பள்ளமடுக்குளமும் விடத்தல்தீவும் - கியோமர் பயஸ்

பள்ளமடுக்குளமும் விடத்தல்தீவும் ஒற்றையில் நின்றவளே... ஊராரின் உளமதை

இரண்டு மைல் தூரத்தில் நீ இருந்தால் என்ன? உன்னழகு தவிர வேறெதுவும் கெட்டதாய் பேசவில்லை. பள்ளமடுக்குளமே... பக்கத்தில் உள்ள மனையே... ஆலமர நிழலை அதிமையாகப் பரப்பும் மனமே... விடத்தல்தீவு உறவு சொல்லவே...

விடியற்காலையில் நடந்து சென்று நாம் சோடிக் கொண்டிருந்த அந்த ஒரு நந்தவனமா... என்றும் தராள குணம் கொண்ட சொந்தவனமா... விடத்தல்தீவு உறவு என்றும் மாறாது-

அட எங்கு சென்றாலும் இந்த சொந்தம் விலகாது! நாடு விட்டு நாடு சென்று, நீ நாணயங்களைப் பெற்றாலும், கூடு விட்டு கூடு பார்த்தாலும்,

உன் மனம் வேர் விட்டு போகவில்லை; உயர் வாழ்வு வாழ்ந்தாலும், மூன்றுபக்கம் நீர் சூழ்ந்த முழுமதியில் நீதான் என்றும் எங்கள் தாய்நாடு!

அட எங்கு சென்றாலும் இந்த சொந்தம் விலகாது! இந்துக்கள், சிறுபான்மையினர்,

இஸ்லாமிய நண்பர்களும் ஒன்றாக நாம் இணைந்தே இங்கே வாழ்ந்தோம். இடர்களும் துன்பங்களும் வந்தபோதிலும் விவசாயம் செய்தே வென்றோம்!

விடத்தல்தீவு உறவு என்றும் மாறாது -

அட எங்கு சென்றாலும் இந்த சொந்தம் விலகாது! ஆலமர்கள் பரவும் மீண்டு, பரிகாரங்கள் பலவாக உண்டு;

கோவிலொன்றும் இங்கே என்றும் உள்ளது. கலைக்கூடம் இரண்டு உண்டு, கல்விமாணவர்கள் பலரும் உண்டு. கலைஞர்களும் என்றும் இங்கே உள்ளனர், வைத்திய நிபுணர்களும் உண்டு, பொறியியல் நிபுணர்களும் உண்டு.

போதித்தலும் ஆசான் பலவும் இங்கே உள்ளனர். விடத்தல்தீவு உறவு என்றும் மாறாது -

அட எங்கு சென்றாலும் இந்த சொந்தம் விலகாது!

Community

Celebrating Vidathaltheevu's beauty and cultural heritage.

Contact Us

vtsym2024@gmail.com

+94717477503

© 2025. All rights reserved.

விடத்தல் ஊற்றின் விளைநிலம் ஜோசப்வாஸ்நகர்