG ) கடலுணவு வாணிப உரிமையாளராக லக்கு என்று எம்மவரால் அறியப்பட்டவர். எமது ஐக்கிய விளையாட்டுக்கழக முன்னாள் சிறந்த கோல்காப்பாளர்களுள் இவரும் ஒருவராக இருந்ததுடன் ஐக்கிய விளையாட்டுக்கழக நிர்வாகத்திலும் இருந்து கடமையாற்றியிருந்தார்.
1999ம் ஆண்டு இடம்பெயர்வுக்கு பின்னர் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்திற்கும் எமக்கும் இவரது உதவிகள் அதிகளவில் கிடைக்கப்பெற்றன. தனது வாகனத்தை வழங்கி உதைபந்தாட்ட போட்டிகளுக்கு எமது கழகம் பங்குபற்றவும்,தமது மோட்டார் சைக்கிளில் எமது வீர்களை முழங்காவில், பள்ளிக்குடா, காத்தாங்குளம் போன்ற மைதானங்களுக்கு ஏற்றிவந்த அந்த நாட்களும் மறப்பதற்கல்ல.
முன்னாள் தளபதி ஜாண் அவர்கள் தலமையில் வீரப்பிரசவ ஐக்கிய விளையாட்டுக்கழகம் நடாத்திய லீக் போட்டிக்குலக்ஸ்மன் அவர்கள் வழங்கியிருந்த உதவிகள் அளப்பெரியது. முத்துக்கள்மூன்று உதைபந்தாட்ட போட்டியில் திரு.லக்ஸ்மன் கோல்காப்பாளர்களாகவும் நான் இடது பக்க பின்கள தடுப்பு வீரனாகவும் விளையாடி மன்னார் அல்பதா அணியுடனான போட்டியில் வெற்றிபெற்றது இன்றும் பசுமையே.
இடம்பெயர்ந்த பின்னர் லக்ஸ்மன் அவர்கள் மூன்றாம்பிட்டியில் வசித்தாலும் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக போட்டிகளுக்கு ஆதரவும் உற்சாகமும் வழங்க பின்நிற்பதில்லை. தேவன்பிட்டியில் நடைபெறும் போட்டிகளுக்கு எம்மை தனது வீட்டில் தங்கவைத்து,சாப்பாடுகளை வழங்கியதும், தனது வாகனத்தில் எம்மை ஏற்றிச்செல்லுவதும் மறந்துவிட முடியாதவைகளாகும். எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் கோல்காப்பாளர்களாக சிறப்பாக செயற்பட்டு இன்றுவரை எமது கழகத்தின் வளர்ச்சியில் ஆர்வமாக இருந்து லக்ஸ்மன் அவர்கள் உற்சாகமூட்டிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜோண்றாச் எனும் KEEPING STAR லொக்குட்டியின் நினைவுகளில்.......
வடமாகாண முத்துக்கள் மூன்று உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி உதைபந்தாட்டவிளையாட்டு ரசிகர்களின் அமோக வரவேற்பில் களைகட்டி திருவிழா கோலம்பூண்டு சிறந்த உதைபந்தாட்ட அணிகளின் பங்குபற்றுதலுடன் வெடிவிபத்தில் கொல்லப்பட்ட பிள்ளைகளின் நினைவாக பண்டிவிரிச்சான் மண்ணில் நடாத்தப்பட்டு வரும் போட்டியாகும் அந்த வருடம் மண்ணார் தீவில் இருந்தும் அல்பதா விளையாட்டுகழகம் உட்பட பல கழகங்கள் பங்குபற்றியிருந்தன, வங்காலை,முருங்கன் பிரதேச அணிகள், மாந்தை மேற்கு,மடு பிரதேச அணிகள், முழங்காவில், நாச்சிக்குடா, வலைப்பாடு மற்றும் இரணமாதா நகர் அணிகள் போன்ற பலம்வாய்ந்த சிறந்த உதைபந்தாட்ட அணிகள் அந்த முத்துக்கள் மூன்று வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தை தமதாக்க தமது சிறப்பான விளையாட்டை தடம்பதித்திருந்தன. எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகம் மாந்தை மேற்கில் சிறந்த விளையாட்டு கழகமாக வலம்வந்த காலம் நண்பன் அமரர் ஜோண்றாஜ் எமது கழகத்தின் சிறந்த கோல்காப்பாளர்களாக பல பலம்வாய்ந்த அணிளின் முன்ணனி வீரர்களின் ஒவ்வொரு கோல் பெறும் வாய்ப்புகளையும் தவிடுபொடியாக்கிக்கொண்டிருந்தான். விளையாட்டு நேரத்திலும் சரி பெனால்டி வேளையிலும் சரி ஜோண்றாச்சுக்கு கோல் அடிப்பது என்பது எதிரணிக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.
எமக்கான போட்டி அட்டவனை வரிசையில் இரணைமாதாநகர் வி.க, வங்காலை சென்.ஆன்ஸ் வி.க, முருங்கன் பொதுசன வி.க, மாந்தை சென்.லூட்ஸ் அரையிறுதியில் அல்பதா அணி போன்றவற்றை வென்று இறுதிப்போட்டி காத்தாங்குளம் சென். ஜோசப் அணியுடனான போட்டி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த போட்டியாக அமைந்தது. மன்னார் தீவில் பள்ளிமுனை, பனங்கட்டு கொட்டு அணிகளின் விளையாட்டை இரசிக்க கூடும் பார்வையாளர்கள், உதைபந்தாட்ட ரசிகர்களை போலவே எமது மாந்தை மேற்கு பிரதேசஉதைபந்தாட்டரசிகர்களின் கண்ணுக்கு விருந்தாக எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணிக்கும் காத்தன்குளம் சென் ஜோசப் அணிக்குமிடையேயான போட்டி பெரும் எதிர்பார்ப்பு நிறைந்த போட்டியாக இருந்தது.
காத்தாங்குளம் றமேஸ் அந்த அணியில் ஜாம்பவானாக வலம்வந்த காலம் மின்னல் வேக ஓட்டமும் கோல் போடும் திறனும் அவனுக்கு அதிகம் அவனை மட்டும் கட்டுப்படுத்த நாம் அதீத யுத்திகளை கையாள நேரிட்டிருந்தோம். பண்டிவிரிச்சான் மைதானம் பார்வையாளர்களால் நிறைந்திருந்தது ரசிகர்களின் கரகோசத்துடனும், ஆராவாரத்துடனும் அந்த இறுதிப்போட்டி புழுதி கிளப்பி அனல் பறந்தது. றமேஸ் கோல் போட எத்தனித்த ஒவ்வொரு தடவையும் அவனுக்கு ஏமாற்றமே ஜோண்றாஜ் தனக்கே உரித்தான முறையில் றமேஸின் ஒவ்வொரு வாய்ப்பையும் தடுத்து நிதானமாக பந்தை பிடித்து நிலத்தில் போட்டு அடித்தான்.
இரு அணிகளினதும் அதிரடி ஆட்டம் சமநிலையில் முடியவே வெற்றி தோல்வியை தீர்மானிக் தண்ட உதை நடுவரால் வழங்கப்பட்டது.மம்மல் கருகின நேரம்,அடர்ந்த மரங்கள் நிறைந்திருந்ததால் இருட்டுப்பட்ட நேரமாகி விட்டது சனத்திர ஆராவாரம் ஓய்தபாடில்ல நாங்கள் பெனால்டி அடிக்க தயாரானோம், கோல் போஸ்ற் தெரியேல என்ற குற்றச்சாட்டை எதிரணி முன்வைத்து அடுத்தநாள் Rematch வைக்க சந்தர்ப்பம் தேடியது. யாரும் எதிர்பாராத நேரத்தில் “Sir லைற் கட்டுங்க நான் Ready” எண்டு சொல்லி போஸ்ற்றுக்க போய் நிண்டான் நண்பன் ஜோண்றாக் உடனே இரண்டு பெரிய ரியூப் லைற் கொண்டுவந்து கட்டி பெனால்டி அடிக்க தயாரானது, ஜோண்றாச் கோல் கம்பத்தினுள் தயாராக நிற்க நடுவர் பந்தை எடுத்து றயல் பார்த்தார் ,ஜோண்ராஜ்ச் நடுவர் அடித்த பந்தை மிக லாபகரமாக பிடித்து கையில் வைத்து சுற்றவே பெனால்டி அடிக்கமாட்டோம் என்று எதிரணி மைதானத்தை விட்டு வெளியேறியது. மைதானத்தில் வீரர்களை ஒழுங்குபடுத்துவது, முக்கியமான இக்கட்டான நேரங்களில் நேரத்தை நுட்பமாக கடத்துவது போன்ற பல அலப்பறைகளை மைதானத்துக்குள் செய்துகாட்டிய சந்தர்ப்பங்கள் அதிகம்.
தவிர முழங்காவில் விநாயகர் மைதானத்தில் தமிழீழ அணிகள் பங்குபற்றிய உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது நண்பன் ஜோண்றாச் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணியின் கோல்காப்பாளர்களாக சிறப்பாக செயற்பட்டு நடுவரின் தவறால் எமக்கு அநீதி இழைக்கப்பட்ட நாம் அந்த போட்டியில் இருந்து விலகியிருந்தோம் உதைபந்தாட்ட ரசிகரிகளினதும், பார்வையாளர்களினதும் முறைப்பாட்டுக்கு அமைவாக தமிழீழ விளையாட்டுத்துறை பொறுப்பாளர் திரு.பாப்பா அவர்களினால் எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகம் தமிழீழத்தின் சிறந்த அணியாகவும் அதில் எமது நண்பன் ஜோண்றாச் தமிழீழ சிறந்த கோல்காப்பாளர்களாக விருது பெற்று கௌரவிக்கப்பட்ட வரலாறும் பலருக்கு தெரிந்திருக்காது. இன்னும் எமது மாந்தை மேற்கு பிரதேச செயலக உதைபந்தாட்ட போட்டிகள்,கரப்பந்தாட்ட போட்டிகள், இரணை மாதா நகர் தொடக்கம் முருங்கன் வரை எமது ஐக்கிய விளையாட்டுக்கழக கோல்காப்பாளர்களாக தனது அதீத தறமையால் நண்பன் எமது அணியின் வெற்றிக்கு காரணகர்த்தாவாக இருந்திருக்கிறான்.
எமது மாந்தை மேற்கு பிரதேச உதைபந்தாட்ட அணி சார்பாக தெரிவு அணியில் இடம்பிடித்த நண்பன் ஜோண்ராச் மன்னார் மாவட்ட அணியில் பள்ளிமுனை லூசியா அணி சார்பாக நண்பன் அனஸ்ரின் கோல்காப்பாளர்களாக இருந்த அந்நாட்களில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணி சார்பாக கோல்காப்பாளர்களாக செயல்பட்டதும் மறக்கமுடியாததாகும். ஆண்டுகள் பல கடந்தாலும்,மறக்கமுடியாத பல சாதனைகளை, தனது திறமையால் இன்றுவரை நினைக்கபபண்ணும் நண்பா ஜோண்றாச் உனது ஆன்மா இறைவனிடத்தில் அமைதியில் இளைப்பாறுவதாக.
மகத்தான சேவை செய்த எமது சவேரியான் GS.
எமது கிராமத்திற்கே உரித்தான வகையில் கடமை தவறா கண்ணியத்துடன் அரச கருமங்களை, பணிகளை சிறப்பாக ஆற்றியவர்களுள் மண்ணின் மைந்தன் திரு அ.சவேரியான் GS அவர்களுக்கு சிறப்பான தனிமரியாதை உள்ளமை யாரும் மறுப்பதற்கல்ல
திரு.ஆசவேரியான் GS அவர்கள் 1939 ம் ஆண்டு ஆவணி மாதம் 26 ம் திகதி விடத்தல்தீவில் அகுஸ்ரின், ஞானம் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் .தனது ஆரம்ப கல்வியை விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்திலும், உயர்கல்வியை மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கற்றுத்தேர்ந்தார். பின்னர் 1962 ம் ஆண்டு ஆடி மாதம் 18 ம் திகதி அன்று எமது கிராமத்தின் அமல உற்பவம் அவர்களை திருமணம் செய்து பிரான்சிஸ்கா சேவியர் றோகினி சேவியர், அகஸ்ரின் சேவியர், தயாழினி சேவியர் மற்றும் தவறாஜ் சேவியர் என 6 பிள்ளைகள் ,பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
சவேரியான்GS அவர்கள்கிராம சேவகராக 1963 ம் ஆண்டு வைகாசி மாதம் 1ம் திகதி நியமனம் பெற்றிருந்தார். தனது நியமனத்தின் அடிப்படையில் தமது சேவையை மன்னார் மடு பிரதேசத்தில் பாலம்பிட்டி கிராமத்தில் சுமார் 10 வருடங்கள் சிறப்பான முறையில் ஆற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தார். தொடர்ந்து 1974ம் ஆண்டு காலப்பகுதியில் பாலம்பிட்டி கிராமத்தல் இருந்து மாற்றலாகி ய திரு.சவேரியான் GS அவர்கள் மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள நெடுங்கண்டல் கிராம சேவையாளராக 1980ம் ஆண்டு வரை சேவையாற்றியிருந்தார்.
அதன்பிற்பாடு வெள்ளாங்குளம் பிரதேசத்தில் 6 வருடங்கள் சேவையாற்றி ஆட்காட்டிவெளி கிராமசேவகராக தனது கடமையை தொடர்ந்தார். பின்னர் 1996 இல் தனது சொந்த ஊரான எமது விடத்தல்தீவில் தனது சேவையை தொடர விரும்பிய திரு.அ.சவேரியான் GS அவர்கள் மாற்றலாகி எமது ஊருக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
1996ம் ஆண்டு காலப்பகுதி உள்நாட்டு போர் காரணமாக பாதைகள் பூட்டப்பட்டு எமது விடத்தல்தீவில் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பணிமனை இயங்கிய காலப்பகுதியில் திரு. வரதீஸ்வரன் அவர்கள் AGA யாக பணியாற்றிய காலம் அந்த காலகட்டத்தில் விடத்தல்தீவு மன்னார் படகு சேவை மன்னார் கச்சேரி ஊடாக நடைபெற்ற நாட்களில் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர்காரியாலயத்தின் சுமார் 40 தொடக்கம் 50 வரையிலான உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்பாக 1998ம் ஆண்டு வரை நியமிக்கப்பட்டிருந்தார்.
1998ம் ஆண்டு காலப்பகுதியில் தொடங்கி பலதரப்பட்ட கெடுபிடிகள், சிக்கல்களுக்கு மத்தியில் மன்னார் இராணுவத்தால் வழங்கப்பட்ட இராணுவ அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைக்கு பொறுப்பான 40 உத்தியோகஸ்தராக மன்னார் மக்களுக்கு சிறப்பான பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. அந்த நாட்களில் ஆரம்பிக்கப்பட்ட வவுனியா மன்னார் போக்குவரத்து நடைமுறையில் அனுமதி படிவங்களை நிரப்பி அனுமதி பெற்று பயணிக்கவேண்டிய சூழ்நிலை நிலவிய காலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் பல்வேறுபட்ட நெருக்கடிகளை சந்தித்து பயணிகளை ஏற்றி இறக்கும் பாரிய பொறுப்பை சிறப்பாக செய்துமுடித்திருந்தார்.
உள்நாட்டு போரால் நிர்க்கதியான நிலையில் இடம்பெயர்ந்த மக்களுடைய இடைத்தரகராக செயல்பட்ட செயல்வீரன் எமது அ.சவேரியான் GS என்றால் அது மிகையல்ல.
கிராம சேவையாளராக பல்வேறுபட்ட காலங்களில்,பலதரப்பட்ட நிலைகளில் பல்வேறுபட்ட தரப்பினரிடையே சேவையை வழங்கியிருந்த வேளைகளில் அதற்கு கைமாறாக சன்மானங்களையோ , கையூட்டையோ சவேரியான் GS பெற்றதாகவோ அல்லது சேவைக்காலத்தில் மக்களிடத்தில் முரன்பட்டதாகவோ சரித்திரம் இல்லை, சேவையாளனாக அ.சவேரியான் GS அவர்கள் ஒய்வுபெற்றுள்ளமை விடத்தல்மண்ணுக்கும் எமக்கும் பெருமையே.
சவிரியம்மா (புஸ்பம்)
1926 அன்று செபஸ்தி விசிறித்தம்மா ஆகோயாருக்கு மகளாக பிறந்த சவிரியம்மா (புஸ்பம் )மிகுந்த அமைதியும் கடவுள் பக்தியும் கொண்டு பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார் இளமை காலத்திலே எல்லோரோடும் நன்று பழகி பாசம் காட்டி வந்தார் அவர் மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் உள்ளபடியினால் தன் தாய் விசிறித்தம்மா செய்துவந்த பிள்ளை பெறுப்பேற்று சேவையை தானும் செய்ய ஆசைப்பட்டு எங்கு பிரசவம் பார்க்க அவர் அம்மா செல்வாரோ அங்கெல்லாம் அவரும் கூடவே செல்வார் அப்படி சென்று பிள்ளை பெறுவிக்கும் முறைகள் அனைத்தையும் கற்று படிக்காமலே வைத்தியர் ஆனார் பின்பு மனுவேல் பிள்ளை என்பவரை திருமணம் செய்தும் அவர் பிள்ளை பெறுவிக்கும் பணியை தொடர்ந்து செய்து வந்தார் அவர் கணவரும் அதற்கு முழு ஆதரவு வழங்கினார் எந்த நேரம் ஆனாலும் எந்த இருட்டு ஆனாலும் யார் வந்து கூப்பிட்டாலும் உடனே சென்றிடுவார் அந்த பிள்ளை நல்லபடியாக பிறகும் மட்டும் இருந்து பிள்ளையை பெறுவித்துவிட்டுத்தான் வீடு வருவார் விடத்தல் தீவு கள்ளியடி பெரியமடு என்று எல்லா இடங்களிலும் அவர் சேவை செய்திருக்கிறார் பல நூற்றுகணக்கான பிள்ளைகளை பெறுவித்து இருக்கிறார் பெறுவிக்கும்போது எந்த இழப்பும் நடந்ததில்லை கடவுளுக்கு நன்றி அவர் தன்னால் முடியும் வரைக்கும் அந்த பணியை செய்தார் அவர் பேரன் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் இப்போது இத்தனை நவீனம் வந்தும் சுகமாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டும் போகின்றது அன்று எந்த வசதியும் இல்லாமல் எல்லாம் சுகமாக பெறுவிக்கப்ட்டது என்பதும் குறிப்பிடதக்கது.
மருத்துவ மாது பிலோமினா ஜோசப்
மருத்துவ மாது பிலோமினா ஜோசப் இவர் 1928ஆம் ஆண்டு பத்தாம் மாசம் எட்டாம் தேதி ஜோசப் தம்பதிகளின் மகளாக பிறந்தவர் விடத்தல்தீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் சாதாரண தரத்தில் சித்தியடைந்து பின் யாழில் பிள்ளை பேறு மருத்துவம் கற்று, அரசு மருத்துவ சாலையில் பிள்ளை பேறு மருத்துவ தாதியாக இருந்தவர்.
கிட்டத்தட்ட1952 ஆம் ஆண்டளவில் பதவியேற்றார் ஆரம்ப பதவியை யாழ் வைத்திய நிலையங்களில், பணிபுரிந்தார் பின் 1962ஆம் ஆண்டு பள்ளமடு ஆதார வைத்திய நிலையத்தில் பணிபுரிந்தார். முன்னைய காலங்களில் பிள்ளைப் பேற்றுக்காக,தமது இல்லங்களிலேயே ஊரில் உள்ள மருத்துவ ஆச்சிகளே பிரசவம் பார்ப்பது வழக்கம். அரசு வைத்தியத்தை நாடுவதில்லை அறுவை பிரசவமும் நடைபெறுவதில்லை. பிரசவ காலங்களில் கடைசி மாதங்களில் மருத்துவ ஆச்சிகள் வீட்டிலேயே வந்து பல விதமான சரக்குகள் வாங்கி காயவைத்து இடித்து துணியிலே அரித்து எடுப்பார்கள் கற்பம் தரித்து ஏழாம் மாதத்தில் ஒரு நல்ல நாளில் நாட் கடைச்சரக்கு என எல்லாவிதமான சரக்குகளையும் நாட்டு மருந்து கடையில் முழு சரக்கும் வாங்கி கொடுப்பார்கள் பின்னர் அவை வாங்க தேவை இல்லை. மருத்துவ ஆச்சிகள் வெற்றிஆச்சி, ராசம்மா பெத்தா ஞானம்மா பெத்தா மாடத்தா பெத்தா சொக்க ஆரோரோக்கிய,பெத்தா, எனப் பல பெத்தாக்கள், சுயநலம் கருதாது கழைப்பு கருதாது பெற்ற தாயையும்விட மேலான கனிவும் கண்டிப்புமாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் பிரசவ வீட்டிலேயே பணிவிடை செய்து அங்கேயே தங்கி தாயையும் குழந்தையும் பராமரிப்பார்கள். எங்கள் வீடும் மாமி வீடும்(சின்னமாக்கா) நிரந்தரமாக அந்த அன்பான அரவணைப்போடு கூடிய பெத்தாக்கள் தான்,அம்மா அடிக்கடி ஊர்ச்சீதேவிப் பெத்தாக்களை சொல்லிச் சொல்லி மகிழ்வார். அன்றைய தாய்மையின் அருமருந்து அவர்கள் பல மூலிகைச் செடிகளின் பெயர் சொல்லி காட்டில் பறித்துக் தெடுத்து வந்து இரவிரவாக பெரிய பானையில் அவித்து மறுநாட் காலையில் பிள்ளை பெற்றெடுத்தவருக்கு சுடச்சுட குளிக்க வார்த்து மஞ்சள் தடவி ஏற்கனவே தயாராக இருந்த உணவை மறைவாக வைத்து பரிமாறுவார்கள்.
அவர்கள் தான் எங்கள் பாட்டிமார், அவர்கள் மனம் போல இவர்களும் தாராளமாக அள்ளி கொடுப்பார்கள் கோடி புடவையும் அரிசி நெல் உளுந்து தேன் என்பன அளிப்பதை கண்டுள்ளேன் வெற்றி ஆச்சியின் பின் அவர் மகள் புஷ்பமம்மாவும் மருத்துவச்சியாக பணி புரிந்தார். பள்ளமடு ஆதார வைத்தியசாலையில் 1936 ஆம் ஆண்டளவில் முதல் முதல் ஓர் ஆண் குழந்தை பிறந்தது நடராச முத்துபிள்ளை தம்பதிகளுக்கு (பெரியமடு) அப்பிள்ளைக்கு என் பாட்டனார் முத்துராசா என பெயரிட்டு வைத்தியசாலையில் பெரும் பரிசு
கொடுத்ததார்.
அவர் பின்னர் முத்துராசா விதானையார் ஆக பதவியில் இருந்தார் பிலோமினா யோசப் பிளஸம் அன்ரி என அழைக்கப்பட்டார் அழகான தோற்றமும் நீண்ட தலை முடியும் இனிமையான குரலும் கொண்ட புனித அந்தோனியார் பக்தை. இவர்கலை உலகிலும் கால்பதித்தார் அன்றைய திரைப்படமான கடமையின் எல்லை தோட்டக்காரி என திரைப்படங்களில் நடிகையாக நடித்தார் ஊருக்குள்ளும் கற்பிணி பெண்களை தேடிச் சென்று மருத்துவ அறிவுரைகளை வழங்குவார் அரச வைத்தியசாலைகளில் பிரசவிக்க அறிவுரைகள் கூறுவார் பின்னர் பள்ளமடு ஆஸ்பத்திரி பிள்ளை பேற்றுக்கான இடமாக இருந்தது பிரசவம் மட்டுமல்ல தாதியாகவும் பணி செய்வார் எனது கடைசி தங்கையை அவரே பிரசவித்து இந்துமதி எனப் பெயரிட்ட வரும் அவரே,
அப்போது சிறு பராயத்தவளான, என்னிடம் தான் எழுதிய கதைகளை வாசிக்க தருவார் அறநெறியும் ஆன்மிகமும்,கருவாக இருக்கும். பின்னர் அவர் தீப்பொறி பத்திரிகையின் ஆசிரியர் அந்தனிசில் என்பவரைத் திருமணம் செய்தார் சொற்ப கால வாழ்க்கையில் விவாகரத்து பெற்றார். தன் மூத்த சகோதரியின் மறைவுக்குப்பின் அவர் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பில் இருந்தார் பிள்ளைகள் இல்லாததால் கடைசி காலத்தில் கொழும்புத்துறை முதியோர் இல்லத்திலும் மன்னார் பட்டி தோட்ட முதியோர் இல்லத்திலும் அந்தோனியார் புகழ் பாடிய வண்ணம் அவரடி, சேர்ந்தார்.
ஆளுமை நிறைந்த ஆசிரியர், அதிபர் அமரர் கி.றாஜகோண் அவர்கள்
அமரர் கி.றாஜகோண் அவர்கள் 1960ம் ஆண்டு ஆவணி மாதம் 12ம் திகதி திரு. திருமதி கிறிஸ்ரியான் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் கற்று கல்வி பொதுத்தர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து தனது உயர் கல்வியை 1981ம் ஆண்டு யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் நிறைவுசெய்தார்.
கல்வி பொதுத்தர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதி பெற்ற அமரர் கி.றாஜகோண் அவர்கள் கண்டி பிரதேனியா பல்கலைக்கழகத்தில் 1982ம் ஆண்டு தொடக்கம் 1986ம் ஆண்டு காலப்பகுதிவரை கற்று பட்டதாரியாக பட்டம் பெற்றிருந்தார்.
பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டதாரியாக பட்டம் பெற்று எமது விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக நியமனம் பெற்று சமூகக்கல்வி, சித்திரம், மற்றும் புவியியல் பாடங்களை சிறப்பாக கற்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது முன்னாள் அதிபர் அமரர் பெனடிக்ற் மாஸ்ரர் எமது பாடசாலை அதிபராக இருந்த காலப்பகுதியில் எமது பாடசாலையின் அப்போதைய வழக்கத்தில் இருந்த றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயரைமாற்றி தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயம் விடத்தல்தீவு என்ற நாமம் எமது பாடசாலைக்கு சூட்ட அரும்பாடுபட்டிருந்தார்.
மடு கல்வி வலயத்தில் முதன் முதலாக ஆண்கள்,பெண்கள் சாரணியத்தை எமது விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் உருவாக்கிய பெருமை அமரர் கி.றாஜகோண் அவர்களையே சாரும். தொடர்ந்து மடு வலயத்தில் எமது பாடசாலையில் மாணவ முதல்வர்களை உருவாக்கி நிர்வாகத்தை விஸ்திரப்படுத்தியதுடன் எமது பாடசாலையில், Band வாத்திய குழுவை ஆரம்பித்து மடு வலய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக செயற்பட்டிருந்தார்.
பாடசாலை இவ்வளவு பெரிய படிப்பு படிச்சும் தாய், தகப்பனுக்கு சொல்லு கேட்ட புள்ளையா, பதுமயா நடந்தார் எங்கட றோட்டால தோள்ள குடத்த வைச்சு விடியவும்,மம்மல் கருகின நேரத்திலும் தண்ணி அள்ளிக்கொண்டு போவார்.
தானுண்டு தன்ர வேலயுண்டு என்டு படிச்ச படிப்புக்கு பந்தா இல்லாதவர். எல்லோரையும் மதிக்கும் பண்புநிறைந்தவர். பாடசாலையில் நிர்வாகத்தை திறம்பட நடாத்திய அதிபர் றாஜகோண் Sir என்டால் அது மிகையாகாது. பாடசாலை மாணவர்கள் மத்தியில் மிகுந்த நன்மதிப்பை பெற்றிருந்தார் தரம் 1 தொடக்கம் தரம் 13 வரையான மாணவ மாணவிகளை மரியாதையாக நடாத்துவதில் அவருக்கு நிகர் எவருமிலர். இவர் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் யாவும் மரியாதையான சொற்பதங்களாகவே இருக்கும் சுடு சொற்கள் இவர் வாயிலிருந்து வரா. கடும் சொற்களை கொண்டு கடினமான வார்த்தைகளை உபயோகிக்கவே மாட்டார்.
எமதுபாடசாலையில்கல்வியோடு, ஒழுக்கம்,கட்டுப்பாடுகளை வளர்த்து இணைப்பாடவிதானங்களைசரிவர கைக்கொண்டு பாடசாலை விழாக்களை சிறப்பாக நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாடசாலையில் சீருடையை மாணவர்கள் அணிவதில் குறிப்பாக பாதணி அணிந்து மாணவர்கள் பாடசாலைக்கு வருவதை நடைமுறைப்படுத்தியிருந்தார். மாணவ முதல்வர்களுக்கான சின்னத்தை வெள்ளியில் தயாரித்து சூட்டியதில் அதிபர் றாஜகோண் அவர்களது பங்கு அளப்பெரியதாகும்.
பாடசாலை ரீதியான விளையாட்டு போட்டிகள், வலய மட்ட போட்டிகள், மாகாண மற்றும் மாவட்ட மட்ட போட்டிகளுக்கு முன்னுரிமை வழங்கி மாணவர்களை தயார்ப்படுத்தி மடுவலயத்தில் எமது பாடசாலை பல சாதனைகளை நிலைநாட்ட சிறந்த நிர்வாக ஆளுமையை கொண்டிருந்தமை அவரிடமிருந்த சிறப்பியல்பாகும்.
பாடசாலை நிர்வாகத்திற்கும், பழைய மாணவர்கள், பெற்றோருக்கு இடையில் நல்லுறவை பேணியதுடன் பாடசாலையின் அபிவிருத்தியில் ஆதீத பங்காற்றியிருந்தார்.
1997ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து பின்னர் மன் /ஆண்டான்குளம் பாடசாலையின் அதிபராக மாற்றலாகி அங்கு பணியாற்றியிருந்தார். தொடர்ந்து 1999ம் ஆண்டு காலப்பகுதியில் மடு கல்வி வலய சமூகக்கல்வி உதவி கல்வி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மடு வலயத்தில் உதவி கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் MED டிப்ளோமா பட்டம் பெற்று தனது நிலையை மென்மேலும் வளர்த்துக்கொண்டவர் எமது அதிபர் அமரர் கி.றாஜகோண் அவர்களாவார்.2003 ம் ஆண்டு தொடக்கம் 2007ம் ஆண்டு வரை மடு வலய கோட்டக்கல்வி அதிகாரியாக கடமையாற்றியதுடன் எமது மடு,மாந்தை பிரதேசத்தில் கல்வி மற்றும் விளையாட்டு அபிவிருத்திகளை பெறுவதற்கான பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மடு கல்வி வலயத்தின் ஊடாக மேற்கொண்டிருந்தார். 2007ம் ஆண்டு மாசி மாதம் 28ம் திகதி இலுப்பைக்கடவையில் நாட்டுக்கூத்து ஒன்றை அரங்கேற்றியிருந்தார். விளாத்திகுளம் கீரிசுட்டான் பாடசாலையில் எமது கிராமத்தின் ஆசிரியர் அமரர் சி. அமலநேசன் அவர்கள் அதிபராக கடமையாற்றிய காலப்பகுதியில் விளையாட்டு போட்டிக்கு அதிதியாக பங்கேற்கும் வகையில் பயணித்திக்கொண்டிருக்கும் சமயத்தில் ஆள ஊடுருவும் படையணியின் கிளைமோர் குண்டு தாக்குதலுக்கு இலக்காகி அகாலமரணமடைந்தார்.
சிறந்த கல்விமானாக,உயரிய பண்பாளனாக நிலை உயரும் போது பணிவுகொண்டு எமது பாடசாலையையும் ,கிராமத்தையம் மேம்படுத்த பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட எமது அதிபர் அமரர் கி.றாஜகோண் அவர்களது இழப்பு எமக்கும் எமது சமூகத்திற்கும் ஈடுசெய்யமுடியாத, மீள்நிரப்பப்படாத பேரிழப்பாகும்.
றொயிற்றன்
விடத்தல்தீவை சொந்த இடமாக கொண்டு இடம்பெயர்ந்த நிலையில் எமது ஜோசப்வாஸ் நகரில் வசிக்கும் றூபன் மற்றும் விஜயா அவர்களின் தலை பிள்ளயாக 1 தங்கச்சி,3 தம்பிகளுடன். சந்தோசமாக வாழ்ந்துவந்தவன். ஆரம்ப கல்வியை விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்திலும் தனது இடைநிலை மற்றும் உயர்கல்வியை மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் புனித டிலாசால் விடுதிச்சாலையில் தங்கியிருந்து கற்றுத்தேர்ந்தான். பாடசாலை நாட்களில் கல்வியோடு மட்டுமல்லாமல் உதைபந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளில் சிறந்த வீரனாக வலம்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மாணவ பருவத்தில் சக மாணவ நண்பர்களிடத்தில் அதிக நட்பு உறவை பேணிய றொயிற்றனுக்கு அதிகளவு நட்புவட்டாரங்கள் இருந்தது. எல்லோரிடமும் சகஜமாக பழகி நட்பை பேணி வந்திருந்தான்.
தனது வாழ்க்கை துணையாக தான் காதலித்த சாந்தினி அவர்களை கரம்பற்றி தாழ்புபாடு கிராமத்தின் மருமகனாக எல்லோரும் நேசிக்கும் அளவிற்கு அவனது புகுந்த வீட்டில் எமது ஊரின் பெருமை பேசப்படும் வகையில் தனது வாழ்க்கையை வாழ்ந்தவன். குறிப்பாக எமது கிராமத்தில் இருந்து பிற இடங்களில் மணமுடித்தவர்களுள் றொயிற்றனின் வாழ்வு தனிச்சிறப்புவாய்ந்தது எனலாம். எமது ஊரின் அருமை பேருமைகளை பேசும் பொருளாக கொள்ளத்தக்க வகையில்தனது சொந்த உழைப்பில் பலநற்பணிகளையும், உதவிகளையும் செய்துகொண்டிருந்தான். தாழ்புபாடு இளைஞர் மத்தியிலும், விளையாட்டு கழகத்திலும்,
இன்னும் தாழ்புபாடு சமூக மக்களின் பலரின் அன்புக்கும் பாசத்திற்கும் உரியவனாக வாழ்ந்திருந்தான். தனது அயராத கடும் முயற்சி மற்றும் நேர்மையான உழைப்பினாலும் சமூகத்தில் உயர்ந்து கொடுத்து உதவி வாழ்ந்து வந்தவன் எமது றொயிற்றன்.
தமிழ் தேசியம் சம்மந்தமாக கதைப்பான். தமிழ்தேசியத்தில் அதீத பற்றுகொண்ட அவனது நடவடிக்கைகள் அதற்கு சான்றாக இருக்கும். றொயிற்றன் முதன் முதலாக ஆண்டாங்குள மைதானத்தில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் உதைபந்தாட்ட அணி சார்பாக தனது 15 வயதில் விளையாட எங்களோடு அணியில் இடம்பிடத்து தனது துடிப்பான, வேகமான ஓர்மமான விளையாட்டை வெளிப்படுத்தியிருந்தான்.
பண்டிவிரிச்சான் முத்துக்கள் மூன்று வெற்றிக்கிண்ணம், குமரன் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டி காத்தாங்குளம், வீர பிரசவ வெற்றிக்கிண்ணம் வட்டக்கண்டல் வலைப்பாடு,AGA டிவிசன் போட்டிகள் போன்ற ஏகப்பட்ட போட்டிகளில் எம்மோடு ஐக்கிய விளையாட்டுக்கழக A அணியில் இடம்பிடித்திருந்தான். அவனக்கிருந்த ஊர் பற்றும் ஓர்மமும் விளையாட்டில் அவனை உயரத்திற்கு இட்டுச்சென்றது என்றால் அது மிகையாகாது.
சமூகப்பணிகளைதன்சிரமேல்கொண்டு அவற்றை நேர்த்தியாக செய்யும் வல்லமைஅவனிடத்தில்நிறையவே இருந்தது. எதற்கும் அவன் பின்னிப்பதில்லை. ஊரில் அனைத்து விடயங்களிலும் அவனது பங்களிப்பு இருந்தே தீரும். ஆலயம், ஆன்மீகம், பாடசாலை, விளையாட்டு ஊரின் அசாதாரண சூழ்நிலைகளில் உதவும் பண்பு,மற்றும் விளையாட்டு கழகத்தினதும், விளையாட்டு வீரர்களினதும் வளர்ச்சியில் அவனது பங்கு அளப்பெரியதாக இருந்தது. எமது கழகம் சார்பாக அனைத்து போட்டிகளுக்கும் சென்று உற்சாகமூட்டுவது அவனது இயல்பாய் இருந்தது
ஊரில் அவன் கொண்டிருந்த பற்று அக்கறையின் நிமித்தம் கடந்த பிரதேச சபை தேர்தலில் வேட்பாளராக வேட்புமனுதாக்கல் செய்து ஊர் மக்களின் ஆதரவை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. எமது சமூகம் சார்ந்த மாணவர்களது பிரதிநிதியாக மன்/தோட்டவெளி அதக பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளராக முன்மொழிவு செய்யப்பட்டு பாடசாலையின் கல்வி,ஒழுக்கம் மற்றும் விளையாட்டு வளர்ச்சியில் செயல்வீரனாக செயல்பட்டுக்கொண்டிருந்தான். இறுதியாக கடந்த 9/2/2025 ம் திகதியில் மாவட்ட ரீதியில் நடைபெற்ற சதுரங்க போட்டி சம்மந்தமாக 13/2/2025 அன்றும் கூட என்னோடு கதைச்சிருந்தான். அந்த போட்டியில் வெற்றியீட்டி மாகாண மட்டத்திற்கு தெரிவான எமது ஊர் பிள்ளைகள் சம்மந்தமாக தகவலை முகநூலில் பதிவிட சொல்லி தகவல் தந்திருந்தான்.
அவன்ரமரண செய்திய கேட்ட அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. சாவை ஏற்றுக்கொள்ள மனசு மறுக்கிறது. அஞ்சாறு பேர் சேர்ந்து கூட அடிக்க பயப்படும் உருவம் தான் அவன். அவனுக்கா இந்த சாவு.
விடத்தல்தீவு சங்கீத குழு தலைவராக சீமாம்பிள்ளை அவர்கள்
1903 ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி திரு திருமதி சலமோன் அவர்களுக்கு கடைசி மகனாக 2 சகோதரர் மற்றும் 1 சகோதரிகளுடன் எமது விடத்தல்தீவில் பிறந்தார் சீமாம்பிள்ளை அவர்கள். தமது இளம்வயதில் இசைத்துறையில் கொண்டிருந்த அதீத ஆர்வத்தின் காரணமாக ஆர்மோனிய இசையை கற்று எமது ஊர் சார்பான விடத்தல்தீவு சங்கீத கோஸ்டி என்ற நாமத்தில் இசைக்குழுவொன்றை உருவாக்கி பல இசை கச்சேரிகளை நடத்திவந்தார்.
இசைக்குழுவினதும், இசை வளர்ச்சியை கருத்தில் கொண்டு இசை விடுதி ஒன்றை உருவாக்கியதுடன், பல்வேறுபட்ட கச்சேரிகளை நடத்தி பல பாடல்களை பாடி இசை கருவிகளான ஆர்மோனியம்,புல்லாங்குழல், மிருதங்கம்,கைத்தாளம் மற்றும் ஏனைய இசை சாதனங்களை இந்தியாவில் இருந்து பெற்று அவற்றை சிறப்பாக பயன்படுத்தி இசை கருவிகளை மீட்டி கச்சேரிகளை மெருகூட்டியிருந்தார்.
சீமாம்பிள்ளை அவர்களின் இசைத்துறையானது 1940 ம் ஆண்டில் மாந்தை,மற்றும் அடம்பன் ஆகிய பிரதேசங்களில் இசைக்கச்சேரிகளை நடத்தி அரங்கேற்றம் செய்யப்பட்டதுடன் நாளடைவில் விடத்தல்தீவு சங்கீத கோஸ்டியின் தலைவராக அரசாங்கத்தின் அனுமதி பெற்று தமது கச்சேரிகளை நடத்திவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சீமாம்பிள்ளை அவர்கள் பழமைவாய்ந்த பாடல்களில் ஒன்றான “கற்பக வல்லியுன் பொற்பதங்கள் பிடித்தேன்” எனும் இராக மெட்டில் புனித மரியன்னைக்கு "அற்புத அன்னையுன் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா” என்ற பாடலை இயற்றி மருதமடு அன்னைக்கு சமர்ப்பணம் செய்திருந்தார். அத்துடன் தமது பேரனின் வியாதி காரணமாக எமது விடத்தல்தீவு புனித அடைக்கலமாதாவுக்கென பாடல் ஒன்றை இயற்றி "சோதனை மேல் சோதனை போதுமம்மா தாயே, வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது நெஞ்சம்” என அமையும் பாடல் வரிகளை எழுதி வரம்கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு விடத்தல்தீவில் இசை வளரவும், இசையை எமது மண்ணும், மக்களும் தமது வாழ்விலும், ஒவ்வொரு தருணங்களிலும் கொண்டு வாழவும் விடத்தல்தீவு சங்கீத கோஸ்டி மூலமாகவும் தனது தனிப்பட்ட சை அனுபவங்களூடாகவும் இசைத்துறையில் அன்னை மரியாளின் மேல் அதீத பக்தி, விசுவாசத்தை கொண்டிருந்தவராக தமது இசை ஞானத்தை தனது வழித்தோன்றல்களுக்கும், ஊரவர்களுக்கும் பயிற்றுவித்த சீமாம்பிள்ளை அவர்கள் தனது முதுமை காரணமாக 1988ம் ஆண்டு பங்குனி மாதம் 29ம் திகதி இறைபதமடைந்தார்.
பிரான்ஸ் தேசத்தில் பிரகாசிக்கும் கன்னிமலர்.
மன்னார் விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் அதிபர் அமரர் இராயப்பு, அதிபர் அமரர் பெனடிற் ஆகியோர் அதிபர்களாக கடமையாற்றிய காலப்பகுதியீல் ஆசிரியர்களாக, ஆசிரியர் அமீன், ஆசிரியை பொலீன் மற்றும் ஆசிரியை அல்வீனஸ் ஆகியோர் கற்பித்த நாட்களில் பாடசாலையின் கல்வி, விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதானங்களில் எமது பாடசாலை சிறப்பாக செயற்பட்டிருந்தது.
அந்த காலகட்டத்தில் எமது பாடசாலையின் வலைப்பந்தாட்ட அணித் தலைவியாக இருந்து அணியின் வெறாறிக்கு பல வழிகளில் முன்னுதாரணமாக திகழ்ந்தவர் என்றால் அது செபமாலை .கன்னிமலர் என்பது மிகையாகாது. அந்த காலகட்டத்தில் கன்னிமலர் தலமையில் எமது வலைப்பந்தாட்ட அணியில் மரியசீலி செபரட்ணம், உருசிலா தொபியாஸ், மேரிராணி சவேரியான்,அமலோற்பவி மிக்கேல்,மேரியன்னா அந்தோனிப்பிள்ளை, ஆகத்வரோணிக்கா செபஸ்தியாம்பிள்ளை ஆகிய வீராங்கனைகளை கொண்டு எமது அடம்பன் பிரதேச வட்டாரத்தில் சிறந்த ஒரு அணியாகத் திகழ்ந்து பல வெற்றிகளை ஈட்டியிருந்தனர்.
எமது பாடசாலை ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகளில் எமது கிராமத்தின் செபமாலை கன்னிமலர் அவர்கள் தனதுபதினொருவயது பிரிவில் இருந்து ஒவ்வொரு வயது பிரிவிலும் அனைத்து தடகள போட்டிகளிலும் சிறந்த வீராங்கனையாக வலம்வந்து முதன்மை வீராங்கனையாக சாதனை படைத்திருந்தார். அந்த வகையில் 100 m ஓட்டம், 200 m ஓட்டம் உயரம்பாய்தல் போன்ற விளையாட்டுக்களில் முதலிடம் பெற்று சம்பியனாக இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கன்னி மலர் அவர்கள் எமது மாந்தை மேற்கு மற்றும் அடம்பன் வட்டாரத்திலும் மன்னார் மாவட்ட ரீதியிலும் தொடர் சம்பியனாகத் திகழ்ந்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மற்றும் அஞ்சலோட்டம்,நீளம்பாய்தல் நிகழ்ச்சிகளிலும் பாடசாலை வலைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்த சிறப்பான ஆட்டத்தை அந்நாட்களில் வெளிப்படுத்தி விளையாட்டுத்துறையில் சாதனை நிலைநாட்டியிருந்தார். எமது விடத்தல்தீவு முன்னாள் பங்குத்தந்தையும், எமது ஐக்கிய விளையாட்டுக்கழக ஸ்தாபகருமான அருட்பணி றெஜீஸ் ராஜநாயகம் அடிகளார் அவர்களால் எமது கிராமத்தில் ஐக்கியவிளையாட்டுக் கழகம் ஆரமாபிக்கப்பட்ட அந்நாட்களில் கழகத்தின் தலமை பதிவியில் அங்கம் வகித்து தலைவராக கழகத்தை சிறந்த முறையில் நிர்வகித்திருந்தார். அருட்பணி றெஜீஸ் ராஜநாயகம் அடிகளாரை தொடர்ந்து பங்குத்தந்தை அருட்பணி ஜெயசேகர் அடிகளாரினால் விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகம் வழிநடத்தப்பட்டது.
பின்னர் தனது உயர் கல்வியை கன்னிமலர் அவர்கள் மன்னார் புனித சவேரியார் பெண்கள் பாடசாலையில் தொடர்ந்தார். அந் நாட்களில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் வலைப்பந்தாட்ட அணியிலும், தடகள போட்டிகளிலும் சிறப்பான முறையில் பங்குபற்றி பாடசாலை ரீதியிலும் மன்னார் மாவட்டத்திலும் சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டு வரலாற்றில் இடம்பிடித்தார்.
பாடசாலை ரீதியாகவும்,மாவட்ட ரீதியாகவும் பிரகாசித்த கன்னிமலர் அவர்கள் அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற போட்டிகளுக்காக மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரி ( D .S.O.) அவர்களால் ஊக்கப்படுத்தப்பட்டு,பயிற்சிகளை பெற்று அகில இலங்கை மட்டத்திலான போட்டிகளில் பங்குபற்றி சாதனை நிலைநாட்டியிருந்தார். தடகள போட்டிகளிலும் ஏனைய மைதான பெரு விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கிய கன்னிமலர் அவர்கள் விளையாட்டு விளையாட்டு பயிற்சி ஆசிரியராகவும்
,பெண்களுக்கான விளையாட்டு அதிகாரியாகவும் (L. S. O.) எமது மண்ணில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தொடர்ந்து கன்னி மலர் அவர்கள் அந்நாட்களில் மன்னார் மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் செயலாளராக பதவிவகித்திருந்தமையும் கன்னிமலர் அவர்களது சிறப்பம்சமாகும்.
எமது மண்ணில்,மாவட்டத்தில், அகில இலங்கை ரீதியாக விளையாட்டுத்துறையில் பிரகாசித்த எமது கன்னிமலர் அவர்கள் துர்அதிஸ்டவசமாக எமது நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு பிரச்சைனகள் காரணமாக நாட்டை விட்டு புலம்பெயர்ந்த நிலையில் பிரான்ஸ் தேசத்தில் வாழ்ந்துவருகிறார். பிரான்ஸ் தேசத்தில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றி பல விளையாட்டு நிகழ்வுகளில் பரிசுகளையும், வெற்றிகளையும் தனதாக்கிய பெருமை எமது கன்னிமலர் அவர்களையே சாரும். அத்துடன் பிரான்ஸ் தேசத்தில் நடைபெற்றுவரும் விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் குறிப்பாக வலைப்பந்தாட்டம் மற்றும் மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக விடத்தல்தீவு மண்ணில் பிறந்த கன்னிமலர் என்ற விடிவெள்ளி எமது மண்ணிலும் எமது தாயகத்திலும் விளையாட்டுத்துறையில் ஒளிர்ந்து புலம்பெயர்ந்த தேசம் சென்றும் அங்கே தொடர்ந்தும் பிரகாசித்து வருது எமக்கும் எமது மண்ணுக்கும் பெருமையே.
மன்னார் மாவட்ட உதைபந்தாட்டத்தின் தந்தை அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லொஸ்
இலங்கையில் பல்வேறுபட்ட பகுதிகளில் வாழும் பல்வேறுபட்ட துறைகளில் வித்தகர்களாக மிளிரும் ஆயிரக்கணக்கான வர்களின் Role model எமது மண்ணின் மைந்தன் அருட்சகோதரர் ஸ்ரனி அவர்கள் என்றால் அது மிகையாகுது.
"இஞ்ச பார் குஞ்சு விளையாட்டோடு படிப்பும் இருக்கோணும் தனிய விளையாட்டு மட்டும் இருந்து வேலயில்ல படிப்போட விளையாடணும்” என்று தமது சொந்த வாழ்கை வரலாற்றை முன்னுதாரணமாக கொண்டு கல்வியோடு கூடிய இணைப்பாடவிதானங்களை சிறப்பாக தமது மாணவர்கள் கொண்டு அதில் வெற்றியும் காண காரணகர்த்தாவாக இருந்துவருகிறார். இலங்கைத்தீவில் வடக்கே 432 யாழ்ப்பாண மன்னார் பிரதான வீதியில் மன்னார் மாவட்ட புகழ்பூத்த பல வரலாற்று சிறப்புகளை கொண்டிருக்கும் எமது விடத்தல்தீவின் அமரர் சுவக்கின், செபமாலை (முத்தம்மா) தம்பதிகளின் கடைசி பிள்ளையாக 3/10/1958 ம் ஆண்டு பிறந்தார்.
அருட்சகோதரர் ஸ்ரனி அவர்கள் தமது ஆரம்ப கல்வியை 1964 - 1968 காலப்பகுதியில் எமது விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் ( தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயம் விடத்தல்தீவு. ) தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை கற்றிருந்தார் தனது சிறு பராயத்தில் இருந்தே உதைபந்தாட்டத்திலும்,தடகள போட்டிகளிலும் முன்னிலை வகித்து 11வயது பிரிவு தடகள முதன்மை வீரனாக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
பின்னர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் 1969 ம் ஆண்டு தொடக்கம் 1974 ம் ஆண்டு வரை தரம் 6 தொடக்கம் தரம் 11 ( SSC ) வரை கற்று ID 4C 3S என்ற சித்திகளை பெற்றதுடன் கல்வி பொதுத்தர உயர்தர பரீட்சையில் 2B C S என்ற பெறுபேறுகளை பெற்றிருந்தார். புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் விளையாட்டு வரலாற்றில் 13 வயது பிரிவு, 15 வயது பிரிவு மற்றும் 17வயது பிரிவு தடகள போட்டிகளின் முதன்மை வீரனாக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
அருட்சகோதரர் ஸ்ரனி அவர்கள் 1985 ம் ஆண்டு,1986 ம் ஆண்டு,1987 ம் ஆண்டு,1988 ம் ஆண்டு மற்றும் 1989 ம் ஆண்டுகளில் யாழ்ப்பாண பல்கலைகழக உதைபந்தட்டம், கூடைப்பந்தாட்டம், மேசைப்பந்து, மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளில் சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைகழக உதைபந்தட்ட அணி,கூடைப்பந்தாட்ட அணி,மேசைப்பந்து அணி மற்றும் தடகள போட்டிகளின் அணி தலைவராக பதவி வகித்ததுடன் பல்கலைக்கழக விளையாட்டு சபையின் முதல்வராக பதவிவகித்துள்ளார். அத்துடன் 400 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் யாழ் பல்கலைகழக சாதனைவீரனாக அருட்சகோதரர் ஸ்ரனி அவர்கள் சாதனைபடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
புனித டிலாசால் சபையின் அருட்சகோதரராக தனது முதலாவது வாக்குத்தத்தை 17/9/1977 ம் வருடத்திலும், இறுதி வாக்குத்தத்தை 18/8/1984 ம் வருடத்திலும் நிறைவுசெய்துள்ளார். அருட்சகோதரர் ஸ்ரனி அவர்கள் தனது ஆசிரிய பணியின் நிமித்தம் கொட்டேனா கொழும்பு 15 இல் அமைந்துள்ள சென் பெனடிக்ற் கல்லூரியில் 1979 ம் ஆண்டில் இருந்து 1984 ம் ஆண்டுவரை 5 வருடங்கள் ஆசிரியராக பணியாற்றியிருந்தார்.
தொடர்ந்து எமது மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் ஆசிரியராக 1993 ம் ஆண்டு நியமனம் பெற்று பணியாற்றிவந்தார். அந்த காலப்பகுதியில் தான் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி உதைபந்தாட்ட அணி பல மாஜாயால உதைபந்தாட்ட ஜாம்பவான்களை உள்ளடக்கிய அணியாக உதைபந்தாட்டத்தில் சிறந்த கழகங்களுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக இருந்த வரலாறு மறக்கமுடியாததாகும். குயவன்கையில் கிடைத்த களிமண் அழகிய மண்பாண்டமாக மாறுவதை போலவே அருட்சகோதரர் ஸ்ரனி அவர்களது பயிற்சி பட்டறையில் வழிவந்த ஒவ்வொரு வீரரும் தத்தமது திறன்களை வளர்த்துக்கொண்டார்கள். காலையில் தொடங்கும் பயிற்சி, மாலையிலும் தொடரும். கல்வியோடு ஒழுக்கத்தையும் கடைப்பிடித்து விளையாட்டில் மேம்பட அனைத்து மாணவர்களையும் உருவாக்கிய சிறந்த சிற்பியாக எமது அருட்சகோதரர் ஸ்ரனி அவர்கள் இருந்துள்ளார் என்றால் அது மிகையல்ல. உதைபந்தாட்டம்,மேசைப்பந்து, கூடைப்பந்து , மற்றும் தடகள போட்டிகளுக்கென ஒவ்வொரு வீரனையும் இனம் கண்டு அந்த துறையில் சாதாரணமாக இருப்போரை சரித்திர நாயகர்களாக்கி பெருமை சேர்த்தவர் எமது அருட்சகோதரர் ஸ்ரனி அவர்கள். 1993ம் ஆண்டின் பிற்பகுதியில் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி உதைபந்தாட்ட அணி மன்னார் மாவட்ட சிறந்த உதைபந்தாட்ட அணிகளுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக திகழ்ந்த காலம் எனலாம். பார்வையாளர்கள், உதைபந்தாட்ட ரசிகர்கள் College விளையாடும் போட்டிகளை கண்டுகளிக்க முண்டியடித்து வந்து பார்வையிட்ட அந்த நாட்களை எளிதில் மறந்துவிட முடியாது. உதைப்பந்தாட்ட ஜாம்பவான்களான பங்ளி, அனஸ்ரின், ஜோகேஸ், கெஸி, வில்மன், செபமாலை யூட், எட்வின், ஞானறாஜ், சங்கர் போன்ற வீரர்களை கொண்ட புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் உதைபந்தாட்ட அணியில் இறுதி 10 நிமிடங்களில் மைதானத்தினுள் பிரவேசித்து விளையாட்டின் தன்மையை மாற்றி பெறுபேறுகள் என்ன நிலையில் இருந்தாலும் Xaverian Spirn இதுதான் என எதிரணிகள் விளங்கிக்கொள்ளும் வகையில் மாஜாயல வித்தைகளை நிகழ்த்தி மைதானத்தை சுற்றி கரகோசத்தால் நிறைந்த உதைபந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் மாணவர்களின் தோழில் வைத்து கொண்டாடப்பட்ட எமது அருட்சகோதரர் ஸ்ரனி அவர்களது நுட்பம் நிறைந்த விளையாட்டு அந்நாட்களில் திருவிழாவை ஒத்ததாகவே காணப்பட்டது.
ஆட்டம் சூடுபிடித்து இக்கட்டான நிலையில் முதல் பாதி நிறைவுற்றதும் college ரீம் வந்து அருட்சகோதரர் ஸ்ரனி அவர்களை சுற்றிநின்று அருட்சகோதரர் ஸ்ரனி அவர்கள் சொல்லும் ஒவ்வொரு நுட்பங்கள்யும், அறிவுறுத்தல்களையும்,விளையாடிய முதல்பாதியின் சரி பிழைகளை சொல்லும் விதத்தையும் அடுத்து வரப்போகும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் என்னமாதிரியான நுட்பங்களை கையாள வேண்டும் என்ற உதைபந்தாட்ட வியூகங்களை சொல்வதை கேட்பதற்காகவே கூடும் கூட்டம் அருட்சகோதர் ஸ்ரனி அவர்களது உதைபந்தாட்ட மதிநுட்பவியலுக்கு சான்றுபகரும்.
அருட்சகோதரர் ஸ்ரனி அவர்கள் கடந்த 1993 ம் வருடத்தில் புனித சவேரியாரா கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்று பணியாற்றியிருந்ததுடன் 1997ம் ஆண்டில் இருந்து 2010ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கல்லூரியின் அதிபராக பொறுப்பேற்று கல்லூரியின் கல்வி,விளையாட்டு,ஒழுக்கம் மற்றும் ஏனைய பாடசாலை சார் அனைத்து விடயங்களிலும் இமாலய சாதனை அடைய காரணகர்த்தாவாக இருந்துள்ளார். மன்னார் மாவட்டத்தின் பெருநிலப்பரப்பில் தமது சேவையை தொடரும் வகையில் தொடர்ந்து 2011 ம் ஆண்டு தொடக்கம் 2013 ம் வருடம் வரை முகாமைத்துவ பிரதி கல்வி பணிப்பாளராக மடு கல்வி வலயத்தின் தமது சேவையை ஆற்றியிருந்தார்.
பின்னர் மன்னார் பேசாலை புனித பற்றிமா மகாவித்தியாலய அதிபராக கடந்த 2013 ம் ஆண்டில் இருந்து 2018 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அதிபராக நியமனம் பெற்று பேசாலை பகுதியில் சிறப்பான சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் அதிபராக 1997ம் ஆண்டு நியமனம் பெற்று சுமார் 10 தடவைகள் எமது கல்லூரியன் உதைபந்தாட்ட அணியானது மாவட்ட ரீதியாகவும், மாகாண ரீதியாகவும், தேசியளவிலும் தேசிய சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டிருந்த காலம் College வரலாற்றில் பொற்காலமாக இருந்தமை மறக்க முடியாததாகும்.
மேலும் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் உதைபந்தாட்ட அணியானது 5 தடவைகள் தேசிய ரீதியாக உதைபந்தாட்டத்தல் 2வது இடத்தையும், 5 தடவைகள் தேசீய ரீதியாக 3வது இடத்தை உதைபந்தாட்ட போட்டியில் பெற்றிருப்பதும் எமது அருட்சகோதரர் ஸ்ரனி அவர்களது பணிக்காலத்தில் என்பதும் சிறப்பே.
பேசாலை புனித பற்றிமா மகாவித்தியாலய அதிபராக பணிபுரிந்த 2013 - 2018 வரையான காலப்பகுதியில் படசாலை புனித பற்றிமா மகாவித்தியாலயம் தடகள போட்டிகளில் மாகாண சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டிருந்ததுடன் பூப்பந்து போட்டியில் தேசிய ரீதியாக சம்பியனாக ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் சம்பியனாக தெரிவான வரலாறும் எமது அருட்சகோதரர் ஸ்ரனி அவர்களையே சாரும்.
அருட்சகோதரர் ஸ்ரனி அவர்கள் புனித டிலாசால் சபையின் Postlancy இயக்குநராக (கொழும்பு முத்வல் ) பணியாற்றியதுடன்,மன்னார் புனித டிலாசால் இல்லத்தின் இயக்குநராகவும், மன்னார் மறைமாவட்ட டிலாசால் சபையின் அருட்சகோதரர்களது, ஆலோசகராகவும் அவர்களது இணைப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.
அருட்சகோதர் ஸ்ரனி அவர்களினதும் மன்னார் மண்ணில் உதைபந்தாட்டத்தின் வளர்ச்சியல் அருட்சகோதரர் ஸ்ரனி அவர்கள் ஆற்றிய இமாலய சாதனைகளை கருத்தில் கொண்டு “மன்னார் மண்ணின் உதைபந்தாட்டத்தின் தந்தை” என்ற உயரிய கெளரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை வரலாறாகும். மேலும் அருட்சகோதரர் ஸ்ரனி அவர்களது வாழ்க்கை வரலாறு கல்வியோடு இணைந்த விளையாட்டாகவே இருந்து வந்தது . தமது உயர்கல்வியை யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் 1984ம் ஆண்டு தொடக்கம் 1989 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கற்று B.Com பட்டம் பெற்றவுடன், றோமாபுரியில் 1990களில் Formators பாடநெறியை பூர்த்திசெய்திருந்தார். தொடர்ந்து 08/12/1992 ம் வருடத்தில் M.A.பட்டத்தையும் பெற்றிருந்தார். அத்துடன் கொழும்பு திறந்த பல்கலைகழகத்தில் 1/4/1996 ம் ஆண்டு காலப்பகுதியில் கல்வியில் டிப்ளோமா பட்டத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது. இன்னும் அருட்சகோதரர் ஸ்ரனி அவர்கள் கொழும்பு பல்கலைகழகத்தில் PGDEM என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். 2006 ம் வருடத்தில் MED பட்டத்தை யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பெற்றுள்ளமை அருட்சகோதரர் ஸ்ரனி அவர்கள் கொண்டிருக்கும் தமது கல்வி சார் தகமைகளின் சிறப்பம்சமாகும்.
ஊரில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் வலைப்பாடு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு போக முதல் 2 நாட்கள் அருட்சகோதரர் ஸ்ரனி அவர்களுடைய தலமையில் A B ஆகிய இரு அணிகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அந்த போட்டியில் எலியாஸ் அண்ணன் Bro .ஸ்ரனி ஆகியோரின் இணைந்த சிறப்பான ஆட்டத்தின் பயனாக AB அணிகள் இரண்டும் இறுதியாட்டத்திற்கு தெரிவாகியிருந்தமை வரலாறாகும். மேலும் எமது விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பின் தலைவராக கடந்த 3 வருடங்கள் பதவிவகித்து சிறப்பான சேவையை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தனது சிறுபராயத்தில் இருந்தே தனது கல்வியோடு, இணைந்த விளையாட்டையும் சமமாக பேணி அதில் வெற்றியும் கண்டு மன்னார் உதைபந்தாட்டத்தின் தந்தையாக கௌரவிக்கப்பபட்டுள்ளார்.
"இடிபாடுகளிலிருந்து வேர்கள் வரை: ரிச்சர்டின் மறுமலர்ச்சி பயணம்"
சிறிய மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கு வளர்ச்சி என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே இருக்கும் உலகில், விடத்தல்தீவு மற்றும் அதன் அண்டை குடியிருப்புகளான ஈச்சலவக்கை, ஜோசவாஸ் நகர் மற்றும் தோட்டவெளி ஆகிய கிராமங்கள் நம்பிக்கை மற்றும் மாற்றத்தின் கலங்கரை விளக்கங்களாக மாறியுள்ளன. இந்த மாற்றத்தின் மையத்தில் விடத்தல்தீவின் மகனான சவேரியன் ரிச்சர்ட் தேவராஜ் உள்ளார், அவர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்தாலும், தனது வேர்களை ஒருபோதும் துண்டிக்கவில்லை. சேவை நிறைந்த இதயத்துடன் அவர் நிறுவிய SRT அறக்கட்டளை மூலம், ரிச்சர்ட் தான் வீடு என்று அழைக்கும் சமூகத்தை மேம்படுத்தவும் மீண்டும் கட்டியெழுப்பவும் அயராது உழைத்து வருகிறார்.
அறக்கட்டளையின் மிக ஆழமான பங்களிப்புகளில் ஒன்று கல்வித் துறையில் உள்ளது. சமீபத்தில், SRT அறக்கட்டளை தோட்டவெளி நூலகத்திற்கு கல்விப் பொருட்களை குறிப்பிடத்தக்க அளவில் நன்கொடையாக வழங்கியது. தமிழ், சமூக ஆய்வுகள், அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் போன்ற அத்தியாவசிய பாடங்களை உள்ளடக்கிய 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான தமிழ் கல்வி புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன, மேலும் பரந்த அணுகலை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு புத்தகத்தின் மூன்று பிரதிகளும் வழங்கப்பட்டன. கூடுதலாக, G.C.E. 2013 முதல் 2022 வரையிலான ஆண்டுகளை உள்ளடக்கிய சாதாரண தர (சா/த) கடந்த கால வினாத்தாள் தொகுப்புகள், மூத்த மாணவர்கள் தங்கள் முக்கியமான தேர்வுகளுக்குத் தயாராக உதவுவதற்காக நன்கொடையாக வழங்கப்பட்டன ஒவ்வொரு புத்தகமும் பெருமையுடன் SRT அறக்கட்டளையின் அடையாளத்தைத் தாங்கி நிற்கிறது - இது சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் அடையாளமாகும்.
இதன் தாக்கம் புத்தகங்களை ஒப்படைப்பது மட்டுமல்ல; கற்றலுக்கான இடத்தை புத்துயிர் பெறுவது பற்றியது. ஒரு காலத்தில் முழுமையடையாத சுவர்கள் மற்றும் ஐன்னல்கள் இல்லாத ஒரு இடிந்த கட்டிடம், உறுதியான காட்சி மேசைகள், ஒழுங்கமைக்கப்பட்ட அலமாரிகள் மற்றும் இயற்கை ஒளி
ஊற்றப்படும் ஒரு துடிப்பான நூலகமாக மாற்றப்பட்டது. உள்ளூர் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து பணியாற்றினர் - சம்பிரதாயங்கள் இல்லை, கைகள் மற்றும் இதயங்கள் மட்டுமே - இடத்தை கற்றலின் சரணாலயமாக மாற்றினர். இந்த எளிய ஆனால் ஆழமான செயலில், SRT அறக்கட்டளை ஒரு நூலகத்தை மட்டும் உருவாக்கவில்லை; அவர்கள் கிராமத்தின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கான ஒரு பாலத்தைத் திறந்தனர்.
கல்விக்கு அப்பால், ரிச்சர்டின் சேவை சமூகத்தின் ஆன்மீக வாழ்க்கையை மீட்டெடுப்பதில் நீட்டிக்கப்பட்டது. இழப்பு மற்றும் புறக்கணிப்பைக் குறிக்கும் ஒரு காலத்தில் பாழடைந்த கட்டமைப்பாக இருந்த பெரியமடு தேவாலயம், இப்போது அழகு மற்றும் நம்பிக்கையின் வீடாக மாற்றப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் அயராத நிதி திரட்டும் முயற்சிகள் மூலம், ரிச்சர்ட் தேவாலயத்திற்கு புதிய உயிர் கொடுக்க ஆதரவைத் திரட்டினார். இன்று, அது புதிதாக வர்ணம் பூசப்பட்டு, அழகாக ஒளிரச் செய்யப்பட்டு, ஒரு புதிய பலிபீடம் மற்றும் சரியான இருக்கை ஏற்பாடுகளுடன், கவனமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இடிந்து விழுந்த தேவாலயம், இப்போது அதன் இருக்கைகள் மக்கள் பிரார்த்தனை செய்து ஆறுதல் பெறுவதால் நிரம்பியிருப்பதைக் காண்கிறது - நம்பிக்கையின் துடிப்பான சின்னம் மீண்டும் பிறக்கிறது.
இருப்பினும், ரிச்சர்டின் சமூகத்திற்கான பார்வை கல்வி மற்றும் மதத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை; அது வாழ்க்கையை நிலைநிறுத்தும் மண்ணுக்கும் நீட்டிக்கப்பட்டது. SRT அறக்கட்டளை மூலம், ஈச்சலவாக்கை குடியிருப்பாளர்களிடையே தென்னை, வாழை மற்றும் மா மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. இந்த விநியோகம் வெறும் ஒரு துண்டுப்பிரசுரம் மட்டுமல்ல, நிலைத்தன்மை மற்றும் எதிர்கால செழிப்புக்கான உறுதிப்பாட்டின் ஆழமான அடையாளச் செயலாகும். சமூக உறுப்பினர்கள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் இந்த மரக்கன்றுகளை தங்கள் கைகளால் நட்டு, நிலத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க ஒன்றிணைந்தனர். இன்று, ஒரு காலத்தில் தரிசு நிலங்கள் மீண்டும் பசுமையாக உள்ளன, மேலும் விவசாய நடவடிக்கைகள் மீண்டும் புத்துயிர் பெறுகின்றன, இது உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சுதந்திரத்திற்கு வழி வகுக்கின்றன.
SRT அறக்கட்டளையால் கொண்டு வரப்பட்ட மாற்றம் முழுமையானது. இது புனித இடங்களை புதுப்பிப்பதன் மூலம் ஆன்மாவை உயிர்ப்பிக்கிறது, கல்வி வளங்கள் மூலம் மனதை மேம்படுத்துகிறது மற்றும் சுற்றுச்சூழல் முயற்சிகள் மூலம் பூமியை வளர்க்கிறது. இது வெறும் வளர்ச்சி அல்ல; இது ஆன்மீக, அறிவுசார் மற்றும் சுற்றுச்சூழல் வாழ்க்கையின் முழுமையான மறுமலர்ச்சி.
சவேரியன் ரிச்சர்ட் தேவராஜின் சேவைப் பயணம் SRT அறக்கட்டளை நிறுவப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கியது. ஒரு சிறுவனாக, அவர் விடத்தல்தீவில் “மகிழ்ச்சி குழு”வை இணைந்து நிறுவினார், ஆரம்பத்தில் சமூக சேவையின் விதைகளை விதைத்தார். பலதசாப்தங்களுக்குப் பிறகு கடல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும், ஒருவரின் வேர்கள் மீதான உண்மையான பக்தி தூரத்தையும் நேரத்தையும் தாண்டியது என்பதை அவர் நிரூபித்துள்ளார். பணிவு மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மூலம், ஒருவரின் சமூகத்திற்கான சேவை ஒரு கட்டம் அல்ல, ஆனால் வாழ்நாள் அழைப்பு என்பதை ரிச்சர்ட் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். இன்று, விடத்தல்தீவின் குழந்தைகள் உறுதியான கூரைகளின் கீழ் படிக்கிறார்கள், விசுவாசிகள் புதுப்பிக்கப்பட்ட தேவாலயத்தில் மண்டியிடுகிறார்கள், புதிய மரக்கன்றுகள் தங்கள் தோட்டக்காரர்களின் கண்காணிப்பு கண்களின் கீழ் சீராக வளர்கின்றன - இவை அனைத்தும் ஒரு மனிதன் தான் எங்கிருந்து வந்தான் என்பதை மறக்க மறுத்ததால் சவேரியன் ரிச்சர்ட் தேவராஜின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பு மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சிகள் மூலம், விடத்தல்தீவு மீண்டும் கட்டியெழுப்புவது மட்டுமல்ல - அது செழித்து வருகிறது. இடிபாடுகளிலிருந்து வேர்கள் வரை, இது வெறும் மறுசீரமைப்பின் கதை மட்டுமல்ல; இது அன்பு, மீள்தன்மை மற்றும் நம்பிக்கையின் உயிருள்ள சான்றாகும்
விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக வீரர் ப. எட்வேட் றாஜா.
எமது மக்களால் புறோக்கர் என அறியப்படுகின்ற திரு.எட்வேட் றாஜா அவர்கள் 1967/6/22 ம் திகதி எமது கிராமத்தின் திரு திருமதி பஞ்சலிங்கம் தம்பதியின் மகனாக பிறந்தார். 3 சகோதரர்களுடனும் 5 சகோதரிகளுடனும் வாழ்ந்து வந்த திரு எட்வேட்ராஜா அவர்கள் மரிய ஜெனிற்றா அவர்களை 1989/2/24 ம் திகதி திருமணம் செய்து 4 ஆண் பிள்ளைகளுடன் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து வந்த நிலையில் 1999ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் ஜோசப்வாஸ் நகரில் வசித்து வருகிறார். எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக வரலாற்றில் A அணியில் பின்கள தடுப்பு வீரராக நெடுங்காலமாக விளையாடிய வீரரும்,சிறந்த பின்கள வீரர் என்ற பெருமைக்கும் உரியவர் எமது எட்வேட்றாஜா அவர்களையே சாரும்.
1985 ம் ஆண்டு காலப்பகுதியில் நாச்சிக்குடாவில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்திற்காக தனது முதலாவது உதைபந்தாட்ட போட்டியின் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் எட்வேட்ராஜா அவர்கள். அல்ஜினா அணியுடன் நடைபெற்ற அந்த இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தை எமது கழகம் பெற்றிருந்தது. தனது முதலாவது உதைபந்தாட்ட போட்டியில் தனது அனுபவத்தை பகிரும் போது திரு.எட்வேட் றாஜா தமது குடும்ப நிலையினை கருத்தில் கொண்ட எமது ஐக்கிய விளையாட்டுக்கழக நிர்வாகம் அந்த காலத்தில் தான் விளையாடிய 3 போட்டிகளுக்கும் தலா 25/= வீதம் 75/= வழங்கி உதவியதை நினைவுபடுத்தியிருந்தார்.
இசுதோர், ஞானசீலன், எலியாஸ், தேவா, மரியதாஸ், ஏசண்டு, கியோமர், அமரர் வீனஸ், பயஸ்,அருட்சகோதரர் ஸ்ரனி மற்றும் அருட்பணி ஸ்ரிபன் ராஜா அடிகளாருடன் இணைந்த அணியாக தமது ஆரம்ப கால உதைபந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பண்டிவிரிச்சான், பாலம்பிட்டி, அடம்பன், முருங்கன், இத்திக்கண்டல், முழங்காவில், நாச்சிக்குடா, வலைப்பாடு, இரணமாதநகர், பெரியமடு, தட்சனாமருதமடு, காத்தாங்குளம், நெடுங்கண்டல் போன்ற இடங்களில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணி வெற்றிபெற்று சாதனைபடைக்க பின்கள வீரராக சிறப்பான ஆட்டத்தை அந் நாட்களில் வெளிப்படுத்தியிருந்தார். சக வீரர்களாக எலியாஸ், பயஸ், கியோமர் ஆகிய சிறந்த முன்கள வீரர்களின் இணைந்த தமது அணி செல்லும் இடங்களில்,பங்குபற்றிய போட்டிகளில் சுமார் 5 கோல்களுக்கு குறையாமல் பெற்றிருப்பதும், அதிகூடிய கோலாக அந்நாட்களில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணி ஒரு அணிக்கு 12 கோல்களை அடித்த வரலாற்றையும் நினைவுபடுத்தியிருந்தார்.
இத்திக்கண்டலில் நெடுங்கண்டல் அணியுடனான நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டியில் தலையில் அடிபட்டு மயக்கமடைந்த நிலையில் நோயாளர் அவசர காவு வண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அவ் போட்டியிலும் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியதையும், எமது ஊரில் கருப்புலிகள் மைதானத்தில் நடைபெற்ற தளபதி விக்டர் நினைவு கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் அரையிறுதி போட்டியில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணிதண்ட உதையில் தோல்வியுற்ற அந்த சிறப்பான விளையாட்டையும் தனது வாழ்நாளில் மறக்கமுடியாத நினைவுகளாக விபரித்திருந்தார்.
அந்நாட்களில் விளையாட்டு வீரர்களுக்கும், எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்திற்கும் நிதி உதவிகளை வழங்கியதுடன் விளையாட்டு அணிகலன்களையும் சாப்பாடுகளையும் வழங்கிய அமரர் சலமோன், அமரர் செபராசா, திரு டோமினிக், திருகஎலியாஸ் போன்ற எமது கிராமத்தின் கடலுணவு கொள்வனவு உரிமையாளர்களையம் தமது வாழ்நாளின் மறக்கமுடியாது என்றும் திரு. எட்வேட்ராஜா அவர்கள் தமது நன்றியுணர்வை வெளிப்படுத்தியிருந்தார். தற்காலத்தில் தம் காலத்தை போல் அல்லாத பல விளையாட்டு திறனை கொண்ட வீரர்கள் எமது கழகத்தில் இருந்து எமது ஊருக்காக விளையாடி வரும் வேளையிலும் கட்டுபாடு, தலமைத்துவத்திற்கு பணிவு போன்றவற்றை எமது இளம் சமூதாய வீரர்கள் தமது காலத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திரு எட்வேட் றாஜா அவர்களே தாங்கள் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக உதைப்பந்தாட்ட அணிக்காக எமது ஊருக்காகதமதுகாலத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எமது கழகம் பலவெற்றிக்கனிகளை சுவைக்க பல்வேறுபட்டதியாகங்களை புரிந்த பங்களிப்பை 1993 ம் ஆண்டு எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணிக்காக தொடர்ந்து எமது கழகம் சார்பாக பல உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் விளையாடினார்.
ஐக்கிய விளையாட்டுக்கழக வாழ் நாள் சாதனையாளர் எங்கள் எலியாஸ்.
தனது 72 வது வயதை கடந்தும் இன்றும் மைதானத்தில் கால்பதித்துக்கொண்டிருக்கும் மூத்த வீரர் எலியாஸ் அவர்கள் எமது மண்ணின் ஐக்கிய விளையாட்டுக்கழகம் ஆரம்பமாகிய அன்று தொட்டு இன்று வரை எமது கழகத்திற்காக விளையாடி வரும் வீரர் எண்ணிலடாங்கா கோல்களை எமது கழகத்திற்காக பெற்றுத்தந்தவர் .. முன்களத்தில் அன்று முதல் எலியாஸ் என்றால் எதிரணியில் எந்த தடுப்பு எத்தனை தடுப்புக்கள் இருந்தாலும் எந்த கலக்கமும் இன்றி இலாபகமாக கோல்களைப்போடும் மாயாயால வித்தைகளைக் கொண்டவர்.
சுமார் 72 வயதைத்தாண்டியும் இன்றும் எமது 40 வயதிற்கு மேற்பட்ட உதைபந்தாட்ட அணியிலும் விளையாடுவது #எலியாஸ் அவர்கள் உதைபந்தின் மீது கொண்டிருக்கும் அதீத காதல் என்றால் அது மிகையல்ல. மிகச்சிறப்பான விடயம் எமது கிராமத்திற்குரித்தான சொத்து என நாம் நாமம் காக்கும் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்தை ஒரு கழக அணியாக பதிவு செய்வதற்காக தன்னிச்சையாக பல முயற்சிகளை செய்த உத்தமன் எங்கள் #எலியாஸ் ஐயா நன்றிகள் கூற வார்த்தைகள் போதாது.50 வருடங்களை கடந்த எமது கிராமத்தின் அடையாளம் எமது ஐக்கிய விளையாட்டுகழகம். விடத்தல்தீவு வரலாற்றில் ஐக்கிய விளையாட்டு கழகத்தை உருவாக்கிய அப்போதைய பங்குத்தந்தை ரெஜிஸ் ராய நாயகம் அடிகாளாருடன்,கழகத்தை பதிவு செய்ய கால்நடையாக சென்று அடம்பன் உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்தில் பதிவு செய்த எலியாஸ் அவர்கள் வரலாற்று நாயகனாக மிளிர்கிறார்.
மாந்தை பெருநிலப்பரப்பில் அதிகளவு இளைஞர் யுவதிகளை கொண்டு 4 B C என ஒரே கழகத்தில் அணிகளை கொண்டு, விளையாட்டு நிகழ்வுகளில் குறிப்பாக உதைபந்தாட்டத்திலும், கரப்பந்தாட்டதகதிலும் வலைப்பந்தாட்டத்திலும் பல வெற்றிகளை பெற்ற எமது ஐக்கிய விளையாட்டு கழக வீரர் எலியாஸ் அவர்களின் ஒரே நோக்கம் ஒன்றுபட்ட ஊரின் வெற்றிகள் மட்டுமே. நிரந்தர இளைஞனாக இன்றும் உதைபந்தாட்டம் என்றால் மைதானத்தில் கால்பதிக்கும் எலியாஸ் அவர்கள் தனது சாதனையின் கடந்தகால நினைவுகள் பலவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறார். வணக்கம் எலியாஸ் அண்ண தங்கள் குடும்ப பின்னனி பற்றி சுருக்கமாக கூறமுடியுமா? வணக்கம், தம்பி. மன்னார் மாவட்டத்தில் விடத்தல்தீவு என்னும் ஊரில் 4/11/1953 ம் ஆண்டு பிறந்தேன். அந்தோனிமுத்து,செபமாலை எனது பெற்றோர். எனக்கு 3 சகோதரிகளும், 2 சகோதரர்களும். எனது மனைவியின் பெயர் மேரிமலர். எங்களுக்கு 30/8/1976 இல் திருமணம் நடைபெற்றது. எமக்கு 9 பிள்ளைகள் 5 பெண்பிள்ளைகளும், 4 ஆண்பிள்ளைகளும். அனைவரும் திருமணம் செய்துவிட்டனர். 1999 ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தற்பொழுது ஜோசப்வாஸ் நகரில் வசித்துவருகிறோம்.
உதைபந்தாட்டம் இல்லை என்றால் நீங்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு உதைபந்தாட்டத்தையும் உங்களையும் பிரிக்க முடியாது, எவ்வாறு நீங்கள் உதைபந்தாட்டத்திற்குள் பிரவேசித்தீர்கள்? உங்கள் ஆரம்பம் என்ன? இம்மனுவேல் மாஸ்ரர் தான் நான் உதைபந்தாட்டத்திலும்,கரப்பந்தாட்டத்திலும் பிரகாசிக்க முழுக்காரணம், 1968/1969 ஆண்டுகளில் நான் எனது 15 வது வயதில் அடம்பன் செலக்ரர் அணிக்கு எதிராக முதலாவது போட்டியில் விளையாடினேன். அந்த போட்டியில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் 3 கோல்களை பெற்றிருந்தது. நான் அதில் 1 கோலை எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணிக்காக பெற்றுக்கொடுத்தேன். தைபந்தாட்டம்,கரப்பந்தாட்டத்தை தவிர வேறு ஏதாவது தடகள போட்டி விளையாட்டுகளில் ஈடுபட்டதுண்டா?
ஆம்football,volleyball ஐ தவிர எமது மாந்தை மேற்கு பிரதேசத்தில் 100m, 200m, 400m ஓட்ட நிகழ்ச்சிகளில் பங்குபற்றி முதலிடம் களை பெற்றிருந்தேன். நீங்கள் விளையாடிய பிரதேசங்கள் மாந்தை மேற்கு மட்டுமா? அல்லது வெளிமாவட்டங்களுக்கும் சென்றுள்ளீர்களா?
மாந்தை மேற்கு பிரதேசம் மட்டுமல்ல, மடுப்பிரதேசம், யாழ்ப்பாணம், முழங்காவில், இரணைதீவு ,பள்ளிக்குடா போன்ற பல பிரதேசங்களில் விளையாடி வென்றுள்ளோம்.
எமது ஊரில் ஏதாவது உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி உங்களது காலத்தில் நடந்துள்ளதா? ஞாபகத்தில் இருப்பதை பகிர முடியுமா?
ஆம், எமது ஊரில் கியோமராணி வெற்றிக்கேடயம் மன்னார் மாவட்டம்,உட்பட பல பிரதேச அணிகள் பங்குபற்றியது. அந்த போட்டியில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் இரணை தீவு அணிக்கு இறுதிப்போட்டியில் 3 கோல்களை போட்டு வெற்றியீட்டியது. அடுத்த இன்னுமொரு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மெடோண், கீதா என்ற பெயரில் எமது ஊரில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இந்த போட்டியில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணி இறுதிப்போட்டியில் மன்னார் பனங்கட்கொட்டு சென். ஜோசப் அணியுடன் தோல்வியை தழுவிக்கொண்டது.
உங்களது உதைபந்தாட்ட காலத்தில் உங்களோடு அணியில் விளையாடிய வீரர்களை கூற முடியுமா? என்னோடு 4 ரீமில் விளையாடியவர்கள் ஞானசீலன்,பயஸ், கியோமர், எட்வேட்றாஜா, சகாயாராசா, சத்தியகாந்தன், கொண்சாளஸ், இசுதோர், தவராஜ், தேவா, இப்படி கனபேர். நாங்கள் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணிக்காக அதிக வருடங்கள் விளையாடி பல போட்டிகளில் வெற்றிவாகை சூடிய வரலாறு உண்டு எமது ஐக்கிய விளையாட்டுக்கழகA,B அணிகள் இரண்டும் இறுதிப்போட்டிக்கு தெரிவான சந்தர்ப்பங்கள் நிறைய இருந்துள்ளதாம். அதை பற்றி கொஞ்சம் கூறுங்கள்.
ஆம்,நிறைய,எமது ஐக்கிய விளையாட்டுக்கழக A,B அணிகள் இரண்டும் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதிபெற்ற வரலாறு நிறையவே உள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் அடம்பன் பிரதேசத்தில் நிறைய தடவைகள், முழங்காவிலில், முத்துக்கள் மூன்று போட்டி பண்டிவிருச்சானில், தட்சனாமருதமடு, பாலம்பிட்டி போன்ற இடங்களிலும், முக்கியமா Bro.ஸ்ரனி, Fr. ஸ்ரிபன் அவர்களோடு வலப்பாட்டில் நாங்க A,Bயும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது மறக்கமுடியாது. Bro.ஸ்ரனி கிளிநொச்சி அணியான உரித்திரபுர அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சொல்லி சொல்லி கோல் அடித்தது இன்றும் நினைவில் உள்ளது.
இறுதியாக நீங்கள் ஊரில் விளையாடிய போட்டி பற்றி கூறுங்கள்.
எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்திற்கு அப்போது திரு.அலோறண்ஸ் அவர்கள் தலைவராக தலமைதாங்கிய காலப்பகுதி ஊரில் கரும்புலிகள் மைதானம் ஒன்றை உருவாக்கி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணி 2:0 என்ற கோல் அடிப்படையில் நாச்சிக்குடா அணியை வெற்றியீட்டியது. அதுவே எனது இறுதி,உதைபந்தாட்ட போட்டியாக அமைந்தது.
நீங்கள் விளையாடிய காலகட்டத்தில் மறக்கமுடியாத சம்பவங்கள் ஏதும் இருந்தால் பகிர முடியுமா? ஆம் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணி மாந்தை பிரதேசத்தில் பாலப்பெருமாள் கட்டு, வட்டக்கண்டல் அணிக்கு எதிராக 11 கோல்களை போட்டோம், அதில் நான் 7 கோல்களை எமது அணிக்காக பெற்றுக்கொடுத்தேன். அத்துடன் எமது அணிக்கான 12வது கோலை போட அவர்களது கோல் கம்பத்தின் அருகில் சென்று அதை கோல் அடிக்காமல் திருப்பி கொண்டு வந்தது மறக்க முடியாததாகும்.
எமது ஊருக்காக விளையாடி பேரப்பிள்ளைகளை கண்டும் இன்றும் விளையாடிக்கொண்டிருக்கும் நீங்கள் எமது இளம் தலமுறைக்கு சொல்ல விரும்புவது எதனை? எமது ஊரில் ஆற்றல்கள், திறமைகளை கொண்ட இளம் வீர,வீராங்கனைகள் நிறைய இருக்கிறார்கள் ஊருக்காக விளையாட்டில் தமது அர்பணிப்புகளை வழங்கியும் வருகின்றார்கள் அவர்களுக்கு எனது பாராட்டுகள். ஆனால் எமது ஊரைபிரித்து கையாளும் வகையில் செயல்படும் ஒரு சிலருடைய சிந்தனைகளும், செயற்பாடுகளும் ஒன்றாய் இருந்த எமக்கு பெரிய வேதனையையும், கவலையையும் உண்டுபண்ணியுள்ளது. எமது ஒரே நோக்கம் ஒன்றுபட்ட ஊரின் வெற்றி மட்டுமே.
மற்றும் ஊரில் ஏதாவது விளையாட்டு நிகழ்வுகள் என்றால் என்னை அடிக்கடி அழைத்து கௌரவப்படுத்தும் ஐக்கிய விளையாட்டுக்கழக நிர்வாகம் மற்றும் எனது ஊர் மக்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன். நன்றிகள் எலியாஸ் அண்ண உங்கள் வரலாற்று நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டமைக்கு 72வயதை கடந்தும் இன்றும் விளையாட்டிற்காக தனது துருதுருக்கும் கால்களால் மைதானத்தில் பிரவேசிக்கும் எமது நிரந்தர இளைஞன், ஐக்கிய விளையாட்டுக்கழக ஜாம்பவானான எலியாஸ் அண்ணன்.
பெயரிலேயே உதையை கொண்ட உதையனின் உதைபந்தாட்ட சரித்திரம்.
எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக முன்னாள் மத்தியகள முன்னணி வீரனும் தனக்கென்று ஒரு விளையாட்டு ஸ்ரையிலை உருவாக்கி மிக இளம் வயதிலேயே எமது கழக A அணியில் இடம்பிடித்த உதையன் அவர்கள் தாம் ஐக்கிய விளையாட்டுக்கழக வீரனாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வரலாற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
1) வணக்கம் அத்தான். உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள்.
வணக்கம் அத்தாம்புள்ளநான் உதையன் என்னுடைய முழுப்பெயர் உதயகுமார். எனது அப்பா பரமநாதன் அவரை அன்னதாஸ் என்று ஊரில் அழைப்பார்கள் அம்மா பத்திமேரி. நான் அவர்களுக்கு மூத்த பிள்ளை. 1971/09/16ம் திகதி பிறந்தேன். எனக்கு 2 சகோதரர்களும் 2 சகோதரிகளும் என்னுடைய சகோதரன் (வவா) இந்தியாவில் இறந்துவிட்டார்.
2) உங்களுடைய திருமணம், மனைவி, பிள்ளைகளை பற்றி சொல்லுங்கள்.
நான் 1990ம் ஆண்டு புலம்பெயர்ந்து இந்தியாவில் வசித்துவந்தேன் கடந்த 2019ம் ஆண்டு நாடு திரும்பி தற்பொழுது எமது ஜோசப்வாஸ் நகரில் வசித்துவருகிறேன். நான்,மேரிநந்தினியை 1993/4/26ம் திகதி திருமணம் செய்துகொண்டேன். எமக்கு 3 பிள்ளைகள்.
3) உங்களுடைய உதைபந்தாட்டத்தை எங்கே? எப்போது ஆரம்பித்தீர்கள்? நான் சிறுவயதில் இருந்தே உதைபந்து விளையாடுவதில் ஆர்வம் உடையவன்,எமது பாடசாலையில்படிக்கும் காலத்திலும், உள்ளூர்போட்டிகளிலும் விளையாடிவந்துள்ளேன்.
4 ) எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்தில் எவ்வாறு இணைந்தீர்கள்? உங்களுடைய முதல்போட்டி எது? 1985,1986ம் ஆண்டுகள் என நினைக்கிறேன். எனக்கு14,15வயது இருக்கும் போது முதன் முதலாக எமது ஐக்கிய விளையாட்டுக்கழக 4 அணியில் மாந்தை மேற்கு டிவிசன் உதைபந்தாட்ட சுறாறுப்போட்டியில் பண்டிவிரிச்சானில் விளையாடினேன்.
5)உங்களை யாரும் விளையாடுவதற்கு சிபார்சு செய்தார்களா?
ஆம் . இதில் என்னை சிபார்சு செய்தவரை குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டும். எனது இளம் பராய விளையாட்டு திறனை கருத்தில்கொண்டு அப்போது இருந்த 4 அணியில் என்னை உள்வாங்க விடாப்பிடியாக இருந்து என்னை அணியில் சேர்த்தது எமது கீப்பர் இசுதோர் அண்ணன் தான், அவரை நான் மறக்க மாட்டேன். இந்நேரத்தில் எனது நன்றிகளை அவருக்கு தெரிவித்துக்கொள்ளுகின்றேன். 6) அந்நேரத்தில் நீங்கள் விளையாடிய எமது கழக 4 அணி வீரர்களை கூற முடியுமா?
நிச்சயமாக, எலியாஸ் அண்ணன், இசுதோர் அண்ணன், பயஸ் அண்ணன், கியோமர் அண்ணன், கொண்சாலஸ் ( சின்னான்) அண்ணன்,எட்வேட்ராஜா அண்ணன் (புறோக்கர் ) இவர்களோடுதான் நான் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்தில் A அணிக்காக விளையாடியது.
7) எமது பிரதேசத்திலும், ஏனைய வெளி இடங்களிலும் நீங்கள் விளையாடி வென்ற போட்டிகளை பற்றி சொல்லுங்கள். சிரிக்கிறார்......அத்தாம்புள்ள நாங்க வெளிக்கிட்டா வெற்றிதான். தோத்திற்று வாறது அரிதிலும் அரிது. அடம்பன், மாந்தை, நானாட்டான், இத்திக்கண்டல், உயிர்த்தராசன் குளம், காத்தான்குளம், பரப்புக்கடந்தான், சொர்ணபுரி, உயிலங்குளம், பண்டிவிருச்சான், பாலம்பிட்டி,தட்சனாமருதமடு, நாகதாழ்வு, வலைப்பாடு, கிராஞ்சி,பூநகரி, முழங்காவில் பள்ளிக்குடா, இரணைதீவு, மன்னார் போன்ற இடங்களுக்கு சென்று விளையாடியுள்ளோம்.
8 ) நீங்கள் விளையாடிய போட்டிகளில் உங்களால் மறக்கமுடியாத உதைபந்தாட்ட போட்டியாக எதை சொல்வீர்கள்.? எல்லா போட்டிகளும் எங்களால் மறக்கமுடியாத போட்டிகள் தான். அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் என்னை பொறுத்தமட்டில் அன்னை பூபதி நினைவு கிண்ணம் பூநகரி முழங்காவிலில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எமது ஐக்கிய விளையாட்டுக்கழக A அணி வெற்றிபெற்று சம்பியனாகியது மறக்கமுடியாத மெச் அது. ஐக்கிய விளையாட்டு கழகம் வென்ற வெற்றிகளை தவிர தனிப்பட்ட ரீதியில் விருதுகள் ஏதாவது பெற்றிருக்கிறீர்களா? இப்போ இருக்கிற மாதிரி அந்த காலத்தில் தனிப்பட்ட ரீதியாக எந்தவித விருதுகளும் கொடுக்கிற வழக்கம் இல்லை. அப்படி இருந்தும் பூநகரியல் நடந்த அன்னை பூபதி நினைவு கிண்ண போட்டியில் எனக்கு சிறந்த விளையாட்டு வீரன் என்ற விருதை தந்து கௌரவித்தார்கள்.
இதில் நான் எமது அமரர் இம்மனுவேல் மாஸ்ரருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ள வேண்டும் காரணம் இம்மனுவேல் மாஸ்ரர் தான் அன்னை பூபதி மெச்நான் விளையாட உந்துசக்தியாக இருந்து எனக்கு வாய்ப்பு பெற்றுத்தந்தது. இந்நேரத்தல் அவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
9) நீங்கள் தோல்வியடைந்த உதைபந்தாட்ட போட்டி ஏதாவது இருக்கிறதா?
அன்னை பூபதி மெச் வென்றதை எப்படி மறக்க முடியாதோ அதேபோலதான் மன்னார் தீவுக்குள் நடந்த முன்னாள் TELO தலைவர் அமரர் சிறி சபாரத்தினம் அவர்களது ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டியில் நாங்கள் தோத்ததை மறக்க ஏலாது.
10) நீங்கள் எமது கழகத்தில் விளையாடிய எமது ஏனைய விளையாட்டு வீரர்கள் பெயரை குறிப்பிடுங்கள். பற்றிக் ஆனந்த குமார், சத்திய காந்தன், சூசைப்பிள்ளை, மரியதாஸ் அண்ணன் முக்கியமான Bro ஸ்ரனி அவர்களோடு இரணைதீவு மெச் விளையாடியுள்ளேன்.
11) நீங்கள் விளையாடிய காலப்பகுதியில் உங்களுக்கு கிடைத்த support என்ன?
அந்த காலத்தில ஊரே சப்போட்டுக்கு நிக்கும், குறிப்பாக சொல்ல போனால் சலமோன் அண்ணன், செபராசா அண்ணன், டோமினிக் அண்ணன் போன்ற சம்மாட்டிகளின் சப்போட் எங்களுக்கு நிறைய கிடைத்தது. அதிலும் சலமோன் அண்ணனுடைய சப்போட் அதிகம் கிடைத்தது. Boots, Jersey, மெச்சுக்கு போக இலவசமாக வேன் இப்படி அந்தநேரத்தில எங்களுக்கு சப்போட் நிறைய கிடைத்தது.
12 ) அந்த காலத்தில் நீங்கள் விளையாடியதற்கும் இப்ப உள்ள உதைபந்தாட்ட வளர்ச்சிக்கும் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
அந்த காலத்தில் யாரையும் யாரும் கட்டாயப்படுத்தவோ, நம்பி இருந்ததோ, அல்லது வீட்ட வந்து கூப்பிட்டு மெச்சுக்கு போனதோ கிடையாது காரணம் நான் சுமார் 90%விளையாட்டு திறமையுடன் A அணியில் விளையாடிக்கொண்டு இருந்தால் வெளியால 100% திறமையை கொண்ட பல பேர் வாய்ப்புக்காக காத்திருந்த சந்தர்ப்பமே அதிகம்.
இப்ப உள்ள வசதிகள் வாய்புகள், பயிற்சிகள் போல அந்த காலத்தில் எமக்கு இல்லை,A,B அணிகளில் இடம்பிடித்து நான் நான் விளையாடவேண்டும் என்ற திறமையுடனான போட்டி எமக்குள்ளே இருந்தது. அவ்வாறான திறமையுடனான வீரர்களை உருவாக்கவேண்டும்.
13 ) இளம் வயதிலிருந்தே விளையாடி வந்துள்ளீர்கள், பார்வையாளர்கள் மத்தியில் உங்களைப்பற்றிய கருத்து நிலைப்பாடு என்னவாக இருந்தது?
இப்ப மாதிரி உடனுக்ககுடன் தகவல்கள பரிமாறிக்கொள்ள சமூகவலைத்தளங்கள் அப்ப இல்ல காணொளிகள், குறும் செய்திகள் மூலமாக ஒரு விளையாட்டு வீரன் அவன் விளையாடும் போட்டியின் போதே பிரபல்யம் பெற்றிடுவான் அல்லது போட்டி முடிந்த கையோடு பகிரப்படும் காணொளிகள் மூலமாக பிரசித்திபெற்று மக்கள் மத்தியில் பிரபல்யமாகிவிடுவான்
ஆனால் எமது காலத்தில் இவ்வாறான சமூகவலைதாதளங்கள் ஏதும் இன்றி பார்வையாளர்கள் மத்தியில், ரசிகர்கள் மத்தியில் நாம் பெயர் சொல்லி விளையாடினோம் என்றால் அதற்கு எமது திறமை மட்டுமே காரணமாகும்.
குறிப்பாக சொல்லப்போனால் இன்றும் எமது பிரதேசத்தில் எலியாஸ், பயஸ், உதையன் என விளையாட்டை கதைக்கும்போது பெயர் அடிபடுது என்றால் ரசிகர் மத்தியில் எங்களது பெயர் பிரபல்யமாவதற்கு எமது திறமைதான் காரணமாகிறது.
14) உதைபந்தாட்ட போட்டியில் நீங்கள் பெற்றுக்கொண்ட அதிகபடியான கோல்கள் எத்தனை? எனது வரலாற்றில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக A அணிக்காக நான் 5 கோல்களை ஒரு போட்டியில் பெற்றுக்கொடுத்தேன்.
15) இளம் தலமுறையினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
நாங்கள் பயிற்றுவிப்பாளர்கள், பயிற்சிகள் இல்லாமலே தான் நாளாந்தம் பின்னேரத்தில் நாம் விளையாடும் உதைபந்தாட்ட விளையாட்டை எமது திறமையில் வளர்த்துக்கொண்டோம். ஆனால் தற்பொழது பயிற்சிகள் நிறைய வழங்கப்படுகிறது, பயிற்றுவிப்பாளர்கள் எம்மிடம் இருக்கிறார்கள், வசதிவாய்பபுகள் முன்பிருந்ததை விட அதிகமாகவே கிடைத்திருக்கிறது, ஒருவரை மட்டும் தங்கியிராது இன்னொருவரை உருவாக்குதல் அவசியமாகிறது. ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு,கீழ்படிவு,மதிப்பளித்தல் பண்புகளை விளையாட்டோடு சேர்த்து வளர்த்துகொள்ளுதல் நன்மைபயக்கும்.
இசுதோர் கீப்பர் என்று அறியப்பட்ட அன்ரனி இசுதோர்.
எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக வரலாற்றில் கோல்காப்பாளர்களாக திகழ்ந்தவர்களுள் சிறந்தவராக இசுதோர் கீப்பர் என எம்மவர்களால் அறியப்படுகின்ற அன்ரனி இசுதோர் அவர்கள் 1963/1/1 அன்று நீக்கிலாப்பிள்ளை, வேதநாயகி தம்பதிகளின் மகனாக விடத்தல்தீவில் பிறந்தார். அன்ரனி இசுதோர் அவர்களுக்கு ஒரேயோரு சகோதரி உள்ளார். மேரி ஜெஸ்மினா அவர்களை திருமணம் செய்த இவருக்கு, 4 பிள்ளைகளை உள்ளனர். 1999 ம் வருடத்தில் நடந்த உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்து ஜோசப்வாஸ் நகரில் தற்பொழுது வசித்துவருகிறார்.
இவரது பாடசாலை மாணவ பருவத்தில் தரம் 9 இல் கல்விகற்றுக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் 100m, 200m, ஓட்ட நிகழ்ச்சிகளில் பங்குபற்றி முதல் இடங்களை பெற்றதுடன் தமது நன்பர்களான ஜெறோம், லாசர் ஆகியருடன் இணைந்து பல மைதான சுவட்டுநிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார். பாடசாலை உதைபந்தாட்ட அணியில் கோல்காப்பாளர்களாக திகழ்ந்த அன்ரனி இசுதோர் அவர்கள் ஐக்கிய விளையாட்டுக்கழக அணியில் சக வீரர்களான எலியாஸ், பயஸ், மரியதாஸ், கியோமர், எட்வேட்றாஜா, சகாயராசா போன்ற முன்னாள்ஐக்கிய விளையாட்டுக்கழக வீரர்களுடன் உதைபந்தாட்ட போட்டிகளுக்கு கோல்காப்பாளர்களாக திகழ்ந்துள்ளார்.
உப்புக்குளம் மைதானத்தில் உப்புக்குளம் அல்பதா அணிக்கு எதிரான உதைபந்தாட்ட போட்டி இவரது முதலாவது உதைபந்தாட்ட போட்டியாக அமைந்துள்ளது. மாந்தை மேற்கு பிரதேசத்தில், வட்டக்கண்டல், காத்தான்குளம், சொர்ணபுரி, நாகதாழ்வு, ஆன்டான்குளம், அடம்பன், உட்பட பண்டிவிருச்சான், பாலம்பிட்டி, முழங்காவில்,இரணைமாதா நகர், வலைபாடு, போன்ற இடங்களில் அதிக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் விளையாடி வெற்றியீட்டியுள்ளார்.
எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் தண்ட உதை மூலம் பல போட்டிகளில் வெற்றிவாகை சூடிக்கொள்ள எதிரணியின் கோல் பெறம் வாய்ப்பை தட்டி வெற்றிக்கு வித்திடடவர் என்றால் அது மிகையாகாது.எதிரணி முன்கள வீரர்களின் ஒவ்வொரு கோல் பெறும் வாய்ப்புகளையும், தவிடுபொடியாக்குவதும், அதில் கோல் கம்பத்துக்குள் அடிக்கப்படும் பந்தை தட்டிவிட்டாமல் லாவகமாக பிடித்து எதிரணி முன்கள வீரர்களுக்கு மிகவும் சவாலாக இருந்துள்ளமை இவரது மற்றொரு சிறப்பம்சம். முழங்காவில், வலைப்பாடு மற்றும் முத்துக்கள் மூன்று வெற்றிக்கிண்ண போட்டிகள் தனது விளையாட்டு வரலாற்றில் முக்கியமான போட்டிகள் என்பதை விபரித்த இசுதோர் அவர்கள் தமது காலத்தில் உதைபந்தாட்ட அணிவீரர்களில் முன்கள வீரர்களாக எலியாஸ், பயஸ் மற்றும் கியோமர் ஆகியோர் திகழ்ந்துள்ளார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். உதைபந்தாட்ட போட்டியில் பல உபாதைகளை எமது அணிக்காக பெற்ற இசுதோர் அவர்களுக்கு வட்டக்கண்டல் மைதானத்தில் கை விரல் உபாதைக்குள்ளாகி முறிந்த நிலையில் அது இன்றுவரைக்கும் அதே நிலையில் இருப்பதும், ஆன்டான்குள மைதானத்தில் முழங்கால் உபாதைக்கு உள்ளானதும் குறிப்பிடத்தக்கதாகும். காலம் கடந்தாலும் இன்றும் உள்ளூரில் ,மற்றும் வெளியிடங்களில் நடைபெறும் உதைபந்தாட்ட போட்டிகளை பார்வையிட தவறுவதில்லை இசுதோர் அண்ணன் உதைபந்தாட்ட போட்டிகளுக்காக, எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்திற்காக ,எமது பாடசாலை உதைபந்தாட்ட அணிகளுக்காக, விளையாட்டு உபகரணங்கள்,சீருடைகள் உட்பட பல உதவிகளை வழங்கிக்கொண்டிருப்பதும் மறந்துவிட முடியாது.
தாங்கள் ஒற்றுமையாக இருந்து விளையாட்டை உயிராக மதித்தும் ஐக்கிய விளையாட்டுக்கழகத்திற்காக, ஊருக்காக ஒற்றுமையாக விளையாடிய அந்த நாட்களை எளிதில் மறந்துவிடமுடியாது என்றும் ,பிரிவுகளையும், பிரித்து கையாளும் ஒரு சில நபர்களின் நடவடிக்கைகளையும் தாம் துளியளவும் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அசுர மின்னல் வேக ஓட்ட றெஜி
விடத்தல்தீவு மகாலிங்கம், ரெட்ணசீலி ( தங்கம்) தம்பதியருக்கு மகனாக 2/8/1978 இல் பிறந்து 5 உடன்பிறப்புகளோடு வாழ்ந்து பெமிலா செறின் அவர்களை திருமணம் செய்து 2 பெண் பிள்ளைகளோடு குடும்பத்தில் மகிழ்ச்சிபொங்க கடலுணவு கொள்வனவு உரிமையாளராக வாழ்ந்துவருபவர் தான் எமது நண்பன் றெஜி என்று அழைக்கப்படுகின்ற ராஜநாயகம் அவர்கள்.
தனது ஆரம்ப கல்வியை விடத்தல்தீவு அலிஹார் மகாவித்தியாலயத்தில் கற்று பின்னர் இடைநிலை கல்வியை தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் கற்றிருந்தார். நண்பன் றெஜிதனது 13வது வயதிலிருந்தே உதைபந்தாட்டத்தில் பிரகாசிக்கத்தொடங்கியிருந்தார். தனது அபார மின்னல் வேக ஓட்டத்திறமையால் பாடசாலை உதைபந்தாட்ட அணியின் முன்னணி வீரனாக திகழ்ந்து வலைய மட்ட, கோட்ட மட்ட உதைபந்தாட்ட போட்டிகளில் எமது அணிக்காக பல கோல்களை பெற்றுத்தந்திருந்தார்.
மேலும் பாடசாலை ரீதீயான தடகள போட்டிகளில் முன்னணி வீரனாக வலம் வந்த நண்பன் றெஜி மடு வலய மற்றும் கோட்ட மட்ட தடகள போட்டிகளில் அதிக தடவைகள் முதன்மை வீரனாக தெரிவாகியிருந்தார். 100m, 200m, நீளம் பாய்தல் போன்ற விளையாட்டு நிகழ்வுகளில் முதன்மை வீரனாகவும் அஞ்சல் ஒட்ட போட்டிகளில் சிறந்த வீரனாகவும் வலம்வந்திருந்தார்.
ஊரில் நடைபெறும் உள்ளூர் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் எமது அமர்க்களம் அணி சார்பாக முன்கள வீரனாக விளையாடிய அந்த நாட்களை எளிதில் மறந்துவிட முடியாது. 1998ம் ஆண்டு உலக ஆசிரியர் தின உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இறுதி ஆட்டத்தில் தேவா குழுவிற்கு எதிராக 3:0 என்ற கோல் அடிப்படையிலும், மண்ணின் மைந்தர்கள் கிண்ணம், மண்ணின் மாவீரர்கள் கிண்ணம், மே தின உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள், பேசாலை நலன் புரி நிலையத்தில் நடைபெற்ற போட்டி ஜோசப்வாஸ்
நகரில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகள் போன்ற பல உள்ளூர் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் எமது அமர்கள அணி வெற்றிபெற்றதில் நண்பன் றெஜியின் தனித்துவமான பங்கு அளப்பெரியது.
1997ம் ஆண்டு மற்றும் 1998ம் ஆண்டுகளில் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் உதைபந்தாட்ட அணியில் நண்பன் றெஜி தனது அபார திறமையை வெளிக்கொணர்ந்த தருணங்கள் ஏராளம். பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு கழகம், பனக்கட்டு கொட்டு சென். ஜோசப் விளையாட்டுக்கழகம்,கிறீன் பீல்ட் விளையாட்டுக்கழகம்,தாழ்வுபாடு விளையாட்டுக்கழகம் மற்றும் அல்பதா போன்ற அணிகளுக்கெதிராக புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி உதைபந்தாட்ட அணிக்காக அப்போதைய ஜாம்பவான்களான நண்பர்கள் கமிலஸ், அமலன் மற்றும் அற்பு, சங்கர், அண்ணாமலை,மதி போன்ற சக வீரர்களுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பசுமையான நினைவுகளும் மறப்பதற்கல்ல.
ஆரம்பத்தில் அருட்சகோதரர் ஸ்ரனி அவர்களின் உதைபந்தாட்ட பயிற்சிபட்டறையில் Boot இல்லாமல் விளையாடஅனுமதிக்கப்பட்ட வீரன் நண்பன்றெஜியாகத்தான் இருக்கமுடயும் அந்தளவிற்குதனது மின்னல் வேக ஓட்டத்தாலும் விளையாட்டில் அதீத திறமையும் கொண்டிருந்தான். பள்ளிமுனை அணிக்கெதிரான ஒரு போட்டியில் கோல் அடித்து பள்ளிமுனை அணி வீரன் அண்ணன் எட்டா அவர்களால் அடி வாங்கிய அந்த போட்டி இன்னும் நினைவில் உள்ளது.
தனது 13, 14 வயதில் எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக C அணியில் இடம்பிடித்த நண்பன்றெஜி முத்துக்கள் மூன்று உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் அமரர் அருட்பணி எட்வின் அடிகளார்தலமையிலான எமது ஐக்கிய விளையாட்டுக்கழக C அணிக்கான தனது முதலாவது கோலை பெற்றுக்கொடுத்திருந்தான். 1993/1994 ம் ஆண்டு காலப்பகுதியில் எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் தலைவராக திரு ஸ்ரனிஸ்லஸ் ( டெல்லாஸ்) அண்ணன் அவர்கள் தலமைதாங்கிய காலத்தில் பெரியமடுவில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றப்ப்போட்டியில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக A அணியில் நான் எனது கன்னிப்போட்டியில் விளையாடுவதற்கு நண்பன் ஜோண்ராஜ்யோடு எனக்காக சிபார்சு செய்ததுடன் அந்த சுற்றுப்போட்டியில் நான் விளையாட காரணகர்த்தாவாக இருந்து அந்த சுற்றுப்போட்டியில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணிக்காக முன்களத்தில் சிறப்பாக விளையாடியிருந்தான்.
லெப்டினன் கேணல் விக்டர் ஒஸ்கா உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நண்பன் றெஜி எமது ஐக்கிய விளையாட்டுக்கழக B அணிக்காக விளையாடிய முதலாவது போட்டியாகும். அடம்பன் பிரதேசத்தில் நடைபெற்ற அந்த போட்டி உட்பட பலவேறுபட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் நண்பர்களான ரென்சி,தேவானந்தன் ஆகியோருடன் இணைந்து முன்கள வீரர்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த நாட்களில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் தலைவராக திரு.அ லோறன்ஸ் அவர்கள் தலமைதாங்கியிருந்தார்.
தனது அசுர வேகத்தால் எதிரணியை கலங்கடித்த நண்பன் றெஜி எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் 4 அணியில் மிக சொற்ப காலங்களிலேயே சாந்தகுமார், எட்வின் றோச்,சதானந்தன், தயானந்தன் (வசந்தன்), எட்வேட் ஜோர்ச், ஸ்ரனிஸ்லஸ் (டெல்லாஸ்),மெக்ஸி, கொண்சாலஸ் (சின்னான்),பெல்மன், மற்றும் எட்வேட் றாஜா (புறோக்கர்) ஆகிய வீரர்களோடு இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது பிரதேசத்தில் நடைபெறும் உதவி அரசாங்க அதிபர் உதைபந்தாட்ட போட்டி,கரப்பந்தாட்ட போட்டிகளிலும் முத்துக்கள் மூன்று வெற்றி கிண்ணம், கீப்பிங் ஸ்ரார் வெற்றிக்கிண்ணம் விடத்தல்தீவு, விக்டர் நினைவு கிண்ணம், கரும்புலிகள் நினைவு கிண்ணம், மற்றும் வட்டக்கண்டல், அடம்பன், இத்திக்கண்டல், முருங்கன், காத்தான்குளம், உயிர்த்தராசன் குளம், தட்சனாமருதமடு, இரணைமாதா நகர் போன்ற இடங்களில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணிக்காக விளையாடியிருந்தான்.
எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் தொடர் தோல்விகளை சந்தித்த அந்த குறிகிய காலத்தில் 1998 ம் ஆண்டில் எமது பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி ஜெயபாலன் அடிகளார் அவர்களால் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் மறு சீரமைப்பு செய்யப்பட்டிருந்தது. அந்நாட்களில் மண்ணின் மைந்தர்கள் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தட்சனாமருதமடு விளையாட்டு கழகத்தால் நடாத்தப்பட்டிருந்தது. நண்பன் றெஜி தலமையில் அந்த போட்டியில் விளையாட பதிவுசெய்து பங்குபற்றியதுடன் அந்த கிண்ணத்தை எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். யாழ் மாவட்டத்தில் தலைசிறந்த அணிகளில் ஒன்றான எமது சென். நீக்கிலஸ் அணியுடனான அரையிறுதி போட்டி எமது ஊரில் கரும்புலிகள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அந்த பரபரப்பிற்கு பஞ்சமில்லாத விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக முன்கள வீரன் நண்பன் றெஜி தனது ஆபார திறமையாலும் மின்னல் வேக ஓட்டத்தாலும் சென். நீக்கிலஸ் அணியின் தலைவரும் அந்நாட்களில் யாழ்ப்பாண சிறந்த பின்கள் மத்திய வீரனுமாகிய வாஸ் அவர்களை தாண்டி கட் செய்து அடித்த 2 கோல்களும் வரலாற்றில் பேசப்பட்ட நினைவுகளாகும்.
“தம்பி எனது விளையாட்டின் சரித்திரத்தில் நான் விளையாடிய போட்டிகளில், எனது அனுபவத்தில் பின்களத்தில் என்னை தாண்டி கட் செய்து எமது அணிக்கு கோல் அடிச்சது நீ மட்டும்தான் என்று "மைதானத்தில் போட்டி நிறைவுற்றதும் சென்.நீக்கிலஸ் பின்கள வீரனாக யாழ் மாவட்ட சிறந்த வீரனாக திகழ்ந்த வாஸ் அவர்கள் றெஜியை கட்டியணைத்து பாராட்டியிருந்தார்.எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணி சார்பாக எமது கழக வீரனாக இருந்த பெல்மன் அவர்களுடன் மாந்தை பிரதேச அணியில் இடம்பிடித்த நண்பன் றெஜி மன்னார் பிரதேச அணியுடனான போட்டி ஒன்றில் மாந்தை பிரதேச அணி 1;2 என்ற கோல் அடிப்படையில் தோல்வியுற்றிருந்தாலும் எமது மாந்தை பிரதேச அணி சார்பாக நண்பன் றெஜி 1 கோலை பெற்றுக்கொடுத்திருந்தான்.
சமீபகாலமாக 40 வயதிற்கு மேற்பட்ட எமது விடத்தல்தீவு FC என்ற பெயரில் உதைபந்தாட்ட அணியில் இணைந்த நண்பன் றெஜி பள்ளிமுனை,பனங்கட்டு கொட்டு அணிகளுடனான உதைபந்தாட்ட போட்டிகளில் விளையாடியிருந்தான். உதைபந்தாட்டத்தை நேசித்த நண்பன் றெஜி எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்திற்காகவும் எமது விளையாட்டின் மேம்பாட்டிற்காகவும் தன்னாலான உதவிகளை வழங்கிவருகின்றமை மறப்பதற்கல்ல சகாயராஜா 1986 களின் பிற்பகுதியில் எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகம் அதன் வரலாற்றில் அதிகபடியான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் வெற்றிபெற்று ஊரைச்சுத்தி வெற்றிபவனி வந்த காலம் அது.
லொறி அதிர நிறைஞ்ச சனத்துடன் ஊரின் கடத்தெருவால திரும்பி வெற்றிக்கோசங்களை எழுப்பியவாறுஊரைசுத்தும்போது அந்தவெற்றிக்கோசத்தில் அதிகம் எழுப்பப்படும் கோசம் "எங்கள் றாஜா சகாயராஜா,"எங்கள் றாஜா சகாயராஜா” என்ற கோசம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
1961/11/22ம் திகதி யாழ்ப்பாணம் நவாலியில் பிறந்து 1986ம் ஆண்டு காலப்பகுதியில் எமது றோசா அன்ரி அவர்களை திருமணம் செய்திருந்தார்.தனது ஆரம்ப கல்வியில் சிறந்து விளங்கி கல்வி பொதுத்தர சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற சிறந்த அழகான கையெழுத்துக்கு சொந்தக்கரரானவர்தான் சகாயராஜா அவர்கள்.
விடத்தல்தீவின் பூர்வீக கிராமத்தில் ஒன்றான நவாலியில் பிறந்த சகாயாராஜா அவர்கள் எமது றோசா அன்ரியை திருமணம் செய்து விடத்தல்தீவு மருமகனாக எமது ஐக்கிய விளையாட்டுக்கழக உதைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்திருந்தார். இரண்டு காலாலும் பந்தை இலாபகரமாக உதைக்கும் நுட்பமான திறமையை கொண்டு பாதணிகளை பயன்படுத்தி உதைபந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அட்டை பதப்படுத்துதல் துறையில் சிறப்பு தேர்ச்சி பெற்று சிறந்த அனுபவசாலியாக ஆபிரிக்க நாடுகளுக்கு தொழில்வாய்ப்பின் நிமித்தம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒருமுன்கள வீரரைநம்பி போட்டியில் இறங்கும் அணிகளைபோலவேதான் எமது ஐக்கியவிளையாட்டுக்கழக அணியில் பின்கள வீரன் சகாயராஜா அவர்களை நம்பி இறங்கிய போட்டிகள் அதிகம் அந்த அளவிற்கு விளையாட்டில் நுட்பங்களை கைக்கொண்டு விளையாட்டின் போக்கை திசைதிருப்பி, நெருக்கடி நிறைந்த தருணங்களிலெல்லாம் தனித்துவமான தனது ஆட்டத்தால் அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்ற பெருமை பின்கள வீரனான சகாயராஜா அவர்களையே சாரும்.
அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்ற அந்த காலகட்டங்களில் எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக A அணியில் தவிர்க்கபபட முடியாத ஒரு வீரனாக போட்டிகளில் பேசப்படும் அளவிற்கு திறமைகளுடனான சிறப்பான விளையாட்டை ஆடும் வீரன் தான் சகாயராஜா அவர்கள்.
தனியொருவனாக சவாலாக களமிறங்கும் எதிரனியின் முன்கள வீரர்களையும் அவர்களது ஒவ்வொரு கோல் பெறும் வாய்ப்புகளையும் தகர்க்கும் வண்ணம் தலையையும் இரு கால்களையும் பயன்படுத்தி நிண்டு நிதானமாக அழகான ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்வையாளர்களையும், ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதும் சகாயராஜா அவர்களின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
சகாயாராஜா அவர்கள் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணிக்காக வட்டக்கண்டல், வலைப்பாடு அடம்பன், நாச்சிக்குடா, காத்தாங்குளம், கருங்கண்டல், பண்டிவிரிச்சான் மற்றும் தட்சனாமருதமடு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் பின்கள மத்திய வீரனாக களமிறங்கி பல வெற்றிகளை எமது அணி பெற்றிருப்பது மறட்கமுடியாததாகும்.
உதைபந்தாட்ட போட்டிகளின் போது சொல்லிவைச்சாற் போலவே எமது அணிக்கு கிடைக்கும் Faul kick, Cormer kick.pemaly kick போன்றவற்றை நிதானமாக அளந்து அடிச்சு கோல் ஆக மாற்றும் அபார திறமையை கொண்டிருந்தவர் எமது சகாயராஜா அவர்கள் .ஆட்டம் ஆரம்பத்தில் இருந்து முடிவுறும் வரைக்கும் சோர்வு இல்லாத ஆட்டத்துடன்,திடமான உறுதியுடன் தினமும் மாலை நேரங்களில் தவறாது விளையாட மைதானத்திற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
சக வீரர்களுடனும்,நண்பர்களிடத்திலும் நல்ல நட்பை பேணிவந்திருந்தார். ஆயேசுராசா,புறுணோ பயஸ்,இசிதோர் றொபேட்கெனடி, கியோமர் பயஸ், எலியாஸ், எட்வேட்றாஜா, கொண்சாலஸ், யேசுதாசன் ,ஸ்ரனிஸ்லஸ், ஆகிய சக முன்னணி வீரர்களுடன் எமது கழக அணிக்காக விளையாடி வெற்றிவாகை சூடியிருந்தார்.
அருட்சகோதரர் ஸ்ரனி அவர்களது பயிற்சியில் வலைப்பாடு சுற்றுப்போட்டிக்கு செல்வதற்கான ஆய்த்தங்களும் பயிற்சிகளும் நடைபெற்ற அந்த முதல் நாள் எமது பாடசாலை மைதானத்தில் கோல் கம்பத்தில் B அணி கோல் காப்பாளரான லக்ஸ்மன் ஆய்த்தமாக இருந்த சமயம் சகாயாராஜா அவர்களை சென்டரில் இருந்து பந்தை வைத்து அடிக்க சொல்லி Bro ஸ்ரனி சொல்லி அடுத்த நிமிடம் பந்து கோல் போஸ்ற்றுக்குள் கிடந்தது. அருட்சகோதரர் ஸ்ரனி Very Good குஞ்சு என முதுகில் தட்டி சகாயாராஜா அவர்களை பாராட்டியிருந்த அந்த நாட்கள் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக உதைப்பந்தாட்ட அணியின் மறக்கமுடியாத தருணங்களே.
இவ்வாறு பல தடவைகள் எமது அணிக்காக தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓய்வுபெற்ற உதைப்பந்தாட்டத்தை நேசித்த எமது சகாயாராஜா அவர்கள் 2007ம் ஆண்டு கார்த்திகை மாதம் 12ம் திகதி இறைபதமடைந்தார்.
டி. எஸ். டெனிஸ்டீன் சந்திரன்
ஜோசவாஸ் நகரைச் சேர்ந்த திருமதி டெனிஸ்டீன் சந்திரன், கலை, கலாச்சாரம், கல்வி, இளைஞர் அதிகாரமளித்தல் மற்றும் பொது நிர்வாக சேவைகளில் தன்னிலைப்பாடான பங்களிப்புகளை வழங்கி வருகிறார். தமிழ் கிறிஸ்தவ ஆன்மீக இசை, கலாச்சார தலைமை, நிர்வாக சிறப்பு ஆகியவற்றில் அவர் உள்ளூர், மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பரவலான அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளார்.
இசை மற்றும் கலாச்சார பங்களிப்பு
தமிழ் கிறிஸ்தவ வழிபாட்டுப் பாடல்கள் மற்றும் நாட்டுப்புற இசைகளை பாதுகாத்தலும், ஊக்குவித்தலும், அவர் செய்த முக்கிய பங்களிப்புகளாகும். கலையருவி (2017-2023) மற்றும் கலாசர் விழா (2024) போன்ற முக்கிய நிகழ்வுகளில் அவர் தனிப்பட்ட மற்றும் குழு பாடல் போட்டிகளில் தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்றுள்ளார். மாவட்ட மற்றும் மறைமாவட்ட அளவிலான பெண் இசைக்குழுக்களுக்கு வழிகாட்டி ஆவார். கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற கிறிஸ்தவ திருநாள்களில் தேவாலய இசை நிகழ்ச்சிகளுக்கும், கலாச்சார நிகழ்வுகளுக்கும் அவர் தலைமையேற்கின்றார்.
நிறுவன அங்கீகாரங்கள் மற்றும் விருதுகள்
மன்னார் மாவட்ட சமூக சேவை ஒருங்கிணைப்புக் குழு, MOSCC, கத்தோலிக்க அமைப்புகள் மற்றும் உள்ளூர் கலாச்சார அமைப்புகள் வழங்கிய பல்வேறு விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பாராட்டுகள் அவரது பங்களிப்புகளுக்கான அங்கீகாரங்களாக அமைந்துள்ளன. குறிப்பாக, கலையருவி விழாவில் (2021, 2022, 2023) அவரது வழிகாட்டுதலால் இளைஞர் குழுக்கள் முதலிடம் பெற்றுள்ளன.
மாகாண மற்றும் தேசிய அங்கீகாரம்
மன்னார் நகர பிரதேச செயலகம் அவருக்கு "ஆண்டின் சிறந்த அதிகாரி-2022” என்ற விருதை வழங்கியுள்ளது. இலங்கை சமூகப் பாதுகாப்பு வாரியம் (2018, 2019) மற்றும் தேசிய தமிழ் கலாச்சாரவிழா(2018) ஆகியவற்றிலும் அவரது பங்களிப்புகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 2018 இல் கொழும்பு BMICH மையத்தில் நடைபெற்ற தேசிய விருது விழாவில் அவரது பங்கேற்பு மாவட்ட எல்லைகளை கடந்த அங்கீகாரமாகும். கல்வி மற்றும் திறன் மேம்பாடு
2015 ஆம் ஆண்டில் UNDP-EU நிதியுதவியுடன் நடைபெற்ற தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியில் (ISB வழியாக) அவர் பங்கேற்றுள்ளார். மேலும், 2001 மற்றும் 2007 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவர் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்று, பயிற்சியாளருக்கான பயிற்சிகளையும் (ToT) முடித்துள்ளார்.
சமூக ஈடுபாடும் வழிகாட்டுதலும்
அதிகாரப்பூர்வ விருதுகளுக்கு அப்பால், அவரது சமூக செல்வாக்கு மிகவும் முக்கியமானது. ஜோசவாஸ் நகரில் உள்ள இளைஞர்கள், குறிப்பாக பெண்கள், இசை மற்றும் கலாச்சாரவழியே தங்களை வெளிப்படுத்த அவர் ஊக்குவித்து வருகிறார். சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களின் பாராட்டுகளும், போட்டிகளில் வெற்றி பெற்ற குழுக்களுக்கு அவர் அளித்த வழிகாட்டுதலின் ஆவணங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன.
ஆவணப்படுத்தல் மற்றும் சேவை மரபு
அவரது நன்கொடைகள், சமூக நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு மற்றும் இளைஞர் ஊக்குவிப்புக்கு உதவிய சான்றுகளாக கையெழுத்துப் பதிவுகள், சான்றிதழ்கள் உள்ளன. கலாச்சார தலைவராகவும், அரசு அதிகாரியாகவும் அவர் வகிக்கும் இரட்டைச் சீருடைப் பாத்திரம் மன்னார் மாவட்டத்தில் சேவை மற்றும் கலாச்சார நெறிகளை ஒன்றிணைக்கும் வலிமையான மரபாக இருக்கின்றது.
முடிவுரை
திருமதி டெனிஸ்டீன் சந்திரன், கலைஞராகவும், வழிகாட்டியாகவும், நாட்டு நிர்வாகத்தில் தன்னை அர்ப்பணித்த ஒருவராகவும், பன்முக ஆற்றல்களை கொண்டவர். அவர் பெற்றுள்ள விருதுகள்- கலையருவி முதல் தேசிய விருதுகள் வரை- அவரது பரந்தளவான தாக்கத்தை பிரதிபலிக்கின்றன. ஜோசவாஸ் நகருக்கு பெருமை சேர்க்கும் கலாச்சாரத் தூணாக, அவர் இன்னும் பல தலைமுறைகளுக்கு சீரான முன்னுதாரணமாக இருப்பவர்.
மண்வாடைப் பெருமிதங்கள் - சுஐப் எம் காசிம்
பெருமைப்படத்தக்க பல விற்பன்னர்கள் விடத்தல்தீவில் உருவாகுவதற்கு, அலிகார் இட்ட அடித்தளமே அச்சாணியாக இருந்தது. மிகச் சிறந்த ஆசிரியர் குழாம், அர்ப்பணிக்கும் பெற்றோர், சமூகப் பற்றுமிக்க ஊர்ப் பிரமுகர்களை உள்ளடக்கிய விடத்தல்தீவு கிராமியக் கட்டமைப்பு, ஆற்றலாளர் பலரை உருவாக்கியது. வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், சட்டத்தரணிகள், நிர்வாக சேவையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் இன்னும் சமூக முன்னோடிகள் என இப்பட்டியல் நீள்கிறது. இந்த வகையில், முக்கிய சில துறைகளில், முதன்மையான பழைய மாணவர்களை இந்நூல் ஞாபகமூட்டுகிறது. இவர்களில் சிலர் மர்ஹம்களாகவும் சிலர் வாழ்வோராகவும் உள்ளனர். இத்தகைய புகழுக்குரியவர்கள் சகலரும் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களே. மன்னார் மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் ஆசிரியர், தலைமை ஆசிரியர் என்ற சிறப்புக்கள், விடத்தல்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நீண்ட காலம் ஆசிரியப் பணிபுரிந்த மர்ஹூம் அமுஹம்மது அலிக்கு உள்ளது.இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த (Ceylon Administrative Service) மர்ஹூம் எம்.ஏ.சீ.மரைக்கார் மன்னார் மாவட்டத்தின் முதல் சிறப்புப்பட்டதாரி, ஆசிரியர், இறைவரி அதிகாரி (DRO), வக்பு ஆணையாளர் மற்றும் ஓய்வூதியத் திணைக்கள ஆணையாளரென சிறப்புற்றுத் திகழ்ந்தார்.
விடத்தல்தீவின் முதலாவது மருத்துவராக (அப்போதிகரி) மர்ஹூம் எம்.ஐ.அப்துல்லா நியமனம் பெற்றார். அக்காலத்தில் ‘அப்போதிகரி" என்றழைக்கப்பட்ட இப்பதவி, பின்னர் உதவி மருத்துவ அதிகாரி (AMP) எனப்பட்டது. பின்னர், பதவி நிலை மாறி இவர் பதிவு செய்யப்பட்ட மருத்துவரானார் (RMP).மன்னாரின் முதலாவது ஆங்கில மொழி சிறப்புப் பட்டதாரியான மர்ஹூம் எம்.எஸ்.ஏ.றஹீம், இலங்கை கல்வி நிர்வாக சேவையை (SLEAS) சேர்ந்தவர். ஆசிரியர் கலாசாலை சிரேஷ்ட ஆங்கில விரிவுரையாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர், பதில் கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதான கல்வி அதிகாரி (Ch.EO- ஆங்கிலம்) என பல பதவி நிலைகளில் பணியாற்றியதோடு அலிகாரின் அதிபராகவும் இவர் பணிபுரிந்தார்.
மர்ஹூம் எம்.எஸ்.ஏ.சரூர் : ஆசிரியர் கலாசாலை உடற்கல்வி விரிவுரையாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) எனப் பிரகாசித்த இவரின் ஆற்றல், விளையாட்டுத் துறையில் விரிந்து பரவியது. கிறிஸ்தவ இளைஞர் சம்மேளனத்தின் புலமைப்பரிசில் கிடைக்கப் பெற்று, விடத்தல்தீவிலிருந்து முதன் முறையாக 1962இல் இந்தியா சென்றவர். அங்கு, மிஸ்டர் மெட்ராஸ் (Mr.Madras) ஆணழகன் போட்டியிலும் வெற்றியீட்டினார். 1993இல், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும், அக்குறணை மத்திய கல்லூரி, கொழும்பு ஹமீத் அல்{ஹஸைனியா ஆகிய பாடசாலைகளில்; அதிபராகவும் பணியாற்றியவர். விடத்தல்தீவின் முதலாவது சட்டமாணியாக (LL.B) எம்.ஐ.றாசிக் (ஹமீது லெப்பை), 1974இல் சித்திபெற்றதுடன், பின்னர் சட்டத்தரணியானார். (Amorney at law) யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் இவர் ஆசிரியராகப் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது. எம்.ஏ.வாஹித் : கல்விமாணி, கல்வி முதுமாணி, தேசிய கல்வி நிறுவக திட்ட மிடல் பணிப்பாளர், JICA செயற்றிட்ட நிபுணத்துவ ஆலோசகர் மற்றும் கல்வி அமைச்சின் முன்னாள் திட்ட ஆலோசகராகவும் கடமையாற்றியதுண்டு. பேர் போன கணித ஆசிரியராக மட்டுமன்றி, ஆசிரிய ஆலோசகராகவும் இவர் பணியாற்றினார். க.பொ.த. (சாதாரண தர) கணிதப் பாடத்தில், தமிழ் மொழி மூலக் கட்டுப்பாட்டுப் பிரதம பரீட்சகராக (Controlling Chief Examiner) 15 வருடங்கள் இவர் பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
மர்ஹூமா எம்.எஸ்.மஹ்ஜபின் சரீபா, அலிகாரில் பயின்று வெளியேறிய முதலாவது முதுகலைமாணியாக விளங்கினார். சமூகக் கல்வி உள்ளிட்ட முக்கிய பாடங்களை கற்பித்த இவர், கொழும்பில் பிரபல கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கும் கற்பித்ததுடன், ஆங்கில மொழியிலும் சிறப்புத் தேர்ச்சியுடன் திகழ்ந்தார். தேசிய கல்வி நிறுவகத்தில் செயற்றிட்ட அதிகாரியாகவும் பணியாற்றினார்.அதிபர் சேவை 01 ஐச் சேர்ந்த மஹ்ஜபின் சரீபா கொழும்பு டி எஸ். சேனநாயக்கா கல்லூரியின் தமிழ்ப் பிரிவு அதிபராகவும் பணியாற்றினார். இது தவிர (க.பொ.த.சாதாரண தர) சமூகக் கல்வி பாடத்தின் பிரதம பரீட்சகராகக் கடைமையாற்றிய பெருமைக்கும் உரியவர்.
வீ.எம்.அமீன்: விடத்தல்தீவின் முதலாவது முதுநிலை பட்டயக் கணக்காளர். (Fello Charted Accountant) கணித, விஞ்ஞான ஆசிரியரான வீ.எம்.அமீன் திறைசேரியின் மேலதிக பிரதிப்பணிப்பாளர் நாயகமாகவும் கடமை புரிந்தார். கலைத் துறையில் பல்கலைக்கழகம் நுழைந்து, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி வர்த்தகத் துறையில் (Bcom.Hon) சிறப்புப் பட்டம் பெற்றவர். அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி ஆகியவற்றில் சுமார் 10 வருட காலமாக நிதி ஆலோசகராக பணிபுரிந்தார்.மன்னார் மாவட்டத்தின் முதலாவது மகப்பேற்று, பெண் நோயியல் விசேட மருத்துவ நிபுணரான (VOG) எஸ்.எம்.எஸ் அக்பர், மன்னார் மாவட்டத்தின் முதலாவது மருத்துவ போராசிரியருங்கூட இவர் நாடறிந்த பிரபலர். பேராசிரியர் அக்பரினது வைத்தியத்திறமைகள் சகலரதும் நம்பிக்கையைப் பெற்றுள்ளன.
நஜ்முன்னிஸா ஜமால்தீன்: அலிகாரின் முதலாவது விஞ்ஞான சிறப்புப் பட்டதாரி (Bsc.Hon) தூய, பிரயோக கணிதம் இணைந்த கணிதம் ஆகிய பாடங்களின் ஆசிரியராக விளங்கியவர்.மர்ஹூம் சிஜ்ஜீன் மரைக்காத்தம்பி : விடத்தல்தீவின் முதலாவது முஸ்லிம் பொறியியலாளர் (Bsc.Hons in Civil Engineering), சிரேஷ்ட முதுநிலை பொறியியலாளரான இவர் பல முக்கிய நிறுவனங்களில் பணியாற்றினார். பொறியியல் துறையில் நல்ல தேர்ச்சி கொண்டவர்.மன்னாரின் முதலாவது சட்ட முதுமாணியான (LL.M) ஏ.எம்.பாயிஸ், தற்போது தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினராக பதவி வகிக்கின்றார். இவர், பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியரும் கூட சிவில், அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஸ், பல நிறுவனங்களின் தலைவராகவும் செயற்படுகிறார்.
ஹினாயா சரீப் : விவசாய விஞ்ஞான பட்டதாரியான (Bsc.Ag) இவர், இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் (SLAS) சித்திபெற்று, வடமாகாணத்தி;ன் முதலாவது பெண் உதவி அரசாங்க அதிபரானார். இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திலும் உயர் பதவி வகித்தவர்.
பிறந்த ஆண்டு: 1955 (காலப்பகுதி)
அண்ணாவி பிரான்சிஸ்
தந்தை: மாசிலாமணி (நாடகக் கலைஞர், நாட்டுப்புறக் கலைஞர்,, கவிஞர்,
பாடகர்)
தாய்: அக்னஸ்
கல்வி: விடத்தல்தீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை தொழில்: நாடகம், நாட்டுக்கூத்து, பாடல், ஒப்பாரி, பசாம்,
திறமைகள்: சந்தியோகுமையோர் (சிறந்த நடிப்பு), ஒளி கொடுத்த உத்தமர் (ஜோசவாஸ் பள்ளி நாடகம்)
விடத்தல்தீவின் மண் மணத்துடன் வளர்ந்த அண்ணாவி பிரான்சிஸ், கலை என்றும் உயிர்த்தழிக்கும் ஒரு குடும்ப மரபின் தென்றலாக பிறந்தவர். மாசிலாமணி என்னும் நாடகக் கலைஞர் தந்தையின் சுவடுகளையும், அக்னஸ் என்னும் அன்னையின் பாசமான ஆசீர்வாதத்தையும் பெற்ற இவர், கலையின் பல்வேறு துறைகளில் தன்னை செம்மையாகக் காட்சிப்படுத்தியவர். நாடகம், நாட்டுப்புறக் கூத்து, பாடல், ஒப்பாரி,- இவை அனைத்தும் அவருக்குப் பிறப்பே சொந்தங்கள். மேடையில் உருமாறும் நாடகக் கலைஞராகவும், இசையின் ஓசையோடு உருகும் பாடகராகவும், தனது தனித்துவப் பாதையை வகுத்தவர். இவரது நடிப்புப் புலன்களை காட்சியளித்த சந்தியோகுமையோர் நிகழ்வும், ஒளி கொடுத்த உத்தமர் நாடகமும், இவரின் திறமைக்குச் சான்றாகத் திகழ்கின்றன.- இவரது கைகளில் உயிர் பெற்றன. கேட்போரை கட்டிப் பிடிக்கும் அவரது குரலும், பாரம்பரியத்தின் அடையாளமான நாடகங்களும் விடத்தல்தீவின் கலாச்சார வரலாற்றில் ஒரு அழியாத தடமாக எழுதப்பட்டுள்ளன. அண்ணாவி பிரான்சிஸ் — - ஒரு தலைமுறை கலையியல்; ஒரு உயிர்மூச்சு நாடகம். கேட்போரை கட்டிப் பிடிக்கும் அவரது குரலும், பாரம்பரியத்தின் அடையாளமான நாடகங்களும் விடத்தல்தீவின் கலாச்சார வரலாற்றில் ஒரு அழியாத தடமாக எழுதப்பட்டுள்ளன.
பிறந்த தேதி: 15.08.1958 தந்தை: சிலுவைராசா
தாய்: லூர்த்தம்மா
பர்னபாஸ்
கல்வி: விடத்தல்தீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை கலையின் பலதரப்பட்ட நுணுக்கங்களை உள்ளடக்கிய பர்னபாஸ், விடத்தல்தீவின் நாட்டு நறுமணத்தை மணக்கச் செய்கிற கலைஞர். சிலுவைராசா என்பவர் புல்லாங்குழல், ஆர்மோனியம், வாலில்லா பட்டம் என இயற்கையின் இசையை இசைக்கும் சிறப்புநிபுணர். அந்த பாசமான கலை மரபைத் தொடர்ந்தே பர்னபாஸ்
வளர்ந்தார். ஒப்பாரி இழையோடு புனைந்த நெஞ்சுக் கதைகள், — இவை அனைத்தையும் ஒரே பார்வையில் கொண்டாடும் ஆளுமை பர்னபாஸ். பரம்பரை இசைப் பயிற்சியோடு மேடையை உயிர்ப்பிக்கும் பங்களிப்பும் இவருக்கே உரியது. ஒரு கலைஞருக்கே உரிய ஆழம், இசை ஒரு மொழி என்ற உணர்வு, கலை ஒரு வாழ்வாகவே அவருடைய நிதான நடை
இன்றும், ஒப்பாரியில் ஒரு தனக்கென ஓர் இடத்தை உறுதியாக்கி, விடத்தல்தீவின் கலாசாரச் சொரூபமாக விளங்குகிறார்.
பிறந்த நாள்: 31.10.1966
அண்ணாவி கிளமெண்ட்
பிறந்த இடம்: விடத்தல்தீவு, இலங்கை
ஆரம்பக் கல்வி: ஜோசவாஸ் பாடசாலை, விடத்தல்தீவு
துறை: நாடகம், நாட்டுப்புறக் கலை
நூல்: நாடகத் தொகுப்பு - ஒப்பாரி, பிரசங்கம் விடத்தல்தீவின் அனல்வி குடும்பத்தில்
1966ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி பிறந்த அண்ணாவி கிளமெண்ட், கலைமிக்க பூர்வீகம் கொண்டவர். இவரது தந்தை திரு. மாசிலாமணி, நாடகக் கலைஞராகவும், நாட்டுப்புறக் கலைஞராகவும், சிறந்த பாடகராகவும் புகழ்பெற்றவர். தாய் திருமதி அக்னஸ், பிரான்சிஸ் சகோதரரின் குடும்பத்தைச் சேர்ந்த கலைப் பாரம்பரிய மிக்கவர்.
குறும்பருவத்திலேயே கலைப் பற்று வளர்த்த இவரது பயணம் 12ஆம் வயதில் மேடையை முதன்முறையாக எட்டிய “திராட்சைத் தோட்டம்” நாடகத்தில் நடித்ததுடன் தொடங்கியது. அதன் பின் நாடகம், நாட்டுப்புறக் கலை, ஆகிய கலைத் துறைகளில் இவர் தனித்துவம் பெற்றார்.
மறைந்தபின் ஒப்பாரி வழங்குதல், போன்ற கலைங்களில் திகழ்ந்து, தன் எழுத்து ஆற்றலாலும் கலையை விரிவாக்கினார். இவர் எழுதிய நாடகத் தொகுப்புகள், ஒப்பாரி மற்றும் பசாம் ஆக்கங்கள் பாராட்டுப் பெற்றவை. சமூகத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். தமது ஆரம்ப வாழ்க்கை, அவரை நிலைத்தமான வாழ்வின் அடித்தளமாகவும், உறுதியான கலைவாழ்வின் பாதையாகவும் வழிநடத்தியது.

















































