வடக்கு பொருளாதார நிலைமைகள்: மன்னார் மற்றும் விடத்தல்தீவிற்கு மையம்

"நேவிஸ் மொராய்ஸ்"

அறிமுகம்.

"மனித மேம்பாட்டில் முதலீடு இல்லாமல் பொருளாதார வளர்ச்சி நிலைத்திருக்க முடியாது. அது நெறிமுறையற்றதுமானது" அமர்த்தியா சென்.

மனித மேம்பாடு என்பது வெறும் பொருளாதார வளர்ச்சியை அளவிடுவதற்கும் அதிகமாக, மனித சுதந்திரங்களையும் நலவாழ்வையும் விரிவுபடுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்துகிறது. இதில் சுகாதாரம், கல்வி, அரசியல் பங்கேற்பு உள்ளிட்ட அம்சங்கள் அடங்கும்.

இலங்கை, சுகாதாரம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு துறைகளில் செய்த முதலீடுகளால், மனித மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது. ஐநாவின் மனித மேம்பாட்டு அறிக்கையில் இலங்கை 193 நாடுகளில் 89வது இடத்தைப் பெற்றுள்ளது. இது, சுகாதாரம், பொதுக்கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களை பொதுமக்களுக்கு நியாயமான அளவில் வழங்கும் நிலையை எடுத்துக் காட்டுகிறது. இருப்பினும், இத்தகைய ஆதரவு எல்லா பிராந்திய மக்களுக்கும் சம அளவில் கிடைக்கின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இலங்கையில் பிராந்தியங்களுக்கிடையே பெரும் பொருளாதார மற்றும் சமூக வேறுபாடுகள் காணப்படுகின்றன.

பொருளாதார வளர்ச்சியும் மனித மேம்பாட்டை நிர்ணயிக்கும் முக்கிய காரியமாகும். வரலாற்று ரீதியாக, இலங்கை சமூகத் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி, பொருளாதார வளர்ச்சிக்கு குறைவான முக்கியத்துவம் வழங்கியிருக்கிறது எனக் கூறப்படுகிறது. இலங்கையின் வளர்ச்சிக் கொள்கைகள், செல்வத்தை உருவாக்குவதைக் காட்டிலும், செல்வத்தைப் பகிர்வதையே முன்னிறுத்தியுள்ளன. இது சமூகத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு தடையாகவும் உள்ளது. இதன் விளைவாக, நாட்டின் பொருளாதார செயல்திறனில் சார்ந்துள்ள கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளைத் தக்க வைத்தல் மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றில் இலங்கை சவால்களை எதிர்கொள்கிறது. மேலும், இலங்கை பிராந்தியங்களுக்கிடையே

பெரும் பொருளாதார வேறுபாடுகளை வெளிப்படுத்துகிறது. மேல் மாகாணம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகிறது. இதே நேரத்தில், வடமாநிலம் உன்னிட்ட பிற பிரதேசங்கள் சுமார் 5% மட்டுமே பங்களிக்கின்றன. இது. பொருளாதார உள்கட்டமைப்பின் மேம்பாட்டிலும், பிராந்திய வலிமைகளைப் பயன்படுத்தி பரந்த பொருளாதார வளர்ச்சியை எட்டுவதிலும் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது.

போரால் ஏற்பட்ட பெரியளவிலான பொருளாதார உள்கட்டமைப்பு சேதங்களால், வடக்கு மாவட்டங்கள் பொருளாதார ரீதியாக இன்னும் பின்தங்கியுள்ளன. சாலைகள் போன்ற போக்குவரத்து வசதிகளில் முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், மற்ற மாகாணங்களை விட வடக்கு இன்னும் பின்தங்கியதாகவே உள்ளது.

வடக்கு பொருளாதாரத்தின் இயல்பு.

வடக்குப் பொருளாதாரம் பாரம்பரியமாக விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருந்தாலும், அதுமாகாண மற்றும் தேசிய பொருளாதாரங்களுக்கு அளிக்கும் பங்களிப்பு குறைவாகவே உள்ளது (14.4% மற்றும் 7% இது நாட்டிலேயே குறைந்தபட்சம்). இதனால், விவசாயம் இனி முக்கியமான துறையாக இல்லாமல் போனது என்பதைக் காட்டுகிறது. மாறாக, மாகாண பொருளாதாரத்தில் 51% பங்களிப்பை வழங்கும் சேவைத் துறை தற்போது ஆதிக்கம் செலுத்துகிறது.

வளர்ந்து வரும் துணைத்துறைகள் சுற்றுலா, சுகாதாரம், கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் இப்போது முக்கியத்துவம் பெறுகின்றன. இருப்பினும், இவை தேசிய அளவில் வழங்கும் பங்களிப்பு சுமார் 4% மட்டுமே, இது நாட்டின் பிற பிராந்தியங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும். வறுமை மற்றும் பாதிப்புநிலை

2019 ஆம் ஆண்டில், இலங்கையின் தேசிய வறுமை விகிதம் 14% ஆக இருந்தது (மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம்). வடமாகாணத்தில் வறுமை விகிதம் 23% ஆக இருந்தது; இது ஊவா மாகாணம் (28%)க்கு அடுத்த இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், வடமாகாணத்திற்குள் முல்லைத்தீவு மாவட்டம் 40% என்ற மிக உயர்ந்த வறுமை விகிதத்தைக் காட்டுகிறது. மாறாக, மன்னார் மாவட்டம் 6% என்ற மிகக் குறைந்த விகிதத்தைக் கொண்டுள்ளது. மாகாண உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பு சுமார் 4% மட்டுமே என்பதும், இந்த வறுமை நிலை தொடரும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். இந்த பகுப்பாய்வு முக்கியமான சில கேள்விகளை எழுப்புகிறது:

  • வடமாகாணத்தில், குறிப்பாக சில சேவைத்துறைகளின் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் முக்கிய பொருளாதார இயக்கிகள் எவை

  • போர் முடிந்த பிறகு, விவசாயத் துறையின் குறிப்பாக மீன்பிடித்தல் மற்றும் பயிர்ச்செய்கை வளர்ச்சி எவ்வாறு ஏற்பட்டுள்ளது?

  • இந்த மாகாணத்தில் வறுமை தொடர்ந்து உயர் நிலையில் இருப்பதற்குக் காரணமாக என்ன காரணிகள் செயல்படுகின்றன?

  • போர் இன்னும் இந்த நிலைக்கு முக்கியத்துவம் வாய்ந்த காரணமா?

  • முல்லைத்தீவு (40%) மற்றும் மன்னார் (6%) ஆகிய மாவட்டங்களுக்கிடையிலான வறுமை விகித வேறுபாடுகளை விளக்கும் காரணங்கள் என்ன?

இந்தக் கேள்விகள், இந்த மாநாட்டின் முக்கியக் கருத்தாக உள்ள விடத்தல்தீவு போன்ற மன்னார் மாவட்டத்தில் கிராமங்களின் மாகாண பொருளாதாரம் மற்றும் சமூக-பொருளாதார சூழ்நிலைகளை புரிந்து கொள்வதற்கேற்ப மிக முக்கியமானவை. இவைகளை ஆராய்வது, மாற்றத்திற்கான உந்துதல்களையும் பொருளாதார முன்னேற்றத்திற்கான தடைகளையும் விளக்கும் தரவுகளை உருவாக்கும்.

எதிர்கொண்ட சவால்கள்,

உடல், மனித வள, தொழில்நுட்ப மற்றும் நிதி அம்சங்களை உள்ளடக்கிய மோசமான பொருளாதார உள்கட்டமைப்புகள் உற்பத்தித்திறனைத் தொடர்ச்சியாகக் குறைத்து, பொருளாதார செயல்திறனை பாதிக்கின்றன.

தகவலின்றி உள்ள நிலைகள் மற்றும் போர் முடிந்த பிறகு முழுமையற்ற மீட்பு நடவடிக்கைகள் முன்னேற்றத்தைத் தடுக்கும். விவசாய உள்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கான மேலதிக முதலீடுகள் அவசியம் தேவைப்படும் நிலையில், அனைவரும் பயனடையக்கூடிய வகையில் பொது சேவைகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் மிக அவசியமானவையாக உள்ளன. நவீன நீர்ப்பாசன வசதிகள், மீன்பிடித் துறைமுகங்கள், மற்றும் கிராமப்புற உற்பத்தியாளர்களுக்கான கடன்அணுகல் ஆகியவை இன்னும் மிகவும் குறைவாகவே உள்ளன. இத்தகைய முதலீட்டின் பற்றாக்குறை பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தி விகிதங்களை தடுக்கும்.

இதன் வினைவாக, மக்கள்தொகையின் முக்கியமான பகுதி இன்னும் வாழ்வாதார மட்டத்திலேயே உயிர்வாழ்ந்து வருகின்றனர். மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக வெளியூர் குடிபெயர்தல் அதிகரிக்கிறது, இது மாகாணத்தின் முக்கிய தொழிலாளர் சக்தியை மேலும் தளரச் செய்கிறது. விடத்தல்தீவு போன்ற கிராமங்கள் இந்த சவால்களுக்கான உயிருடன் விளங்கும் எடுத்துக்காட்டுகளாகும். மக்கள் குறைபாடு, குடியேற்றம், போதுமான மீன்பிடி உள்கட்டமைப்பின் பஞ்சம் மற்றும் செயலிழந்த சந்தை தொடர்புகள் ஆகியவை இங்குள்ள முக்கிய சிக்கல்களாக உள்ளன. தேவைப்படும் உத்திகள்

மன்னார் மாவட்டத்தின் பிராந்திய வளர்ச்சி, அதன் தொலை தூரமான கிராமப்புற அமைப்பு, மோசமான போக்குவரத்து இணைப்பு, குறைந்த உற்பத்தி திறன் மற்றும் கடன், தொழில்நுட்ப வசதிகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வருமான பாதுகாப்பு சிக்கலாக மாறியுள்ளது. இந்நிலையில் பொருளாதாரப் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவும், பரந்த பொருளாதார பங்கேற்பை ஏற்படுத்தவும் பொது முதலீடுகள் மிகவும் அவசியமானவை.

முக்கியமாக, டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் பயன்படுத்தல், தகவல் (முக்கியமாக விவசாய உற்பத்தி உள்ளீடுகள் மற்றும் விலை குறித்த சந்தைத் தரவுகள்) பெறும் வாய்ப்பை மேம்படுத்துவதன் மூலம், நகரப்புற - கிராமப்புற இடைவெளியை குறைக்க முடியும்.

மன்னார்மாவட்டம்,அதன்புவியியல்திறனைப்பயன்படுத்தி, சூழலியல்சுற்றுலாமற்றும்புதுப்பிக்கத்தக்க பசுமை எரிசக்தியை அடிப்படையாகக் கொண்டு நிலைத்த பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டும். இத்துறைகளில் முதலீடு செய்வது பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும், சமூக ஈடுபாடு. அரசு, தனியார், உள்ளூர் அமைப்புகளுக்கிடையிலான கூட்டாண்மையை ஊக்குவிக்கும். மேலும் உள்ளடக்கிய மற்றும் தாங்கும் தன்மை கொண்ட கிராமப்புற பொருளாதாரங்களை உருவாக்கும். நிலையான பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு துறைகளில் முன்னேற்றம் அடைவதன் மீது பெரிதும் சார்ந்துள்ளது. மூன்றாம் நிலைக் கல்வியும் மேம்பட்ட சுகாதார வசதிகளும் இல்லாத மன்னாரில், உள்ளூர் தொழில்கள், சுற்றுலா மற்றும் பசுமை எரிசக்தி போன்ற வளர்ந்து வரும் துறைகளுக்கு ஆதரவாக நடுத்தர நிலை தகவல் தொழில்நுட்பக் கல்வியில் முதலீடு மிக அவசியமாகிறது.இன்றைய பொருளாதார உத்திகள், கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்புக்கும் சமூக சமத்துவத்திற்கும் முன்னுரிமை அளித்து, சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார அம்சங்களை ஒருங்கிணைக்கும் முழுமையான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். இது அமர்த்தியா சென் முன்வைத்த மனித மேம்பாட்டு கருத்துடன் இணங்கும்.